PDA

View Full Version : இனியவை இருபது



malarr
25-07-2011, 04:18 PM
"வான் மழை போற்றுவோம்" கவிதை தொகுப்பிலிருந்து:

அலைமோதும் கடல் பார்த்து தனியாக அமர்தல்
மழைபெய்யும் வேளையிலே மண்வாசம் முகர்தல்
மெலிதான சாரலிலே இதமாக நனைதல்
மெதுவாக பின்னோக்கி பழங்கதைகள் நினைதல்
ஆர்பரிக்கும் அருவி விழும் அழகின் போக்கை ரசித்தல்
இயற்கை எழில் நமக்குத்தரும் அமைதியினை புசித்தல்
ஆழமில்லா நதியினிலே ஆனந்தமாய் குளித்தல்
நீளமான இரவுகளில் புத்தகங்கள் படித்தல்
நாலு திசை நாடிச்சென்று நல்ல பொருள் ஈட்டல்
கல்வி கற்க எளியோருக்கு கணக்கின்றி ஈதல்
பொய்யான மனிதர்களை புறக்கணித்து போதல்
மெய்யென்று ஏதுமில்லை என்றுணர்ந்து வாழ்தல்
ஓரறிவோ ஆரறிவோ உயிர்களை மதித்தல்
ஒரு போதும் தீங்கு நினைக்காத தூய மனம் வளர்த்தல்
புத்திக்கு எப்பொழுதும் பொறுமையினை புகட்டல்
தித்திக்கும் பொருளெதுவும் திகட்டும் என்று தெளிதல்
கலை வடிவம் ஒன்றேனும் கற்றறிந்து வைத்தல்
காலம் தரும் அனுபவமே கடவுள் என்று உணர்தல்
ஐம்பது வயது வந்தால் சொந்த ஊர் சேர்தல்
தூக்கத்தின் நடுவினிலே துயரமின்றி சாதல்