எஸ்.எம். சுனைத் ஹஸனீ
23-11-2011, 12:24 PM
கண நேரக் கோபத்தில் வெளிக்கடாசிய
நிறைவுறா என் பிந்தைய கனவுகளை
அவன் எடுத்து ஓடிக் கொண்டிருந்தான்
என் மனமும் பொட்டை நாயை பின்னிடும்
ஆளுமைக்கார ஆண் நாயாய்
அவன் பின்னங்கால் பற்றிச் சென்றது
காடுகளையும் மலைகளையும்
கடந்து சென்றான் அவன்
பாலைவன மணற் பரப்புகளினூடே
தன்னை ஒளிக்கவிழைந்தான்
ஊதாச் சமுத்திர அலைகளில்
கலந்தோட எத்தனித்தான்
அவன் தரப்பிலான ஒவ்வொரு ஏய்ப்பு முயல்தல்களும்
என்னால் இனம் கண்டு கொள்ளப்பட்டன
இறுதியாய் என்னைச் சரணடைந்தான்
என் கனவுகள் வேண்டுமென்றான்
அதற்காய் எதையுமிழக்கத் துணிவிருப்பதாய்
என் கால் பற்றிக் கிடந்தான்
வெளியெங்கும் நிறைந்த
அவன் இழப்பு ஓலங்களுக்கிடையே
எனதெண்ணங்கள் பறித்தெடுக்கப்பட்டன
கூட்டித் துடைத்து சந்திக் கழிவுகளிலிடப்பட்டாலும்
பிறார்க்கு அனுமதிக்கப்படுவதில்லை
அவரவர்களின் உரிமைகளும் உணர்வுகளும்.
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
நிறைவுறா என் பிந்தைய கனவுகளை
அவன் எடுத்து ஓடிக் கொண்டிருந்தான்
என் மனமும் பொட்டை நாயை பின்னிடும்
ஆளுமைக்கார ஆண் நாயாய்
அவன் பின்னங்கால் பற்றிச் சென்றது
காடுகளையும் மலைகளையும்
கடந்து சென்றான் அவன்
பாலைவன மணற் பரப்புகளினூடே
தன்னை ஒளிக்கவிழைந்தான்
ஊதாச் சமுத்திர அலைகளில்
கலந்தோட எத்தனித்தான்
அவன் தரப்பிலான ஒவ்வொரு ஏய்ப்பு முயல்தல்களும்
என்னால் இனம் கண்டு கொள்ளப்பட்டன
இறுதியாய் என்னைச் சரணடைந்தான்
என் கனவுகள் வேண்டுமென்றான்
அதற்காய் எதையுமிழக்கத் துணிவிருப்பதாய்
என் கால் பற்றிக் கிடந்தான்
வெளியெங்கும் நிறைந்த
அவன் இழப்பு ஓலங்களுக்கிடையே
எனதெண்ணங்கள் பறித்தெடுக்கப்பட்டன
கூட்டித் துடைத்து சந்திக் கழிவுகளிலிடப்பட்டாலும்
பிறார்க்கு அனுமதிக்கப்படுவதில்லை
அவரவர்களின் உரிமைகளும் உணர்வுகளும்.
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ