PDA

View Full Version : அமெரிக்க அழிகின்றது..



dhilipramki
16-10-2011, 06:24 AM
அமெரிக்க அழிகின்றது..
உலகத்தையே ஆட்டி படைக்க வேண்டும், அனைத்து நாடுகளும் தங்கள் கைவசம் இருக்க வேண்டும், பிரச்சனைகளை தீர்ப்பது போல் நாட்டாமை செய்து பிழைக்க வேண்டும்...இதற்கெல்லாம் பணம் செலவு செய்ய வேண்டும். கொஞ்சநஞ்சம் இல்லை கோடிகணக்கில்....
இவைகளுக்கு பணத்தை வாரியிறைத்து, தம் மக்கள் நலத்தை பாராமல், தம் பொருளாதார விதத்தை மாற்றாமல் விட்டுவிட்டத்தின் விளைவுகள், இன்று வால் ஸ்ட்ரீட்டில் இருந்தது ஆரம்பித்த போராட்டம், நாளை டைம் ஸ்கொயர் வரை விரிவடையும், என்று போராட்ட குழுவினர் அறிவித்தனர்.

வேலையில்ல திண்டாட்டம் உறவாகும் என்று பல முறை பொருளாதார வல்லுனுர்கள் அறிவித்தும் இன்று இந்த நிலை. உலகின் முன்னேறிய நாடு என்று கூறிகொண்ட அமெரிக்க இன்று தம் வாழ்க்கை வேலையில்லாமல் வீழ்ந்து கிடக்கிறது என்று கதறும் நிலை.
இது வரையில் நியூயார்க் காவல்துறை 70 பேரை கைது செய்து உள்ளது.
குதிரை காவல் படையினர், போராட்ட குழுவை விரட்டியத்தில் ஒரு பெண் கீழே விழுந்து காயமடைந்தார். இந்த போராட்டத்தில் மேலும் 5000 பேர் கலந்து கொள்கின்றனர்.
அமெரிக்க அரசாங்கம் இந்த போராட்டத்தினை தம் புதிய பொருளாதார கொள்கையைக் கொண்டு, வேலை இல்லாத இளையதலைமுறையினருக்கு நன் முறையில் மாற்றம் விளைவித்து, தம் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லவேண்டும் என்பது சர்வதேச பொருளாதார நிபுணர்களின் பார்வை.

seguwera
16-10-2011, 07:37 AM
எத்தனை காலம்தான் அடுத்த நாட்டின் வளங்களை அழித்து அமெரிக்கா குளிர் காய முடியும். காற்று திசை மாறினால் குளிர் காய அவர்கள் பற்ற வைத்த நெருப்பே அவர்களை சுடும் .

jaffer
16-10-2011, 10:50 AM
விதை விதைத்தவன் வினை அறுப்பான்

vseenu
16-10-2011, 01:05 PM
தன்னை உலக போலீஸ்காரனாக நினைத்துக்கொண்டு அந்த நாடு செயல்பட்டதன் விளைவை இன்று எதிர்கொள்கிறது.

dhilipramki
16-10-2011, 01:37 PM
கேபிடளிசிம் பொருளாதார கொள்கை கொண்ட நாடுகள் விரைவில் அடிவாங்கும் என்று கூறிய பொழுது, "இல்லை, அது நடக்கவே நடக்காது" என்று கூறிய தென் அமெரிக்கா, லத்தின் அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள், இன்று பொது மக்களின் போராட்டத்தை தடுத்து நிறுத்த முடியாமல் திணறுகிறது. :sprachlos020:

அன்புரசிகன்
16-10-2011, 11:16 PM
அமெரிக்கா வளர்கிறதோ இல்லையோ அது அந்த மக்களின் மீது விழும் அடியிலும் வளர்ந்துவரும் நாடுகளுக்கு தான் பாரிய இழப்பு. இதை நினைத்து நீங்கள் தான் வருந்தவேண்டும். காரணம்....
அமெரிக்காவில் முதலிட்டிருப்போரில் பலர் இந்தியர்கள் தான். அவர்களது பங்கு சந்தை சரிந்தால் அந்த நஷ்டத்தை பகிரப்போவது நீங்கள் என்பதை மறந்து கொண்டாடுகிறீர்கள். உதாரணமாக அம்பானி அங்கே விட்டதை இந்தியாவில் பிடிக்க நினைத்தால் உங்கள் வாழ்க்கை செலவு தானாக உயரும். எப்படியும் அம்பானி கவிழப்போவதில்லை. கவிழ்வது உங்கள் நாட்டு பொருளாதாரம் தான்....
----------
மற்ற நாடுகளில் நடந்த போராட்டத்தை போல் கட்டுப்படுத்த முடியாததற்கு காரணம் வளர்ந்த நாடுகளில் உள்ள சட்டதிட்டங்கள். நினைத்தாற்போல் இந்தியா இலங்கை போல் துப்பாக்கியை நீட்ட முடியாது.... அண்மையில் ஐக்கிய இராச்சியத்தில் நடந்தது போன்ற விடையம் ஏன் பிரான்ஸ் இல் நடத்த முடியவில்லை.??? அந்த நாட்டு சட்டம் அப்படி? அரசுக்கு எதிராக நினைத்தாலே போட்டுத்தள்ளிவிடுவார்கள்.

லிபியாவில் நடந்தது போல் ஏன் பஹரெய்ன் இல் நடக்கவில்லை. அங்கும் தான் மக்கள் எழுச்சி போராட்டம் நடத்தினார்கள். பஹரெய்ன் கத்தார் ஐக்கிய அரபு இராச்சியம் போன்றவற்றின் இராணுவமே அமெரிக்கா தான். அவற்றிற்கு சம்பளம் கொடுப்பது அந்த நாடுகள்.

ஆகவே எப்படிப்பார்த்தாலும் நஷ்டம் என்று வந்தால் தலையை பிய்த்துக்கொள்ளப்போவது இந்தியாவும் சீனாவும் தான். தலைக்கு மேல் வெள்ளம் என்றால் அமெரிக்கா தனது பணத்தை மிதக்கவிட்டு தனது பெறுமானத்தை குறைத்துவிடும். அமெரிக்கப்பணத்தை வைத்திருக்கும் இந்த இருநாடுகளும் என்ன செய்துவிடமுடியும்????

VISHNU ROCKY77
17-10-2011, 05:31 AM
:lachen001:.........வாழ்க பாரதம்

Ravee
17-10-2011, 10:41 AM
அருமையான விளக்கம் அன்பு ... நான் படித்தவுடன் எழுத நினைத்ததை ஒரு வரி விடாமல் மேற்கோள் இட்டு காட்டி உள்ளீர்கள்.பகிர்வுக்கு நன்றி நண்பர்களே

Vijisri
19-10-2011, 06:11 AM
அமெரிக்கா வளர்கிறதோ இல்லையோ அது அந்த மக்களின் மீது விழும் அடியிலும் வளர்ந்துவரும் நாடுகளுக்கு தான் பாரிய இழப்பு. இதை நினைத்து நீங்கள் தான் வருந்தவேண்டும். காரணம்....

ஆகவே எப்படிப்பார்த்தாலும் நஷ்டம் என்று வந்தால் தலையை பிய்த்துக்கொள்ளப்போவது இந்தியாவும் சீனாவும் தான். தலைக்கு மேல் வெள்ளம் என்றால் அமெரிக்கா தனது பணத்தை மிதக்கவிட்டு தனது பெறுமானத்தை குறைத்துவிடும். அமெரிக்கப்பணத்தை வைத்திருக்கும் இந்த இருநாடுகளும் என்ன செய்துவிடமுடியும்????

அன்பு கோபப்பட்டு சபிக்கிறார். அவர் வீட்டுப் பொருளாதாரம் அமெரிக்கா சார்ந்தது என்பது காரணமாக இருக்கலாம். ஆனால் அன்பு அல்லது அவரது தாத்தா சாபம் பலிக்க செய்யும் மாந்திரீகம் இல்லை பொருளாதாரம். விஞ்ஞானம் மாதிரி துல்லிய கணிப்பு இதில் இல்லை. நிகழ்ந்ததையும் நிகழ்வதையும் பதிவு செய்வது மட்டும்தான் பொருளாதாரம் என்ற பாடம். அமெரிக்கா என்ற நாடு இல்லாத காலத்திலேயே இந்தியா செழுமையான பொருளாதார வளர்ச்சி பெற்றிருந்தது என்றாலும் அமெரிக்கா வீழ்ந்து விட்டது என்று கூறுவதும் தவறு

Nivas.T
19-10-2011, 08:22 AM
அன்பு கோபப்பட்டு சபிக்கிறார். அவர் வீட்டுப் பொருளாதாரம் அமெரிக்கா சார்ந்தது என்பது காரணமாக இருக்கலாம். ஆனால் அன்பு அல்லது அவரது தாத்தா சாபம் பலிக்க செய்யும் மாந்திரீகம் இல்லை பொருளாதாரம். விஞ்ஞானம் மாதிரி துல்லிய கணிப்பு இதில் இல்லை. நிகழ்ந்ததையும் நிகழ்வதையும் பதிவு செய்வது மட்டும்தான் பொருளாதாரம் என்ற பாடம். அமெரிக்கா என்ற நாடு இல்லாத காலத்திலேயே இந்தியா செழுமையான பொருளாதார வளர்ச்சி பெற்றிருந்தது என்றாலும் அமெரிக்கா வீழ்ந்து விட்டது என்று கூறுவதும் தவறு

அமெரிக்காவின் வீழ்ச்சி என்பது மறைமுக இந்திய பொருளாதார வீழ்ச்சிதான். அன்பு சொல்வதுபோல் அவர்கள் நட்டு மக்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைத்துவிட்டது. அவர்கள் வேலைக்காக போராடுவது அடிப்படை வசதியை இன்னும் இன்னும் பெருக்கிக் கொள்ளவே, அதற்க்கு பெயர்தான் வளர்ந்த நாடுகள் என்று சொல்வோம். இங்கு அடிப்படை தேவைகளை நிறைவேற்றவே வழி இல்லை.

எப்படி இருக்கும்? நாம் பல் தேய்க்கும் பர்ப்பசையிலிருந்து விமானம் வரை எதுவும் நமது தயாரிப்பில்லை. நம் நாட்டு மக்கள் முதலீடுகள் எழுபது சதவிகிதம் அந்நிய நட்டு பொருள்கள் மீதுதான். பிறகு அங்கு வீழ்ந்தால் இங்கு மறைமுக வீழ்ச்சி கண்டிப்பாக இருந்துதானே ஆகவேண்டும் .

Vijisri
19-10-2011, 06:56 PM
பிறகு அங்கு வீழ்ந்தால் இங்கு மறைமுக வீழ்ச்சி கண்டிப்பாக இருந்துதானே ஆகவேண்டும் .பொருளாதார கோட்பாடுகளால் அவ்வாரு எதையும் அனுமானித்து கூற முடியாது. காலம்தான் பதில் சொல்லும். நம் திண்மையில் நம்பிக்கை வைத்து பயமில்லாமல் முயற்சிப்பது மட்டுமே நலம் பயக்கும்

அமரன்
19-10-2011, 08:50 PM
எங்கோ தேள் கொட்டினால் எங்கோ நெறி கட்டும் என்ற நிலைப்பாடு பொருளாதாரத்திலும் பொருந்தும்.

யதார்த்தம் பொதிந்த எதுவும் பொய்த்ததில்லை...

அதிகளவு அன்பும் அதிகளவு நம்பிக்கையும் அழிவைத் தரவல்லன.. சிந்திப்போம்!!

அன்புரசிகன்
19-10-2011, 11:09 PM
அன்பு கோபப்பட்டு சபிக்கிறார். அவர் வீட்டுப் பொருளாதாரம் அமெரிக்கா சார்ந்தது என்பது காரணமாக இருக்கலாம். ஆனால் அன்பு அல்லது அவரது தாத்தா சாபம் பலிக்க செய்யும் மாந்திரீகம் இல்லை பொருளாதாரம். விஞ்ஞானம் மாதிரி துல்லிய கணிப்பு இதில் இல்லை. நிகழ்ந்ததையும் நிகழ்வதையும் பதிவு செய்வது மட்டும்தான் பொருளாதாரம் என்ற பாடம். அமெரிக்கா என்ற நாடு இல்லாத காலத்திலேயே இந்தியா செழுமையான பொருளாதார வளர்ச்சி பெற்றிருந்தது என்றாலும் அமெரிக்கா வீழ்ந்து விட்டது என்று கூறுவதும் தவறு



பொருளாதார கோட்பாடுகளால் அவ்வாரு எதையும் அனுமானித்து கூற முடியாது. காலம்தான் பதில் சொல்லும். நம் திண்மையில் நம்பிக்கை வைத்து பயமில்லாமல் முயற்சிப்பது மட்டுமே நலம் பயக்கும்

நான் சொல்லவந்ததில் என்ன தவறு என்பதை விடுத்து மந்திரீகம் அது இது என்கிறீர்களே.. நான் சொல்லவந்தது அமெரிக்காவின் பொருளாதாரம் வீழ்ந்தால் கவிழப்போவது இந்தியாவினதும் தான் என்று சொல்லவந்தேன்.
முதலில் கூறியதும் தான். சில உதாரணங்கள்.
அமெரிக்காவில் பணிபுரியும் அநேகர் இந்தியர்கள் தான். அதுவும் சாதாரண இந்தியர்களல்ல. அந்த அநேகரும் அளவுக்கதிகமான கல்வி மன்றும் அனுபவம் கொண்டவர்கள். அங்கு வேலையில்லாத்திண்டாட்டம் என்றால் அவர்கள் வரஇருப்பது இந்தியாவுக்குத்தான். வந்தால் வரட்டுமே நல்லது தானே என்று நீங்கள் சொல்வீர்கள்.
இந்தியாவுக்கு அவர்கள் வருவதால் 2 தீமை. ஒன்று அமெரிக்கா மூலமான அமெரிக்க பணவருவாய் தடைப்படும். அன்னியச்செலாவாணி முடக்கப்படும். இந்திய பணத்தின் பெறுமானம் உலகசந்தையில் அமெரிக்கா டொலரின் பெறுமானத்துடன் ஒப்பிடும் போது குறையும். உலகசந்தையின் நடவெடிக்கை அமெரிக்க டொலரில் தான் உள்ளது. உங்கள் நாட்டில் உள்ள இறக்குமதியாளர்கள் தங்கள் இறக்குமதியை குறைப்பார்கள். இதனால் பொருட்களின் கிராக்கி அதிகரிக்கும். அந்த அமெரிக்க பணத்துக்குகும் கிராக்கிக்கும் ஈடுகொடுக்க பொருட்களின் விலை அதிகரிக்கும்..........................

இரண்டாவது அவர்கள் அதிக கல்வித்தகமை மற்றும் அனுபவங்களுடன் வருவதால் இந்தியாவில் வேலைஇல்லாத்திண்டாட்டம் அதிகரிக்கும். ஐரோப்பா அமெரிக்கா யப்பான் அவுஸ்திரேலியாவில் தான் உள்ளூர் அனுபவத்திற்கு மதிப்பு. இலங்கை இந்தியா பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் வெளிநாட்டு அனுபவத்திற்கு தான் மதிப்பு. இந்த மனநிலை மாற்றப்பட்டால் பிரச்சனையில்லை. இது தான் நம்மவர்களின் பிரச்சனையே... உள்ளூரில் வேலைசெய்தவர்களின் பாடு திண்டாட்டமாகும். இது இப்படியே சங்கிலித்தொடராகும்.
ஒரு நாட்டின் பொருளாதாரம் மற்றும் பணவீக்கம் என்பது ஒரு வட்டம் போன்றது என்பதை விளக்கி ஒரு சம்பவம் ஒன்றை தாமரை பதிவு ஒன்று பதிந்துள்ளார். அது என் கண்ணில் பட்டால் இங்கே தருகிறேன்.

வளர்ந்தநாடுகளில் காலணிக்கு பூச்சு வாங்க காசு இல்லை என்று வருந்துவான். ஆனால் வளர்ந்துவரும் நாடுகளில் காலணிக்கே வக்கில்லை...

இது தான் உண்மையும் யதார்த்தமும். இதை சொல்ல உங்களுக்கு காலம் தேவைப்படுகிறது... காலத்தின் மீது பழியை போட்டுவிட்டு போனால் போகட்டும் போடா என்று இருப்பவர்கள் தான் இலவசங்களுக்கு ஆசைப்பட்டு நாட்டையே கவிழ்ப்பவர்கள். இறுதியாக ஒரு வரி கூறினீர்களே அது உண்மை... முயற்சி செய்ய வேண்டும் என்று. காலம் பதில்சொல்லவேண்டும் என்று காத்திருப்பவர்கள் எவரும் முயற்சி செய்யமாட்டார்கள்....

இன்னொன்று சொன்னீர்கள். என்ன ஒரு வாக்கு. அது என்னங்க. எதையும் அனுமானிக்க முடியாதா...? ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அது இது என்பதே அனுமானங்களும் எதிர்வுகூறலும் தான். அப்படி இல்லாவிட்டால் நிதி அமைச்சு எதற்கு. அரசு நிதி அறிக்கை எதற்கு. சிறந்த பொருளாதார வல்லுனரை பிரதம மந்திரியாக கொண்ட நாட்டில் இருந்துகொண்டு இப்படி கூறுகிறீர்கள். அது தான் வேடிக்கை....
அமெரிக்கா அழிகிறது என்பதே ஒருவரது அனுமானமும் எதிர்வுகூறலும் தான். ஒரு நாட்டில் ஏற்படும் வன்முறை வேலையில்லா திண்டாட்டம் அதற்கு வழிவகுக்கும் என்று சொல்வது என்ன விஞ்ஞான விளக்கமா???
--
நீங்கள் சொன்னது போன்று அமெரிக்கா என்ற நாடு இல்லாத காலத்தில் எவனுங்க அமெரிக்காவுக்கு வேலைக்கு போயிருப்பான். அல்லது அமெரிக்காவில் முதலிட்டிருப்பான். ??? அப்படியான காலத்தில் பசுமையும் செழுமையுமாகத்தான் இருந்திருக்கும். தற்போதய இந்தியா அப்படி இல்லை. மக்கள் தொகை அதிகரிப்பு என்பது முதற்பிரச்சனை. 2வது அநேக இந்தியப்பணம் வெளிநாட்டில் தான் உள்ளது.

ஒரு இந்தியன் $100.00 வைத்திருந்தால் (உதாரணத்திற்கு 1$=40.00 ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள்.) இப்போது அவனிடம் உள்ள இந்திய ரூபாய் 4000.00. இதையே அமெரிக்க பொருளாதாரம் சரிந்து அவர்களது மதிப்பு வீழ்ந்து உங்களது உயர்ந்தால் 1$<40.00 எனற நிலை வரும். அந்த அமெரிக்கப்பணம் வைத்திருந்த இந்தியனின் பணம் <4000.00 என்று வரும்.

உலக முதற்தர பணக்கார்கள் இந்தியாவில் உள்ளார்கள் என்பது போல் உலக முதற்தர ஏழைகள் எங்கு உள்ளார்கள் என்பதையும் அறிந்திருங்கள். (ஆபிரிக்காவில் என்று சொல்லிவிட்டு பெருமூச்சு விடாதீர்கள். இந்தியாவிலும் பல பல ஆபிரிக்க கிராமங்கள் உள்ளன)
நிகழ்ந்ததை பதிவு செய்வது மட்டும் பொருளாதார பாடமன்று. அதை கொண்டு எதிர்வு கூறுவதும் தான். அதை சிறப்பாக செய்பவர் தான் சிறந்த பொருளாதாரவல்லுணர் என்று சொல்கிறோம். அப்படிப்பட்ட சிறந்தவர்களில் ஒருவர் தற்போதய இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்......
----------
இன்னொருநாட்டில் தங்கியிருக்கவில்லை என்ற நிலை வரும் போது இதை மற்ற நாடுகளை பற்றி கவலைப்படத்தேவையில்லை. இல்லாதவரை எந்த நாட்டின் பொருளாதார மாற்றமும் மற்றநாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும். இதற்கு சிறந்த உதாரணம் அண்மையில் நிகழ்ந்தது.

அவுஸ்திரேலிய வர்த்தகப்புழக்கம் அவர்கள் தங்களது பணத்தில் தான் உள்ளது. அதாவது அவுஸ்திரேலிய டொலர். அண்மைய அமெரிக்க பொருளாதார சரிவினால் அவுத்திரேலியாவில் பணத்தின் பெறுமதி உலக சந்தையில் அதிகரித்துவிட்டது. 1 அவுத்திரேலிய டொலர் 1.15 அமெரிக்க டொலருச்கு சமானமாக வந்தது. (முன்பு 1 அவுஸ்திரேலிய டொலர் 0.77 - 0.80 ) இதனால் இறக்குமதியாளர்களுக்கு சந்தோசம். ஆனால் அநேகமாக ஏற்றுமதி தான் உள்ளது. அவுத்திரேலிய பணமதிப்பு அதிகரிந்ததால் ஏற்றுமதி குன்றி Bluescope steel என்ற ஒரு பாரிய இரும்பு வாணிப தொழிற்சாலையை மூடிவிட்டார்கள். பல்லாயிரக்கணக்கானோர் வேலையிழந்தார்கள். எனக்கு மட்டும் தெரிந்து ஏறத்தாள 25 இலங்கையர்களும் 7 இந்தியர்களும் இதில் அடக்கம். எனக்கு தெரியாதோர் எத்தனை பேர். அந்த 7 பேரின் மூலம் இந்தியா வரும் அன்னியப்பணம் இனி அவர்களுக்கு வேலைகிட்டும் வரை தடைப்படும். ..............................................................................

சந்தேகம் என்றால் Bluescope steel என்று கூகிளில் தேடுங்கள். பல சுவாரசியமான விடையங்கள் கிட்டும்.
------------------
அமெரிக்கா போன அனைத்து இந்தியனும் புத்திசாலி. ஆனால் மறுதலை உண்மை அல்ல. அது தான் கசப்பானது.

Vijisri
22-10-2011, 05:42 PM
ஒன்று அமெரிக்கா மூலமான அமெரிக்க பணவருவாய் தடைப்படும். அன்னியச்செலாவாணி முடக்கப்படும். இந்திய பணத்தின் பெறுமானம் உலகசந்தையில் அமெரிக்கா டொலரின் பெறுமானத்துடன் ஒப்பிடும் போது குறையும். உலகசந்தையின் நடவெடிக்கை அமெரிக்க டொலரில் தான் உள்ளது. உங்கள் நாட்டில் உள்ள இறக்குமதியாளர்கள் தங்கள் இறக்குமதியை குறைப்பார்கள். இதனால் பொருட்களின் கிராக்கி அதிகரிக்கும். அந்த அமெரிக்க பணத்துக்குகும் கிராக்கிக்கும் ஈடுகொடுக்க பொருட்களின் விலை அதிகரிக்கும்..........................

இரண்டாவது அவர்கள் அமெரிக்காவின் பொருளாதாரம் அழிந்து விட்டது என்ற நிலைப்பாட்டிற்கு பின் இதெல்லாம் எங்கே?

விவாதிப்பதில் தவறு இல்லை. ஆனால் தங்கள் விவாதம்தான் பொருளாதாரக் கல்வியின் சாராம்சம் என்று கூறுவது தவறு. எங்கேயோ பட்டாம் பூச்சி இறக்கையை அடித்துக்கொண்டால் இந்துமஹா சமுத்திரத்தில் சுனாமி வரும் என்று விஞ்ஞனம் கூட ஒரு வாதம் சொல்கிறது. ஆனால் வாதம் எல்லாம் வேதம் ஆகாது!

Vijisri
22-10-2011, 05:46 PM
யதார்த்தம் பொதிந்த எதுவும் பொய்த்ததில்லை...
நம் திறமையில் நம்பிக்கை வைப்பதில் யதார்த்தம் இல்லை என்பதை நானும் ஒத்துக்கொள்ள மாட்டேன்! இந்த நாடும் ஒத்துக்கொள்ளாது!! அமெரிக்காவும் ஒத்துக்கொள்ளாது

Vijisri
22-10-2011, 05:50 PM
. நம் நாட்டு மக்கள் முதலீடுகள் எழுபது சதவிகிதம் அந்நிய நட்டு பொருள்கள் மீதுதான். .முதலீடு என்பதும் செலவீனம் என்பதும் பொருளாதார கல்வியில் வெவ்வேறு அர்த்தம் கொண்டவை