PDA

View Full Version : எதை கொடுத்தாயோ!!



ஆதி
06-06-2011, 12:29 PM
ஒன்றெனவும்
ஒவ்வொன்றெனவும்
வேறெனவும்
வெவ்வேறெனவும்
ஒன்றுமே அற்றதெனவும்
கருதப்படலாம்

ஆழப்பாய்ந்து
அகண்டு பெருத்து
அழுந்தி நின்று
விதைத்த இடம் யாவிலும்
அகற்ற முடியாதனவாய்
அசுரத்தன்மை பெற்றுவிடலாம்

எந்த உருவத்துக்கும் பொருந்துவதாகவும்
எந்த உருவத்துக்கும் பொருத்தமற்றதகாவும்
எந்த உருவத்தினின்றும் உருமாறுவதாகவும்
எந்த உருவத்தினின்றும் உருமாறவியலாததாகவும்
எந்த உருவத்துக்கும் சம்பந்தமற்ற ஒன்றாகவும் இருக்கலாம்

நீர்குமிழி ஒன்றின் மென்மையோடு வெடிக்கலாம்
மயிலிறகின் தன்மையோடு வருடலாம்
வெங்கல்லின் கடுமையோடு சுடலாம்
மெல்லிய மூங்கில் சிலாம்பாய் ஊடுருவி உள்வேதனை கொடுக்கலாம்..

அனாதரவான தருணமொன்றில்
ஆதரவாய் அனைக்கும் கையொன்றாய் வரலாம்
ஆதரவற்ற கிழவியொருத்தியின் வெறுங்கைகளாய் நீளலாம்
விலைமகளொருத்தியின் வயிற்றிலடிக்கும் ஈனக்கைகளாய் ஏய்கலாம்..

தனிமையில் தன்முகம் உரிந்து
சீழ்வழியும் விகாரமுக காட்டி அச்சமுறுத்தலாம்..

எனக்குள் இருந்தும்
உனக்குள் இருந்தும்
மற்ற யாரொருவரில் இருந்தும்
அல்லது நம் ஒவ்வொருவரில் இருந்து
கொஞ்சம் கொஞ்சமாய் விழுந்து
மாவுருவம் பெற்ற
ஒன்றெனவும்
ஒவ்வொன்றெனவும்
வேறெனவும்
வெவ்வேறெனவும்
ஒன்றுமே அற்றதெனவும்
கருதப்படலாம்...

Ravee
06-06-2011, 01:37 PM
எனக்குள் இருந்தும்
உனக்குள் இருந்தும்
மற்ற யாரொருவரில் இருந்தும்
அல்லது நம் ஒவ்வொருவரில் இருந்து
கொஞ்சம் கொஞ்சமாய் விழுந்து
மாவுருவம் பெற்ற
ஒன்றெனவும்
ஒவ்வொன்றெனவும்
வேறெனவும்
வெவ்வேறெனவும்
ஒன்றுமே அற்றதெனவும்
கருதப்படலாம்...


ஒவ்வொரு வரியையும் இருமுறை படிக்க பொருள் விளங்கி ... எழுத்து நடையில் மயங்கி ... பாட்டின் கருவை நினைத்து திருவை பற்றி என்னில் ... உன் மனகண்ணில் வந்து போனதை மீண்டும் ஒரு முறை வார்த்தைகளாய் படித்தேன் ... அருமை ...ஆதன் ....அருமை

சிவா.ஜி
06-06-2011, 01:46 PM
ஆதனின் தமிழுக்கு நான் பரம ரசிகன். இந்தக் கவிதையிலும்...தமிழ் சதிராடியிருக்கிறது....கருவும், கவிதையும் அபாரம்.

மறைபொருளை(கவிதைக்குள்ளிருப்பதை என்றும் சொல்லலாம்....அந்த மகா மறைபொருளையும் சொல்லலாம்) உணந்துகொண்டால்....மனிதனாய் வாழலாம்.....பாரமற்ற மனதோடு வாழலாம்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆதன்.

ஆதி
07-06-2011, 08:47 AM
பின்னூட்ட ஊக்கம் கொடுத்த ரவியண்ணா, சிவா அண்ணா இருவருக்கும் நன்றி...

இளசு
30-06-2011, 05:24 AM
ஆதன்,

இறைவன், மதங்கள் என ஒரு பொருளிலும்

மனிதர், அவர் மனம்+ செயல்கள் என மறுபொருளிலும்..

ஊஞ்சலாடி வாசித்தேன் ..

உறுபசி விமர்சனத்தில் ஆதவா சொன்னது : எஸ்ராவின் எழுத்துகள் வெம்மையாய், வறட்சியாய் படிப்பவரைத் தாக்க வல்லவை என..

உன் எழுத்துகள் இடத்துக்குத் தக்க, தென்றலாய், இறகாய், சுடுகல்லாய், மூங்கில் சிலாம்பாய்........

சிவா போல நானும் உன் தமிழுக்கு இரசிகன்..

வாழ்த்துகிறேன் ஆதன்.

ஜானகி
30-06-2011, 05:47 AM
இல்லாமல் இருப்பது.....புரியாமல் புரிவது......தெரியாமல் தெரிவது.....கொடுக்காமல் கொடுப்பது....என்பது இதுதானோ...?

நாஞ்சில் த.க.ஜெய்
30-06-2011, 08:50 AM
தமிழில் வார்த்தைகளை கொண்டு சொற் சிலம்பாட்டம் ஆடி புனையப்பட்ட கவிதை அருமை ..ஆதன் அவர்களே...

Nivas.T
30-06-2011, 01:50 PM
அது
அவை
இன்னொன்று
இன்னொரு அது
இன்னொரு அவை
இன்னொரு இன்னொன்று
எதுவுமில்லை

ஓர் அணுவாய்
இருந்து
உள்ளே பாய்ந்து
உடல் வளர்த்து
உயிர் பெருத்து
ஒவ்வொன்றும்
அணுவாய்
பலவாய் பிரிந்து
மீண்டும்
மீண்டு
அணுவாய்
அணுவின்
அணுவாய்
அழியாமல்

உருவாய்
இருந்து
உருவாய்
மாறி
உருவாய்
மறைந்து
உருவாய்
பிரிந்து
உருவாய்
உருவாக்கி
உறைந்து
மறைந்து
மறையாமல்
உருவாய்
உறைந்து

வெறுமையாய்
வெற்று
இடமாய்
வெற்று
வெளியாய்
வெற்று
பொருளாய்
வெற்று
உயிராய்

மாயையாய் இருக்கும்

ஆதி
30-06-2011, 01:59 PM
ஆதன்,

இறைவன், மதங்கள் என ஒரு பொருளிலும்

மனிதர், அவர் மனம்+ செயல்கள் என மறுபொருளிலும்..

ஊஞ்சலாடி வாசித்தேன் ..

உறுபசி விமர்சனத்தில் ஆதவா சொன்னது : எஸ்ராவின் எழுத்துகள் வெம்மையாய், வறட்சியாய் படிப்பவரைத் தாக்க வல்லவை என..

உன் எழுத்துகள் இடத்துக்குத் தக்க, தென்றலாய், இறகாய், சுடுகல்லாய், மூங்கில் சிலாம்பாய்........

சிவா போல நானும் உன் தமிழுக்கு இரசிகன்..

வாழ்த்துகிறேன் ஆதன்.

//மனிதர், அவர் மனம்+ செயல்கள் என மறுபொருளிலும்..//

இதுதான் மனதில் இருந்த பொருளும் அண்ணா..

கச்சிதமாய் பிடித்துவிட்டீர்கள்..

கடவுள், மதம், உலகம், வினை, விதி என்று எடுத்துக் கொண்டாலும் பொருந்தும்..

பின்னூட்ட ஊக்கத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணா..

கலாசுரன்
02-07-2011, 08:10 AM
அருமை ..!