PDA

View Full Version : கோதண்டராமன்



M.Jagadeesan
09-06-2011, 03:06 PM
கோதண்டராமன் படுத்த படுக்கையாகக் கிடந்தார். பத்து நாட்களாக அன்ன ஆகாரம் எதுவும் இல்லாமல், உடம்பு துரும்பாக மெலிந்து விட்டது.அன்றைய தினம் நிலைமை மிகவும் மோசமாகப் போய்விட்டது.

நாடித்துடிப்பு மெல்ல, மெல்ல அடங்கிக்கொண்டே வந்தது. கால் பாதங்கள் ஜில்லிடத் தொடங்கின. கருவிழிகள் ஆடவில்லை. டாக்டர், நாடித்துடிப்பைத் தொட்டுப் பார்த்தார். அவருக்கு நம்பிக்கையில்லை. உறவினர்களை அழைத்து," சொல்ல வேண்டியவர் களுக்கு சொல்லி அனுப்பிவிடுங்கள். இன்று இரவு வரைக்கும் கூடத்தாங்காது" என்று சொன்னார். உறவினர்கள் எல்லோருக்கும் சொல்லி அனுப்பினார்கள்.

தான் சொன்னபடியே டாக்டர் கோதண்டராமன் அன்று இரவு 8 மணிக்குக் காலமானார்.

sarcharan
09-06-2011, 03:24 PM
சின்னக்கதை!
சின்னதாய் நம்மை உச்சு கொட்டவைத்த கதை!

M.Jagadeesan
09-06-2011, 03:37 PM
நன்றி சர்சரன்!

sarcharan
09-06-2011, 03:39 PM
அது என்ன பாரதிக்கு கண்ணம்மா மாதிரி உங்களுக்கு ஒரு டாக்டர் கோதண்டராமன்?

M.Jagadeesan
09-06-2011, 03:42 PM
தவறு. திரு கெளதமன் அவர்கள்தான் " கோதண்டராமன் கதைகள்" என்ற ஒரு திரியை ஆரம்பித்தார்.

கீதம்
10-06-2011, 03:01 AM
கடைசி வரி வரை கதையை ஊகிக்கமுடியவில்லை. கன கச்சிதமாய்க் கதையை (டாக்டர் கோதண்டராமன் கதையை?) முடித்துவிட்டீர்கள். வெகு அருமை.:icon_b:

aren
10-06-2011, 03:05 AM
குணம் செய்ய வந்த டாக்டர்தான் போய்ட்டாரோ என்று நினைத்தேன். நோயாளியும் ஒரு டாக்டர் என்று கடைசி விரியில் தெரிந்தது.

M.Jagadeesan
10-06-2011, 03:09 AM
பாராட்டுக்கு நன்றி கீதம்!

M.Jagadeesan
10-06-2011, 03:12 AM
நோயாளிதான் கோதண்டராமன்!
டாக்டர்தான் கோதண்டராமன்!

நாஞ்சில் த.க.ஜெய்
10-06-2011, 04:38 AM
இறந்தது மருத்துவர் கோதாண்டராமன் எனில் நோயாளி கோதாண்டராமன் நிலைமை என்னவாயிற்று ?....

M.Jagadeesan
10-06-2011, 04:49 AM
இரண்டு பேருமே இறந்துவிட்டார்கள்!

அன்புரசிகன்
10-06-2011, 06:07 AM
அடக்கொடுமையே... சில வரிகளில் கனமான செய்தி.
வாழ்த்துக்கள் ஐயா.

M.Jagadeesan
10-06-2011, 06:41 AM
வாழ்த்துக்களுக்கு நன்றி! அ.ர.!

Ravee
10-06-2011, 09:00 AM
இரண்டு பேருமே இறந்துவிட்டார்கள்!


ஏன் இந்த கொலைவெறி ... :fragend005:

M.Jagadeesan
10-06-2011, 09:10 AM
தானாகவே இறந்துவிட்டார்கள். கொலை செய்தால் தானே கொலைவெறி?

Ravee
10-06-2011, 09:34 AM
தானாகவே இறந்துவிட்டார்கள். கொலை செய்தால் தானே கொலைவெறி?

நான் நம்ப மாட்டேன் ... உங்கள் பேனாவின் கூர்மையால்தான் அவர்கள் காலாவதி ஆனார்கள் .... :cool:

கௌதமன்
01-07-2011, 04:42 PM
டாக்டர் கோதண்டராமன் கதையை தொடரலாம் என்று பார்த்தால்,
ஐயகோ இது என்னக் கொடுமை....