கலாசுரன்
16-05-2011, 08:58 AM
*
எப்பொழுதும் இல்லை எனினும்
உள் சென்று வெளிவர அவைகளில் ஒன்றாய்
உருமாறிச் செல்கிறேன்
சில மௌனங்களுடன்..
ஏன் என்று உள்ளே வந்து பாருங்கள்..!
சுவரின் கீழ் மூலையோரத்து
வெடிப்புகளில் மழலைகளாய்
தூங்கிக்கொண்டிருக்கும் தூசிகள்..!
அவ்வப்போது
என் காலணிகள்
சுவருக்கு பரிசளித்த
மதிப்பற்ற ஓவியங்களாகும்
சில அழுக்குக் கறைகள்..!
கூரையில் ஆங்காங்கே
ஊசலாட்டும் காற்றுக்கு
இசையமைத்தபடி
நடனமாடும் ஒட்டடைத் தொங்கல்கள்..!
அதோ.....
தண்ணீர்ப் பானைமேல்
நான் பருகி முத்தமிட்டு வைத்தபின்
அடுத்த முத்தத்திற்கு
தலை கீழாய் தவம் புரியும்
வெள்ளிநிற கோப்பை..!
தூசிகளை செல்லமாய்
வருடிய கழைப்புடன்
இன்னொரு மூலையில்
நின்றபடி தூங்குகிறான் துடைப்பான்..!
ஒருவித வெட்கத்துடன்
முகம் மறைத்தபடி
குப்புற கிடக்கும்
என்னருமைப் பேனாக்கள்..!
தோரணங்களாய் தொங்கியபடி
ஒரு செவ்வகப் பந்தலிடும்
சற்றும் தூசி தட்டாத நினைவுகளுடன்
என் மேஜை விரிப்பு..!
என் கவிதைகளை
மௌனமாய் வாங்கிவிட்டு
அறை எங்கும் சிதறிச் சென்று
என்னைப் பார்த்தும் பார்க்காததுபோல்
நடித்துக்கொள்ளும் தூசிப் போர்வை அணிந்த
சில காகிதங்கள்..!
இவை அனைத்தும் சரளமாய் நாம் காண
இவைகளின் நிழல்கள் ஏன் நடுங்குகின்றன..?
பீடத்தின் மேலிருக்கும்
ஒற்றைத்திரி விளக்கின் சுடர்
காற்றில் உலைகிறது
அனைத்தின் நிழல்களையும் நடுக்கியவாறு..!
இருள் சூழக்கூடும்...!
தடுத்திட ஆவேசமாய் ஓடிச்சென்றேன்..
என் ஓட்டம் முழுமையடையும் முன்
எங்கும் இருள், ஒருவித புகை மணம்..
காண்பிக்க ஏராளம் இருக்கிறது
எங்கேயும் போய் முட்டிக்கொள்ளாது
விளக்கு விழிக்கும் வரை அங்கேயே இருங்கள்..
இப்போது
வத்திப்பெட்டி தேடிக்கொண்டிருக்கிறேன்..!
*
***
கலாசுரன்
எப்பொழுதும் இல்லை எனினும்
உள் சென்று வெளிவர அவைகளில் ஒன்றாய்
உருமாறிச் செல்கிறேன்
சில மௌனங்களுடன்..
ஏன் என்று உள்ளே வந்து பாருங்கள்..!
சுவரின் கீழ் மூலையோரத்து
வெடிப்புகளில் மழலைகளாய்
தூங்கிக்கொண்டிருக்கும் தூசிகள்..!
அவ்வப்போது
என் காலணிகள்
சுவருக்கு பரிசளித்த
மதிப்பற்ற ஓவியங்களாகும்
சில அழுக்குக் கறைகள்..!
கூரையில் ஆங்காங்கே
ஊசலாட்டும் காற்றுக்கு
இசையமைத்தபடி
நடனமாடும் ஒட்டடைத் தொங்கல்கள்..!
அதோ.....
தண்ணீர்ப் பானைமேல்
நான் பருகி முத்தமிட்டு வைத்தபின்
அடுத்த முத்தத்திற்கு
தலை கீழாய் தவம் புரியும்
வெள்ளிநிற கோப்பை..!
தூசிகளை செல்லமாய்
வருடிய கழைப்புடன்
இன்னொரு மூலையில்
நின்றபடி தூங்குகிறான் துடைப்பான்..!
ஒருவித வெட்கத்துடன்
முகம் மறைத்தபடி
குப்புற கிடக்கும்
என்னருமைப் பேனாக்கள்..!
தோரணங்களாய் தொங்கியபடி
ஒரு செவ்வகப் பந்தலிடும்
சற்றும் தூசி தட்டாத நினைவுகளுடன்
என் மேஜை விரிப்பு..!
என் கவிதைகளை
மௌனமாய் வாங்கிவிட்டு
அறை எங்கும் சிதறிச் சென்று
என்னைப் பார்த்தும் பார்க்காததுபோல்
நடித்துக்கொள்ளும் தூசிப் போர்வை அணிந்த
சில காகிதங்கள்..!
இவை அனைத்தும் சரளமாய் நாம் காண
இவைகளின் நிழல்கள் ஏன் நடுங்குகின்றன..?
பீடத்தின் மேலிருக்கும்
ஒற்றைத்திரி விளக்கின் சுடர்
காற்றில் உலைகிறது
அனைத்தின் நிழல்களையும் நடுக்கியவாறு..!
இருள் சூழக்கூடும்...!
தடுத்திட ஆவேசமாய் ஓடிச்சென்றேன்..
என் ஓட்டம் முழுமையடையும் முன்
எங்கும் இருள், ஒருவித புகை மணம்..
காண்பிக்க ஏராளம் இருக்கிறது
எங்கேயும் போய் முட்டிக்கொள்ளாது
விளக்கு விழிக்கும் வரை அங்கேயே இருங்கள்..
இப்போது
வத்திப்பெட்டி தேடிக்கொண்டிருக்கிறேன்..!
*
***
கலாசுரன்