View Full Version : அறிவில்லாத ஆர்ம்ஸ்ட்ராங்
M.Jagadeesan
07-05-2011, 02:19 PM
நிலவைப் பழிக்கும் அழகுமுகம் கொண்டவள்
என் காதலி!
இன்று ஆர்ம்ஸ்ட்ராங் நிலவுக்குச் சென்று
அங்கிருந்து பூமியைப் பார்த்தால்
நிச்சயம் எண்ணுவான்
பூமியிலேயே நிலவு இருக்க வீணாக
ஏன் இங்கு வந்தோம் என்று!!
நிலாமுற்றத்தில் நான் எழுதிய கவிதை.
Nivas.T
07-05-2011, 02:27 PM
ஆஹா அற்ப்புதம் போங்க
எப்டித்தான் உங்களுக்கு தோணுதோ :D
M.Jagadeesan
07-05-2011, 02:49 PM
நன்றி நிவாஸ்!
அக்னி
07-05-2011, 08:09 PM
பூமியிற் பொதிந்திருக்கும்
நிலவுகள் முழுவைதையும்
ஒருங்கே காணச் சென்ற
ஆர்ம்ஸ்ட்ராங்
புத்திசாலிதான்...
அதைவிட,
அதிஸ்டசாலியே...
நிலவு சென்று நிலவு பார்த்த கவிதை
மனதில் குளிராய் ஒளிர்கின்றது...
M.Jagadeesan
07-05-2011, 11:16 PM
அக்னிக்கு நன்றி!
meera
08-05-2011, 01:29 AM
அறிவில்லாத ஆம்ஸ்ட்ராங் கவிதையின் தலைப்பு கண்டு ஆம்ஸ்ட்ராங் என்ன அபத்தம் செய்தார் என்று அறிந்து கொள்ளும் ஆவலில் வந்தேன். உங்கள் கவிதை கண்ட பின் அவர் அபத்தம் தான் செய்துவிட்டார் என்பது புரிகிறது.
கவிதை அருமை ஐயா..
M.Jagadeesan
08-05-2011, 01:34 AM
நன்றி மீரா அவர்களே!
பாலகன்
08-05-2011, 09:18 AM
நான் நம்ம கொளத்தூர் எம் எல் ஏவை பற்றி சொல்றீங்களோன்னு வந்து பார்த்தால் இவ்வளவு சிறிய அழகிய கவிதை வரிகளை காணநேர்ந்தது. பாராட்டுக்கள் ஜெகதீசன் சார். :) அவர் நிலவு வரை சென்றதால் தான் பூமி அழகு என்று கண்டுணர்ந்தார் சரிதானே?
M.Jagadeesan
08-05-2011, 09:33 AM
தங்கள் பாராட்டுக்கு நன்றி மஹாபிரபு!
சிவா.ஜி
08-05-2011, 04:18 PM
களங்கமில்லா நிலவை விட்டு....களங்கமுள்ள நிலவைத்தேடி ஏன் வந்தோமென ஆம்ஸ்ட்ராங் கவலைப்படுவான்.
நல்லக் கற்பனை. வாழ்த்துக்கள் ஜகதீசன்.
M.Jagadeesan
09-05-2011, 12:08 AM
பாராட்டுகளுக்கு நன்றி சிவா.ஜி
கீதம்
09-05-2011, 02:23 AM
அன்று மொட்டைமாடியில் நின்று
இன்னொரு நிலவா என்று
அக்கம்பக்கத்தோரை விழிவிரியச்செய்தாள்,
இன்று ஆம்ஸ்ட்ராங்கையே
அறிவிலி ஆக்கிவிட்டாளே...
அதி பாக்கியசாலிதான் அவள்,
கவிஞரின் காதலி அல்லவா?
வர்ணனைக்குப் பஞ்சம் வருமா, என்ன?
கவிதை அழகு. பாராட்டுகள் ஐயா.
M.Jagadeesan
10-05-2011, 04:55 AM
பாராட்டுகளுக்கு நன்றி கீதம்!
அக்னி
10-05-2011, 11:32 AM
அன்று மொட்டைமாடியில் நின்று
இன்னொரு நிலவா என்று
அக்கம்பக்கத்தோரை விழிவிரியச்செய்தாள்,
மொட்டை மாடியில் அழகி நின்றால்
நிலவென்று
விரியும் விழிகள்,
மாடியில் மொட்டை அழகன் நின்றால்
மட்டும் கூசுவது..,
ஏன்... ஏன்... ஏன்... :confused:
கீதம்
10-05-2011, 11:50 AM
மொட்டை மாடியில் அழகி நின்றால்
நிலவென்று
விரியும் விழிகள்,
மாடியில் மொட்டை அழகன் நின்றால்
மட்டும் கூசுவது..,
ஏன்... ஏன்... ஏன்... :confused:
அதீதப் பிரதிபலிப்பினால் இருக்கலாமோ?:)
தாமரை
10-06-2011, 06:49 AM
நிலாவிலிருந்து பார்த்தால்
தெரியும் நிலவு நீ..
ஆஹா அற்புதம் அற்புதம்
அவ்வளவு பிரம்மாண்டமா
அந்த
அம்மணி!!!:lachen001::lachen001::lachen001::lachen001:
நாஞ்சில் த.க.ஜெய்
10-06-2011, 07:35 AM
அற்புதமான கவிதை ..இப்புவிதனில் நிலவென்று பலவிருக்க கையில் எட்டாத தூரத்தில் எட்டிய நிலவொன்றை தேடி சென்ற அவன் நிலை அபத்தம் தான் ...
M.Jagadeesan
10-06-2011, 07:36 AM
கவிதைக்குப் பொய் அழகு என்று தாங்கள் கேள்விப்பட்டதில்லையா தாமரை அவர்களே!
govindh
10-06-2011, 08:54 AM
பூமியில் நிலவு....!
கவி நன்று.
பாராட்டுக்கள் ஐயா.
நிலவில் இருந்து பூமியை பார்த்தால், நிலவைக்காட்டிலும் பூமி 16 மடங்கு வெளிச்சமாய் இருக்குமாம், விஞ்ஞானம் சொன்னது..
காரணம் ஜெகதீசன் ஐயா சொன்னதாக இருக்குமோ, கோலநிலவுகளால் பூமி வெளிச்சமாக தெரிகிறதோ!!
வாழ்த்துக்கள் ஐயா...
M.Jagadeesan
10-06-2011, 09:18 AM
ஜெய், ஆதன், கோவிந்த் ஆகியோரின் பாராட்டுகளுக்கு நன்றி!
தாமரை
10-06-2011, 10:11 AM
கவிதைக்குப் பொய் அழகு என்று தாங்கள் கேள்விப்பட்டதில்லையா தாமரை அவர்களே!
நையாண்டி அதை விட அழகு என்பது தங்களுக்கும் தெரியுமல்லவா?
sarcharan
10-06-2011, 11:17 AM
மொட்டை மாடியில் அழகி நின்றால்
நிலவென்று
விரியும் விழிகள்,
மாடியில் மொட்டை அழகன் நின்றால்
மட்டும் கூசுவது..,
ஏன்... ஏன்... ஏன்... :confused:
அண்ணன் தலை சொட்டயோ?
அதீதப் பிரதிபலிப்பினால் இருக்கலாமோ?:)
:aetsch013: