p.suresh
26-04-2011, 02:09 PM
சிறுகதைகளை பொறுமையுடன் படிக்க கால அவகாசம் இல்லாதவர்களுக்காக முளைத்தது இந்த திடீர்க்கதை
இந்த கதைகளில் வரும் கதாப்பாத்திரங்களும், சம்பவங்களும் என் கற்பனையே
திகில் கதை
தலைப்பு:"இறுதிநாள்"
உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியாவும்,இலங்கையும் மோதிக் கொண்டிருந்தன.அவன் தன் வீட்டில் சோபாவில் அமர்ந்து நேரடி ஒளிப்பரப்பைப்
படப்படத்துக் கொண்டு பார்த்திருந்தான்.
"உங்க இதயம் ரொம்ப வீக்கா இருக்கு.tensionஏ ஆகக் கூடாது" என்று டாக்டர் சொன்னதை உதாசீனம் செய்தான்.
tvல் ஸ்லிங் பவுலர் மலிங்காவின் கையிலிருந்து அம்புபோல விடுப்பட்ட பந்து off stumpக்கு சற்றே விலகி விழுந்தபின், டெண்டுல்கரின் பேட்டில் முத்தமிட்டு நேராக
சங்ககாராவின் கையுறைக்குள் தஞ்சம் புகுந்தது.அரங்கமே நிசப்தம்.
அவனுக்கு கண்கள் இருள,நாக்கு வரள,விறுவிறுவென வேர்வை வியர்க்க, நெஞ்சுக்குள் "சுளீர்" என்று வலித்தது.
"டொக்....டொக்....டொக்....
யாரோ கதவைத் தட்டும் சத்தம்.
மிகவும் சிரமப்பட்டு நெஞ்சை அமுக்கியப்படி,
"யாரது.....?" என்றான்
"மரணம்" என்றது குரல்.
க்ரைம் கதை
தலைப்பு:"அனுதாப அலை"
வங்கக்கடலே இடம் பெயர்ந்ததோ என்று எண்ணும் அளவுக்கு மக்கள் வெள்ளம்.கூட்டம் அலையென ஆர்ப்பரித்தது.இறகுகள் கட்சித்தலைவன் காட்டுயானைப்
போல மைக்கின் முன் பிளிரிக்கொண்டிருந்தான்.
"தமிழ் என் உயிர்மூச்சு.தமிழ் மண்ணே என் சுவாசம்.தமிழர்க்காக,தமிழுக்காக என் உயிரையும் தியாகம் செய்வேன்" என்று கூறியபடியே யாரும் சற்றும்
எதிர்ப்பார்க்காத போது தன் இடுப்பில் இருந்து கத்தியை எடுத்து தன் வயிற்றுக்குள் பாய்ச்சினான்.கூட்டமே அதிர்ந்தது.
மேடைக்கு கீழே,முன்பே சொல்லி வைத்தப்படி மருத்துவர்க்குழு தயார்நிலையில் இருந்தது.
தேர்தல் முடிவுகள்
இறகுகள் கட்சி அமோக வெற்றி
நகைச்சுவைக் கதை
தலைப்பு:"நான் ஒரு தடவ சொன்னா....."
தேர்தல் நாள் ஏப்ரல் 13, பூத் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தது. மக்கள் வரிசையாக ஒட்டளிக்க காத்திருந்தனர்.
திடீரென்று அப்போது உச்சநடிகர் விறுவிறுவென பூத்துக்குள் நுழைந்தார்.
"தள்ளுங்கப்பா..." போலீஸ் கெடுபுடி. அவருக்கு அனைவரும் வழிவிட்டனர்.
வீடியோக்கள் படம்பிடிக்க, கேமராக்கள் மின்ன அனைவருக்கும் போஸ் கொடுத்தபின்
அவர் ஒட்டு மிஷினில் இரட்டை இலைப் பொத்தானை
ஒருமுறை அமுக்க நூறு ஓட்டுக்கள் விழுந்தன
தேர்தல் அதிகாரி மயங்கி விழுந்தார்.
இந்த கதைகளில் வரும் கதாப்பாத்திரங்களும், சம்பவங்களும் என் கற்பனையே
திகில் கதை
தலைப்பு:"இறுதிநாள்"
உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியாவும்,இலங்கையும் மோதிக் கொண்டிருந்தன.அவன் தன் வீட்டில் சோபாவில் அமர்ந்து நேரடி ஒளிப்பரப்பைப்
படப்படத்துக் கொண்டு பார்த்திருந்தான்.
"உங்க இதயம் ரொம்ப வீக்கா இருக்கு.tensionஏ ஆகக் கூடாது" என்று டாக்டர் சொன்னதை உதாசீனம் செய்தான்.
tvல் ஸ்லிங் பவுலர் மலிங்காவின் கையிலிருந்து அம்புபோல விடுப்பட்ட பந்து off stumpக்கு சற்றே விலகி விழுந்தபின், டெண்டுல்கரின் பேட்டில் முத்தமிட்டு நேராக
சங்ககாராவின் கையுறைக்குள் தஞ்சம் புகுந்தது.அரங்கமே நிசப்தம்.
அவனுக்கு கண்கள் இருள,நாக்கு வரள,விறுவிறுவென வேர்வை வியர்க்க, நெஞ்சுக்குள் "சுளீர்" என்று வலித்தது.
"டொக்....டொக்....டொக்....
யாரோ கதவைத் தட்டும் சத்தம்.
மிகவும் சிரமப்பட்டு நெஞ்சை அமுக்கியப்படி,
"யாரது.....?" என்றான்
"மரணம்" என்றது குரல்.
க்ரைம் கதை
தலைப்பு:"அனுதாப அலை"
வங்கக்கடலே இடம் பெயர்ந்ததோ என்று எண்ணும் அளவுக்கு மக்கள் வெள்ளம்.கூட்டம் அலையென ஆர்ப்பரித்தது.இறகுகள் கட்சித்தலைவன் காட்டுயானைப்
போல மைக்கின் முன் பிளிரிக்கொண்டிருந்தான்.
"தமிழ் என் உயிர்மூச்சு.தமிழ் மண்ணே என் சுவாசம்.தமிழர்க்காக,தமிழுக்காக என் உயிரையும் தியாகம் செய்வேன்" என்று கூறியபடியே யாரும் சற்றும்
எதிர்ப்பார்க்காத போது தன் இடுப்பில் இருந்து கத்தியை எடுத்து தன் வயிற்றுக்குள் பாய்ச்சினான்.கூட்டமே அதிர்ந்தது.
மேடைக்கு கீழே,முன்பே சொல்லி வைத்தப்படி மருத்துவர்க்குழு தயார்நிலையில் இருந்தது.
தேர்தல் முடிவுகள்
இறகுகள் கட்சி அமோக வெற்றி
நகைச்சுவைக் கதை
தலைப்பு:"நான் ஒரு தடவ சொன்னா....."
தேர்தல் நாள் ஏப்ரல் 13, பூத் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தது. மக்கள் வரிசையாக ஒட்டளிக்க காத்திருந்தனர்.
திடீரென்று அப்போது உச்சநடிகர் விறுவிறுவென பூத்துக்குள் நுழைந்தார்.
"தள்ளுங்கப்பா..." போலீஸ் கெடுபுடி. அவருக்கு அனைவரும் வழிவிட்டனர்.
வீடியோக்கள் படம்பிடிக்க, கேமராக்கள் மின்ன அனைவருக்கும் போஸ் கொடுத்தபின்
அவர் ஒட்டு மிஷினில் இரட்டை இலைப் பொத்தானை
ஒருமுறை அமுக்க நூறு ஓட்டுக்கள் விழுந்தன
தேர்தல் அதிகாரி மயங்கி விழுந்தார்.