lenram80
06-06-2011, 06:55 PM
கற்றுக் கொடுப்பருக்கும்
பெற்றுக் கொடுப்பவருக்கும்
பட்டம் பெற்றவருக்கே
பள்ளியில் இடம் என்றான பின்,
ஆறு லட்சத்து ஒன்று!
சென்னையின் அஞ்சல் எண் மட்டுமல்ல
பட்டிணத்தில் ஆங்கிலப் பள்ளியில்
அறிமுக வகுப்பின் கட்டணம் என்றான பின்,
அரிசி மட்டும் இலவசமாய் படுகுழியில்!
அடுப்பிலிடும் அத்தனையின் விலையும்
எமன் வசமாய் இமய மலையில்
சோறு மட்டுமே உயிர் காக்கும் சாறு என்றான பின்,
நாற்றுகளை இடுப்பில் வைத்துக்கொண்டு
நடனமாடிய விளை நிலங்கள்
தலையில் கட்டிட கரகங்களை வைத்துக்கொண்டு
விழி பிதுங்கி இப்போது விலை நிலங்கள் என்றான பின்,
உணவு, உடை, உறைவிடத்தை ஊழல் ஒளி அடிக்க
தேசியக் கொடி கூட பணம் கொடுத்தால் பறக்க
பண பலம் வறுமையின் நகம் முனையில் கறுக்க
தேர்தலன்று நேர்மை தீக்குளித்து இறக்க என்றான பின்
உன் உடல் தொட்டு நெஞ்சு முட்டி பால் குடிக்கவும்
கட்டிப் பிடித்து கை அணைத்து ஆழ் உறங்கவும்
அளவிலா ஆசையுடன் இருக்கும் உன் சேயின்
ஒரு சின்ன வேண்டுகோள் இதோ!
என்னால் நீ படப் போகும் பாடு!
தாங்காது என் பிஞ்சு நெஞ்சுக் கூடு!
வயல் வெளியில் கருகி
கூலி வேலையில் குறுகி
பசி போக்க நீரை அருகி
படுத்த அப்பனையும் வியாதி பருகி
பாசத்தில் மட்டும் பனி போல் உருகி
மிச்சத்தில் சூறாவளி சேர்த்து வைத்து சொறுகும்
நம் குடும்பத்தில் நான் தேவையா?
பறக்க முடியா மயிலுக்கு புத்தம் புது தோகையா?
கருவிலேயே என்னை
கலைத்து விடு அன்னையே!
கனவிலேயே என்னை
கலைந்து விடு அன்னையே!
பெற்றுக் கொடுப்பவருக்கும்
பட்டம் பெற்றவருக்கே
பள்ளியில் இடம் என்றான பின்,
ஆறு லட்சத்து ஒன்று!
சென்னையின் அஞ்சல் எண் மட்டுமல்ல
பட்டிணத்தில் ஆங்கிலப் பள்ளியில்
அறிமுக வகுப்பின் கட்டணம் என்றான பின்,
அரிசி மட்டும் இலவசமாய் படுகுழியில்!
அடுப்பிலிடும் அத்தனையின் விலையும்
எமன் வசமாய் இமய மலையில்
சோறு மட்டுமே உயிர் காக்கும் சாறு என்றான பின்,
நாற்றுகளை இடுப்பில் வைத்துக்கொண்டு
நடனமாடிய விளை நிலங்கள்
தலையில் கட்டிட கரகங்களை வைத்துக்கொண்டு
விழி பிதுங்கி இப்போது விலை நிலங்கள் என்றான பின்,
உணவு, உடை, உறைவிடத்தை ஊழல் ஒளி அடிக்க
தேசியக் கொடி கூட பணம் கொடுத்தால் பறக்க
பண பலம் வறுமையின் நகம் முனையில் கறுக்க
தேர்தலன்று நேர்மை தீக்குளித்து இறக்க என்றான பின்
உன் உடல் தொட்டு நெஞ்சு முட்டி பால் குடிக்கவும்
கட்டிப் பிடித்து கை அணைத்து ஆழ் உறங்கவும்
அளவிலா ஆசையுடன் இருக்கும் உன் சேயின்
ஒரு சின்ன வேண்டுகோள் இதோ!
என்னால் நீ படப் போகும் பாடு!
தாங்காது என் பிஞ்சு நெஞ்சுக் கூடு!
வயல் வெளியில் கருகி
கூலி வேலையில் குறுகி
பசி போக்க நீரை அருகி
படுத்த அப்பனையும் வியாதி பருகி
பாசத்தில் மட்டும் பனி போல் உருகி
மிச்சத்தில் சூறாவளி சேர்த்து வைத்து சொறுகும்
நம் குடும்பத்தில் நான் தேவையா?
பறக்க முடியா மயிலுக்கு புத்தம் புது தோகையா?
கருவிலேயே என்னை
கலைத்து விடு அன்னையே!
கனவிலேயே என்னை
கலைந்து விடு அன்னையே!