View Full Version : சித்திரையின் சித்திரங்கள்..!! - 2
பூமகள்
19-04-2011, 03:42 PM
*
அன்று..
வெயில்
அவர்களுக்காகக்
காத்திருந்தது..
அம்மா முந்தானையின்
காற்றாய் வீசும் மரத்தினடி
அவர்கள்..!!
இன்று..
வெயில்
அவர்களுக்காக
காத்திருந்தது..
தார்ச் சூடு தாங்காமல்
ப்ளாஸ்டிக் கூரையடி
அவர்கள்..!!
################
*
மழை
பிரசவிக்கும்
மேகம்..
மலடானது..
மரப் பஞ்சம்..!!
*
அமரன்
19-04-2011, 03:49 PM
மரத்தடி
தாயின்மடி
முதல் கவியடி
கோடைக் கும்மியடி!
கழுத்தே இல்லையாம்
எப்படி இருக்கும்
கூடு ஆரங்கள்!
எங்கும் முளைத்திருந்தன
கூடாரங்கள்!
ம்.... தினமும் பிக்னிக்!
Nivas.T
19-04-2011, 03:58 PM
மரங்களை வெட்டிவிட்டு
மழைக்காக காத்திருப்பவர்களை
என்னவென்று சொல்வது?
கருத்து கவிதை
அழகுடன்
பூமகள்
19-04-2011, 04:09 PM
கழுத்தே இல்லையாம்
எப்படி இருக்கும்
கூடு ஆரங்கள்!
எங்கும் முளைத்திருந்தன
கூடாரங்கள்!
ம்.... தினமும் பிக்னிக்!
*
கழுத்தறுந்த மரக் கொம்பு
தவித்து நிற்கும்
கூடிழந்த பறவைகள்..
எங்கும் கூடாரங்கள்..
குருவிகளுக்கெங்கே
வாழ்வாதாரங்கள்??!!
*
கீதம்
20-04-2011, 12:58 AM
*
கழுத்தறுந்த மரக் கொம்பு
தவித்து நிற்கும்
கூடிழந்த பறவைகள்..
எங்கும் கூடாரங்கள்..
குருவிகளுக்கெங்கே
வாழ்வாதாரங்கள்??!!
*
மனமறுக்கும் நிதர்சனம்!
கூடிழந்த பறவைகளாய்
மனம் அரற்றச் செய்யும்
மகத்தான வரிகள்!
பாராட்டுகள் பூமகள்.
ஜானகி
20-04-2011, 02:44 AM
சித்திரை வெய்யிலின் கொடுமையைவிடச் சுடுகிறது உண்மைகள்....!
இளைய தலைமுறையின் விழிப்பால், உலகம் மீண்டும் துளிர்க்கட்டும், பூக்கட்டும்.....காத்திருப்போம்...!
அருமையான படைப்பு பாமகளே...
அமரனின் கூட்டிசை இணைந்த அழகு..
வெயிலூராம் வேலூரில் மரம் நட்டு வெப்பம் தணித்ததாமே எக்ஸ்னோரா..
பாமகளின் பாடல் கேட்டு பரவாதா இப்பழக்கம் ஊர் ஊரா?
krishna1988
20-04-2011, 10:17 PM
மழை
பிரசவிக்கும்
மேகம்..
மலடானது..
மரப் பஞ்சம்..!! மருத்துப்போன பஞ்சம் !!
பூமகள்
21-04-2011, 04:17 AM
*
இளஞ்செடி பதியனாம்
கார்தொடும் மரம்
இழந்தபின்..
மரக்கன்றுகள் நடவேனும்
நிலம் கொஞ்சம்
விடுவாரில்லை..
அக்னிச் சூட்டில்
காரையிட்டு காரும் விட்டு
நகரும் நரகமானது
நகரம்...
*
பனையோலை நொங்கும்..
பதமான பதநீரும்..
இளைப்பாற தென்னைநிழலும்..
விளையாட உண்டிவில்லும்..
இல்லாத கோடை..
நெஞ்செங்கும் நிறைக்கிறது
வெயிலினும் வெம்மை..!!
*
கலக்கல்ஸ் பூமகள்!! இரண்டாவது கவிதை நெத்தியடி அல்ல சுத்தியடி!!! அவ்வளவு பலம்!
@ அமரன்... சூப்பருங்க. இப்பல்லாம் மரத்தை நிர்வாணமாக்கி நிர்மூலமாக்கி ரசிக்கிறார்கள்!!
தொடருங்க தொடருங்க..
ஷீ-நிசி
21-04-2011, 01:12 PM
*
*
மழை
பிரசவிக்கும்
மேகம்..
மலடானது..
மரப் பஞ்சம்..!!
*
மரப் பஞ்சம் வார்த்தை புதுமை...
எனக்கு இதில் சிறு குழப்பம்..
பிரசவிக்காமலே இருந்திருந்தால் அதை மலடெனலாம்...
அவ்வபோது பிரசவித்த ஒன்று பிரசவிக்காமல் போனால்..
குடும்பக் கட்டுபாடோ?!!!
ஷீ-நிசி
21-04-2011, 01:13 PM
பனையோலை நொங்கும்..
பதமான பதநீரும்..
இளைப்பாற தென்னைநிழலும்..
விளையாட உண்டிவில்லும்..
இல்லாத கோடை..
நெஞ்செங்கும் நிறைக்கிறது
வெயிலினும் வெம்மை..!!
அட...ஆமாம்ல... இப்படி இருந்தா எப்படி இருக்கும்.... மனம் பேசியது..
அழகு!
குளிர்தேனாய் கவிதைகள்..
பாமகளுக்கு குளிர்வாழ்த்து!
நொங்கு நொங்கு என்று நொங்கிய பின் எஞ்சிய
நுங்குநீரை முதுகில் ஊற்றி வேர்க்குரு வேதனை தணித்த
இளங்கோடைக் காலங்கள் நினைவாடலில்..
Nycil - Not that nice!