த.ஜார்ஜ்
07-07-2011, 04:45 PM
ராதாகிருஷ்ணன். வகுப்பில் அவன்தான் லீடர். முண்டகண்ணும்,முன்தள்ளிய பல்லுமாக.. பய செம படிப்பாளி. ஆயிரம்பேர் கூட்டத்திலும் தனி தீவுபோல இருப்பான். யாரும் அவனை தொட்டு பேசுவது அவனுக்குப் பிடிக்காது. நெற்றியில் திருநீறு, குங்குமப்பொட்டு வைத்து சாமிசிலை போல இருப்பான்.
‘பாரு அவனப் பாரு.எப்படி படிக்கிறான்னு பாரு. டாண் டாண்னு எப்படி பதில் சொல்றான் பாரு’வாத்தியார் பல நேரம் அவனைக் காட்டியே எங்களை அடிப்பதில் ,மொத்தமாக வெறுப்புக்குள்ளானான். சமயத்தில் அவனே பாடம் நடத்த சொல்லிவிட்டு , கேள்வி கேட்க வைத்து, வழக்கம்போல் பதில் தெரியாத என்னை பிரம்பால் அடிக்க வைப்பார் வாத்தியார்.[அவருக்கு வயித்துபோக்கு வந்து நாசமாபோக….]
வேண்டுமென்றே எங்களை மாட்டவைத்து அடிவாங்க வைப்பான்.[வாத்தியாருக்கு ‘போலீஸ்’னு பட்டபேர் வச்சதை போட்டு குடுத்துட்டான்ல] தொடைக்கிடையில் கை வைத்து வலியை ஜீரணிக்க நாங்க தவித்துக் கொண்டிருக்கையில் ‘கெக்கெ கெக்கெ’னு சிரிப்பான். அதுக்கு பிறகுதான் ஒருத்தன் அடிவாங்கிறத பார்த்து சிரிக்க வைக்கிற காமெடி காட்சிகள் சினிமாவில் அறிமுகமாச்சி.
ஒருமுறை வலைவீசி ஆள் பிடிக்கிற ஒரு கும்பல் பள்ளியில் மலிவு பதிப்பு பைபிள் வினியோகிக்க.. இவன் மட்டும் அவங்க முன்னாலேயெ கிழிச்சி எறிஞ்சான். அப்படி தீவிர மத பற்று.
அப்பேர்பட்டவனை சமீபத்தில் பார்த்தபோது வெள்ளை வேட்டியும், வெள்ளை ஜிப்பாவும் அணிந்திருந்தான். கையில் பைபிள். ஆச்சரிய்த்துடன் “டேய் ராதா.. நீயாடா’ என்ற என்னை கருணையுடன் பார்த்தான். தேவதூதனே இறங்கிவந்த மாதிரியிருந்தது. ‘பிரதர் நான் இப்ப ஜோசப் கிருஷ்னன். இரட்சிக்கப்பட்டுட்டென்லா ’ என்றான் ஏதோ பாஸ்போட் வாங்கிய தோரணையில்.
‘பாரு அவனப் பாரு.எப்படி படிக்கிறான்னு பாரு. டாண் டாண்னு எப்படி பதில் சொல்றான் பாரு’வாத்தியார் பல நேரம் அவனைக் காட்டியே எங்களை அடிப்பதில் ,மொத்தமாக வெறுப்புக்குள்ளானான். சமயத்தில் அவனே பாடம் நடத்த சொல்லிவிட்டு , கேள்வி கேட்க வைத்து, வழக்கம்போல் பதில் தெரியாத என்னை பிரம்பால் அடிக்க வைப்பார் வாத்தியார்.[அவருக்கு வயித்துபோக்கு வந்து நாசமாபோக….]
வேண்டுமென்றே எங்களை மாட்டவைத்து அடிவாங்க வைப்பான்.[வாத்தியாருக்கு ‘போலீஸ்’னு பட்டபேர் வச்சதை போட்டு குடுத்துட்டான்ல] தொடைக்கிடையில் கை வைத்து வலியை ஜீரணிக்க நாங்க தவித்துக் கொண்டிருக்கையில் ‘கெக்கெ கெக்கெ’னு சிரிப்பான். அதுக்கு பிறகுதான் ஒருத்தன் அடிவாங்கிறத பார்த்து சிரிக்க வைக்கிற காமெடி காட்சிகள் சினிமாவில் அறிமுகமாச்சி.
ஒருமுறை வலைவீசி ஆள் பிடிக்கிற ஒரு கும்பல் பள்ளியில் மலிவு பதிப்பு பைபிள் வினியோகிக்க.. இவன் மட்டும் அவங்க முன்னாலேயெ கிழிச்சி எறிஞ்சான். அப்படி தீவிர மத பற்று.
அப்பேர்பட்டவனை சமீபத்தில் பார்த்தபோது வெள்ளை வேட்டியும், வெள்ளை ஜிப்பாவும் அணிந்திருந்தான். கையில் பைபிள். ஆச்சரிய்த்துடன் “டேய் ராதா.. நீயாடா’ என்ற என்னை கருணையுடன் பார்த்தான். தேவதூதனே இறங்கிவந்த மாதிரியிருந்தது. ‘பிரதர் நான் இப்ப ஜோசப் கிருஷ்னன். இரட்சிக்கப்பட்டுட்டென்லா ’ என்றான் ஏதோ பாஸ்போட் வாங்கிய தோரணையில்.