PDA

View Full Version : உன்னதம் எது?



Nivas.T
04-07-2011, 10:21 AM
மண்ணை முட்டினாலும்
விண்ணை எட்டினாலும்
வேர் விடுத்தாலும்
விழுது வளர்த்தாலும்
நிழல் நிறைத்தாலும்
கனி கொடுத்தாலும்
விதை உதிர்த்தாலும்
பசுமை படர்ந்தாலும்
காற்று கலைத்தாலும்
உதிர்ந்தாலும்
கசிந்தாலும்
வெட்டுண்டாலும்
கட்டுண்டாலும்
சாளரமானாலும்
தீ தீண்டினாலும்
நீர் பெயர்த்தாலும்
அது அதுவாய்
இருத்தல் என்பது
உன்னதமே

Ravee
04-07-2011, 10:29 AM
வாழ்ந்தாலும் , கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே ...... உன்னதம் நிவாஸ்

Nivas.T
04-07-2011, 11:37 AM
வாழ்ந்தாலும் , கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே ...... உன்னதம் நிவாஸ்

உண்மை முற்றிலும் உண்மை

நாஞ்சில் த.க.ஜெய்
04-07-2011, 05:52 PM
யாருக்காகவும் எதற்காகவும் உன்னை மாற்றிகொள்ளாதே
உனக்காக தன்னையே மாற்றிக்கொள்ளும் நண்பன் கிடைத்தால் விட்டு விடாதே அதுவே உன்னதம் ....அருமையான கவிதை தோழர்....

ஜானகி
05-07-2011, 04:18 AM
நிலமகளைப் போலப் பொறுமை காத்தால், தர்மம் பேணினால், இந்தப் பூமியையே ஆளலாம்...என்கிறீர்களோ ?

Nivas.T
07-07-2011, 01:08 PM
யாருக்காகவும் எதற்காகவும் உன்னை மாற்றிகொள்ளாதே
உனக்காக தன்னையே மாற்றிக்கொள்ளும் நண்பன் கிடைத்தால் விட்டு விடாதே அதுவே உன்னதம் ....அருமையான கவிதை தோழர்....

பாராட்டிற்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ஜெய்

Nivas.T
07-07-2011, 01:10 PM
நிலமகளைப் போலப் பொறுமை காத்தால், தர்மம் பேணினால், இந்தப் பூமியையே ஆளலாம்...என்கிறீர்களோ ?

நீங்கள் கூறுவது ஒரு விதத்தில் பொருந்தும்

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஜானகியம்மா

ஆதி
07-07-2011, 01:30 PM
அது அதுவாய் இருதல்
அவ்வளவு எளியது அல்ல*
அது அதுவாய் இருக்க*
அதை நாம் விடுவதுமில்லை

உன் 'அது' அம் = உன்னதம் :D

அம் = அழகு

அம் என்பது வேர்ச்சொல்லும் ஆகும்

வாழ்த்துக்கள் நிவாஸ்

Nivas.T
07-07-2011, 01:43 PM
அது அதுவாய் இருதல்
அவ்வளவு எளியது அல்ல*
அது அதுவாய் இருக்க*
அதை நாம் விடுவதுமில்லை

உன் 'அது' அம் = உன்னதம் :D

அம் = அழகு

அம் என்பது வேர்ச்சொல்லும் ஆகும்

வாழ்த்துக்கள் நிவாஸ்


அது எப்படி ஆதன்? உங்களால் மட்டும் முடியுது?:D

அழகான பின்னூட்டத்திருக்கு மிக்க நன்றி ஆதன் :)

கீதம்
07-07-2011, 10:22 PM
கருக்கோர்வை கச்சிதமாய்ச் சொல்லவேண்டியதைச் சொல்லி நிற்பது இதம். பின்னூட்டங்களின் தயவால் கவி பெறுவதும் உன்னதம். அழகான ஆழ்ந்த புரிதல். பாராட்டுகள் நிவாஸ்.

Nivas.T
08-07-2011, 10:03 AM
கருக்கோர்வை கச்சிதமாய்ச் சொல்லவேண்டியதைச் சொல்லி நிற்பது இதம். பின்னூட்டங்களின் தயவால் கவி பெறுவதும் உன்னதம். அழகான ஆழ்ந்த புரிதல். பாராட்டுகள் நிவாஸ்.

அழகான பின்னூட்டத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றீங்க