PDA

View Full Version : அடிக்கடி எழும் கேள்வி



ஆதி
22-06-2011, 01:27 PM
வாஸ்து பார்த்து
வீடு கட்டும் நீ
ஏன்
வாஸ்து பார்த்து
வாழ்வை கட்டுவதில்லை ?

தாமரை
22-06-2011, 01:29 PM
வாஸ்து பார்த்து
வீடு கட்டும் நீ
ஏன்
வாஸ்து பார்த்து
வாழ்வை க*ட்டுவ*தில்லை ?

சொந்தக் காலால்
நிற்க முடியாததால்
வஸ்து பார்த்து
கட்டினேனே!!:icon_b:

ஆதவா
22-06-2011, 01:42 PM
மூளை சரியில்லைன்னு சொல்லிட்டாங்கன்னா?? :D

தாமரை
22-06-2011, 01:52 PM
மூளை சரியில்லைன்னு சொல்லிட்டாங்கன்னா?? :D

இடிச்சு
கட்டி
பரிகாரம் பண்ணிறலாம்!!

பென்ஸ்
22-06-2011, 02:35 PM
பார்த்து தானே கட்டுகிறோம்...

வேலை பார்க்கும் பெண்...
100 சரவன் நகை..
சில லச்சம் பணம்
நல்ல லச்சணம்

சொந்த வீடு
நல்ல வேலை
பேங்கில் பணம்
அக்கா தங்கை இல்லாமை

இப்படி எல்லாம் இருக்கிற இடத்தில் இருந்தால் தானே கட்டுகிறோம்...:redface:

த.ஜார்ஜ்
22-06-2011, 05:18 PM
வாஸ்து பார்த்து வீடு கட்டினா அது வாழ்வையும் கட்டுமாமே. சொல்றாங்கோ..

innamburan
22-06-2011, 07:20 PM
வாஸ்தவமான வாழ்வு வாழ்ந்தால் 'வீடு' சேருவது எளிது -அந்த வேளை வரும்போது.

செல்வா
15-07-2011, 01:14 PM
வஸ்து இருந்தாத்தானே வாஸ்து பாக்கணும்
கட்டுறதுக்கும்..! இடிக்கிறதுக்கும்..!!

Nivas.T
15-07-2011, 01:31 PM
வாஸ்த்து பாத்து வீடு கட்றவன் நல்ல இருக்கானோ இல்லையோ?

வாஸ்த்து தெரியும் என்று சொல்லலி வீட்டை இடிப்பவனின் வீடு நன்கு வளம்பெற்று விடும்

எப்படியோ வாஸ்த்தால் பயனுண்டு என்பது உறுதி, அது யாருக்கு என்பது தான் கேள்வி.:D

ஷீ-நிசி
15-07-2011, 02:54 PM
மூளை சரியில்லைன்னு சொல்லிட்டாங்கன்னா?? :D

:icon_b: :icon_b: :icon_b:

ஷீ-நிசி
15-07-2011, 02:56 PM
வாஸ்த்து பாத்து வீடு கட்றவன் நல்ல இருக்கானோ இல்லையோ?

வாஸ்த்து தெரியும் என்று சொல்லலி வீட்டை இடிப்பவனின் வீடு நன்கு வளம்பெற்று விடும்

.:D

சூப்பர் நிவாஸ் :icon_b:

ஷீ-நிசி
15-07-2011, 02:58 PM
வாஸ்து பார்த்து
வீடு கட்டும் நீ
ஏன்
வாஸ்து பார்த்து
வாழ்வை கட்டுவதில்லை ?

நல்ல கேள்வி ஆதன்.. வாஸ்து பார்க்கறவன் யோசிப்பானா?!!

அமரன்
16-07-2011, 11:45 AM
வீட்டைக் கட்டினால் குடி இருக்கலாம்..
வாழ்வைக் கட்டினால்..????
அதனாலும் இருக்கலாமோ..???