PDA

View Full Version : வசந்தத்தை எதிர்ப்பார்த்து....



sivani
15-07-2011, 01:37 PM
வாழ்க்கையின் எல்லையா?
வாழவே இல்லையா?!
வசந்தமும் வந்திடாதோ - என்
வாழ்க்கையில் ! - இனி
வாழ்வதும் இறப்பதும்
விதி விட்ட வழியென
வேதனை ஒன்றையே
விழி காட்டுதோ !

வதைகளைத் தாங்கினேன்
வலைகளில் சிக்கினேன் !
விதைகளைப் போட்டிங்கு,
விரட்டுதே சதி என்னை !
விரயமாய் என் வாழ்க்கை
விரைந்தோடி விட்டதே !
வேண்டுமோ இன்னும் நான் வாழ்ந்திட - இனி
வேண்டுமோ இன்னும் நான் வாழ்ந்திட !

வாழ்க்கை என்னை மிரட்டினாலும்
வாசல் விட்டுத் துரத்தினாலும் !
வேதனைகள் மறைக்கிறேன் - என்றும்
வெறிகொண்டு உழைக்கிறேன்!
வெற்றி என்னும் பாதையில் - நான்
வெகுண்டெழுந்து நடக்கிறேன் !!



-- தமிழோடு வாழ்வோம்!
தமிழோடு உயர்வோம்! --

Nivas.T
15-07-2011, 02:08 PM
ஒவ்வொரு வீழ்ச்சியும்
ஒவ்வொரு பாடமே
வாழ்க்கை என்பது கடினப் படவே
சுகமாய் வாழ அல்ல என்று
உண்மை தெளிந்தலே போதும்
எப்படிபட்ட துன்பமாயினும்
தூளாக்கி தூகளாக்ப்படும்

நம்பிக்கையின் ஒலி
வாழ்க்கையின் வழிகாட்டும் விடிவெள்ளி

தொடரட்டும் உங்கள் வெற்றிப் பயணம்

கவிதை அழகு பாராட்டுகள் ஷிவானி