குணமதி
07-09-2011, 10:52 AM
தமிழின் சொல்வளம் - மாலைகள்
மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் தொகுத்தளித்தவை.
கண்ணி - இரு, இரு பூவாக இடைவிட்டுத் தொடுத்த மாலை.
தொங்கல் - தொங்கல் விட்டுக் கட்டிய மாலை.
தார் - கட்டிய மாலை.
கதம்பம், கத்திகை - பல்வகைப் பூக்களால் தொடுத்த மாலை.
படலை - பச்சிலையோடு மலர் விரவித் தொடுத்த மாலை.
தெரியல் - தெரிந்தெடுத்த மலரால் ஆய மாலை.
அலங்கல் - சரிகை முதலியவற்றால் விளங்கும் மாலை.
தொடலை - தொடுத்த மாலை.
பிணையல் - பின்னிய மாலை.
கோவை - கோத்த மாலை.
கோதை - கொண்டை மாலை.
சிகழிகை - தலை அல்லது உச்சி மாலை.
சூட்டு - நெற்றி மாலை.
ஆரம் - முத்து மாலை.
17-8-2011 "தெளிதமிழ்" இதழுக்கு நன்றி.
மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் தொகுத்தளித்தவை.
கண்ணி - இரு, இரு பூவாக இடைவிட்டுத் தொடுத்த மாலை.
தொங்கல் - தொங்கல் விட்டுக் கட்டிய மாலை.
தார் - கட்டிய மாலை.
கதம்பம், கத்திகை - பல்வகைப் பூக்களால் தொடுத்த மாலை.
படலை - பச்சிலையோடு மலர் விரவித் தொடுத்த மாலை.
தெரியல் - தெரிந்தெடுத்த மலரால் ஆய மாலை.
அலங்கல் - சரிகை முதலியவற்றால் விளங்கும் மாலை.
தொடலை - தொடுத்த மாலை.
பிணையல் - பின்னிய மாலை.
கோவை - கோத்த மாலை.
கோதை - கொண்டை மாலை.
சிகழிகை - தலை அல்லது உச்சி மாலை.
சூட்டு - நெற்றி மாலை.
ஆரம் - முத்து மாலை.
17-8-2011 "தெளிதமிழ்" இதழுக்கு நன்றி.