seguwera
18-08-2011, 10:28 PM
சென்னை அம்பத்தூர் பேருந்து நிலையம் என்னை கிண்டிக்கு அழைத்து செல்லும் பேருந்துக்கு காத்திருந்தபோது, எதிர்பட்டான் அவன். ஒரு கை இழந்த பிச்சைக்காரன். சக பயணி ஒருவரிடம் கையை நீட்டியபோது ஒரு கை தானே இல்ல, இன்னொரு கையை வைத்து எதாவது உழைத்து சாப்பிடலாமே(ஏதோ வேலை என்பது கடைசி தெரு அண்ணாச்சி கடையில் கிடைப்பது போல) வுன்ன மாதிரி ஆலுங்கலை சிட்டியை விட்டே தொரத்தனும் அப்பத்தான் சிட்டி வுருப்படும் என்றார். . நான் என்னால் முடிந்ததை அவனுக்கு கொடுக்கும்போது அதே சக பயணி "இந்த மாதிரி பிட்சைக்கரனுக்கு காசு போட்டு பழக்கப்படுத்தாதீர்கள்" என்றார். பேருந்து வந்தது எல்லோரும் ஏறியபின்னும் பேருந்து புறப்பட 15 நிமிடம் ஆகும் என நடத்துனர் சொல்லிவிட்டு சென்றுவிட்டார். மறுபடியும் அந்த பிச்சைக்காரன் வண்டி மேல் ஏரி ஒரு பாட்டை பாட தொடங்கினான். "கடவுள் ஏன் கல் ஆனான் மனம் கல்லாய் போன மனிதர்களாலே" இந்த பாட்டை கேட்டவுடன் சக பயணியின் முகம் பார்க்க சகிக்கவில்லை. நண்பர்களே நம்முள் பலர் இப்படித்தான் பிச்சைக்காரனுக்கு காசு போடக்கூடாது என நம் கோபத்தை பிட்சைக்கரனிடம் தான் காட்டுவோம். நம் கண் முன்னே நம் தெருவுக்கு ரோடு போடும் ஒப்பந்தக்காரன் சரியாக போடமாட்டான். இது தெரிந்தும் நாம் அவனிடம் சண்டைபோடுவதில்லை. மிக சுலபமாக ஆமாம் இதில் இவன் எவ்வளவு சுருட்டுவானோ என சாதாரனமாய் சொல்லிவிட்டு விட்டுவிடுவர் நம்முடைய கோபம் எல்லாம் பிட்சைக்கரனோடு நின்று விடும். இவர்களால் ஒரு பஞ்சாயத்து தலைவரின் தவறை கூட தட்டி கேட்க்க முடியாது . பிச்சை எடுப்பது சரி என சொல்லவில்லை அதை எதிர்க்கும் கோபம் அரசியல்வாதியின் தவறையும் எதிர்த்தால் நம் சந்ததியினர் நாளை பிச்சை எடுக்காது என்பதே பாரதி சொன்னது போல் திண்ணை பேச்சு வீரர்களாய் எத்தனை காலம்தான் இருப்பது ரௌத்திரம் பழகு என்று பாரதி சொன்னானே அது பிச்சைக்காரனிடம் மட்டும்தானா?