kulirthazhal
03-06-2011, 04:37 AM
என்
வாழ்வின் தடங்கள்
வரைபடமாய் கிடைக்கிறது.,,
அதில்
எந்த வளைவுகளுக்கும்
நான் பொறுப்பாளியல்ல.,,
இன்னும் சில கோடுகள்
என்மேல் திணிக்கப்பட்டவை..,
மற்றும் சிலவற்றுள்
எனக்கு
ஏற்றுக்கொள்ள எதுவுமில்லை..,
சில கோடுகள்
நான் பாடாத ராகங்கள்..,
சில கோடுகள்
நான் ரசிக்காத சங்கீதம்..,
என்னதாய்
ஏனோ
ஏக்கங்கள்..,
கோபங்கள்..,
எனது வெற்றி
பிறரால்
வரையப்பட்டது..,
எனது அமைதி
என்னால்
பிழைக்கப்பட்டது..,
இன்னமும்
என்னென்னவோ
கோடுகள்..,
புள்ளிகள்..,
வளைவுகள்..,
திருப்பங்கள்..,
கிறுக்கல்கள்..,
மை கசடுகள்..,
மயக்கப்பதிவுகளும்
வெறுமையாய் வீற்றிருக்க
ஒரு
முகம்
தெரிவதாய் வதந்திகள்..,
அது
அழகாய் இருப்பதாக
அம்மா சொன்னாள்..,
அறிவாய் இருப்பதாக
அப்பா சொன்னார்..,
இணக்கமாக இருப்பதாக
நண்பன் சொன்னான்..,
இன்பமாய் இருப்பதாக
எவளோ சொன்னாள்..,
இரண்டாவது காதிலும்
வதந்திகள்..
திமிர் தோய்ந்து கிடப்பதாக
எதிரி சொன்னான்..,
பொய்மை பூத்துக்கிடப்பதாக
தோற்றவன் பொய்த்தான்..,
இயல்பாய் இருப்பதாக
துரோகி சொன்னான்..,
உருப்படாது என்றான்
குடியான்
மகனை மறைத்துக்கொண்டு..,
அது
என் முகமா
தெரியவில்லை...
என்னிடம்
கண்ணாடியுமில்லை...
துணிச்சலாய்
கேட்கிறேன்
நீயே சொல்லேன்....
-குளிர்தழல்...
வாழ்வின் தடங்கள்
வரைபடமாய் கிடைக்கிறது.,,
அதில்
எந்த வளைவுகளுக்கும்
நான் பொறுப்பாளியல்ல.,,
இன்னும் சில கோடுகள்
என்மேல் திணிக்கப்பட்டவை..,
மற்றும் சிலவற்றுள்
எனக்கு
ஏற்றுக்கொள்ள எதுவுமில்லை..,
சில கோடுகள்
நான் பாடாத ராகங்கள்..,
சில கோடுகள்
நான் ரசிக்காத சங்கீதம்..,
என்னதாய்
ஏனோ
ஏக்கங்கள்..,
கோபங்கள்..,
எனது வெற்றி
பிறரால்
வரையப்பட்டது..,
எனது அமைதி
என்னால்
பிழைக்கப்பட்டது..,
இன்னமும்
என்னென்னவோ
கோடுகள்..,
புள்ளிகள்..,
வளைவுகள்..,
திருப்பங்கள்..,
கிறுக்கல்கள்..,
மை கசடுகள்..,
மயக்கப்பதிவுகளும்
வெறுமையாய் வீற்றிருக்க
ஒரு
முகம்
தெரிவதாய் வதந்திகள்..,
அது
அழகாய் இருப்பதாக
அம்மா சொன்னாள்..,
அறிவாய் இருப்பதாக
அப்பா சொன்னார்..,
இணக்கமாக இருப்பதாக
நண்பன் சொன்னான்..,
இன்பமாய் இருப்பதாக
எவளோ சொன்னாள்..,
இரண்டாவது காதிலும்
வதந்திகள்..
திமிர் தோய்ந்து கிடப்பதாக
எதிரி சொன்னான்..,
பொய்மை பூத்துக்கிடப்பதாக
தோற்றவன் பொய்த்தான்..,
இயல்பாய் இருப்பதாக
துரோகி சொன்னான்..,
உருப்படாது என்றான்
குடியான்
மகனை மறைத்துக்கொண்டு..,
அது
என் முகமா
தெரியவில்லை...
என்னிடம்
கண்ணாடியுமில்லை...
துணிச்சலாய்
கேட்கிறேன்
நீயே சொல்லேன்....
-குளிர்தழல்...