PDA

View Full Version : மனிதனாய் பிறந்து விட்டேனே.



தமிழ்குமரன்
12-12-2003, 03:16 AM
தென்றலானால் கூட உன்னை தீண்டாலாம்
தண்ணீரானால் கூட உன்னை தழுவலாம்
நெருப்பானால் கூட உன்னை நெருங்கலாம்
நிலாமானால் கூட உன்னை தாங்கலாம்
ஆனால் மனிதனாய் பிறந்து விட்டேனே.

Nanban
12-12-2003, 04:10 AM
ஒரு நாள்
நெருப்பு
உன்னைச் சுடும்.

உன் சாம்பல்
நீரினுள்
கரைக்கப்படும்.

ஒரு நாள்
உன் எலும்புகள்
நிலத்துள் மக்கிப் போகும்.

நீ விட்ட
கடைசி சுவாசக் காற்று
வானவெளியில் கரைந்து
காணாமல் போகும்.

பஞ்ச பூதங்களில்
கரைந்து போவது
உன் விருப்பத்தில் அல்ல.

ஒரு நாள் மட்டும்
கரைந்து போக வா -
என்னோடு......

இளசு
12-12-2003, 06:52 AM
தென்றலானால் கூட உன்னை தீண்டாலாம்
தண்ணீரானால் கூட உன்னை தழுவலாம்
நெருப்பானால் கூட உன்னை நெருங்கலாம்
நிலாமானால் கூட உன்னை தாங்கலாம்
ஆனால்
மனிதனாய் பிறந்து விட்டேனே.

நெஞ்சைக் கொடுத்து
நெஞ்சம் வாங்கி
மனிதம் கண்ட காதலில் கரைந்துவிடு..

பூதமும் புலன்களும் -
உனக்கு சேவகனாகிவிடும்..
நாளை திடமேனி குலைந்தாலும்
நினைவுகள் சாசுவதமாகிவிடும்..

பாராட்டுகள் தமிழ்குமரன்!

இ.இசாக்
12-12-2003, 06:54 AM
தமிழ்குமரன் சிந்தனை அழகானது
இன்னுமின்னும் செழிக்க வாழ்த்துகள்.

நண்பன் அவர்களை பற்றி சொல்லவே வேண்டாம்.

Nanban
12-12-2003, 06:55 AM
நாளை திடமேனி குலைந்தாலும்
நினைவுகள் சாசுவதமாகிவிடும்..


முன்னேற்பாடுகளின் ஜாக்கிரதை........

முதுமையில் அசை போட,
இளமையில் ஒரு காதல்...

பாராட்டுகள், இளசு......