govindh
31-12-2011, 11:21 AM
இனிய புத்தாண்டே வருக....!
இன்பமெல்லாம் பெருக...
இனிய நிகழ்வுகள் தருக...!
மழை வளம் பெருகட்டும்...
மண் வளம் கொழிக்கட்டும்...!
மனித மனங்கள் மலரட்டும்...
புனித செயல்கள் தொடரட்டும்...!
உழைப்பினை ஒளிர வை...
ஊழலை ஒழிய வை...!
விண்ணைத் தொடும்
விலைவாசியினைக்
கீழ் கட்டுக்குள் கொண்டு வா...!
மண்ணைத் தொடும்
விவசாயியினை-
மேல் தட்டுக்குள் கொண்டு போ...!
நல்லதையெல்லாம் நடத்திக் காட்டு...!
அல்லதையெல்லாம் அழித்து விரட்டு...!
நேசம் உருப் பெறட்டும்...
தேசம் வலுப் பெறட்டும்...!
எல்லையில்....
முள்வேலி முறியட்டும்...!
நட்புப் பூக்கள்...மலரட்டும்...
சமாதானப் பக்தி பெருகட்டும்....
சகோதரத்துவச் சக்தி உருவாகட்டும்...!
இனிய புத்தாண்டே வருக....!
இன்பமெல்லாம் பெருக...
இனிய நிகழ்வுகள் தருக...!
இன்பமெல்லாம் பெருக...
இனிய நிகழ்வுகள் தருக...!
மழை வளம் பெருகட்டும்...
மண் வளம் கொழிக்கட்டும்...!
மனித மனங்கள் மலரட்டும்...
புனித செயல்கள் தொடரட்டும்...!
உழைப்பினை ஒளிர வை...
ஊழலை ஒழிய வை...!
விண்ணைத் தொடும்
விலைவாசியினைக்
கீழ் கட்டுக்குள் கொண்டு வா...!
மண்ணைத் தொடும்
விவசாயியினை-
மேல் தட்டுக்குள் கொண்டு போ...!
நல்லதையெல்லாம் நடத்திக் காட்டு...!
அல்லதையெல்லாம் அழித்து விரட்டு...!
நேசம் உருப் பெறட்டும்...
தேசம் வலுப் பெறட்டும்...!
எல்லையில்....
முள்வேலி முறியட்டும்...!
நட்புப் பூக்கள்...மலரட்டும்...
சமாதானப் பக்தி பெருகட்டும்....
சகோதரத்துவச் சக்தி உருவாகட்டும்...!
இனிய புத்தாண்டே வருக....!
இன்பமெல்லாம் பெருக...
இனிய நிகழ்வுகள் தருக...!