கோபாலன்
03-10-2011, 10:17 PM
முதல் பார்வையிலே என்னுள் நுழைந்து விட்டாய்
குளிர் மேகமாய் அன்பை பொழிந்து விட்டாய்
எந்தன் சோர்வையும் உன்னுள் ஏந்திக்கொண்டாய்
எந்த நிலையிலும் இன்பங்கள் நீ கொடுத்தாய் !
தனிமையை வீசி வாட்டம் தந்து போனாய்
இனிமையாய் பேசி ஊட்டம் தந்தாய் தேனாய்
வசந்தமாய் வந்து வாசம் வீசிப் போனாய்
நிசப்தமாய் வந்து சுவாசம் ஆனாய் நீயாய் !!
எந்தன் நினைவிலும் நீங்கா இடம் பிடித்தாய்
உந்தன் உயிரினில் மெல்ல கலந்துவிட்டேன் நானாய் !!!
குளிர் மேகமாய் அன்பை பொழிந்து விட்டாய்
எந்தன் சோர்வையும் உன்னுள் ஏந்திக்கொண்டாய்
எந்த நிலையிலும் இன்பங்கள் நீ கொடுத்தாய் !
தனிமையை வீசி வாட்டம் தந்து போனாய்
இனிமையாய் பேசி ஊட்டம் தந்தாய் தேனாய்
வசந்தமாய் வந்து வாசம் வீசிப் போனாய்
நிசப்தமாய் வந்து சுவாசம் ஆனாய் நீயாய் !!
எந்தன் நினைவிலும் நீங்கா இடம் பிடித்தாய்
உந்தன் உயிரினில் மெல்ல கலந்துவிட்டேன் நானாய் !!!