rema
11-10-2011, 03:05 AM
நிலவு போல் நம் நேசம்...
தேகம் தேயும்..
தேய்பிறை நாட்கள் உண்டு...
கோபமும் ஊடலும்
நம் நேசத்தை
கொஞ்சமாய் மறைக்கையில்..
சிலநாள் ஏனோ
அதிகமாய் உன் வசம்
நிறைந்திருக்கும் நேசம்...
பெளர்ணமியாய் வீசும்
முழு மதி நாட்கள்...
சில நேரம் சில
காரணமோ காரியமோ மறைக்கும்
முழுமையாய் நம் நேசத்தை
அமாவாசைப் போல்...
நமக்கு புரியும் அன்பே...
நிலவு !
இல்லாமல் இருந்ததில்லை ஓர் நாளும்
நம் நேசமும்.....!
தேகம் தேயும்..
தேய்பிறை நாட்கள் உண்டு...
கோபமும் ஊடலும்
நம் நேசத்தை
கொஞ்சமாய் மறைக்கையில்..
சிலநாள் ஏனோ
அதிகமாய் உன் வசம்
நிறைந்திருக்கும் நேசம்...
பெளர்ணமியாய் வீசும்
முழு மதி நாட்கள்...
சில நேரம் சில
காரணமோ காரியமோ மறைக்கும்
முழுமையாய் நம் நேசத்தை
அமாவாசைப் போல்...
நமக்கு புரியும் அன்பே...
நிலவு !
இல்லாமல் இருந்ததில்லை ஓர் நாளும்
நம் நேசமும்.....!