செல்வா
19-05-2011, 04:59 AM
நான் வர்ணப்பெட்டி பேசுகிறேன்...
உங்கள் பார்வைக்கு உருளையாயிருக்கும் என்னைப் பார்க்கும் பலரும் முகம் சுளிக்கலாம். உடல்முழுதும் பலவித வர்ணங்கள் கொட்டிக் கொட்டி இயல்பான என் தோல் முழுவதும் மறைக்கப்பட்டு விட்டது. பல வித வர்ணங்களும் ஒழுங்கின்றிச் சிதறிக் கிடப்பதால் இந்த பூமியின் அமைப்பைப் போன்ற ஒழுங்கற்ற ஒரு ஒழுங்கு என் உடலை ஊன்றிக் கவனிப்பவர்களுக்குத் தெரியும்.
ஒழுங்கற்ற ஒழுங்கு என்றதும் நினைவிற்கு வருகிறது. இந்த உலகை ஒழுங்கற்ற ஒழுங்காக்கியவன் இயற்கை என்று சிலர் சொல்கின்றனர் இறைவன் என்று பலர் சொல்கின்றனர். பூமியை ஒழுங்கற்ற ஒழுங்கிற்குள்ளாக்கியது இயற்கையோ இறையோ எனக்கு இன்றுவரைத் தெரிந்திருக்கவில்லை என்றாலும் என்னை இத்தகைய ஒரு ஒழுங்கற்ற ஒழுங்கு நிலைக்கு ஆளாக்கியவனை எனக்கு நன்றாய்த் தெரியும். அவன் ஒரு சித்திரக்காரன்.
ஓவியன் என அழகான ஒரு தமிழ்ச்சொல் இருக்க சித்திரக்காரன் என்று சொல்கிறேனே என நீங்கள் கோபம் கொள்ளலாம் அல்லது ஆச்சரியப் படலாம். சிலர் அதைப்பற்றிக் கவலைப்படாமலே கூட இருக்கலாம். அருவி என்ற அழகானத் தமிழ்ப்பெயரை நீர்வீழ்ச்சி என்று ஆங்கிலப்படுத்தி அழைப்பதையும் இதையும் ஒன்றாக எண்ணிவிடக் கூடாது என்பதற்காகவே உங்களிடம் இதைச் சொல்கிறேன்.
அவன் ஒரு ஓவியன் மட்டுமல்ல பல விசித்திரங்கள் நிறைந்தவன். விசித்திரமான பல ஓவியங்களுக்குச் சொந்தக்காரன். ஏன் அவனும் அவன் வாழ்க்கையும் கூட விசித்திரமானவையே. விசித்திரமான ஒரு ஓவியனை நான் விசித்திரக்காரன் என அழைக்க ஆரம்பித்து அதுவே சித்திரக்காரனாக மருவிவிட்டது என்று நான் சொல்வதை நம்புவதும் நம்பாமல் போவதும் உங்கள் விருப்பம்.
என்னைக் கைக் கொண்டிருந்த சி்த்திரக்காரனின் வாழ்வும் அவன் வரையும் சிக்கலான சித்திரம் போன்றே சிக்கலாயிருந்தது. ஒரு சிக்கலான மனிதன் தன் சிக்கலான வாழ்க்கையை மிக எளிதாக எளிமையாக வாழ்ந்தான் என்பதை நீங்கள் நம்பித்தானாக வேண்டும்.
அவனோடு கூட முப்பது ஆண்டுகளாகச் சுற்றிக்கொண்டிருந்தேன் என்ற முறையில். அவனோடு கூட ஒரே அறையில் அவன் போகுமிடமெங்கும் அவனோடு கூடச் சென்று திரும்பியவன் என்ற முறையில் நான் கூறுவதை நீங்கள் நம்பித்தானாக வேண்டும்.
அவன் கரங்களுக்கு நான் அகப்பட்டதே ஒரு சுவையான அனுபவம் தான். இங்கிருந்து சுமார் 5கிலோ மீட்டர்கள் சென்றால் அழகான ஒரு ஆற்றங்கரையை நீங்கள் அடையலாம். காவியங்களில் சொல்லப்பட்ட கங்கையையும் காவிரியையும் இன்னபிற நதிகளையும் எண்ணிக் கொண்டு அங்கே நீங்கள் சென்றீர்களென்றால் நீங்கள் ஏமாறுவது திண்ணமே. ஆற்றின் கரையையும் ஆற்றையும் நீங்கள் வேற்றுமைப் படுத்திப் பார்ப்பதே உங்களுக்குச் சிரமம் தான். என்றோ ஓடியத் தண்ணீர்களின் தடங்களை வைத்து இன்னும் ஆறு என்றே மக்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
வெறும் மணல் ஓடிக் கொண்டிருந்த ஆற்றை மணலாறு என்றுதான் அழைத்துக் கொண்டிருந்தேன். மணல் முழுதும் கொள்ளையடிக்கப் பட்டுவிட மறுவில்லா முகம் கொண்ட இளமங்கையின் கன்னம் போல் வழவழப்பாகக் காட்சியளித்த மணலாறு, அம்மை கண்ட சுருக்கம் விழுந்த கன்னம் குழிவிழுந்த பழங்கிழவியின் முகமாய் விகாரம் காட்டியது. இப்போது அதைப் பார்ப்பதென்ன மனதால் நினைப்பது கூடக்கிடையாது.
அத்தகைய ஒரு ஆற்றங்கரையில் ஏதோ ஒரு மரத்தில் எப்போதோ வந்தமர்ந்த ஒரு பறவையின் தயவால் விழுந்த பலாக் கொட்டையிலிருந்து முளைத்து வளர்ந்தச் செடியானது பெருமரமாகிப் பருத்து நீண்டிருந்தது. மணலாற்றின் மகிமையால் சுற்றியிருந்த அனைத்துச் செடி கொடிகள் முதல் பெருமரங்கள் வரை வாடி வதங்கிக் கொண்டிருக்க இந்த மரம் மட்டும் தளைத்துச் செழித்து அடிமுதல் நுனிவரை பெருங்காய்களாகக் காய்த்துத் தொங்கிக் கொண்டிருந்தற்குக் காரணம் கடவுள் என்றோ இயற்கை என்றோ ஈசன் என்றோ அல்லது அந்த மங்கிக் கிடக்கும் மணலாறு என்றோ எந்தப் பெயர் வேண்டுமென்றாலும் நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் அதைக் கண்டுபிடிக்கும் அளவிற்கு நான் எந்தப் பல்கலைக் கழகத்திலும் சென்று படித்துப் பட்டம் வாங்கவில்லை.
பல்கலைக் கழகத்தைப் பற்றி எனக்கு எப்படித் தெரியும் என்று கேட்கிறீர்களா? அதை எனக்குச் சொன்னவன் அந்தக் காற்றுதான். அவன் மட்டும் அன்று வரவில்லை என்றால் நான் இந்நிலைக்கு ஆளாயிருக்க மாட்டேன். அது என்ன கதை என்று கேட்கிறீர்களா? அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறேனே...
உங்கள் பார்வைக்கு உருளையாயிருக்கும் என்னைப் பார்க்கும் பலரும் முகம் சுளிக்கலாம். உடல்முழுதும் பலவித வர்ணங்கள் கொட்டிக் கொட்டி இயல்பான என் தோல் முழுவதும் மறைக்கப்பட்டு விட்டது. பல வித வர்ணங்களும் ஒழுங்கின்றிச் சிதறிக் கிடப்பதால் இந்த பூமியின் அமைப்பைப் போன்ற ஒழுங்கற்ற ஒரு ஒழுங்கு என் உடலை ஊன்றிக் கவனிப்பவர்களுக்குத் தெரியும்.
ஒழுங்கற்ற ஒழுங்கு என்றதும் நினைவிற்கு வருகிறது. இந்த உலகை ஒழுங்கற்ற ஒழுங்காக்கியவன் இயற்கை என்று சிலர் சொல்கின்றனர் இறைவன் என்று பலர் சொல்கின்றனர். பூமியை ஒழுங்கற்ற ஒழுங்கிற்குள்ளாக்கியது இயற்கையோ இறையோ எனக்கு இன்றுவரைத் தெரிந்திருக்கவில்லை என்றாலும் என்னை இத்தகைய ஒரு ஒழுங்கற்ற ஒழுங்கு நிலைக்கு ஆளாக்கியவனை எனக்கு நன்றாய்த் தெரியும். அவன் ஒரு சித்திரக்காரன்.
ஓவியன் என அழகான ஒரு தமிழ்ச்சொல் இருக்க சித்திரக்காரன் என்று சொல்கிறேனே என நீங்கள் கோபம் கொள்ளலாம் அல்லது ஆச்சரியப் படலாம். சிலர் அதைப்பற்றிக் கவலைப்படாமலே கூட இருக்கலாம். அருவி என்ற அழகானத் தமிழ்ப்பெயரை நீர்வீழ்ச்சி என்று ஆங்கிலப்படுத்தி அழைப்பதையும் இதையும் ஒன்றாக எண்ணிவிடக் கூடாது என்பதற்காகவே உங்களிடம் இதைச் சொல்கிறேன்.
அவன் ஒரு ஓவியன் மட்டுமல்ல பல விசித்திரங்கள் நிறைந்தவன். விசித்திரமான பல ஓவியங்களுக்குச் சொந்தக்காரன். ஏன் அவனும் அவன் வாழ்க்கையும் கூட விசித்திரமானவையே. விசித்திரமான ஒரு ஓவியனை நான் விசித்திரக்காரன் என அழைக்க ஆரம்பித்து அதுவே சித்திரக்காரனாக மருவிவிட்டது என்று நான் சொல்வதை நம்புவதும் நம்பாமல் போவதும் உங்கள் விருப்பம்.
என்னைக் கைக் கொண்டிருந்த சி்த்திரக்காரனின் வாழ்வும் அவன் வரையும் சிக்கலான சித்திரம் போன்றே சிக்கலாயிருந்தது. ஒரு சிக்கலான மனிதன் தன் சிக்கலான வாழ்க்கையை மிக எளிதாக எளிமையாக வாழ்ந்தான் என்பதை நீங்கள் நம்பித்தானாக வேண்டும்.
அவனோடு கூட முப்பது ஆண்டுகளாகச் சுற்றிக்கொண்டிருந்தேன் என்ற முறையில். அவனோடு கூட ஒரே அறையில் அவன் போகுமிடமெங்கும் அவனோடு கூடச் சென்று திரும்பியவன் என்ற முறையில் நான் கூறுவதை நீங்கள் நம்பித்தானாக வேண்டும்.
அவன் கரங்களுக்கு நான் அகப்பட்டதே ஒரு சுவையான அனுபவம் தான். இங்கிருந்து சுமார் 5கிலோ மீட்டர்கள் சென்றால் அழகான ஒரு ஆற்றங்கரையை நீங்கள் அடையலாம். காவியங்களில் சொல்லப்பட்ட கங்கையையும் காவிரியையும் இன்னபிற நதிகளையும் எண்ணிக் கொண்டு அங்கே நீங்கள் சென்றீர்களென்றால் நீங்கள் ஏமாறுவது திண்ணமே. ஆற்றின் கரையையும் ஆற்றையும் நீங்கள் வேற்றுமைப் படுத்திப் பார்ப்பதே உங்களுக்குச் சிரமம் தான். என்றோ ஓடியத் தண்ணீர்களின் தடங்களை வைத்து இன்னும் ஆறு என்றே மக்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
வெறும் மணல் ஓடிக் கொண்டிருந்த ஆற்றை மணலாறு என்றுதான் அழைத்துக் கொண்டிருந்தேன். மணல் முழுதும் கொள்ளையடிக்கப் பட்டுவிட மறுவில்லா முகம் கொண்ட இளமங்கையின் கன்னம் போல் வழவழப்பாகக் காட்சியளித்த மணலாறு, அம்மை கண்ட சுருக்கம் விழுந்த கன்னம் குழிவிழுந்த பழங்கிழவியின் முகமாய் விகாரம் காட்டியது. இப்போது அதைப் பார்ப்பதென்ன மனதால் நினைப்பது கூடக்கிடையாது.
அத்தகைய ஒரு ஆற்றங்கரையில் ஏதோ ஒரு மரத்தில் எப்போதோ வந்தமர்ந்த ஒரு பறவையின் தயவால் விழுந்த பலாக் கொட்டையிலிருந்து முளைத்து வளர்ந்தச் செடியானது பெருமரமாகிப் பருத்து நீண்டிருந்தது. மணலாற்றின் மகிமையால் சுற்றியிருந்த அனைத்துச் செடி கொடிகள் முதல் பெருமரங்கள் வரை வாடி வதங்கிக் கொண்டிருக்க இந்த மரம் மட்டும் தளைத்துச் செழித்து அடிமுதல் நுனிவரை பெருங்காய்களாகக் காய்த்துத் தொங்கிக் கொண்டிருந்தற்குக் காரணம் கடவுள் என்றோ இயற்கை என்றோ ஈசன் என்றோ அல்லது அந்த மங்கிக் கிடக்கும் மணலாறு என்றோ எந்தப் பெயர் வேண்டுமென்றாலும் நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் அதைக் கண்டுபிடிக்கும் அளவிற்கு நான் எந்தப் பல்கலைக் கழகத்திலும் சென்று படித்துப் பட்டம் வாங்கவில்லை.
பல்கலைக் கழகத்தைப் பற்றி எனக்கு எப்படித் தெரியும் என்று கேட்கிறீர்களா? அதை எனக்குச் சொன்னவன் அந்தக் காற்றுதான். அவன் மட்டும் அன்று வரவில்லை என்றால் நான் இந்நிலைக்கு ஆளாயிருக்க மாட்டேன். அது என்ன கதை என்று கேட்கிறீர்களா? அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறேனே...