இன்பக்கவி
23-10-2011, 02:12 PM
http://i1027.photobucket.com/albums/y338/jimikki/pic2.jpg
ஈருயிர் எழுதிய ஓவியமாய் நீ...
என் உயிரின் ஒரு பாதி
உன்னை சுமக்க
கருவறை
தவமிருந்து காத்து கிடக்க
எட்டாத வரமாய்
என்னை ஏங்க வைத்தாய்...
ஒரு முறை கருவில்
வந்துவிடு என கதற
கூக்குரல் கேட்டு ஓடிவந்தாயோ
கருவறையில் வாசம் செய்ய...
செல்லமே
என்னுள் நீ உருவாக
ஆனந்தம்
சொல்ல வார்த்தை இல்லை
கண்ணீரே காணிக்கையாக்கி
காத்திருந்தேன்
உன் இன்முகம் காண...
உன்னை சுமந்த
ஒவ்வொரு நொடியையும்
மீண்டும் சுமக்கும்
வரம் கிடைக்குமா??
கருவறை இருள் கூட
ஒளியில் ஒளிர்ந்தது
அழகிய நிலவாய்
உன்னை சுமந்த போது..
உன் பிஞ்சு பாதம்
எட்டி உதைக்கையில்
இதயம் படபடத்தது
பிஞ்சு பாதம்
காயமுற்றதோ என எண்ணி...
நீ பூமியை எட்டி பார்த்த பொழுதில்
உன்னை நான்
கண்ட நொடி மறக்க முடியுமா??
பாசத்தை மட்டுமே உரியதாக்கி
என் உயிராய் கொஞ்சி மகிழ
இன்று நீ என்னை கொஞ்சுகிறாய்
கொஞ்சி பேசி
திட்டி அடிக்கையில்
அன்னையாய் நீ மாற
சேயாய் நான் மாறி
செல்லமாய் சிணுங்க
நீ அரவணைக்கும் போது
மேனி சிலிர்த்து அளவில்லா
சந்தோசம் எனக்குள்
பல பெயர்கள் கொண்டு
அழைத்த போதும் மகிழாத
என் மனம்
"ம்மா" என்று நீ அழைக்கையில்
வேறு பெயர் வேண்டுமோ
இனி எனக்கு..
என் வாழ்வின் வசந்தம் நீ
இனி ஒரு பிறவி
எனக்கிருந்தால்
மீண்டும் நீயே என்
மகளாய் வந்துவிடு....
என் பெண்மையின்
முழுமை நீ..
ஈருயிர் எழுதிய ஓவியமாய் நீ...
என் உயிரின் ஒரு பாதி
உன்னை சுமக்க
கருவறை
தவமிருந்து காத்து கிடக்க
எட்டாத வரமாய்
என்னை ஏங்க வைத்தாய்...
ஒரு முறை கருவில்
வந்துவிடு என கதற
கூக்குரல் கேட்டு ஓடிவந்தாயோ
கருவறையில் வாசம் செய்ய...
செல்லமே
என்னுள் நீ உருவாக
ஆனந்தம்
சொல்ல வார்த்தை இல்லை
கண்ணீரே காணிக்கையாக்கி
காத்திருந்தேன்
உன் இன்முகம் காண...
உன்னை சுமந்த
ஒவ்வொரு நொடியையும்
மீண்டும் சுமக்கும்
வரம் கிடைக்குமா??
கருவறை இருள் கூட
ஒளியில் ஒளிர்ந்தது
அழகிய நிலவாய்
உன்னை சுமந்த போது..
உன் பிஞ்சு பாதம்
எட்டி உதைக்கையில்
இதயம் படபடத்தது
பிஞ்சு பாதம்
காயமுற்றதோ என எண்ணி...
நீ பூமியை எட்டி பார்த்த பொழுதில்
உன்னை நான்
கண்ட நொடி மறக்க முடியுமா??
பாசத்தை மட்டுமே உரியதாக்கி
என் உயிராய் கொஞ்சி மகிழ
இன்று நீ என்னை கொஞ்சுகிறாய்
கொஞ்சி பேசி
திட்டி அடிக்கையில்
அன்னையாய் நீ மாற
சேயாய் நான் மாறி
செல்லமாய் சிணுங்க
நீ அரவணைக்கும் போது
மேனி சிலிர்த்து அளவில்லா
சந்தோசம் எனக்குள்
பல பெயர்கள் கொண்டு
அழைத்த போதும் மகிழாத
என் மனம்
"ம்மா" என்று நீ அழைக்கையில்
வேறு பெயர் வேண்டுமோ
இனி எனக்கு..
என் வாழ்வின் வசந்தம் நீ
இனி ஒரு பிறவி
எனக்கிருந்தால்
மீண்டும் நீயே என்
மகளாய் வந்துவிடு....
என் பெண்மையின்
முழுமை நீ..