க.கமலக்கண்ணன்
09-08-2011, 07:03 AM
''பிரபு, ஏன் உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களுக்கு, நீங்கள்
வேலையை சொல்லித்தருவதில்லையாம் ! ரகு மணிக்கணக்கில்
பக்கத்துல இருந்து சொல்லித்தருகிறாராம்.'' என்று கேட்டார் பொது மேலாளர்.
''மன்னிக்கனும் சார், ஏதாவது ஒரு புதிய வேலைய எங்கள்
இருவருக்கும் தாருங்கள். ஒரு வாரம் அவகாசம் கொடுங்கள். எங்கள்
ஆட்களுக்கு சொல்லித் தருகிறோம். அடுத்த வாரம் அதே போல வேலையை
நீங்கள் அவர்களுக்கு கொடுத்து, நீங்களே நேரடியாக கண்காணியுங்கள்.''
என்றான் பிரபு. அதே போல ரகுவுக்கும் பிரபுவுக்கும் புது வேலையைக்
கொடுத்தார் பொது மேலாளர்.
ரகுவின் யோசித்து யோசித்து செய்தான். 2 மணி நேரத்தில்
பிரபுவின் ஆள் வேலையை முடித்து விட்டான். ரகுவின் ஆள் மூன்று
முறை ரகுவிடம் போய் சந்தேகம் கேட்டான். ஆனாலும் திணறினான்.
ஒரு வழியாக 5 மணி நேரத்தில் முடித்தான். பொது மேலாளர் பிரபுவை
அழைத்து,
''எப்படி முடிந்தது?'' என்று கேட்டார் பொது மேலாளர்.
''சார், எந்த ஒரு வேலையையும் ஒவ்வொரு எழுத்தாக சொல்லிக்
கொடுத்தா, அப்போது மட்டுமே நினைவில் இருக்கும். மனதில் பதியாது.
அதனால் விளைவுகளை மட்டும் சொல்லி, அதை கண்டுபிடிச்சிக்கோ
என்று நேரம் கொடுத்து விட்டுடனும். தேடிபிடிச்சி கத்துகிட்டா,
கடைசி வரைக்கும் மறக்காது. ஏன்னா நாமே உழைத்து சம்பாதிக்கும்
பணத்திற்கு மதிப்பு அதிகம்.'' என்றான் பிரபு.
''நான் உன்னுடைய மேலதிகாரி என்பதில் பெருமைபடுகிறேன்.''
என்றார் பொது மேலாளர்.
http://www.tamilmantram.com/vb/photogal/images/2574/large/1_6th-F.jpg
வேலையை சொல்லித்தருவதில்லையாம் ! ரகு மணிக்கணக்கில்
பக்கத்துல இருந்து சொல்லித்தருகிறாராம்.'' என்று கேட்டார் பொது மேலாளர்.
''மன்னிக்கனும் சார், ஏதாவது ஒரு புதிய வேலைய எங்கள்
இருவருக்கும் தாருங்கள். ஒரு வாரம் அவகாசம் கொடுங்கள். எங்கள்
ஆட்களுக்கு சொல்லித் தருகிறோம். அடுத்த வாரம் அதே போல வேலையை
நீங்கள் அவர்களுக்கு கொடுத்து, நீங்களே நேரடியாக கண்காணியுங்கள்.''
என்றான் பிரபு. அதே போல ரகுவுக்கும் பிரபுவுக்கும் புது வேலையைக்
கொடுத்தார் பொது மேலாளர்.
ரகுவின் யோசித்து யோசித்து செய்தான். 2 மணி நேரத்தில்
பிரபுவின் ஆள் வேலையை முடித்து விட்டான். ரகுவின் ஆள் மூன்று
முறை ரகுவிடம் போய் சந்தேகம் கேட்டான். ஆனாலும் திணறினான்.
ஒரு வழியாக 5 மணி நேரத்தில் முடித்தான். பொது மேலாளர் பிரபுவை
அழைத்து,
''எப்படி முடிந்தது?'' என்று கேட்டார் பொது மேலாளர்.
''சார், எந்த ஒரு வேலையையும் ஒவ்வொரு எழுத்தாக சொல்லிக்
கொடுத்தா, அப்போது மட்டுமே நினைவில் இருக்கும். மனதில் பதியாது.
அதனால் விளைவுகளை மட்டும் சொல்லி, அதை கண்டுபிடிச்சிக்கோ
என்று நேரம் கொடுத்து விட்டுடனும். தேடிபிடிச்சி கத்துகிட்டா,
கடைசி வரைக்கும் மறக்காது. ஏன்னா நாமே உழைத்து சம்பாதிக்கும்
பணத்திற்கு மதிப்பு அதிகம்.'' என்றான் பிரபு.
''நான் உன்னுடைய மேலதிகாரி என்பதில் பெருமைபடுகிறேன்.''
என்றார் பொது மேலாளர்.
http://www.tamilmantram.com/vb/photogal/images/2574/large/1_6th-F.jpg