PDA

View Full Version : கவிதைப்போட்டி 22 - வாக்களிப்புத் துவங்கியது.



அமரன்
28-07-2011, 07:39 PM
வாக்களிக்க..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=27769 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=27769)

அன்பு நண்பர்களே!

மன்றத்தின் போட்டித்தொடரை மீண்டும் உயிர்ப்பிக்கலாம் என்ற நோக்கத்தில் உங்கள் பங்களிப்பு நிச்சயம் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் கவிதைப்போட்டி 22 ஐத் தொடங்குகின்றேன்.


கவிதைத் தலைப்பு...
பிடிக்காதவளாக இருந்துவிட்டுப் போ..
(பிடிக்காதவனாக இருந்துவிட்டுப் போ என்ற தலைப்பில் கவிதை எழுதினால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.)


கவிதைகளை வழக்கம் போல எனக்குத் தனிமடலில் அனுப்புங்கள்.
அனுப்பும் கவிதைகளை போட்டி முடியும்வரை வேறெங்கும் பதியாதீர்கள்.
போட்டிக்கு கவிதை அனுப்பியதை எங்கும் அடையாளப்படுத்தாதீர்கள்.
கவிதைகள் 25 அடிகளைக் கொண்டிருப்பது விரும்பத்தக்கது.
ஒருவர் ஒருகவிதையை மட்டும் அனுப்பி போட்டியின் தரத்தைப் பேண உதவுங்கள்.
முடிந்தால் கவிதையின் கருவுக்கு ஏற்ற நிழல்படத்தை இணைத்து அனுப்புங்கள்.
கவிதைகளை 14.08.2011 க்கு முன்னதாக அனுப்புங்கள்.
போட்டி பற்றிய உங்கள் கருத்துகளையும், சந்தேகங்களையும் போட்டி நெறிகளை மீறாதவாறு இங்கே தெரிவியுங்கள். அல்லது எனக்குத் தனிமடலில் சொல்லுங்கள்.

நன்றி.

Nivas.T
29-07-2011, 05:37 AM
என்ன இது தார தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா?

இம்...............பட்டையை கிளப்புங்கள்.....................

ஆதவா
29-07-2011, 06:49 AM
நல்லாத்தான் வைக்கிறீக தலைப்பு
பிடிக்காதவளாக இருந்துவிட்டுப் போ..:D

கீதம்
31-07-2011, 01:56 AM
போட்டியில் கலந்துகொண்டு சிறப்பிக்கவிருக்கும் அனைத்து கவியுள்ளங்களுக்கும் அன்பான வாழ்த்துக்கள்.

நாஞ்சில் த.க.ஜெய்
31-07-2011, 08:20 AM
போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து கவிகளுக்கும் என் வாழ்த்துகள் ...

பூங்குழலி
04-08-2011, 08:06 AM
நல்லதொரு போட்டி.. போட்டியில் பங்கெடுக்கும் பங்கெடுத்து வெற்றி பெறப் போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

சிவா.ஜி
04-08-2011, 02:15 PM
அசத்தலான தலைப்பு. அசத்துங்க கவிஞர்களே. வாழ்த்துக்கள்.

otakoothan
12-08-2011, 07:36 AM
கவிதை போட்டியில் கவிதைகளை அனுப்ப வேண்டிய தங்கள் மினஞ்சல் முகவரியை தெரிய படுத்தவும்.

அமரன்
12-08-2011, 04:54 PM
கவிதை போட்டியில் கவிதைகளை அனுப்ப வேண்டிய தங்கள் மினஞ்சல் முகவரியை தெரிய படுத்தவும்.


ஒட்டக்கூத்தன்!

தனிமடல் மூலம் அனுப்புங்கள். அல்லது amaranfr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அப்புங்கள்.

அமரன்
14-08-2011, 11:33 AM
நண்பர்களே!

இன்றுடன் போட்டிக்கவிதைகள் ஏற்பது முடிவடைகிறது. இதுவரை அனுப்பாதவர்கள் விரைந்து அனுப்ப வேண்டுகோள்.

நன்றி.

அமரன்
14-08-2011, 09:16 PM
வாக்களிக்க..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=27769

thavam
10-10-2011, 12:38 AM
கவிதை என்பது மனங்களின் மயிலிறகு... வேதனைகளை, சந்தோஷங்களை கவிதை இறகால் வருடும் பொழுது ஒரு இனம் புரியா நிம்மதி இருக்கத்தான் செய்கிறது.
கவிதை போட்டி சிறப்பாக நடக்கவும் நல்ல கவிதைகளை கவிஞர்கள் படைத்திடவும் வாழ்த்துக்கள்.