M.Jagadeesan
26-05-2011, 09:02 AM
அது 3000 மாணவர்கள் படிக்கக்கூடிய மிகப்பெரிய பள்ளி. சென்ட்ரல் போர்டு பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது.ஒவ்வொரு ஆண்டும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு இறுதித் தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி காட்டுவார்கள். மாணவர்களுக்கு கல்வியுடன் நல்லொழுக்கத்தையும் போதித்துவந்தார்கள். திறமையான ஆசிரியர்கள் மட்டுமே அப்பள்ளியில் வேலைபார்க்கமுடியும். ஒவ்வொரு ஆண்டும் திறமையற்ற ஆசிரியர்களை நீக்கிவிட்டு, அவர்களுக்குப் பதிலாக திறமையான ஆசிரியர்களைப் பணிக்கு அமர்த்துவார்கள்.
அன்று நேர்முகத்தேர்வு ஒன்று நடைபெற இருந்தது. அதில் கலந்து கொள்வதற்காக 50 பேர் வந்திருந்தனர். எல்லோருமே வயது 30 லிருந்து 40 வரை இருக்கக்கூடிய நடுத்தர வயதினர். ஒவ்வொருவர் கையிலும் ஒரு புத்தகம் இருந்தது. அதைப் படித்துக் கொண்டு இருந்தனர். நேர்முகத் தேர்வில் என்ன கேள்வி கேட்பார்களோ என்ற பயம் ஒவ்வொருவர் முகத்திலும் தெரிந்தது. சிலர் பள்ளிக்கு முன்புறம் இருந்த பிள்ளையாரை வணங்கி தோப்புக்கரணம் போட்டுக்கொண்டு இருந்தனர். சிலர் அமைச்சர்களிடமிருந்து சிபாரிசுக் கடிதம் கொண்டுவந்திருந்தனர்.
காலை 10 மணிக்கு நேர்முகத்தேர்வு ஆரம்பமானது. தலைமை ஆசிரியரும், பள்ளித் தாளாளரும் நேர்முகத் தேர்வை நடத்தினர். ஒவ்வொருவராக உள்ளே சென்றனர். நேர்முகத்தேர்வு முடிந்து வெளியே வந்தசிலர்சிரித்துக்கொண்டேவந்தனர்.சிலருடைய முகம் சோகமாக இருந்தது." கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லை" என்று சிலர் பேசிக்கொன்டு வந்தனர். நேர்முகத்தேர்வு மாலை 4 மணிக்கு முடிந்தது.நேர்முகத் தேர்வின் முடிவுகள் மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும் என்று சொன்னார்கள். முடிவுகளைத் தெரிந்துகொள்வதற்காக எல்லோரும் ஆவலுடன் காத்திருந்தனர்.
மாலை 5 மணி. நேர்முகத்தேர்வின் முடிவுகளை அறிவிப்புப் பலகையில் ஒட்டினார்கள். அதில் 20 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அந்த 20 பேர் தவிர மற்றவர்களெல்லாம் போய்விட்டார்கள். 20 பேர் தலைமையாசிரியர் அறைக்கு வரும்படி அழைக்கப் பட்டார்கள்.பள்ளியின் தாளாளர் எல்லோரையும் அமரும்படி சொன்னார்.
"எல்லோருக்கும் வணக்கம்! இந்தப் பள்ளியின் நோக்கமே "தரமான கல்வி & நல்லொழுக்கம்".இரண்டு கைகள் சேர்ந்து தட்டினால்தான் ஓசை வரும்.எங்களுடைய ஆசிரியர்கள் எவ்வளவுதான் திறமையாகக் கற்பித்தாலும், வீட்டிலே மாணவர்களை ஒழுங்காகப் படிக்கவைப்பது பெற்றோர்களின் கையில்தான் உள்ளது. நாங்கள் வகுப்பிலே கொடுக்கக்கூடிய ஹோம் ஒர்க்கை, வீட்டிலே மாணவர்கள் செய்வதற்கு பெற்றோர்களின் ஒத்துழைப்பு வேண்டும்.அதற்குப் பெற்றோர்கள் படித்தவர்களாகவும், கற்பிக்கும் திறன் உடையவர்களாகவும் இருக்கவேண்டும். அந்தத் திறமை உடையவர்களைக் கண்டறிவதுதான் இந்த நேர்முகத்தேர்வின் நோக்கம். இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பேருக்கும் என் வாழ்த்துக்கள். நாளைய தினம் இந்த 20 பெற்றோர்களுக்கும் தங்களுடைய குழந்தைகளை Pre .K.G..வகுப்பில் சேர்த்துக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது." என்றார் பள்ளியின் தாளாளர்.
அன்று நேர்முகத்தேர்வு ஒன்று நடைபெற இருந்தது. அதில் கலந்து கொள்வதற்காக 50 பேர் வந்திருந்தனர். எல்லோருமே வயது 30 லிருந்து 40 வரை இருக்கக்கூடிய நடுத்தர வயதினர். ஒவ்வொருவர் கையிலும் ஒரு புத்தகம் இருந்தது. அதைப் படித்துக் கொண்டு இருந்தனர். நேர்முகத் தேர்வில் என்ன கேள்வி கேட்பார்களோ என்ற பயம் ஒவ்வொருவர் முகத்திலும் தெரிந்தது. சிலர் பள்ளிக்கு முன்புறம் இருந்த பிள்ளையாரை வணங்கி தோப்புக்கரணம் போட்டுக்கொண்டு இருந்தனர். சிலர் அமைச்சர்களிடமிருந்து சிபாரிசுக் கடிதம் கொண்டுவந்திருந்தனர்.
காலை 10 மணிக்கு நேர்முகத்தேர்வு ஆரம்பமானது. தலைமை ஆசிரியரும், பள்ளித் தாளாளரும் நேர்முகத் தேர்வை நடத்தினர். ஒவ்வொருவராக உள்ளே சென்றனர். நேர்முகத்தேர்வு முடிந்து வெளியே வந்தசிலர்சிரித்துக்கொண்டேவந்தனர்.சிலருடைய முகம் சோகமாக இருந்தது." கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லை" என்று சிலர் பேசிக்கொன்டு வந்தனர். நேர்முகத்தேர்வு மாலை 4 மணிக்கு முடிந்தது.நேர்முகத் தேர்வின் முடிவுகள் மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும் என்று சொன்னார்கள். முடிவுகளைத் தெரிந்துகொள்வதற்காக எல்லோரும் ஆவலுடன் காத்திருந்தனர்.
மாலை 5 மணி. நேர்முகத்தேர்வின் முடிவுகளை அறிவிப்புப் பலகையில் ஒட்டினார்கள். அதில் 20 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அந்த 20 பேர் தவிர மற்றவர்களெல்லாம் போய்விட்டார்கள். 20 பேர் தலைமையாசிரியர் அறைக்கு வரும்படி அழைக்கப் பட்டார்கள்.பள்ளியின் தாளாளர் எல்லோரையும் அமரும்படி சொன்னார்.
"எல்லோருக்கும் வணக்கம்! இந்தப் பள்ளியின் நோக்கமே "தரமான கல்வி & நல்லொழுக்கம்".இரண்டு கைகள் சேர்ந்து தட்டினால்தான் ஓசை வரும்.எங்களுடைய ஆசிரியர்கள் எவ்வளவுதான் திறமையாகக் கற்பித்தாலும், வீட்டிலே மாணவர்களை ஒழுங்காகப் படிக்கவைப்பது பெற்றோர்களின் கையில்தான் உள்ளது. நாங்கள் வகுப்பிலே கொடுக்கக்கூடிய ஹோம் ஒர்க்கை, வீட்டிலே மாணவர்கள் செய்வதற்கு பெற்றோர்களின் ஒத்துழைப்பு வேண்டும்.அதற்குப் பெற்றோர்கள் படித்தவர்களாகவும், கற்பிக்கும் திறன் உடையவர்களாகவும் இருக்கவேண்டும். அந்தத் திறமை உடையவர்களைக் கண்டறிவதுதான் இந்த நேர்முகத்தேர்வின் நோக்கம். இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பேருக்கும் என் வாழ்த்துக்கள். நாளைய தினம் இந்த 20 பெற்றோர்களுக்கும் தங்களுடைய குழந்தைகளை Pre .K.G..வகுப்பில் சேர்த்துக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது." என்றார் பள்ளியின் தாளாளர்.