PDA

View Full Version : இப்போது , அவனது முறை…



அகத்தியன்
25-10-2011, 04:50 AM
நீண்ட நேர போராட்டத்திற்கு பின் அழைப்புக்கு வந்தான் அவன்,

“குட் மோர்னிங்க் சேர்! ஐ அம் கோலிங்க் ப்ரம் xxxxxxx கம்பனி, இஸ் தேர் எனி செக் போர் அஸ்?”

என்ற என் பணிவான குரலுக்கு

“ நோ “ என்றவாறு பதிலுக்கு காத்திராமல் தொலைபேசி அறைந்து சாத்தப்பட்டது.


நான் ஒரு கணக்காளன். சில வேளைகளில் இது போன்ற சந்தர்ப்பங்கள் எனக்கும் கிட்டிவிடுகின்றன.இது ஒன்றும் புதிதில்லை தான். ஆனாலும் சில வேளைகளில் இவாறான உதாசீனங்கள் ஆயசாத்தைத்தான் தருகின்றன.
என்ன செய்வது… பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான். பொங்கினால் வீட்டில் உலை பொங்காதே!

எங்களது , Receivable கணக்காளர் வராத தருணங்கள் எனக்கு சத்திய சோதனைதான். பொறுமைக்கான பரீட்சை.. நிறைய நேரங்களில் சித்தியடைந்தாலும், இன்றைய சம்பாசனை என்னை மஞ்சள் விளக்கிற்கு தள்ளிவிட்டது.

மாதம் மூன்றாகியும் இன்னும் அவர்கள் தங்களது கொடுப்பனவை முடிக்கவில்லை என்பதால், எனது மனேஜர் மொத்தமாக அனைவருக்கும் சேர்த்து கத்திக்கொண்டிருந்தான் (ர்).

இதே கத்தலை கஸ்டமிரிடம் கத்திப்பார் என சொல்ல தோன்றினாலும் எதிர்கால தொழில் ஸ்திரம் கருதி விட்டுவிட்டேன். அது நடக்காது என்பது தெரியும்தானே! நேரத்திற்கு கொடுப்பனவுகளை தராவிட்டாலும் ஒரு நல்ல கஸ்டமரை இழக்க இவர்கள் விரும்பமாட்டார்கள்.

இன்றைய நாள்.. ஆற்றாமையுடனே விடிந்துள்ளது.

திடீரென, எனது இன்ரகொம் அலற,
எதிர்முனையில், “ ஹலோ சர்ஹூன், மிஸ்டர் xxx , ப்ரொம் XXXXXX கொம்பனி” என்றது பிலிப்பினியின் குரல்.

தொடர்பை இணைத்தேன்.

“ஹலோ சேர் , குட் மோர்னிங்க், ஐ அம் கோலிங்க் ப்ரம் XXXXX கம்பனி, இஸ் தேர் எனி பேய்மன்ட் ?” என்றது எதிர்முனை.

கம்பெனி பெயரினை திரும்பவும் உறுதிப்படுத்திய பின் , கணினி மூன்று மாதத்திற்கு மேல் நிலுவை உள்ளதாக காட்டியது.
அதோடு ஒரு மாதம் முன்பு வரைந்த கசோலை இன்னும் எனது முகாமையாளனின் அனுமதிக்காக காத்திருப்பதாக மேலதிக தகவல் சொன்னது.

எதிர்முனைக்கு என்ன பதில் சொல்வது??

“ஹலோ”

“எஸ் ஸேர்” எதிர்முனை ஆவலுடன் உயிர்ப்பானது.

“நொற் யெற் ரெடி” என்றவாறு ரிசீவரினை அறைந்து சாத்தாமல், மெதுவாய் துண்டித்தேன்… இது மாத்திரம்தான் என்னால் முடிந்தது..

இப்போது , அவனது முறை…

அன்புரசிகன்
26-10-2011, 01:47 AM
உங்களுக்கு சம்பளம் வருகிறது தானே.. அந்தளவில் சந்தோசமாக இருங்கள்.

மானம் மரியாதை ரோசம் மனிதாபிமானம் போன்றவற்றை நீண்டகாலம் தாங்கக்கூடிய சாக்கில் போட்டு இறுக கட்டி ஊரிலுள்ள வீட்டினில் வைக்க வேண்டாம். 20 அடி ஆழத்தில் போட்டு புதைத்துவிட்டு தான் மத்திய கிழக்கிற்கு வரவேண்டும். மீள 65 வயதளவில் ஓய்வூதியம் பெறும் நேரத்தில் அந்த புதையலை எடுத்துக்கொள்ளலாம்.

இந்த அடிப்படை கூட தெரியாமல் எப்படி மத்திய கிழக்கு சென்றீர்கள்??? :D :D :D

எந்தப்பள்ளிக்கூடத்தில படிச்சனீங்கள்??? :D (இப்படித்தான் கேட்ப்பானுங்க.. ஏதாவது பிழைவிட்டால்):lachen001:

அகத்தியன்
26-10-2011, 04:25 AM
உங்களுக்கு சம்பளம் வருகிறது தானே.. அந்தளவில் சந்தோசமாக இருங்கள்.

மானம் மரியாதை ரோசம் மனிதாபிமானம் போன்றவற்றை நீண்டகாலம் தாங்கக்கூடிய சாக்கில் போட்டு இறுக கட்டி ஊரிலுள்ள வீட்டினில் வைக்க வேண்டாம். 20 அடி ஆழத்தில் போட்டு புதைத்துவிட்டு தான் மத்திய கிழக்கிற்கு வரவேண்டும். மீள 65 வயதளவில் ஓய்வூதியம் பெறும் நேரத்தில் அந்த புதையலை எடுத்துக்கொள்ளலாம்.

இந்த அடிப்படை கூட தெரியாமல் எப்படி மத்திய கிழக்கு சென்றீர்கள்??? :D :D :D

எந்தப்பள்ளிக்கூடத்தில படிச்சனீங்கள்??? :D (இப்படித்தான் கேட்ப்பானுங்க.. ஏதாவது பிழைவிட்டால்):lachen001:

அந்த ரைம்ல புதைத்ததே மறந்திடும் அன்பு :lachen001::lachen001:

இப்பதான் நானும் அதுக்கு கொஞ்சம் மாறிக்கு வருகின்றேன்.. நாட்டிற்கு போகின்ற போது மனிதம் மறந்துவிடுமோ என அச்சமாக உள்ளது :confused::confused::confused:

கீதம்
27-10-2011, 10:40 PM
இக்கட்டான சூழல்தான்! வியாபாரமென்று வந்துவிட்டால் மானம், ரோஷம், மனசாட்சி இவற்றுக்கு இடங்கொடாதவர்களால்தான் வெற்றியின் உச்சத்தை அடையமுடிகிறது.

இது உங்கள் முதல் அனுபவமாயிருக்கலாம். தொடரும் அனுபவங்கள், உங்களையும் தள்ளக்கூடும், தொலைபேசியை அறைந்து சாத்தும் சூழலுக்கு.

அன்பு சொல்வது நகைச்சுவை போல் இருந்தாலும் அத்தனையும் உண்மைதானே!

அன்புரசிகன்
28-10-2011, 12:32 AM
அன்பு சொல்வது நகைச்சுவை போல் இருந்தாலும் அத்தனையும் உண்மைதானே!
நகைச்சுவையா??? அத்தனையும் உண்மையோ உண்மை...

அந்த சிரிப்பு பக்கத்தில் போடாமல் விட்டால் அகத்தியன் கோபப்பட்டாலும் என்று பயந்து தான் அதை போட்டேன். மற்றப்படி அவை கசப்பான உண்மைகள்...

நான் அமீரகத்தில் வேலைக்கு செல்லும் போது சில நாட்க்களில் இதயத்துடிப்பு அதிகரித்தே இருக்கும். இன்றைக்கு என்ன கேட்ப்பாங்களோ.. அதுக்கு என்ன சொல்லப்போறனோ என்று... பின் அதுவே பழக்கமாகிவிட்டது...

இராஜேஸ்வரன்
13-02-2012, 07:28 AM
மானம் மரியாதை ரோசம் மனிதாபிமானம் போன்றவற்றை நீண்டகாலம் தாங்கக்கூடிய சாக்கில் போட்டு இறுக கட்டி ஊரிலுள்ள வீட்டினில் வைக்க வேண்டாம். 20 அடி ஆழத்தில் போட்டு புதைத்துவிட்டு தான் மத்திய கிழக்கிற்கு வரவேண்டும். மீள 65 வயதளவில் ஓய்வூதியம் பெறும் நேரத்தில் அந்த புதையலை எடுத்துக்கொள்ளலாம்.


நான் அமீரகத்தில் வேலைக்கு செல்லும் போது சில நாட்க்களில் இதயத்துடிப்பு அதிகரித்தே இருக்கும். இன்றைக்கு என்ன கேட்ப்பாங்களோ.. அதுக்கு என்ன சொல்லப்போறனோ என்று... பின் அதுவே பழக்கமாகிவிட்டது...

அயல்நாடு சென்று உழைக்கும் நண்பர்களுக்கு இத்தனை சிக்கல்களா? இந்தியாவில், அதுவும் சென்னையில் அரசாங்க உத்தியோகத்தில் இருக்கும் எனக்கு இவையெல்லாம் ஆச்சரியமூட்டுகின்றன.

அயல்நாடுகளில் பணிபுரியும் நண்பர்களின் வாழ்க்கை நல்ல முறையில் அமையட்டும்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
21-03-2012, 09:38 AM
அயல் நாடுகளில் வேலை செய்யும் அன்பர்களுக்கு எவ்வளவு தொந்தரைகள் இருக்கின்றன...மிகவும் மனம் இருக்கமாகி விட்டது.:sprachlos020: