PremM
28-06-2011, 06:29 AM
வற்றிப் போன கற்பனையில்,
கவிதைப் பிடிக்க நினைத்து,
தூண்டில் வீசும் எண்ணங்களுக்கு
சிக்காமல நழுவிப் போகிறது சொற்கள்..
சொட்டுச் சொட்டாய் வடிந்துக் கொண்டிருந்த
எண்ண ஊற்றுகளை காதல் தன்னுள் நிரப்பிவிட்டது..
இனி எஞ்சியிருக்கும் ஈரம்
இதயம் விட்டு அகலுமுன்,
பேனா நரம்புகளுள் புகுத்தி விடவேண்டும்..
சமூகச் சிந்தனைப் பற்றி எழுதினால் என்ன?
இல்லை என் பேனா இன்னும் கூர் தீட்டப் பட வேண்டும்..
காதல்?பழக்கப்பட்டப் பயணத்தில்
பரவசம் இல்லை..
தலைப்பைத் தேடி வீதியில் நடந்தேன்..
பசி கொல்கிறது என ஒரு குரல்,
குரல் வந்த திசையில்,
வயதை சுருக்கமாய்ச் சொல்லியிருந்த
முகச்சுருக்கங்கள் தாங்கிய ஒரு முகம்..
"எனக்கும்" எனச் சொல்லத் தோன்றியது..
சட்டைப் பாக்கெட்டின் அடிவாரம் வரை சென்று துழாவி,
தொண்மை வாய்ந்த சில பயணச்சீட்டுகளோடு
இரண்டே முக்கால் ரூபாயும் கைக்கு அகப்பட்டது..
நாணயம் விழுந்ததும் பாத்திரம் அழுதது,
காந்தியுடன் சேர்ந்து சிரித்திருக்கும்,
சிலக் காகித நோட்டுகள் தடம் பதித்திருந்தால்..
பூக்களோடு கதைகள் பேச,
பூங்கா வழி விழிகள் நடக்க..
காமத்தீயில் உடல்கள் உரச,
தீயின் புகை, கண்களை எறிக்க,
வீதியின் புழுதிப் புயலே,
போதும் என்றேன்..
கடற்கறை மணலில் பாதம் நனைத்து,
கவிதை ஒன்றைக் கடனாய்க் கேட்டேன்..
அள்ளிக்கொள் என்னிடம்,
ஆர்ப்பரித்தது பெருங்கடல்..
கட்டுக் கட்டாய் அறுவடை செய்திட,
முதல் வரியில் முத்தமிட்டது என் பேனா,
அதில் முதல் வார்த்தையாய் பதிந்தது "மாங்காய்" ..
எதிரில் நின்றவன்
"சார் மாங்காய்" என்றான்..
அடுத்த அரை மணி நேரத்தில்
7,8 தின்பண்டங்களின் பெயர் நிரம்பக் கிடைத்தது காகிதம்..
திகட்டாத அழகில் உருகி வரும் ஒரு பிறை..
மூச்சிறைக்க ஓடுகின்ற வெண்மேகங்கள்,
இதில் ஏதோ ஒன்று என் வாசல் வந்து தலைப்பொன்றைச் சொல்லிப் போனால் என்ன?
முயற்ச்சியை விட்டபாடில்லை..
எங்கே என் காகிதம்?
எங்கே என் காகிதம்?
ஓ ஒரு குழந்தைப் போல் அதுவும் ,
ஏமாற்றத்தில் உறங்கிப் போயிருக்கலாம்..
அதனை அள்ளி அணைத்தபடி,
எதோ ஒன்றை எழுதிய விரல்கள்,
கடிகாரத்தின் நொடிக்கொறுமுறை பிறக்கும் உற்சாகத்தோடு
போட்டி போட்டு உறங்கிப் போனது..
விடிந்துப் பார்க்கையில்,
அக்காகிதத்தில் எழுதியிருந்தேன்
"என்ன எழுதுவது?"
கவிதைப் பிடிக்க நினைத்து,
தூண்டில் வீசும் எண்ணங்களுக்கு
சிக்காமல நழுவிப் போகிறது சொற்கள்..
சொட்டுச் சொட்டாய் வடிந்துக் கொண்டிருந்த
எண்ண ஊற்றுகளை காதல் தன்னுள் நிரப்பிவிட்டது..
இனி எஞ்சியிருக்கும் ஈரம்
இதயம் விட்டு அகலுமுன்,
பேனா நரம்புகளுள் புகுத்தி விடவேண்டும்..
சமூகச் சிந்தனைப் பற்றி எழுதினால் என்ன?
இல்லை என் பேனா இன்னும் கூர் தீட்டப் பட வேண்டும்..
காதல்?பழக்கப்பட்டப் பயணத்தில்
பரவசம் இல்லை..
தலைப்பைத் தேடி வீதியில் நடந்தேன்..
பசி கொல்கிறது என ஒரு குரல்,
குரல் வந்த திசையில்,
வயதை சுருக்கமாய்ச் சொல்லியிருந்த
முகச்சுருக்கங்கள் தாங்கிய ஒரு முகம்..
"எனக்கும்" எனச் சொல்லத் தோன்றியது..
சட்டைப் பாக்கெட்டின் அடிவாரம் வரை சென்று துழாவி,
தொண்மை வாய்ந்த சில பயணச்சீட்டுகளோடு
இரண்டே முக்கால் ரூபாயும் கைக்கு அகப்பட்டது..
நாணயம் விழுந்ததும் பாத்திரம் அழுதது,
காந்தியுடன் சேர்ந்து சிரித்திருக்கும்,
சிலக் காகித நோட்டுகள் தடம் பதித்திருந்தால்..
பூக்களோடு கதைகள் பேச,
பூங்கா வழி விழிகள் நடக்க..
காமத்தீயில் உடல்கள் உரச,
தீயின் புகை, கண்களை எறிக்க,
வீதியின் புழுதிப் புயலே,
போதும் என்றேன்..
கடற்கறை மணலில் பாதம் நனைத்து,
கவிதை ஒன்றைக் கடனாய்க் கேட்டேன்..
அள்ளிக்கொள் என்னிடம்,
ஆர்ப்பரித்தது பெருங்கடல்..
கட்டுக் கட்டாய் அறுவடை செய்திட,
முதல் வரியில் முத்தமிட்டது என் பேனா,
அதில் முதல் வார்த்தையாய் பதிந்தது "மாங்காய்" ..
எதிரில் நின்றவன்
"சார் மாங்காய்" என்றான்..
அடுத்த அரை மணி நேரத்தில்
7,8 தின்பண்டங்களின் பெயர் நிரம்பக் கிடைத்தது காகிதம்..
திகட்டாத அழகில் உருகி வரும் ஒரு பிறை..
மூச்சிறைக்க ஓடுகின்ற வெண்மேகங்கள்,
இதில் ஏதோ ஒன்று என் வாசல் வந்து தலைப்பொன்றைச் சொல்லிப் போனால் என்ன?
முயற்ச்சியை விட்டபாடில்லை..
எங்கே என் காகிதம்?
எங்கே என் காகிதம்?
ஓ ஒரு குழந்தைப் போல் அதுவும் ,
ஏமாற்றத்தில் உறங்கிப் போயிருக்கலாம்..
அதனை அள்ளி அணைத்தபடி,
எதோ ஒன்றை எழுதிய விரல்கள்,
கடிகாரத்தின் நொடிக்கொறுமுறை பிறக்கும் உற்சாகத்தோடு
போட்டி போட்டு உறங்கிப் போனது..
விடிந்துப் பார்க்கையில்,
அக்காகிதத்தில் எழுதியிருந்தேன்
"என்ன எழுதுவது?"