தாமரை
22-06-2011, 04:47 AM
தலைப்பு மட்டும் காமெடிக்காக நான் கொடுத்தது.
மற்றபடி செய்தி மூலம் தினகரன்.
80 லட்சம் காலன் வெளியேற்றம் ஒருவர் ‘ஒன்’ போனதால் நீர்த்தேக்கம் முழுதும் காலி - Dinakaran News
ஓரேகான் : குடிநீருக்கு பயன்படுத்தும் ஏரிகள், குளங்களில் ‘டூ’ போவது, குளிப்பது எல்லாம் நம்நாட்டில் சகஜம். ஆனால், சுத்திகரித்த நீர் நிரப்பப்பட்ட நீர்த்தேக்கத்தில் ஒருவர் ‘ஒன்’ போனது ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவானதால் ஒரு சொட்டு விடாமல் நீர்த்தேக்கத்தின் 80 லட்சம் காலன் நீர் வெளியேற்றப்பட்டது. இது அமெரிக்காவில்!
அமெரிக்காவின் ஓரேகான் மாநிலத்தின் முக்கிய நகரம் போர்ட்லாண்ட். அங்கு மக்களின் குடிநீருக்காக சுத்திகரிக்கப்பட்ட நீருடன் பிரம்மாண்ட நீர்த்தேக்கம் உள்ளது.
அதை யாரும் அசுத்தப்படுத்தாமல் இருக்க நீர்த்தேக்கத்தின் சுற்றுச் சுவர்களில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் உண்டு. நேற்று முன்தினம் அந்த கேமராக்களில் பதிவானதை அதிகாரிகள் வழக்கம்போல பார்த்தனர். அப்போது மதில் சுவர் ஏறிய ஒருவர் நீரில் சிறுநீர் கழித்தது கேமராவில் பதிவாகி இருந்தது. இதையடுத்து, நீர்த்தேக்கத்தில் இருந்த 80 லட்சம் காலன் நீரையும் ஒரு சொட்டு விடாமல் வெளியேற்றினர் அதிகாரிகள்.
இதுபற்றி சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சிறுநீர் கலந்த நீரை குடியிருப்புவாசிகளுக்கு அளிக்க மனமில்லை. எனவே, வெளியேற்றினோம். நீர்த்தேக்கம் சுத்தப்படுத்தப்பட்டு, மீண்டும் சுத்திகரித்த நீர் நிரப்பப்படும்’’ என்றார். இருந்தாலும் இது ரொம்ப ஓவர் என்று சில டாக்டர்கள் தெரிவித்தனர். ‘‘மனிதனின் சிறுநீர் தனக்கு தானே கிருமிநாசினி. அதுவும் அதிக நீரில் கலந்தால் அது நீர்த்து போய், காணாமல் போகும். ஒருவரின் சிறுநீர் கலந்ததற்காக 80 லட்சம் காலன் நீரை வீணாக்கியது அநியாயம்’’ என்றனர்.
இந்தச் செய்தியைப் படித்து விட்டு சிரிப்பதா அழுவதா ஒண்ணுமே புரியலை..
:traurig001::lachen001::traurig001::lachen001::traurig001::lachen001::confused::icon_rollout:
மற்றபடி செய்தி மூலம் தினகரன்.
80 லட்சம் காலன் வெளியேற்றம் ஒருவர் ‘ஒன்’ போனதால் நீர்த்தேக்கம் முழுதும் காலி - Dinakaran News
ஓரேகான் : குடிநீருக்கு பயன்படுத்தும் ஏரிகள், குளங்களில் ‘டூ’ போவது, குளிப்பது எல்லாம் நம்நாட்டில் சகஜம். ஆனால், சுத்திகரித்த நீர் நிரப்பப்பட்ட நீர்த்தேக்கத்தில் ஒருவர் ‘ஒன்’ போனது ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவானதால் ஒரு சொட்டு விடாமல் நீர்த்தேக்கத்தின் 80 லட்சம் காலன் நீர் வெளியேற்றப்பட்டது. இது அமெரிக்காவில்!
அமெரிக்காவின் ஓரேகான் மாநிலத்தின் முக்கிய நகரம் போர்ட்லாண்ட். அங்கு மக்களின் குடிநீருக்காக சுத்திகரிக்கப்பட்ட நீருடன் பிரம்மாண்ட நீர்த்தேக்கம் உள்ளது.
அதை யாரும் அசுத்தப்படுத்தாமல் இருக்க நீர்த்தேக்கத்தின் சுற்றுச் சுவர்களில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் உண்டு. நேற்று முன்தினம் அந்த கேமராக்களில் பதிவானதை அதிகாரிகள் வழக்கம்போல பார்த்தனர். அப்போது மதில் சுவர் ஏறிய ஒருவர் நீரில் சிறுநீர் கழித்தது கேமராவில் பதிவாகி இருந்தது. இதையடுத்து, நீர்த்தேக்கத்தில் இருந்த 80 லட்சம் காலன் நீரையும் ஒரு சொட்டு விடாமல் வெளியேற்றினர் அதிகாரிகள்.
இதுபற்றி சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சிறுநீர் கலந்த நீரை குடியிருப்புவாசிகளுக்கு அளிக்க மனமில்லை. எனவே, வெளியேற்றினோம். நீர்த்தேக்கம் சுத்தப்படுத்தப்பட்டு, மீண்டும் சுத்திகரித்த நீர் நிரப்பப்படும்’’ என்றார். இருந்தாலும் இது ரொம்ப ஓவர் என்று சில டாக்டர்கள் தெரிவித்தனர். ‘‘மனிதனின் சிறுநீர் தனக்கு தானே கிருமிநாசினி. அதுவும் அதிக நீரில் கலந்தால் அது நீர்த்து போய், காணாமல் போகும். ஒருவரின் சிறுநீர் கலந்ததற்காக 80 லட்சம் காலன் நீரை வீணாக்கியது அநியாயம்’’ என்றனர்.
இந்தச் செய்தியைப் படித்து விட்டு சிரிப்பதா அழுவதா ஒண்ணுமே புரியலை..
:traurig001::lachen001::traurig001::lachen001::traurig001::lachen001::confused::icon_rollout: