PDA

View Full Version : உன் பிறப்பை மெய்ப்படுத்து...



matheen
20-11-2011, 08:42 AM
பிறந்தாய் மானுடா,
இன்னும் உன் சிந்தை பிறக்க வில்லையே

நீ எதற்காய்?
உண்டு உடுத்து உன் உதிரத்தை
இன்னொர் உயிராக்கி
அதற்காய் பண்டங்கள்
சேர்த்து நீ மட்டும் நன்றாக வாழத்தானா?

ஏன் அதற்கு பதிலாய் நீ
ஐந்தரிவு ஜீவனாய் பிறந்திருக்கலாமே...
எங்கோ உன்னை ஒரு ஜீவன் எதிர்பார்த்து

செல்... நீ உனக்கு என்பதை மட்டும் மற..
மனிதானாய் பிறந்ததாய் ஒரு ஜீவன் வருந்திக்கொண்டிருக்கிறது

அந்த உயிரின் பசி என்ற
கொடும் பிணியை பிடுங்கி எறியச் செல்

இன்றாவது பிறந்திடு...

உன் பிறப்பை மெய்ப்படுத்த*...

கீதம்
20-11-2011, 10:20 PM
கவிதை முயற்சிக்குப் பாராட்டுகள். கரு நன்று. ஆனால் வார்த்தைகள் அதற்கேற்றாற்போல் வசப்படவில்லை. இன்னும் தொடர்ந்து முயன்றால் விரைவிலேயே நல்லதொரு கவிதை வடிவத்தைக் கைக்கொள்ள இயலும். இவ்விமர்சனத்தைக் குறையாக எண்ணாமல் ஊக்கத்துடன் தொடர்ந்து எழுதுங்கள்.

Nivas.T
21-11-2011, 05:16 AM
நல்லாருக்கு மதீன்

தொடர்ந்து எழுதுங்கள் பிடிபட்டுவிடும்

பாராட்டுகள்

jaffer
21-11-2011, 09:48 AM
கவிதையின் கரு அருமை - படைப்பாளிக்கு வாழ்த்துக்கள் - தொடரட்டும் எதிர்பார்க்கிறோம்

கலாசுரன்
21-11-2011, 12:17 PM
உயிரின் பசி என்ற
கொடும் பிணியை பிடுங்கி எறியச் செல்

இந்த வரிகள் மிகவும் பிடித்திருக்கிறது

தொடர்ந்து எழுதுங்கள்.. :)

பிரேம்
21-11-2011, 11:51 PM
கவிதை அருமை..வாழ்துக்கள்..

matheen
23-11-2011, 11:12 AM
நன்றி நண்பர்களே