PDA

View Full Version : ஒருதலை காதல்



VISHNU ROCKY77
16-10-2011, 08:35 AM
http://www.shotpix.com/images/86534198022166979422.jpg
நான் கவிதையாக வந்தேன்
கவிஞன் பைத்தியம் என்றாய்

நான் மழையாக வந்தேன்
குடை வேண்டும் என்றாய்

நான் குடையாக வந்தேன்
மழை பிடிக்கும் என்றாய்

நான் கண்ணீரோடு வந்தேன்
உப்பு கரிக்கும் என்றாய்

நான் உப்புக்கடலாய் வந்தேன்
சொந்த நிறமில்லாதவன் என்றாய்

நான் வானவில்லாக வந்தேன்
வண்ணங்களை விட கருப்பு தான் அழகு என்றாய்

நான் கூந்தலாய் வந்தேன்
நான் வந்ததும் நரை வந்தது என்றாய்

நான் ரோஜாவாய் வந்தேன்
முள் குத்துகிறது என்றாய்

இப்படி உனக்காக
நான் உருமாறிக்கொண்டே இருக்கிறேன்

ஆனால் நீ மட்டும்
காதலாக உருமாறி வர என் மறுக்கிறாய்???

http://www.shotpix.com/images/40879694972776453277.jpg

jaffer
16-10-2011, 10:48 AM
அவள் அவளாக இருக்கிறாள். அதான்?!

vseenu
16-10-2011, 01:13 PM
அற்புதம். அருமை.கவிதை வரிகள் மனதை தொட்டன.அத்துடன் இணைத்துள்ள படங்கள் அழகு. பாராட்டுக்கள்.நன்றி

VISHNU ROCKY77
17-10-2011, 05:28 AM
என் பதிவை பர்வையிட்டதர்க்கு மிக்க நன்றி நண்பர்களே

ஆதி
18-10-2011, 12:20 PM
//நான் கண்ணீரோடு வந்தேன்
உப்பு கரிக்கும் என்றாய்

நான் உப்புக்கடலாய் வந்தேன்
சொந்த நிறமில்லாதவன் என்றாய்
//

இந்த வரிகளில் முரண் இருக்கு, கவனிக்கவும்..

தொடர்ந்து எழுதுங்கள்...

அமரன்
19-10-2011, 09:15 PM
நல்ல கவிதை...

இன்னும் அழகாகச் சொல்லி இருக்கலாம்.