sureshteen
14-12-2011, 03:00 AM
அன்று அலுவலகத்தில் அதிசயமாய் எதிர்பார்த்த வேலை, எதிர்பாராமல் சீக்கிரமாய் முடிந்ததில் கார்த்திக் மிகவும் சந்தோஷத்தின் உச்சத்துக்குச் சென்றான். தினமும் காலை வந்து, இரவு பத்து மணிக்கு மேல் ஹோட்டல் சென்று வருவதில் இருந்து இன்று விடுதலை. வெளியில் வேறு வானம் மப்பும் மந்தாராமாய் இருந்தது, லேசான தூறலும் அதனுடன் இணைந்த ஒரு வித மண் வாசனையும் மனதுக்கு இனிமையைத் தந்தது.
கார்த்திக், நல்ல சிவந்த தேகம், ஆறு அடி வாட்டசாட்டமான உருவம். ஒரு தனியார் கம்பனியின் விற்பனை பிரிவு மேலதிகாரியாக இருக்கிறான், வசிப்பிடமோ சென்னை. மாதத்திற்கு பத்து தினங்கள் வெளியூர் பயணம். தற்சமயம், பெங்களூரில் கடந்த ஒரு வாரமாக ஒரு ஹோட்டலில் தங்கி வேலைக்குச் சென்று வருகிறான். எதிர்பார்த்ததுக்கு மேலாக முடிக்க வேண்டிய வேலை இன்றே முடிந்து விட்டதால், என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருக்க, சட்டேன்று அவனுடைய நண்பன் குமார் கவனத்தில் வந்தான். உடனே கைபேசியை தட்டி வலைவீசி பிடித்து நலம் விசாரித்தான்.
குமார், அவனுடைய கல்லுரி நண்பன், அவனும் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருவதுடன் தன் குடும்பத்தாருடன் பெங்களுரிலே நிரந்தரமாக தங்கி விட்டான். எப்பொழுதாவது ஒரு நாள் கைபேசியிலும் வலைபேசியிலும் பேசிக்கொள்வதோடு சரி. இப்பொழுது நேரம் கிடைத்ததால் அவனுக்கு போன் செய்து சந்திக்க வருமாறு அழைத்தான்.
'ஹாய் கார்த்தி எப்டிடா இருக்கே, பெங்களுரு வந்திருக்கிறேன்னு வந்த உடனே போன் செய்திருக்க கூடாதா எங்க வீட்ல தங்கி இருக்கலாமே. எதுக்கு ஹோட்டல தங்கி சாப்பிட்டு, உடம்ப வேற கெடுத்துக்கரே' அக்கறையோடு பேசினான்.
'அதுக்கில்ல குமார், உனக்கு எதுக்கு சிரமம், அதும் இல்லாம எனக்கு இப்படி இருந்தே பழகிப்போச்சு" என்றான்.
'இதுல என்ன சிரமம், சரி இப்பவே பெர்மிஷன் போட்டுட்டு வரேன். கரெக்டா நான்கு மணிக்கு லால்பாக் கார்டன்ல மீட் பண்றோம், எவ்வளவு நாள் ஆச்சி சந்திச்சி" பேசிவிட்டு வைத்துவிட்டான்.
குமார், சொன்னமாதியே வரக்கூடியவன் என்பதால். கார்த்திக்கும் அவசர அவசரமாக முடிக்க வேண்டிய வேலைகளை அசுரகதியில் முடித்துவிட்டு, தன்னுடன் பணி செய்யும் அனைவரிடமும் கிளம்புவதாக கூறிவிட்டு புறப்பட்டான்.
லால்பாக், வண்ண வண்ண பூகளையெல்லாம் தன்னகத்தே கொண்டு, வருவோர் போவொருக்கெல்லாம் வாசனையுடன் நல்ல ஆக்ஜிசன் காற்றையும் வஞ்சனை இல்லாமல் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது.
காதலர்கள் ஜோடி ஜோடியாக உலா வருவதும், ஒருவரை ஒருவர் உரசிக்கொண்டும், ரகசியாமாய் உரையாடிக்கொன்றும் இருந்தனர்.
புது மண ஜோடிகளோ ஒரு பக்கம் தங்கள் வீட்டின் தொந்தரவில் இருந்து விடுபட்டு அங்கு முடியாத சல்லாபங்களையும் காதல் மொழிகளையும் நிறைவேற்றிக்கொண்டு உலா வந்த மாயமாய் இருந்தனர்.
வீட்டில் பேசமுடியாத குடும்ப பிரச்சினைகளை மனைவிமார்கள் தன் கணவனுடன் புலம்பிக்கொண்டும் கண்ணீர் சிந்திக்கொண்டும் ஒரு பக்கம் அமர்ந்திருந்தனர். கணவன்மார்களோ, எப்பொழுதும் போல் ஒரு காதில் வாங்கிக்கொண்டு இன்னொரு காதில் வெளிய அனுப்பிய வண்ணம் அமைதியாகவே இருந்தனர்.
சுற்றுலா பயணிகளும் தங்கள் பங்கிற்கு அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டும் இரைச்சல் போட்டுக்கொண்டு பூங்காவின் அமைதியை கெடுத்துக்கொண்டிருந் தனர். பெரியவர்கள் சிறிய குழந்தைகளை தலையில் தூக்கிக்கொண்டும் தோளில் சாய்த்துக்கொண்டும் நடக்க முடியாமல் நடந்த வண்ணம் சுற்றி வந்தனர்.
சற்று வளரந்த குழந்தைகள் புல் தரையில் மற்ற குழந்தைகளுடன் ஓடி ஆடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டு சந்தோசமாக பொழுதை போக்கிக்கொண்டு இருந்தனர். தானும் குழந்தையாகவே இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்த படி, அங்குள்ள சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து சிறிது நேரம் பூக்களையும் வருபவர்களையும் ரசித்தபடியே அமர்ந்திருந்தான். அப்பொழுது எப்போதோ படித்த கவிதை ஞாபகத்துக்கு வந்தது.
அதிகாலை மலர்ந்து
அனைவருக்கும் மணம் பரப்பி
அணிந்துகொள்ள மலராய்
அணிவிக்க மாலையாய்
அதேநாளிலே மடியும்
அழகான மலரே...
இறந்து இறந்து தினம்
பிறந்து வாழும்
மனித வாழ்வை
துறந்து....மலராய்
பிறக்க ஆசைப்படுகிறேன்...
உண்மைதான், வாழ்க்கை இப்படித்தான் செல்கிறது அனைவருக்கும். தன்னை மறந்து இருக்கும் வேளையில்,
சரியாக நான்கு மணிக்கு ஆட்டோவில் வந்திறங்கினான் குமார்.
"என்னடா எப்படி இருக்க, ஆபீஸ் வேலை எல்லாம் எப்படி போய்ட்டிருக்கு"
'கொஞ்சம் தொப்பை போட்டுட்டே போலிருக்கு' என்ற வழக்கமான விசாரிப்புக்கு பிறகு. இரண்டு குடும்பகளைப் பற்றி பேசிக்கொண்டார்கள்.
கார்த்திக், சென்னையிலே செட்டில் ஆகிவிட்டான், அவனுடைய மனைவி ஒரு பாங்கில் கிளார்க்காக வேலை செய்கிறாள். ஒரே பையன், பார்த்துக்கொள்ள தன்னுடைய அம்மாவை கூடவே வைத்துள்ளான், அப்பா இறந்து இரண்டு வருடம் ஆகிறது. இரண்டு பேர் சம்பாதிப்பதால் வருமானத்திற்கு பஞ்சமில்லை.
இப்படியாக கல்லுரி நாள்களிலிருந்து, தற்சமயம் வரை அனைத்தும் அசைபோட்டதில் நேரம் போனதே தெரியவில்லை. மணி இப்பவே ஆறு ஆகிவிட்டது.
"ரொம்ப நாள் கழிச்சி பார்க்கறோம், நாம ரெண்டு பேர் சேர்ந்தாப்போல குடிச்சி ரொம்ப நாளாச்சி, வாயேன் அப்பிடியே பார் போய்ட்டு போகலாம்" என்றான் குமார் விடாப்பிடியாக.
கார்த்திக்கும் சரி என்று மனதில் பட்டது. அவனும் அடிக்கடி குடிப்பவன் இல்லை. எப்போதாவது நண்பர்கள் இருந்தால் செல்பவன். மேலும், இப்பொழுது நேரம் இருப்பதால், சம்மதித்தான்.
நண்பன் பிரியத்துக்க, ஒரு ஒரு பீர் குடிக்க ஆர்டர் செய்தான், பார்க்கில் விட்ட கதை தொட்ட கதை தொடர்கதையாக மீண்டும் தொடர்ந்தது, பேச்சு சுவாரஸ்யத்தில் கொஞ்சம் அதிமாகவே குடித்து விட்டனர்.
"குமார், போதும், இதுவே உனக்கு அதிகம், நான் ஹோட்டல் போய்ட்டு நாளைக்கு சென்னை கெளம்பனும்"
"அதுக்கென்ன, இப்பவே முடிச்சிட்டறேன்" இருப்பதை ஒரு மடக்கில் குடித்துவிட்டு, பேரரிடம் பில்லுக்கான பணத்தையும் டிப்சையும் கொடுத்து வெளிய வந்தனர்.
குமார், நிறைய குடித்து இருந்ததால், ஒரு ஆட்டோவை கூப்பிட்டு, அவனை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்த பின்னர் தனக்கும், ஒரு ஆட்டோவை பிடித்து ஹோட்டல் போகச் சொன்னான்.
அப்பொழுது தன் கல்லூரி தினங்களையும் அதன் அதன்வுகளையும் மனது எண்ணிபடியே சென்றது. அந்த சமயத்தில் திடீர் என்று அவன் மனதில் அந்த எண்ணம் தோன்றியது, ஒரு பக்கம் இனம் புரியாத மகிழ்ச்சி அவன் உள்ளத்தில் குடிகொண்டது பொழுது ஆட்டோ ஹோட்டலை நெருங்கிக்கொண்டிருந்தது.
அவன் என்ன நினைத்தான்... அடுத்த பாகத்தில்
கார்த்திக், நல்ல சிவந்த தேகம், ஆறு அடி வாட்டசாட்டமான உருவம். ஒரு தனியார் கம்பனியின் விற்பனை பிரிவு மேலதிகாரியாக இருக்கிறான், வசிப்பிடமோ சென்னை. மாதத்திற்கு பத்து தினங்கள் வெளியூர் பயணம். தற்சமயம், பெங்களூரில் கடந்த ஒரு வாரமாக ஒரு ஹோட்டலில் தங்கி வேலைக்குச் சென்று வருகிறான். எதிர்பார்த்ததுக்கு மேலாக முடிக்க வேண்டிய வேலை இன்றே முடிந்து விட்டதால், என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருக்க, சட்டேன்று அவனுடைய நண்பன் குமார் கவனத்தில் வந்தான். உடனே கைபேசியை தட்டி வலைவீசி பிடித்து நலம் விசாரித்தான்.
குமார், அவனுடைய கல்லுரி நண்பன், அவனும் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருவதுடன் தன் குடும்பத்தாருடன் பெங்களுரிலே நிரந்தரமாக தங்கி விட்டான். எப்பொழுதாவது ஒரு நாள் கைபேசியிலும் வலைபேசியிலும் பேசிக்கொள்வதோடு சரி. இப்பொழுது நேரம் கிடைத்ததால் அவனுக்கு போன் செய்து சந்திக்க வருமாறு அழைத்தான்.
'ஹாய் கார்த்தி எப்டிடா இருக்கே, பெங்களுரு வந்திருக்கிறேன்னு வந்த உடனே போன் செய்திருக்க கூடாதா எங்க வீட்ல தங்கி இருக்கலாமே. எதுக்கு ஹோட்டல தங்கி சாப்பிட்டு, உடம்ப வேற கெடுத்துக்கரே' அக்கறையோடு பேசினான்.
'அதுக்கில்ல குமார், உனக்கு எதுக்கு சிரமம், அதும் இல்லாம எனக்கு இப்படி இருந்தே பழகிப்போச்சு" என்றான்.
'இதுல என்ன சிரமம், சரி இப்பவே பெர்மிஷன் போட்டுட்டு வரேன். கரெக்டா நான்கு மணிக்கு லால்பாக் கார்டன்ல மீட் பண்றோம், எவ்வளவு நாள் ஆச்சி சந்திச்சி" பேசிவிட்டு வைத்துவிட்டான்.
குமார், சொன்னமாதியே வரக்கூடியவன் என்பதால். கார்த்திக்கும் அவசர அவசரமாக முடிக்க வேண்டிய வேலைகளை அசுரகதியில் முடித்துவிட்டு, தன்னுடன் பணி செய்யும் அனைவரிடமும் கிளம்புவதாக கூறிவிட்டு புறப்பட்டான்.
லால்பாக், வண்ண வண்ண பூகளையெல்லாம் தன்னகத்தே கொண்டு, வருவோர் போவொருக்கெல்லாம் வாசனையுடன் நல்ல ஆக்ஜிசன் காற்றையும் வஞ்சனை இல்லாமல் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது.
காதலர்கள் ஜோடி ஜோடியாக உலா வருவதும், ஒருவரை ஒருவர் உரசிக்கொண்டும், ரகசியாமாய் உரையாடிக்கொன்றும் இருந்தனர்.
புது மண ஜோடிகளோ ஒரு பக்கம் தங்கள் வீட்டின் தொந்தரவில் இருந்து விடுபட்டு அங்கு முடியாத சல்லாபங்களையும் காதல் மொழிகளையும் நிறைவேற்றிக்கொண்டு உலா வந்த மாயமாய் இருந்தனர்.
வீட்டில் பேசமுடியாத குடும்ப பிரச்சினைகளை மனைவிமார்கள் தன் கணவனுடன் புலம்பிக்கொண்டும் கண்ணீர் சிந்திக்கொண்டும் ஒரு பக்கம் அமர்ந்திருந்தனர். கணவன்மார்களோ, எப்பொழுதும் போல் ஒரு காதில் வாங்கிக்கொண்டு இன்னொரு காதில் வெளிய அனுப்பிய வண்ணம் அமைதியாகவே இருந்தனர்.
சுற்றுலா பயணிகளும் தங்கள் பங்கிற்கு அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டும் இரைச்சல் போட்டுக்கொண்டு பூங்காவின் அமைதியை கெடுத்துக்கொண்டிருந் தனர். பெரியவர்கள் சிறிய குழந்தைகளை தலையில் தூக்கிக்கொண்டும் தோளில் சாய்த்துக்கொண்டும் நடக்க முடியாமல் நடந்த வண்ணம் சுற்றி வந்தனர்.
சற்று வளரந்த குழந்தைகள் புல் தரையில் மற்ற குழந்தைகளுடன் ஓடி ஆடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டு சந்தோசமாக பொழுதை போக்கிக்கொண்டு இருந்தனர். தானும் குழந்தையாகவே இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்த படி, அங்குள்ள சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து சிறிது நேரம் பூக்களையும் வருபவர்களையும் ரசித்தபடியே அமர்ந்திருந்தான். அப்பொழுது எப்போதோ படித்த கவிதை ஞாபகத்துக்கு வந்தது.
அதிகாலை மலர்ந்து
அனைவருக்கும் மணம் பரப்பி
அணிந்துகொள்ள மலராய்
அணிவிக்க மாலையாய்
அதேநாளிலே மடியும்
அழகான மலரே...
இறந்து இறந்து தினம்
பிறந்து வாழும்
மனித வாழ்வை
துறந்து....மலராய்
பிறக்க ஆசைப்படுகிறேன்...
உண்மைதான், வாழ்க்கை இப்படித்தான் செல்கிறது அனைவருக்கும். தன்னை மறந்து இருக்கும் வேளையில்,
சரியாக நான்கு மணிக்கு ஆட்டோவில் வந்திறங்கினான் குமார்.
"என்னடா எப்படி இருக்க, ஆபீஸ் வேலை எல்லாம் எப்படி போய்ட்டிருக்கு"
'கொஞ்சம் தொப்பை போட்டுட்டே போலிருக்கு' என்ற வழக்கமான விசாரிப்புக்கு பிறகு. இரண்டு குடும்பகளைப் பற்றி பேசிக்கொண்டார்கள்.
கார்த்திக், சென்னையிலே செட்டில் ஆகிவிட்டான், அவனுடைய மனைவி ஒரு பாங்கில் கிளார்க்காக வேலை செய்கிறாள். ஒரே பையன், பார்த்துக்கொள்ள தன்னுடைய அம்மாவை கூடவே வைத்துள்ளான், அப்பா இறந்து இரண்டு வருடம் ஆகிறது. இரண்டு பேர் சம்பாதிப்பதால் வருமானத்திற்கு பஞ்சமில்லை.
இப்படியாக கல்லுரி நாள்களிலிருந்து, தற்சமயம் வரை அனைத்தும் அசைபோட்டதில் நேரம் போனதே தெரியவில்லை. மணி இப்பவே ஆறு ஆகிவிட்டது.
"ரொம்ப நாள் கழிச்சி பார்க்கறோம், நாம ரெண்டு பேர் சேர்ந்தாப்போல குடிச்சி ரொம்ப நாளாச்சி, வாயேன் அப்பிடியே பார் போய்ட்டு போகலாம்" என்றான் குமார் விடாப்பிடியாக.
கார்த்திக்கும் சரி என்று மனதில் பட்டது. அவனும் அடிக்கடி குடிப்பவன் இல்லை. எப்போதாவது நண்பர்கள் இருந்தால் செல்பவன். மேலும், இப்பொழுது நேரம் இருப்பதால், சம்மதித்தான்.
நண்பன் பிரியத்துக்க, ஒரு ஒரு பீர் குடிக்க ஆர்டர் செய்தான், பார்க்கில் விட்ட கதை தொட்ட கதை தொடர்கதையாக மீண்டும் தொடர்ந்தது, பேச்சு சுவாரஸ்யத்தில் கொஞ்சம் அதிமாகவே குடித்து விட்டனர்.
"குமார், போதும், இதுவே உனக்கு அதிகம், நான் ஹோட்டல் போய்ட்டு நாளைக்கு சென்னை கெளம்பனும்"
"அதுக்கென்ன, இப்பவே முடிச்சிட்டறேன்" இருப்பதை ஒரு மடக்கில் குடித்துவிட்டு, பேரரிடம் பில்லுக்கான பணத்தையும் டிப்சையும் கொடுத்து வெளிய வந்தனர்.
குமார், நிறைய குடித்து இருந்ததால், ஒரு ஆட்டோவை கூப்பிட்டு, அவனை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்த பின்னர் தனக்கும், ஒரு ஆட்டோவை பிடித்து ஹோட்டல் போகச் சொன்னான்.
அப்பொழுது தன் கல்லூரி தினங்களையும் அதன் அதன்வுகளையும் மனது எண்ணிபடியே சென்றது. அந்த சமயத்தில் திடீர் என்று அவன் மனதில் அந்த எண்ணம் தோன்றியது, ஒரு பக்கம் இனம் புரியாத மகிழ்ச்சி அவன் உள்ளத்தில் குடிகொண்டது பொழுது ஆட்டோ ஹோட்டலை நெருங்கிக்கொண்டிருந்தது.
அவன் என்ன நினைத்தான்... அடுத்த பாகத்தில்