சசிதரன்
16-04-2011, 04:30 PM
மொட்டைமாடி ரங்கோன்மல்லி மறைவில்
அந்த குட்டிகள் முதலில் இருந்தது.
மழை பெய்தால் நனையுமென
தாழ்வாரத்தில் எடுத்து விட்டான் அண்ணன்.
தினம் தினம் சோறு வைத்ததால்
அம்மாவோடு மிகவும் இணக்கமானது
பச்சைக்கண் கொண்ட தாய் பூனை.
கொஞ்சமாய் வளரத் தொடங்கிய குட்டிகள்
விளையாடும் அழகை பார்த்தே மாலைகள் கழிந்தது.
அவற்றின் ஒவ்வொரு சத்ததிற்கும்
அர்த்தங்கள் சொல்லிக் கொண்டிருப்பாள் அம்மா.
சமயங்களில் எனக்கும் கூட
அவை அம்மாவுடன் பேசுவதாகவே தோன்றும்.
எப்பொழுதும் மாலையில்
வீடு திரும்பிவிடும் தாய் பூனை
இன்றோடு கணக்கிட்டால்
ஆறு நாட்களாகிறது வீடு திரும்பி.
குட்டிகள் எப்பொழுதும் போல்
விளையாடிக் கொண்டிருக்கிறது.
அம்மா எப்பொழுதும் போல்
வேளைக்கு சோறு வைத்து
அதனோடு கொஞ்ச நேரம் பேசிவிட்டு
இரவானால் தாய் பூனையின் பச்சைக் கண்களை
நினைவுக் கொள்கிறாள்.
எனக்கு மட்டும் ஏனோ
அந்த பூனைக் குட்டிகளை எங்காவது
கொண்டு விட்டு விட தோன்றுகிறது.
அந்த குட்டிகள் முதலில் இருந்தது.
மழை பெய்தால் நனையுமென
தாழ்வாரத்தில் எடுத்து விட்டான் அண்ணன்.
தினம் தினம் சோறு வைத்ததால்
அம்மாவோடு மிகவும் இணக்கமானது
பச்சைக்கண் கொண்ட தாய் பூனை.
கொஞ்சமாய் வளரத் தொடங்கிய குட்டிகள்
விளையாடும் அழகை பார்த்தே மாலைகள் கழிந்தது.
அவற்றின் ஒவ்வொரு சத்ததிற்கும்
அர்த்தங்கள் சொல்லிக் கொண்டிருப்பாள் அம்மா.
சமயங்களில் எனக்கும் கூட
அவை அம்மாவுடன் பேசுவதாகவே தோன்றும்.
எப்பொழுதும் மாலையில்
வீடு திரும்பிவிடும் தாய் பூனை
இன்றோடு கணக்கிட்டால்
ஆறு நாட்களாகிறது வீடு திரும்பி.
குட்டிகள் எப்பொழுதும் போல்
விளையாடிக் கொண்டிருக்கிறது.
அம்மா எப்பொழுதும் போல்
வேளைக்கு சோறு வைத்து
அதனோடு கொஞ்ச நேரம் பேசிவிட்டு
இரவானால் தாய் பூனையின் பச்சைக் கண்களை
நினைவுக் கொள்கிறாள்.
எனக்கு மட்டும் ஏனோ
அந்த பூனைக் குட்டிகளை எங்காவது
கொண்டு விட்டு விட தோன்றுகிறது.