க.கமலக்கண்ணன்
20-05-2011, 07:38 AM
சுத்தம்!
''இங்கே எச்சில் துப்பக் கூடாது'' என்றாள் ராணி.
''ஏம்மா துப்பக் கூடாது ?.' என்றான் ராமு.
''இது ஸ்கூல் எல்லா மாணவர்களும்
நடமாடும் இடம்'' என்றாள் ராணி.
''அதனால என்ன?'' என்றான் ராமு.
''எச்சிலை மிதிச்சா தொற்று நோய்
பரவுமுல்ல. அதனால தான்'' என்றாள் ராணி.
அவனுக்கு தப்பு செய்த மாணவனை
ஆசிரியர் பிரம்பால் அடிச்சது மாதிரி இருந்தது.
''ஆமாம். சரிதான். தெரியாம
பண்ணிட்டேன். இனிமேல் கண்ட
இடத்தில் எச்சில் துப்ப மாட்டேன்.'' என்றான் ராமு.
வண்டி பள்ளி முன்பு நிற்க,
''சரி நான் வரேன். ஸ்கூலுக்கு மணி
ஆச்சு'' என்று சொல்லிவிட்டு, வண்டியை
விட்டு இறங்கி சென்றாள் நான்கே வயதான
பள்ளி மாணவி ராணி, வாயடைத்து நின்றான்
தனியார் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில்
இருக்கும் ராமு.
http://www.tamilmantram.com/vb/photogal/images/2574/large/1_4th-F.jpg
''இங்கே எச்சில் துப்பக் கூடாது'' என்றாள் ராணி.
''ஏம்மா துப்பக் கூடாது ?.' என்றான் ராமு.
''இது ஸ்கூல் எல்லா மாணவர்களும்
நடமாடும் இடம்'' என்றாள் ராணி.
''அதனால என்ன?'' என்றான் ராமு.
''எச்சிலை மிதிச்சா தொற்று நோய்
பரவுமுல்ல. அதனால தான்'' என்றாள் ராணி.
அவனுக்கு தப்பு செய்த மாணவனை
ஆசிரியர் பிரம்பால் அடிச்சது மாதிரி இருந்தது.
''ஆமாம். சரிதான். தெரியாம
பண்ணிட்டேன். இனிமேல் கண்ட
இடத்தில் எச்சில் துப்ப மாட்டேன்.'' என்றான் ராமு.
வண்டி பள்ளி முன்பு நிற்க,
''சரி நான் வரேன். ஸ்கூலுக்கு மணி
ஆச்சு'' என்று சொல்லிவிட்டு, வண்டியை
விட்டு இறங்கி சென்றாள் நான்கே வயதான
பள்ளி மாணவி ராணி, வாயடைத்து நின்றான்
தனியார் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில்
இருக்கும் ராமு.
http://www.tamilmantram.com/vb/photogal/images/2574/large/1_4th-F.jpg