PDA

View Full Version : விட்டுப் போனவை



ஜான்
12-10-2011, 12:42 PM
கூவி எழுப்பியது வைகறைக்குயில்
எத்தனை கூவல் --எண்ணியிருக்கலாம்

மொட்டு விட்டிருந்தது செம்பருத்திச் செடி
ஒரு குவளைத் தண்ணீர் ஊற்றியிருக்கலாம்

நன்றாய் இருந்தது தேங்காய்த் துவையல்
நன்றாய் இருந்ததென சொல்லியிருக்கலாம்

குறுக்கே வந்தது நர்சரிக் குழந்தை
புன்சிரிப்போடு போயிருக்கலாம்

விடுப்பு முடித்து வந்தார் நண்பர்
பாப்பா நலமா ....... கேட்டிருக்கலாம்

சில்லறை இல்லை என்றதற்குப் பதிலாய்
சாப்பிட்டாயா என்றிருக்கலாம்


****************************************

நிமிடங்கள் தொலைந்த நாளின் முடிவில்
தோல் பை பணத்தைப் பூட்டி வைக்கையில்
தூக்கம் வந்து தொலைத்த போதும்
தூங்க மறுக்கிறது மனம்

vseenu
12-10-2011, 01:37 PM
அருமை நண்பரே ! கவிதை நன்றாயிருக்கிறது என நான் எப்படி சொல்லாமல் இருக்க முடியும்?.

ஜான்
20-02-2012, 08:01 AM
மிக்க நன்றி சீனு

ஆதி
20-02-2012, 09:25 AM
//சில்லறை இல்லை என்றதற்குப் பதிலாய்
சாப்பிட்டாயா என்றிருக்கலாம்
//

சுருக்கென நெஞ்சில் ஊடிய வரி...

ஜான்
07-03-2012, 12:41 PM
நன்றி ஆதன் அவர்களே