PDA

View Full Version : என் செல்லமே ....



திவ்யா
15-04-2011, 04:37 AM
என் செல்லமே
ஏதாவது சொல்
என்று நீ கெட்கும் போதெல்லாம்
வார்த்தைகள் இன்றி தடுமாறுகிறேன்
என்ன செய்வது
என்னிடம் காதல் இருக்கும் அளவிற்கு
வார்த்தைகள் இல்லையே

இளசு
15-04-2011, 04:53 AM
பாராட்டுகள் திவ்யா அவர்களே..

காதல் இருந்தால் போதும் -

மௌனம், திக்குதல், உளறல்
கழுத்துத்தேமல், தெற்றுப்பல்...

எதுவும் அழகாகும்...
எதுவும் இரசிக்கப்படும்!

பிரேம்
15-04-2011, 05:16 AM
கவிதை அருமை..
ஓவரா கேள்வி கேட்டு மொக்க போடாதடா-ன்னு சொல்ல வர்றீங்க..:sprachlos020:

முரளிராஜா
15-04-2011, 05:16 AM
நீ வார்த்தையில்
தடுமாறுகிறாய்
நான் உன் பார்வையில்
தடுமாறுகிறேன்
நம் இருவரின் தடுமாற்றமும்
இதில் மட்டும் இருகட்டும்
நம் காதலின் முடிவில் வேண்டாம்
இந்த தடுமாற்றம்.

அருமையான காதல் கவிதை தந்த தோழி திவ்யாவுக்கு
என் பாராட்டுக்கள்

திவ்யா
15-04-2011, 05:25 AM
கவிதை அருமை..
ஓவரா கேள்வி கேட்டு மொக்க போடாதடா-ன்னு சொல்ல வர்றீங்க..:sprachlos020:

உங்களுக்கு புரியுது, ......... :)

திவ்யா
15-04-2011, 05:27 AM
நீ வார்த்தையில்
தடுமாறுகிறாய்
நான் உன் பார்வையில்
தடுமாறுகிறேன்
நம் இருவரின் தடுமாற்றமும்
இதில் மட்டும் இருகட்டும்
நம் காதலின் முடிவில் வேண்டாம்
இந்த தடுமாற்றம்.

அருமையான காதல் கவிதை தந்த தோழி திவ்யாவுக்கு
என் பாராட்டுக்கள்

பாராட்டுக்கு நன்றி :)

திவ்யா
15-04-2011, 05:28 AM
பாராட்டுகள் திவ்யா அவர்களே..

காதல் இருந்தால் போதும் -

மௌனம், திக்குதல், உளறல்
கழுத்துத்தேமல், தெற்றுப்பல்...

எதுவும் அழகாகும்...
எதுவும் இரசிக்கப்படும்!

பாராட்டுக்கு நன்றி :)

Nivas.T
15-04-2011, 08:46 AM
காதலில் நான் திளைக்கும் போதெல்லாம்
உன்னிடம் வார்த்தைகள் வற்றிப்போக்கிறது
நான் என்ன செய்வேன்?

கவிதை அழகுங்க திவ்யா

பாராட்டுக்கள்

sarcharan
15-04-2011, 12:03 PM
என் செல்லமே
ஏதாவது சொல்
என்று நீ கெட்கும் போதெல்லாம்
வார்த்தைகள் இன்றி தடுமாறுகிறேன்
என்ன செய்வது
என்னிடம் காதல் இருக்கும் அளவிற்கு
வார்த்தைகள் இல்லையே

பேருந்து நெரிசலில் பயணம் பல முறை பயணம் செய்துள்ளீர்கள் போல...


தள்ளி இருந்தால்தான்
முழுஉருவம் கிடைக்கிறது

தள்ளிப்போக ஒரு மனதுவேண்டும்



:) :)

உமாமீனா
16-04-2011, 09:54 AM
:aktion033:..........:aktion033:..............:4_1_8:..............:icon_give_rose:

முரளிராஜா
16-04-2011, 10:27 AM
:aktion033:..........:aktion033:..............:4_1_8:..............:icon_give_rose:
என்ன மீண்டும் தமிழ் தட்டச்சு வேலை செய்யவில்லையா?:D:D:D

lenram80
10-05-2011, 12:46 PM
நான் ரசிக்கும் ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு பக்கம் விரிவிரை எழுத நினைக்கிறேன். ஆனால் என்ன செய்வது? வார்த்தை இருக்கும் அளவுக்கு நேரம் இருப்பதில்லை. :-)

தொடர்ந்து அமைதியாகவே இருங்கள் அவரின் முன்!
அப்போது தான் அழகான கவிதைகள் எங்களின் முன்!

வாழ்த்துகள்!