M.Jagadeesan
27-07-2011, 12:39 AM
தமிழாசிரியர் திருக்குறள் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். " உழவு " என்ற அதிகாரத்தில் உள்ள பத்துக் குறட்பாக்களையும் நடத்தி முடித்துவிட்டு மாணவர்களிடம், " ஏதேனும் ஐயம் இருப்பின் கேளுங்கள் " என்றார். அப்பொழுது ஒரு மாணவன் எழுந்து, " ஐயா! இரண்டு குறட்பாக்களில் முரண்பாடு இருப்பது போலத் தோன்றுகிறது." என்றான்.
உடனே ஆசிரியர் ," எந்தெந்த குறட்பாக்களில் முரண்பாடு உள்ளது? " என்று கேட்டார். அதற்கு மாணவன்,
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.
இந்த குறட்பாக்களில் முதல் குறட்பாவில் நன்றாக உழுதால், நிலத்திற்கு உரம் இடத் தேவையில்லை என்று சொல்கிறார்; ஆனால் இரண்டாம் குறட்பாவில் உரம் இடவேண்டும் என்று சொல்கிறார் ; ஏன் இந்த முரண்பாடு? " என்று கேட்டான்.
ஆசிரியர் சிரித்துக் கொண்டே ," நல்ல கேள்வி, காரணம் சொல்கிறேன், முதல் குறள் புன்செய் நிலத்தில் பயிர் செய்யும் முறையைக் குறிப்பது. ஒரு பலம் புழுதி கால் பலம் ஆகுமாறு உழுதுவிட்டு , மழை பெய்தவுடன் புன்செய்த் தானியங்கள், பயறு வகைகளை விதைத்து விட்டால் மேல் உரத்தையோ, பாய்ச்சு நீரையோ எதிர்பாராமல் வானத்தை, அதாவது மழையைப் பார்த்தே புன்செய்ப் பயிர்கள் விளைந்துவிடும்.
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.
இந்தக் குறள் நன்செய் நிலத்தில் பயிர் செய்யும் முறையைக் குறிப்பது. உழுதல்,எருவிடுதல்,களையெடுத்தல்,நீர்பாய்ச்சுதல், காவல் காத்தல் என்பது போன்ற எல்லா வேலைகளையும் பார்த்தால்தான் நன்செய் நிலத்தில் பலன் காணமுடியும். இப்போது புரிகிறதா? முரண்பாடு உன்னிடம்தான் உள்ளது; வள்ளுவரிடம் இல்லை."
" மிக்க நன்றி ஐயா! தெளிவாகப் புரிந்து கொண்டேன். இன்னும் சில குறட்பாக்களில் முரண்பாடு உள்ளதுபோல எனக்குத் தோன்றுகிறது. அவற்றைக் கேட்கலாமா ஐயா?"
" நாளைக்குப் பார்க்கலாம் " என்று ஆசிரியர் சொன்னார்.
உடனே ஆசிரியர் ," எந்தெந்த குறட்பாக்களில் முரண்பாடு உள்ளது? " என்று கேட்டார். அதற்கு மாணவன்,
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.
இந்த குறட்பாக்களில் முதல் குறட்பாவில் நன்றாக உழுதால், நிலத்திற்கு உரம் இடத் தேவையில்லை என்று சொல்கிறார்; ஆனால் இரண்டாம் குறட்பாவில் உரம் இடவேண்டும் என்று சொல்கிறார் ; ஏன் இந்த முரண்பாடு? " என்று கேட்டான்.
ஆசிரியர் சிரித்துக் கொண்டே ," நல்ல கேள்வி, காரணம் சொல்கிறேன், முதல் குறள் புன்செய் நிலத்தில் பயிர் செய்யும் முறையைக் குறிப்பது. ஒரு பலம் புழுதி கால் பலம் ஆகுமாறு உழுதுவிட்டு , மழை பெய்தவுடன் புன்செய்த் தானியங்கள், பயறு வகைகளை விதைத்து விட்டால் மேல் உரத்தையோ, பாய்ச்சு நீரையோ எதிர்பாராமல் வானத்தை, அதாவது மழையைப் பார்த்தே புன்செய்ப் பயிர்கள் விளைந்துவிடும்.
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.
இந்தக் குறள் நன்செய் நிலத்தில் பயிர் செய்யும் முறையைக் குறிப்பது. உழுதல்,எருவிடுதல்,களையெடுத்தல்,நீர்பாய்ச்சுதல், காவல் காத்தல் என்பது போன்ற எல்லா வேலைகளையும் பார்த்தால்தான் நன்செய் நிலத்தில் பலன் காணமுடியும். இப்போது புரிகிறதா? முரண்பாடு உன்னிடம்தான் உள்ளது; வள்ளுவரிடம் இல்லை."
" மிக்க நன்றி ஐயா! தெளிவாகப் புரிந்து கொண்டேன். இன்னும் சில குறட்பாக்களில் முரண்பாடு உள்ளதுபோல எனக்குத் தோன்றுகிறது. அவற்றைக் கேட்கலாமா ஐயா?"
" நாளைக்குப் பார்க்கலாம் " என்று ஆசிரியர் சொன்னார்.