Ravee
10-09-2011, 03:00 AM
http://1.bp.blogspot.com/_YSkWnKuSOXg/S6kv7uanmsI/AAAAAAAAABc/RrydFa_Dd_I/s640/tagreed.jpg
பெண்மைக்கு இன்னும் எத்தனை முகங்கள் !!!
கைக் குழந்தையாய் கவிழக்கூட தெரியாத போதில்
கைக்கெட்டும் தூரத்தில் தேடியது உன்னைத்தான்
கட்டி அனைத்து முத்தமழை பொழிந்து
நான் அழுதால் நீ அழுது நடமாடிய தெய்வம் நீ
பருவத்து காலமாற்றம் போல உறவு மாற்றங்களாய்
ஆச்சி , அத்தை , சித்தி என வரிசை கட்டி வந்தாய் நீ
வளர்ந்து வந்து வாசல் படிதாண்டி
கல்விக்கூடம் சென்ற போது
என் கை பிடித்து எழுதி ... விரல் மடக்கி கணக்கிட்டு ...
தாவி குதித்து பாடல்கள் பாடி ... கல்வி கண் திறந்த
சரஸ்வதியே ... குருவாய் என் வாழ்வில் நீ
வளர்ந்த வாலிப வயதில் வாழ்க்கை பயணத்தின் அர்த்தம் சொல்ல
என்னை கவர்ந்த ... நேசித்த எத்தனையோ பெண் வடிவாய்
எனக்குள் இருந்த என்னை என் முன் காட்டிய தோழிகளாய் நீ
வாழ்க்கையில் முன்னும் பின்னும் இடறும் போது
" என்னப்பா .... என்ன ஆச்சு " என்ற கனிவில்
காதலியாய் ... மனைவியாய் அன்றும் இன்றும் என்றும்
என்னுள் குடி கொண்ட இதயம் கவர்ந்த பெண்ணாய் நீ
கண் மூடி காணாமல் போய்
உன்னை தேடி நான் அழுத போது
கலகலப்பாய் சிரித்து முன் வந்து
போக்கு காட்டி போகும் என் பெண்ணும் நீ
இன்னும் வாழ்வில் எத்தனை வடிவில் நீ வருவாய்
மனம் இனிக்க இன்பங்கள் தருவாய்
என்று ஏங்கி ஏங்கி மயங்கிய போது
மாயா உருவத்தில் கோர முகம் காட்டி
கனவில் என்றும் என்னை கலைக்கும் பெண்ணே
கடவுளாய் வந்தால்
உனக்கு காளி முகம் எதற்கு
கனிவாய் காமாட்சியாய் வா ....
இறைவியாய் இருந்தால் என்னுள் இறங்கி
பெண்மைக்கு இன்னும் எத்தனை முகங்கள் என்று காட்டு !!!
பெண்மைக்கு இன்னும் எத்தனை முகங்கள் !!!
கைக் குழந்தையாய் கவிழக்கூட தெரியாத போதில்
கைக்கெட்டும் தூரத்தில் தேடியது உன்னைத்தான்
கட்டி அனைத்து முத்தமழை பொழிந்து
நான் அழுதால் நீ அழுது நடமாடிய தெய்வம் நீ
பருவத்து காலமாற்றம் போல உறவு மாற்றங்களாய்
ஆச்சி , அத்தை , சித்தி என வரிசை கட்டி வந்தாய் நீ
வளர்ந்து வந்து வாசல் படிதாண்டி
கல்விக்கூடம் சென்ற போது
என் கை பிடித்து எழுதி ... விரல் மடக்கி கணக்கிட்டு ...
தாவி குதித்து பாடல்கள் பாடி ... கல்வி கண் திறந்த
சரஸ்வதியே ... குருவாய் என் வாழ்வில் நீ
வளர்ந்த வாலிப வயதில் வாழ்க்கை பயணத்தின் அர்த்தம் சொல்ல
என்னை கவர்ந்த ... நேசித்த எத்தனையோ பெண் வடிவாய்
எனக்குள் இருந்த என்னை என் முன் காட்டிய தோழிகளாய் நீ
வாழ்க்கையில் முன்னும் பின்னும் இடறும் போது
" என்னப்பா .... என்ன ஆச்சு " என்ற கனிவில்
காதலியாய் ... மனைவியாய் அன்றும் இன்றும் என்றும்
என்னுள் குடி கொண்ட இதயம் கவர்ந்த பெண்ணாய் நீ
கண் மூடி காணாமல் போய்
உன்னை தேடி நான் அழுத போது
கலகலப்பாய் சிரித்து முன் வந்து
போக்கு காட்டி போகும் என் பெண்ணும் நீ
இன்னும் வாழ்வில் எத்தனை வடிவில் நீ வருவாய்
மனம் இனிக்க இன்பங்கள் தருவாய்
என்று ஏங்கி ஏங்கி மயங்கிய போது
மாயா உருவத்தில் கோர முகம் காட்டி
கனவில் என்றும் என்னை கலைக்கும் பெண்ணே
கடவுளாய் வந்தால்
உனக்கு காளி முகம் எதற்கு
கனிவாய் காமாட்சியாய் வா ....
இறைவியாய் இருந்தால் என்னுள் இறங்கி
பெண்மைக்கு இன்னும் எத்தனை முகங்கள் என்று காட்டு !!!