M.Jagadeesan
06-07-2011, 02:02 PM
முல்லைக்கு பாரிமன்னன் தேர்கொடுக்கும் காட்சியை
முச்சந்தியில் வரைந்திருந்தான் முடவன் ஒருவன்
எல்லையில்லாக் கருணையினால், தன்னிடம் வருகின்ற
எளியோர்க்கும் வறுமையில் வாடுகின்ற புலவர்க்கும்
இல்லையென்று சொல்லாது இருப்பதை எல்லாம்
இரப்போர்க்குக் கொடுத்த பாரியின் ஓவியத்தில்
சில்லரைகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன
சிந்திக்க வைத்ததே காலத்தின் கோலம்.
முச்சந்தியில் வரைந்திருந்தான் முடவன் ஒருவன்
எல்லையில்லாக் கருணையினால், தன்னிடம் வருகின்ற
எளியோர்க்கும் வறுமையில் வாடுகின்ற புலவர்க்கும்
இல்லையென்று சொல்லாது இருப்பதை எல்லாம்
இரப்போர்க்குக் கொடுத்த பாரியின் ஓவியத்தில்
சில்லரைகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன
சிந்திக்க வைத்ததே காலத்தின் கோலம்.