PDA

View Full Version : சுத்தம்! - குமுதம் (25-5-2011) இதழில் வெளிவந்தது



க.கமலக்கண்ணன்
20-05-2011, 07:38 AM
சுத்தம்!

''இங்கே எச்சில் துப்பக் கூடாது'' என்றாள் ராணி.

''ஏம்மா துப்பக் கூடாது ?.' என்றான் ராமு.

''இது ஸ்கூல் எல்லா மாணவர்களும்
நடமாடும் இடம்'' என்றாள் ராணி.

''அதனால என்ன?'' என்றான் ராமு.

''எச்சிலை மிதிச்சா தொற்று நோய்
பரவுமுல்ல. அதனால தான்'' என்றாள் ராணி.

அவனுக்கு தப்பு செய்த மாணவனை
ஆசிரியர் பிரம்பால் அடிச்சது மாதிரி இருந்தது.

''ஆமாம். சரிதான். தெரியாம
பண்ணிட்டேன். இனிமேல் கண்ட
இடத்தில் எச்சில் துப்ப மாட்டேன்.'' என்றான் ராமு.

வண்டி பள்ளி முன்பு நிற்க,

''சரி நான் வரேன். ஸ்கூலுக்கு மணி
ஆச்சு'' என்று சொல்லிவிட்டு, வண்டியை
விட்டு இறங்கி சென்றாள் நான்கே வயதான
பள்ளி மாணவி ராணி, வாயடைத்து நின்றான்
தனியார் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில்
இருக்கும் ராமு.

http://www.tamilmantram.com/vb/photogal/images/2574/large/1_4th-F.jpg

மச்சான்
20-05-2011, 07:48 AM
தாங்கள் எழுதிய பயனுள்ள செய்தியை சொல்லும் ஒருபக்க கதை குமுதத்தில் பிரசுரமானதுக்கு வாழ்த்துக்கள் கமலக்கண்ணன்...!:icon_b:

aren
20-05-2011, 07:59 AM
வாழ்த்துக்கள் கமலக்கண்ணன்.

Nivas.T
20-05-2011, 08:26 AM
நல்ல கதை வாழ்த்துக்கள் கமலக்கண்ணன்

அக்னி
20-05-2011, 09:49 AM
குட்டிக் கதையானாலும் சுட்டிக் கதை...

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் க.க.

க.கமலக்கண்ணன்
21-05-2011, 03:37 AM
மச்சான்

aren

Nivas.T

அக்னி

ஆகிய அனைவரின் பாராட்டுகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி...

கீதம்
22-05-2011, 08:57 AM
வயதும் பொறுப்பான பதவியும் வழங்காத பொது அறிவை மழலை வழங்கியதும், அதை மதித்து தந்தை ஏற்றுக்கொள்வதும் வெகு அழகு. குமுதத்தில் கதை வெளியானதற்கு கூடுதல் பாராட்டுகள்.

க.கமலக்கண்ணன்
23-05-2011, 06:21 AM
உண்மைதான் கீதம்... பற்பல புத்தங்கள் மற்றும் வாழ்க்கையின் அனுபவங்கள் சொல்லிக் கொடுக்காத விசயங்களை குழந்தைகள் சொல்லிக் கொடுப்பதுதான் பெரிய விசயம்

பல தரமுடியாத மாற்றங்களை மழலைகள் தான் மாற்ற முடியும்..

நன்றி கீதம் உங்களின் பாராட்டுகளுக்கு...

அன்புரசிகன்
23-05-2011, 06:53 AM
அழகான கதை. வாழ்த்துக்கள்.

க.கமலக்கண்ணன்
25-05-2011, 08:02 AM
உங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி... அன்புரசிகன்

sarcharan
25-05-2011, 08:35 AM
வாழ்த்துக்கள் கமலக்கண்ணன்!

நல்ல கதை!!

க.கமலக்கண்ணன்
26-05-2011, 03:39 AM
உங்களின் வாழ்த்துகளுக்கு

மிக்க நன்றி... sarcharan

M.Jagadeesan
26-05-2011, 11:35 AM
சிறுவர்களிடமும் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய செய்திகள் நிறைய உள்ளன. பாராட்டுக்கள் கமலக்கண்ணன்.

க.கமலக்கண்ணன்
27-05-2011, 07:24 AM
நன்றி M.Jagadeesan... உங்களின் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றிகள் பல...

ஐரேனிபுரம் பால்ராசய்யா
28-06-2011, 06:32 AM
இந்த கதையை ஏற்கனவே நான் குமுதத்தில் படித்து ரசித்தேன். சிந்தனையைத்தூண்டும் அருமையான கதை.

க.கமலக்கண்ணன்
01-07-2011, 05:15 AM
நன்றிகள் பல உங்களுக்கு ஐரேனிபுரம் பால்ராசய்யா...