PDA

View Full Version : குறுங்கவிதைகள்



கோபாலன்
05-10-2011, 07:53 PM
வெறுமை
தனியாய் உட்கார்ந்து யோசிக்கும்போது தடங்கலில்லாமல் வருவது
அனைவரும் நீங்கிச் செல்லும்போது ஆக்கிரமித்துக் கொ(ல்)ள்வது!

நண்பர்கள்
உறவைக் கெடுப்பவர்கள் கொடியவர்கள் என்றால்
நண்பர்களும் கொடியவர்கள்தான்
எனக்கும் துன்பத்திற்குமான உறவை ஆனந்தத்தைத்
தெளித்துக் கெடுப்பதால்!

தனிமை
எழுத்துக்கள் ஒளிர்வது தனி மையில்தான்!
எண்ணங்கள் மிளிர்வது தனிமையில்தான்!!

vseenu
06-10-2011, 06:15 AM
தனிமையை ரசிக்கும் அருமை.தொடர்க.நன்றி.

வெங்கி
06-10-2011, 06:20 AM
நண்பர்களை வர்ணிப்பது... நல்ல வரிகள்... பாராட்டுக்கள்

அமரன்
18-09-2012, 10:45 PM
தனிமைக்காட்டில் தவமிருந்து பெற்ற எண்ணங்கள் வெறுமைக்கும் உங்களுக்குமான உறவை அறுத்ததோடு மட்டும அல்லாது என் நெஞ்சுடனும் நட்பு பூணுகின்றன.

கடைசி இரு கவிதைகளும் கவர, வெறுமை மட்டும் சற்று நெருடுகிறது.

தொடர்ந்து எழுதுங்கள் கோபால்.

நாஞ்சில் த.க.ஜெய்
19-09-2012, 10:48 AM
வெறுமை என்னை வெறுத்துவிட நண்பர்கள் துணையின்றி தனிமை காட்டில் தவிக்கும் கவிஞனின் தவிப்புகள்..பாராட்டுக்கள்..

ந.க
29-10-2012, 09:57 PM
...தனி மை.... அருமை.......நன்றி