கார்த்தீ
15-04-2011, 06:24 PM
கண் முன்னே நிஜமாய்
கண்டவர்களை எல்லாம்
கனவில் நிழலாய்
மட்டுமே காண முடிகிறது
தாகத்திற்கு பானை நீராய்
இருக்க வேண்டியவர்கள்.... இன்று
தொட தொட தூரமாய் போகும்
கானல் நீராய் மட்டுமே.....
சுகமான நிஜங்கள்
சுமையான நினைவுகள் ஆகும் போது......
மறக்கின்ற சக்தி இல்லை எனில்
மாய்ந்து போகுமோ இந்த மானுடம்.......
அந்த நினைவுகள் சுகமாய் தோன்றுவது
கனவுகள் பூசும் சாயத்தால்.....
நிஜம் புரியும் போது சுமையாவது...
மனம் பட்ட காயத்தால்....
நிஜமாய் நடக்க வேண்டிய நிகழ்வுகளை
இறக்க செய்து நினைவுகளாக்கியது.....கடவுள் செய்த தந்திரம்.......
ஆனால் வலியாய் இருக்கும் நினைவுகளுக்கு
மருந்து போட்டு ஆற்றியது........ காலம் என்னும் மாய எந்திரம்....
கண்டவர்களை எல்லாம்
கனவில் நிழலாய்
மட்டுமே காண முடிகிறது
தாகத்திற்கு பானை நீராய்
இருக்க வேண்டியவர்கள்.... இன்று
தொட தொட தூரமாய் போகும்
கானல் நீராய் மட்டுமே.....
சுகமான நிஜங்கள்
சுமையான நினைவுகள் ஆகும் போது......
மறக்கின்ற சக்தி இல்லை எனில்
மாய்ந்து போகுமோ இந்த மானுடம்.......
அந்த நினைவுகள் சுகமாய் தோன்றுவது
கனவுகள் பூசும் சாயத்தால்.....
நிஜம் புரியும் போது சுமையாவது...
மனம் பட்ட காயத்தால்....
நிஜமாய் நடக்க வேண்டிய நிகழ்வுகளை
இறக்க செய்து நினைவுகளாக்கியது.....கடவுள் செய்த தந்திரம்.......
ஆனால் வலியாய் இருக்கும் நினைவுகளுக்கு
மருந்து போட்டு ஆற்றியது........ காலம் என்னும் மாய எந்திரம்....