சொ.ஞானசம்பந்தன்
24-06-2011, 01:29 PM
( 17 ஆம் நூற்றாண்டு பிரஞ்சு நகைச் சுவை நாடக ஆசிரியர் மொலியேர் இயற்றிய
" கற்பனை நோயாளி " என்னும் நாடகத்தில் ஒரு காட்சி ; தமிழ் மன்றத்துக்காக நான் மொழி பெயர்த்தது )
திரு . அர்கான் தம்மை நோயாளியாக நம்பிக்கொண்டு டாக்டர் புயிர்கோனிடம் மருத்துவம் செய்துகொள்கிறார் . அந்த டாக்டர்மீதும் பொதுவாய் மருத்துவத்தின்மேலும் அர்கானுக்கு வெறுப்பு ஏற்படுத்துவதற்காக அவருடைய வேலைக்காரி துவானேத் ஒரு மருத்துவர் போல் வேடமிட்டு அவரிடம் வருகிறாள் . இருவரும் உரையாடுகின்றனர் .
துவானேத் - ஒரு புகழ் மிக்க நோயாளியாகிய உங்களைப் பார்ப்பதற்கு எனக்கு ஏற்பட்ட ஆர்வத்தை நீங்கள் தவறாகக் கருத மாட்டீர்கள் ; எங்கும் பரவி யுள்ள உங்களது கீர்த்தி தான் எனக்கிந்த உரிமையைத் தந்தது ,
அர்கான் - மிக்க நன்றி .
துவா -- என்னை உற்றுப் பார்க்கிறீர்கள் என்பது தெரிகிறது . எனக்கு என்ன வயது இருக்கும் என்று நினைக்கிறீர்கள் ?
அர் - மிஞ்சி மிஞ்சிப் போனால் 26 அல்லது 27 .
துவா --அஹஹஹா ! எனக்கு வயது 90 .
அர் - 90 ஆ ?
துவா - இவ்வளவு இளமையும் வலிமையும் என் மருத்துவக் கமுக்கங்களின் ஒரு விளைவு தான் .
அர் - மெய்யாகவே 90 வயதுக்கு நீங்கள் அழகிய இளங்கிழவர் தான் .
துவா --நான் ஒரு மருத்துவப் பயணி . என் திறமைக்கு ஏற்ற மற்றும் பேர் பெற்ற சிக்கல்களை நாடி , என்னை வேலை வாங்கத் தகுதி வாய்ந்த நோயாளிகளைத் தேடி , மருத்துவத்தில் நான் கண்டுபிடித்துள்ள அரும் பெரும் கமுக்கங்களைச் சோதித்துப் பார்ப்பதற்காக , ஊர் ஊராக , நாடு நாடாகச் செல்பவன் . சாதாரண அற்ப நோய்கள் , ஒன்றுமில்லாத கீல்வாதம் , ஒற்றைத் தலை வலிகளோடு நான் விளையாட விரும்புவதில்லை ; மூளையைத் தாக்கும் தொடர் காய்ச்சல் , கடுமையான வாந்தி பேதி , கொடிய மகோதரம் , நெஞ்சு வீக்கத்துடன் கூடிய , சிக்கல் மிக்க நுரையீரல் பிணி , இவையே எனக்குப் பிடித்தவை ; இவற்றையே நான் முறியடிக்க முனைபவன் . .
அதனால் , ஐயா , நான் விரும்புவது என்ன வென்றால் , நான் சொன்ன அந்த எல்லா நோய்களும் உங்களைப் பீடித்திருக்க வேண்டும் என்பதும் நீங்கள் சகல மருத்துவர்களாலும் கை விடப்பட்டு சாவுப் படுக்கையில் இருக்க வேண்டும் என்பதும் தான் : அப்போது தானே என் மருந்துகளின் அருமையையும் உங்களைக் குணப்படுத்த எனக்குள்ள ஆர்வத்தையும் நான் உங்களுக்குப் புலப்படுத்த முடியும் ?
அர் - என்மீது உங்களுக்குள்ள நல்லெண்ணங்களுக்கு நான் உங்களுக்குக் கடமைப் பட்டுள்ளேன் , டாக்டர் .
துவா - நாடியைக் காட்டுங்கள் . உம் ! ஒழுங்காய்த் துடி ! சரியான முறையில் உன்னை நான் துடிக்க வைப்பேன் ! இந்த நாடி முரண்டு பண்ணுகிறதே ! உனக்கு இன்னம் என்னைத் தெரியவில்லை என்பது எனக்குப் புரிகிறது . உங்கள் மருத்துவர் யார் ?
அர் - டாக்டர் புயிர்கோன் .
துவா - பெரிய மருத்துவர்கள் பற்றிய என் பட்டியலில் அவர் பெயர் இல்லை . உங்களுக்கு என்ன நோய் என்றார் ?
அர் - கல்லீரல் கோளாறு என்றார் ; சிலர் மண்ணீரல் பாதிப்பு என்றனர் .
துவா - எல்லாரும் முட்டாள்கள் . உங்களுக்கு நுரையீரல் நோய் .
அர் - நுரையீரலா ?
துவா - உங்களுக்கு என்னென்ன செய்கிறது ?
அர் - அடிக்கடி தலை வலி .
துவா - சரிதான் ; நுரையீரல் !
அர் - கண்ணை ஒரு திரை மறைப்பது போல் சில சமயம் தோன்றுகிறது .
துவா - நுரையீரல் !
அர் - அவ்வப்போது நெஞ்சு வலி .
துவா - நுரையீரல் !
அர் - ஒரே களைப்பு !
துவா - நுரையீரல் !
அர் - எப்போதாவது குடல் வலி போல வயிற்றில் வலி .
துவா - நுரையீரல் ! உணவை விருப்பத்துடன் உண்கிறீர்களா ?
அர் - ஆம் , டாக்டர் .
துவா - நுரையீரல் ! மது பருகுவது உங்களுக்குப் பிடிக்கிறதா ?
அர் -- ஆமாம் , டாக்டர் .
துவா - நுரையீரல் ! சாப்பாட்டுக்குப் பின்பு லேசான தூக்கம் வருமா ?
அர் - வரும், டாக்டர் .
துவா - நுரையீரல் , நுரையீரல் ! உங்கள் டாக்டர் என்ன உணவு உண்ணச் சொன்னார் ?
அர் - கஞ்சி .
துவா - மண்டு !
அர் - பறவைக் கறி , கன்றுக் கறி .
துவா - மண்டு !
அர் - சூப்பு , முட்டை , பிளம் பழம் .
துவா - மண்டு !
அர் - முக்கியமாக திராட்சை மதுவில் நிறைய நீர் கலந்து குடிக்கச் சொன்னார் .
துவா -- மண்டு , மக்கு , முண்டம் ! திராட்சை மதுவை நீங்கள் சுயமாகப் பருக வேண்டும் . நீர்த்துப் போயிருக்கிற உங்கள் ரத்தத்தைக் கெட்டிப்படுத்த நிறைய மாட்டுக் கறி , பன்றிக் கறி , கோதுமை , அரிசி உண்ண வேண்டும் . ரத்த்த்தில் பசை உண்டாக்க முந்திரிப் பருப்பு ம் பிஸ்கட்டும் தின்னுங்கள் . இந்த ஊரில் நான் இருக்கிற வரை அடிக்கடி வந்து பார்ப்பேன் .
அர் - மிக்க நன்றி , டாக்டர் .
துவா - என்ன இது ? அந்தக் கையை வைத்துக்கொண்டு இருக்கிறீர்களே !
அர் - என்ன சொல்கிறீர்கள் ?
துவா - நீங்கள் நானாய் இருந்தால் அந்தக் கையை உடனே வெட்டச் செய்திருப்பேன் .
அர் - ஏன் ? எதற்காக ?
துவா - எலலா உணவுகளையும் அது தன் பக்கமே இழுத்துக்கொள்கிறது , இந்தப் பக்கத்துக்குப் பயன் ஏற்படுவதைத் தடுக்கிறது .
அர் - ஆனால் என் கை எனக்குத் தேவை .
துவா - உங்கள் வலக் கண்கூடச் சரியில்லை ; அதைத் தோண்டிவிட வேண்டும் .
அர் - கண்ணைத் தோண்டுவதா ?
துவா - அது மற்ற கண்ணுக்கு இடையூறாக இருக்கிறது
அர் - இருந்துவிட்டுப் போகட்டும் ..
துவா - போய் வருகிறேன் .
( டாக்டர் போன பின்பு )
அர் - நல்ல சிகிச்சை ! ஒற்றைக் கண்ணனாயும் முடவனாயும் மாற்றும் அறுவை !
- - - - - - - - - - - - - - - - - - - -- - - - - - -- - - - -
" கற்பனை நோயாளி " என்னும் நாடகத்தில் ஒரு காட்சி ; தமிழ் மன்றத்துக்காக நான் மொழி பெயர்த்தது )
திரு . அர்கான் தம்மை நோயாளியாக நம்பிக்கொண்டு டாக்டர் புயிர்கோனிடம் மருத்துவம் செய்துகொள்கிறார் . அந்த டாக்டர்மீதும் பொதுவாய் மருத்துவத்தின்மேலும் அர்கானுக்கு வெறுப்பு ஏற்படுத்துவதற்காக அவருடைய வேலைக்காரி துவானேத் ஒரு மருத்துவர் போல் வேடமிட்டு அவரிடம் வருகிறாள் . இருவரும் உரையாடுகின்றனர் .
துவானேத் - ஒரு புகழ் மிக்க நோயாளியாகிய உங்களைப் பார்ப்பதற்கு எனக்கு ஏற்பட்ட ஆர்வத்தை நீங்கள் தவறாகக் கருத மாட்டீர்கள் ; எங்கும் பரவி யுள்ள உங்களது கீர்த்தி தான் எனக்கிந்த உரிமையைத் தந்தது ,
அர்கான் - மிக்க நன்றி .
துவா -- என்னை உற்றுப் பார்க்கிறீர்கள் என்பது தெரிகிறது . எனக்கு என்ன வயது இருக்கும் என்று நினைக்கிறீர்கள் ?
அர் - மிஞ்சி மிஞ்சிப் போனால் 26 அல்லது 27 .
துவா --அஹஹஹா ! எனக்கு வயது 90 .
அர் - 90 ஆ ?
துவா - இவ்வளவு இளமையும் வலிமையும் என் மருத்துவக் கமுக்கங்களின் ஒரு விளைவு தான் .
அர் - மெய்யாகவே 90 வயதுக்கு நீங்கள் அழகிய இளங்கிழவர் தான் .
துவா --நான் ஒரு மருத்துவப் பயணி . என் திறமைக்கு ஏற்ற மற்றும் பேர் பெற்ற சிக்கல்களை நாடி , என்னை வேலை வாங்கத் தகுதி வாய்ந்த நோயாளிகளைத் தேடி , மருத்துவத்தில் நான் கண்டுபிடித்துள்ள அரும் பெரும் கமுக்கங்களைச் சோதித்துப் பார்ப்பதற்காக , ஊர் ஊராக , நாடு நாடாகச் செல்பவன் . சாதாரண அற்ப நோய்கள் , ஒன்றுமில்லாத கீல்வாதம் , ஒற்றைத் தலை வலிகளோடு நான் விளையாட விரும்புவதில்லை ; மூளையைத் தாக்கும் தொடர் காய்ச்சல் , கடுமையான வாந்தி பேதி , கொடிய மகோதரம் , நெஞ்சு வீக்கத்துடன் கூடிய , சிக்கல் மிக்க நுரையீரல் பிணி , இவையே எனக்குப் பிடித்தவை ; இவற்றையே நான் முறியடிக்க முனைபவன் . .
அதனால் , ஐயா , நான் விரும்புவது என்ன வென்றால் , நான் சொன்ன அந்த எல்லா நோய்களும் உங்களைப் பீடித்திருக்க வேண்டும் என்பதும் நீங்கள் சகல மருத்துவர்களாலும் கை விடப்பட்டு சாவுப் படுக்கையில் இருக்க வேண்டும் என்பதும் தான் : அப்போது தானே என் மருந்துகளின் அருமையையும் உங்களைக் குணப்படுத்த எனக்குள்ள ஆர்வத்தையும் நான் உங்களுக்குப் புலப்படுத்த முடியும் ?
அர் - என்மீது உங்களுக்குள்ள நல்லெண்ணங்களுக்கு நான் உங்களுக்குக் கடமைப் பட்டுள்ளேன் , டாக்டர் .
துவா - நாடியைக் காட்டுங்கள் . உம் ! ஒழுங்காய்த் துடி ! சரியான முறையில் உன்னை நான் துடிக்க வைப்பேன் ! இந்த நாடி முரண்டு பண்ணுகிறதே ! உனக்கு இன்னம் என்னைத் தெரியவில்லை என்பது எனக்குப் புரிகிறது . உங்கள் மருத்துவர் யார் ?
அர் - டாக்டர் புயிர்கோன் .
துவா - பெரிய மருத்துவர்கள் பற்றிய என் பட்டியலில் அவர் பெயர் இல்லை . உங்களுக்கு என்ன நோய் என்றார் ?
அர் - கல்லீரல் கோளாறு என்றார் ; சிலர் மண்ணீரல் பாதிப்பு என்றனர் .
துவா - எல்லாரும் முட்டாள்கள் . உங்களுக்கு நுரையீரல் நோய் .
அர் - நுரையீரலா ?
துவா - உங்களுக்கு என்னென்ன செய்கிறது ?
அர் - அடிக்கடி தலை வலி .
துவா - சரிதான் ; நுரையீரல் !
அர் - கண்ணை ஒரு திரை மறைப்பது போல் சில சமயம் தோன்றுகிறது .
துவா - நுரையீரல் !
அர் - அவ்வப்போது நெஞ்சு வலி .
துவா - நுரையீரல் !
அர் - ஒரே களைப்பு !
துவா - நுரையீரல் !
அர் - எப்போதாவது குடல் வலி போல வயிற்றில் வலி .
துவா - நுரையீரல் ! உணவை விருப்பத்துடன் உண்கிறீர்களா ?
அர் - ஆம் , டாக்டர் .
துவா - நுரையீரல் ! மது பருகுவது உங்களுக்குப் பிடிக்கிறதா ?
அர் -- ஆமாம் , டாக்டர் .
துவா - நுரையீரல் ! சாப்பாட்டுக்குப் பின்பு லேசான தூக்கம் வருமா ?
அர் - வரும், டாக்டர் .
துவா - நுரையீரல் , நுரையீரல் ! உங்கள் டாக்டர் என்ன உணவு உண்ணச் சொன்னார் ?
அர் - கஞ்சி .
துவா - மண்டு !
அர் - பறவைக் கறி , கன்றுக் கறி .
துவா - மண்டு !
அர் - சூப்பு , முட்டை , பிளம் பழம் .
துவா - மண்டு !
அர் - முக்கியமாக திராட்சை மதுவில் நிறைய நீர் கலந்து குடிக்கச் சொன்னார் .
துவா -- மண்டு , மக்கு , முண்டம் ! திராட்சை மதுவை நீங்கள் சுயமாகப் பருக வேண்டும் . நீர்த்துப் போயிருக்கிற உங்கள் ரத்தத்தைக் கெட்டிப்படுத்த நிறைய மாட்டுக் கறி , பன்றிக் கறி , கோதுமை , அரிசி உண்ண வேண்டும் . ரத்த்த்தில் பசை உண்டாக்க முந்திரிப் பருப்பு ம் பிஸ்கட்டும் தின்னுங்கள் . இந்த ஊரில் நான் இருக்கிற வரை அடிக்கடி வந்து பார்ப்பேன் .
அர் - மிக்க நன்றி , டாக்டர் .
துவா - என்ன இது ? அந்தக் கையை வைத்துக்கொண்டு இருக்கிறீர்களே !
அர் - என்ன சொல்கிறீர்கள் ?
துவா - நீங்கள் நானாய் இருந்தால் அந்தக் கையை உடனே வெட்டச் செய்திருப்பேன் .
அர் - ஏன் ? எதற்காக ?
துவா - எலலா உணவுகளையும் அது தன் பக்கமே இழுத்துக்கொள்கிறது , இந்தப் பக்கத்துக்குப் பயன் ஏற்படுவதைத் தடுக்கிறது .
அர் - ஆனால் என் கை எனக்குத் தேவை .
துவா - உங்கள் வலக் கண்கூடச் சரியில்லை ; அதைத் தோண்டிவிட வேண்டும் .
அர் - கண்ணைத் தோண்டுவதா ?
துவா - அது மற்ற கண்ணுக்கு இடையூறாக இருக்கிறது
அர் - இருந்துவிட்டுப் போகட்டும் ..
துவா - போய் வருகிறேன் .
( டாக்டர் போன பின்பு )
அர் - நல்ல சிகிச்சை ! ஒற்றைக் கண்ணனாயும் முடவனாயும் மாற்றும் அறுவை !
- - - - - - - - - - - - - - - - - - - -- - - - - - -- - - - -