M.Jagadeesan
01-10-2011, 02:14 PM
பிரிகின்ற வேளை வந்ததை எண்ணி
பித்தம் பிடித்தவன்போல் நித்தமும் உளறுகின்றேன்
உன்னோடு நான் உறவாடிய நாட்களெல்லாம்
வாழ்க்கையில் என்றும் மறவாத நாட்கள்.
நான்செய்த குற்றமோ நீசெய்த குற்றமோ
நாள்குறித்து விட்டார்கள் நம்மைப் பிரிப்பதற்கு
வான்முகிலும் நிலவும்போல் வாழ்ந்திருப்போம் என்றெண்ணி
கண்ட கனவெல்லாம் கானல்நீர் ஆயிற்று.
நாளை காலையிலே விடிகாலை வேளையிலே
நாலுபேர் சூழ்ந்திருக்க நாடெல்லாம் பார்த்திருக்க
கழுத்திலே கயிறு ஏறுகின்ற வேளையிலே
காற்றோடு காற்றாக நானும் கலந்திருப்பேன்.
(நாளை காலையிலே தூக்கிலே ஏறப்போகும் உடலைப் பார்த்து அரற்றிய ஓர் உயிரின் புலம்பல் இது.)
பித்தம் பிடித்தவன்போல் நித்தமும் உளறுகின்றேன்
உன்னோடு நான் உறவாடிய நாட்களெல்லாம்
வாழ்க்கையில் என்றும் மறவாத நாட்கள்.
நான்செய்த குற்றமோ நீசெய்த குற்றமோ
நாள்குறித்து விட்டார்கள் நம்மைப் பிரிப்பதற்கு
வான்முகிலும் நிலவும்போல் வாழ்ந்திருப்போம் என்றெண்ணி
கண்ட கனவெல்லாம் கானல்நீர் ஆயிற்று.
நாளை காலையிலே விடிகாலை வேளையிலே
நாலுபேர் சூழ்ந்திருக்க நாடெல்லாம் பார்த்திருக்க
கழுத்திலே கயிறு ஏறுகின்ற வேளையிலே
காற்றோடு காற்றாக நானும் கலந்திருப்பேன்.
(நாளை காலையிலே தூக்கிலே ஏறப்போகும் உடலைப் பார்த்து அரற்றிய ஓர் உயிரின் புலம்பல் இது.)