இன்பக்கவி
22-11-2011, 02:32 AM
http://i1027.photobucket.com/albums/y338/jimikki/11.jpg
பற்றி எரியும் மலரைப் போல்
பாழாய் போனது பெண் வாழ்க்கை
ஆணும் பெண்ணும் சரி நிகர்
சமானமாம் வரிகளாய் மட்டுமே
இன்று வரை..
கைவிலங்கு பூட்டி
சுதந்திரம் தரம் உத்தமர்கள்
கல்யாண சந்தையில்
ஆணுக்கு ஒரு விலை..
வாங்க இயலாமல்
இளமைத் தொலைத்து
முதுமை நெருங்கிட
காத்திருக்கும் முதிர்கன்னிகள்
பெண்ணுக்கு பெண்ணே எதிரியாய்
மாமியார் உருவில் ஒரு எமன்..
மருமகள் பற்றவைத்தால்
பற்றாத அடுப்பும்
பற்றி எரிந்து வெடித்து
கருகும் மலர்களாய்
பெண்கள்..
பெண்ணை பூவோடு
ஒப்பிட்டீர்களே
வண்டுகளாய் வந்து
மது அருந்தி
மயக்கம் தீர்ந்து
வாட வைக்கவோ
பூஜை மலராய் வேண்டாம்
கருகிய மலராய் வீதியில்
உலாவரும் நிலை
இனியும் வேண்டாம்...
நிலவோடு ஒப்பிட்டு
இரவில் மட்டும் ரசித்து
இருளில் மூழ்கடித்தும்
தேய்ந்து மெலிந்து
வாழ்வை தொலைக்கவோ
இட ஒதுக்கீடு வேண்டாம்
உங்கள் இதயத்தில் இடம்
கொடுங்கள்..
பெற்றத்தாயை மதிக்கும்
உலகில் உற்றவளை
உயிர் பறித்து பார்க்கும்
அவலம் வேண்டாம் இனியும்..:icon_p:
பற்றி எரியும் மலரைப் போல்
பாழாய் போனது பெண் வாழ்க்கை
ஆணும் பெண்ணும் சரி நிகர்
சமானமாம் வரிகளாய் மட்டுமே
இன்று வரை..
கைவிலங்கு பூட்டி
சுதந்திரம் தரம் உத்தமர்கள்
கல்யாண சந்தையில்
ஆணுக்கு ஒரு விலை..
வாங்க இயலாமல்
இளமைத் தொலைத்து
முதுமை நெருங்கிட
காத்திருக்கும் முதிர்கன்னிகள்
பெண்ணுக்கு பெண்ணே எதிரியாய்
மாமியார் உருவில் ஒரு எமன்..
மருமகள் பற்றவைத்தால்
பற்றாத அடுப்பும்
பற்றி எரிந்து வெடித்து
கருகும் மலர்களாய்
பெண்கள்..
பெண்ணை பூவோடு
ஒப்பிட்டீர்களே
வண்டுகளாய் வந்து
மது அருந்தி
மயக்கம் தீர்ந்து
வாட வைக்கவோ
பூஜை மலராய் வேண்டாம்
கருகிய மலராய் வீதியில்
உலாவரும் நிலை
இனியும் வேண்டாம்...
நிலவோடு ஒப்பிட்டு
இரவில் மட்டும் ரசித்து
இருளில் மூழ்கடித்தும்
தேய்ந்து மெலிந்து
வாழ்வை தொலைக்கவோ
இட ஒதுக்கீடு வேண்டாம்
உங்கள் இதயத்தில் இடம்
கொடுங்கள்..
பெற்றத்தாயை மதிக்கும்
உலகில் உற்றவளை
உயிர் பறித்து பார்க்கும்
அவலம் வேண்டாம் இனியும்..:icon_p: