கலாசுரன்
21-11-2011, 12:26 PM
*
உலாவும் உயிரொன்று
என்னருகில் வந்தது
அதன் இரு கைகளும்
துண்டிக்கப் பட்டிருந்ததால்
கண்களால் வணக்கமொன்றை
எனக்களித்து நகைத்தது
அதன் வருகையின் காரணங்களோ
அதன் துண்டிக்கப்பட்ட கைகளின் கதைகளோ
எனக்கேதும் புரியவில்லை
இருந்துமெனது நகைப்பால்
வரவேற்றமரச் செய்தேன்
இருவரின் குரல்களும் நொறுங்க ஆரம்பித்தன
அதன் கடைக் கண்களில் மகாப் பிரளயமொன்று
சலனமற்று பதுங்கியிருந்ததபோதும்
எனது வினாக்களுக்கான பதிலலைகள்
செவ்வனே மோதத்தொடங்கின
சூக்குமங்களாயிரம் தெரிந்ததோர்
ஞானியைப் போலிருந்ததந்த
உயிரின் நடவடிக்கைகள்
இடைப்பொழுதில் ஓய்வெனப்
பேச்சற்று நின்றதொரு
தருணத்தின் கதவை
ஓங்கியறைந்ததிந்த காலகட்டம்
எனது கைகள்
விரல் நுனிகளிலிருந்து
உதிரத்தொடங்கின ...
***
கலாசுரன்
உலாவும் உயிரொன்று
என்னருகில் வந்தது
அதன் இரு கைகளும்
துண்டிக்கப் பட்டிருந்ததால்
கண்களால் வணக்கமொன்றை
எனக்களித்து நகைத்தது
அதன் வருகையின் காரணங்களோ
அதன் துண்டிக்கப்பட்ட கைகளின் கதைகளோ
எனக்கேதும் புரியவில்லை
இருந்துமெனது நகைப்பால்
வரவேற்றமரச் செய்தேன்
இருவரின் குரல்களும் நொறுங்க ஆரம்பித்தன
அதன் கடைக் கண்களில் மகாப் பிரளயமொன்று
சலனமற்று பதுங்கியிருந்ததபோதும்
எனது வினாக்களுக்கான பதிலலைகள்
செவ்வனே மோதத்தொடங்கின
சூக்குமங்களாயிரம் தெரிந்ததோர்
ஞானியைப் போலிருந்ததந்த
உயிரின் நடவடிக்கைகள்
இடைப்பொழுதில் ஓய்வெனப்
பேச்சற்று நின்றதொரு
தருணத்தின் கதவை
ஓங்கியறைந்ததிந்த காலகட்டம்
எனது கைகள்
விரல் நுனிகளிலிருந்து
உதிரத்தொடங்கின ...
***
கலாசுரன்