ராஜாராம்
03-04-2011, 07:51 AM
அன்றாட வாழ்வில்
பிரச்சனைகளை எதிர்கொள்ளும்...
இருமனிதர்கள்...
மற்றும்
வெவ்வேறு கருத்துக்களைக்
கொண்ட...
இரு மனிதர்கள்...
ஒருவரை ஒருவர் சந்தித்தால்..
என்ன நிகழும்?
அவர்களுக்குள் உரையாடல்
எப்படி இருக்கும்?
அவ்விருவரின் உரையாடலுக்கும்
நடுவராக....
ஒரு கதாபாத்திரமும்
கலந்துரையாடல் செய்தால்....
அந்தசம்பவம் எப்படியிருக்கும்?..
இப்படிப்பட்ட கருவைக்கொண்டு
பட்டிமன்றம் போல்
உருவாக்கப்பட்டதே,...
இந்த திரி.
யாரையும் புண்படுத்தவேண்டுமென்றோ...
இகழ்ச்சி செய்யவேண்டுமென்றோ
இந்த பட்டிமன்ற படைப்பு..
பதிவுசெய்யப்படவில்லை...
சிந்திக்க வைக்கவும்..
சிரிக்கவைக்கவும்....
உருவாக்கப்பட்ட
திரி இது.
இத்திரியின் ஒவ்வொரு பாகத்திலும்
மாறுபட்ட
தலைப்புகளில் உரையாடல்கள்
இடம்பெறும்.
அது
ஒருதலைவரின் முன் நடைபெறும்...
இத்திரிக்கு தலைப்பை...
"பட்டிமன்றம்",
என்று தந்துள்ளேன்....
*****************************************************************************
பட்டிமன்றம்:1
______________________
இன்றைய பட்டிமன்றத்தின்......
உரையாடல் தலைப்பு....
"குடும்ப பிரச்சனைகளுக்கு காரணம்...
"மாமியாரா?மருமகளா?",...
மாமியார்கள்தான் காராணம் என்று அங்கவையும்...
மருமகள்கள்தான் காரணம் என்று சங்கவையும்...
உரையாடல்செய்ய
நடுவராக,
மகாகவி பாரதியார்..
அவர்கள் இடம்பெறுகிறார்....
______________________
அங்கவை:-வணக்கம் நடுவரே...
பாரதியார்:-வணக்கம் அங்கவையே..
சங்கவை:-வணக்கம் நடுவரே,,,'
பாரதி:-வணக்கம் சங்கவையே....
வணக்கம் கூறிய பாரதியார்....
"ம்ம்,,,ஆரம்பியுங்கள் உங்கள் கச்சேரியை...
மன்றம் களைக் கட்டட்டும்,...",
என்றதும்..
சங்கவை:-பிரச்சனைகளுக்கு முழுக்காரணமும்
மருமகள்கள்தான் நடுவர் அவர்களே....
பாரதி:-எதைவைத்து அப்படி சொல்லுகிறீர்கள்?
சங்கவை:-எனக்கு வயசு ஆகிடுச்சி...
என் முகமெல்லாம் சுறுக்கம் விழுந்துப்போச்சு
என்று என்மருமகளிடம் சொன்னேன்.
அதற்கு என் மருகள் என்னசொன்னாள்
தெரியுமா?",.
பாரதி:-என்ன சொன்னாள்?
சங்கவை:-கவலைபடாதீங்க அத்தை.
ஐயன்பாக்ஸை வைத்து
உங்க மூஞ்சியிலே நாலுஇழுப்பு இழுக்கிறேன்..
சுருக்கமெல்லாம் போயிடும்னு சொன்னாள்..
என்ன திமிறு இருக்கும் அவளுக்கு..",
பாரதி:"ஆஹா..!!!,
ஆரம்பமே ரணகளமா இருக்கே,...
ஷ்ஷ்ஷஷப்ப்ப்ப்பாபா....".
அங்கவை:-"பிரச்சனைக்கு முழுக்காரணம்
மாமியார்கள்தான் காரணம் நடுவரே.".
பாரதி:-"எதைவைத்தும்மா அப்படி சொல்றே?".
அங்கவை:-என் மாமியாரு என்னைய
எதாவது சொல்லி திட்டிக்கிட்டே இருப்பாங்க,..
நான் சும்மா இருந்தாக்கூட வலுக்கட்டாயமாக
வந்து
சண்டைபோடுவாங்க.
அவுங்க போடுகிற சண்டை டீ.வீ சீரியல்போல
இருக்கும்..நடுவரே."
பாரதி:-டீ.வீ சீரியல்மாதிரி இருக்குமா?
எதனால் அப்படி சொல்றீங்க?",.,
அங்கவை:-ஒவ்வொரு நாளும் சண்டையை
ஆரம்பிக்கும்போது,,,,,
இதுவரைன்னு சொல்லி,.
முதால்நாள் நடந்த சண்டையை
கொஞ்சம் போட்டுக்காடிட்டு...
இனின்னு சொல்லி...
அன்றைய சண்டையை
ஆரம்பிப்பாங்க..."
பாரதி:-அம்மாடி அர்த்தம்முள்ள வாதங்களை
முன் வைங்கம்மா..",
சங்கவை:-கல்யாணம் ஆனதும் தனிக்குடித்தனம்
போயிட்டான் என் பையன்.
வருகிற மருமகள்களில் முக்கால்வாசிப்பேரு
இதைத்தான் செய்யிறாளூங்க..",
அங்கவை:-தனிக்குடித்தனம் போகிற
அளவுக்கு கொண்டுப்போறதே
மாமியார்கள்தான்..
கல்யாணம் ஆனப்புதுசுல
ஆஹா ஓஹோன்னு
மருமகளை புகழ்வாங்க.பிறகு போகபோக
குறைகளா சொல்லுவாங்க.",
சங்கவை;-நல்ல விஷயங்களை சொல்லினால்
அது குறைசொல்லுவதுப்போல
உங்களைப்போன்ற
மருமகள்கள் எடுத்துக்கிறாங்க..
அங்கவை:-வரதட்சணைகளை வாங்க
தூண்டுதலாக இருப்பதே
மாமியார்கள்தான்..
எத்தனையோ பெண்கள்
வரதட்சணைக் கொடுமையால்
தற்கொலை பண்ணிக்கிறாங்க
சங்கவை:-வரதட்சணையா வாங்கிற
நகைகளை
மாமியார்களா போட்டுக்கிறாங்க.
உங்களைப்போன்ற
மருமகள்கள்தானே
போட்டிக்கிறீங்க.உங்க வாழ்க்கைக்கு
ஒரு சேமிப்பு இருக்கனும்னுதானே
அதை வாங்குறோம்:",
பாரதி:வரதட்சனை வாங்குவது ஒரு
குற்றச்செயல்.பாவக்காரியம்.
வேறு ஏதேனும் காரணங்களை
சொல்லும்மா சங்கவையே."
சங்கவை:-"முதியோர் இல்லங்கள்
உருவாகக் புகுந்த வீட்டிற்கு
வரும்
மருமகள்கள்தான் காரணம்.".
அங்கவை:-"அப்படின்னா..?
நீங்களும் கல்யாணம் ஆகி
ஒருவீட்டுக்கு மருமகளா
வந்தவங்கதானே.
நீங்களும் அதற்குக் காரணம்தானே?".
பாரதி:-என்ன கொடுமை சார்...
பெண் சுதந்திரத்திற்கு
பாட்டெல்லாம் எழுதினேன்.
இப்ப நடுவரா பாடாப்படுறேன்னே..".
சங்கவை:-"மாமியாரும் நம்மைப்
பெற்ற அம்மாவைப்போல என்று
மருமகள்கள் எண்ணுவதில்லை".
அங்கவை:-"மருமகளை
பெற்றப்பெண்ணைப்போல
மாமியாரகள் எண்ணுவதில்லையே..".
சங்கவை:-மாமியாரே
தப்புபண்ணினால்கூட,.,,
வயசானவங்கதானேன்னு,
மருமகள்கள்
விட்டுகொடுப்பதில்லை."
அங்கவை:மருமகள்களே
தப்புபண்ணினால்கூட
சின்னஞ்சிருசுங்கதானேன்னு,
மாமியார்கள் மன்னிப்பதில்லை".
பாரதி:-பிரமாதம்....
அங்கவை:-ஒருநாள் எங்கவீட்டில
கரெண்ட்
லோவோல்ட்டேஜில் வந்தது.
ஏன் இப்படி லோவோல்ட்டேஜில்
கரெண்ட் வருதுன்னு மாமியாரைக்
கேட்டேன்.அதுக்கு அவுங்க
என்னசொன்னாங்க
தெரியுமா?
பாரதி:-என்ன சொன்னாங்க?".
அங்கவை:-வருகிற கரெண்ட்
நெய்வேலியில் இருந்து வருதா?
கல்ப்பாக்கத்தில் இருந்து வருதான்னு..
பிளக்பாயிண்ட்டில்
கையை வெச்சுப்பாரும்மா,,,,
என்று சொன்ன்னங்க..'
பாரதி:-உங்கள் வாதங்களுக்கான
நேரம்
முடிந்துவிட்டது..
என்ற பாரதி..
"இப்பவே கண்ணைக்கட்டுதே...",
என்று பெருமூச்சுவிட்டபடி தீர்ப்பைகூற
தொடங்கினார்.
பாரதி:-இவையாவும்
மாமியார் தப்பா?மருமகள் தப்பா?
என்று என்னால் கூறமுடியவில்லை.
ஆண் ஆதிக்கத்திலிருந்து
விடுபட பெண்களுக்காக பாட்டெழுதினேன்.
பெண்ணை பெண்ணே ஆதிக்கம்
செய்தால் என்னவென்று சொல்வது?
அடிப்பட்டால் 108ல் போகலாம்..
அந்த நூற்றியெட்டே அடிபட்டால்
எதிலேப்போவது?
நான் என்ற அகம்பாத்தையும்...
நீயா நானா என்ற மோதலையும்
கைவிட்டுவிட்டு.....
நம் குடும்பம் இனிமையாக
இருக்கவேண்டும்,
நம் பிள்ளைகள்
நல்ல சூழலில் வளரவேண்டும்...
என்று எண்ணுங்கள்.
முதியோர்கள் இல்லத்திற்கு
யார் காரணம் என்றுநான்
கூறவிரும்பவில்லை.
ஆனால்
ஒன்றுமட்டும் கூறுகிறேன்...
"பிறர்கின்னா முற்பகல் செய்யின்
தமக்கின்னா பிற்பகல் தாமேவரும்"....
என்றவர்....
"ஓகே...ரெடி ஜீட்...
சபையை கலைங்கம்மா....",
என்றுக் கூறிவிட்டு
"இனி மாமியார்கள் மருமகளுக்குள்
சண்டையே வரக்கூடாது.
அப்படி வாழும் பெண்கள்தான்
நான் கண்டப் புதுமைப்பெண்கள்..."
என்றபடி மெல்ல அவ்விடத்தைவிட்டு
எஸ்கேப் ஆகினார்...
(நம் மன்றத்து நண்பர்கள் இதை விவாதிக்க விரும்பினால்
விவாதிக்கலாம்.விவாதம் ஆரோகியமானதாகவும்
புண்படும்படி இல்லாமலும் இருக்கவும்)
பிரச்சனைகளை எதிர்கொள்ளும்...
இருமனிதர்கள்...
மற்றும்
வெவ்வேறு கருத்துக்களைக்
கொண்ட...
இரு மனிதர்கள்...
ஒருவரை ஒருவர் சந்தித்தால்..
என்ன நிகழும்?
அவர்களுக்குள் உரையாடல்
எப்படி இருக்கும்?
அவ்விருவரின் உரையாடலுக்கும்
நடுவராக....
ஒரு கதாபாத்திரமும்
கலந்துரையாடல் செய்தால்....
அந்தசம்பவம் எப்படியிருக்கும்?..
இப்படிப்பட்ட கருவைக்கொண்டு
பட்டிமன்றம் போல்
உருவாக்கப்பட்டதே,...
இந்த திரி.
யாரையும் புண்படுத்தவேண்டுமென்றோ...
இகழ்ச்சி செய்யவேண்டுமென்றோ
இந்த பட்டிமன்ற படைப்பு..
பதிவுசெய்யப்படவில்லை...
சிந்திக்க வைக்கவும்..
சிரிக்கவைக்கவும்....
உருவாக்கப்பட்ட
திரி இது.
இத்திரியின் ஒவ்வொரு பாகத்திலும்
மாறுபட்ட
தலைப்புகளில் உரையாடல்கள்
இடம்பெறும்.
அது
ஒருதலைவரின் முன் நடைபெறும்...
இத்திரிக்கு தலைப்பை...
"பட்டிமன்றம்",
என்று தந்துள்ளேன்....
*****************************************************************************
பட்டிமன்றம்:1
______________________
இன்றைய பட்டிமன்றத்தின்......
உரையாடல் தலைப்பு....
"குடும்ப பிரச்சனைகளுக்கு காரணம்...
"மாமியாரா?மருமகளா?",...
மாமியார்கள்தான் காராணம் என்று அங்கவையும்...
மருமகள்கள்தான் காரணம் என்று சங்கவையும்...
உரையாடல்செய்ய
நடுவராக,
மகாகவி பாரதியார்..
அவர்கள் இடம்பெறுகிறார்....
______________________
அங்கவை:-வணக்கம் நடுவரே...
பாரதியார்:-வணக்கம் அங்கவையே..
சங்கவை:-வணக்கம் நடுவரே,,,'
பாரதி:-வணக்கம் சங்கவையே....
வணக்கம் கூறிய பாரதியார்....
"ம்ம்,,,ஆரம்பியுங்கள் உங்கள் கச்சேரியை...
மன்றம் களைக் கட்டட்டும்,...",
என்றதும்..
சங்கவை:-பிரச்சனைகளுக்கு முழுக்காரணமும்
மருமகள்கள்தான் நடுவர் அவர்களே....
பாரதி:-எதைவைத்து அப்படி சொல்லுகிறீர்கள்?
சங்கவை:-எனக்கு வயசு ஆகிடுச்சி...
என் முகமெல்லாம் சுறுக்கம் விழுந்துப்போச்சு
என்று என்மருமகளிடம் சொன்னேன்.
அதற்கு என் மருகள் என்னசொன்னாள்
தெரியுமா?",.
பாரதி:-என்ன சொன்னாள்?
சங்கவை:-கவலைபடாதீங்க அத்தை.
ஐயன்பாக்ஸை வைத்து
உங்க மூஞ்சியிலே நாலுஇழுப்பு இழுக்கிறேன்..
சுருக்கமெல்லாம் போயிடும்னு சொன்னாள்..
என்ன திமிறு இருக்கும் அவளுக்கு..",
பாரதி:"ஆஹா..!!!,
ஆரம்பமே ரணகளமா இருக்கே,...
ஷ்ஷ்ஷஷப்ப்ப்ப்பாபா....".
அங்கவை:-"பிரச்சனைக்கு முழுக்காரணம்
மாமியார்கள்தான் காரணம் நடுவரே.".
பாரதி:-"எதைவைத்தும்மா அப்படி சொல்றே?".
அங்கவை:-என் மாமியாரு என்னைய
எதாவது சொல்லி திட்டிக்கிட்டே இருப்பாங்க,..
நான் சும்மா இருந்தாக்கூட வலுக்கட்டாயமாக
வந்து
சண்டைபோடுவாங்க.
அவுங்க போடுகிற சண்டை டீ.வீ சீரியல்போல
இருக்கும்..நடுவரே."
பாரதி:-டீ.வீ சீரியல்மாதிரி இருக்குமா?
எதனால் அப்படி சொல்றீங்க?",.,
அங்கவை:-ஒவ்வொரு நாளும் சண்டையை
ஆரம்பிக்கும்போது,,,,,
இதுவரைன்னு சொல்லி,.
முதால்நாள் நடந்த சண்டையை
கொஞ்சம் போட்டுக்காடிட்டு...
இனின்னு சொல்லி...
அன்றைய சண்டையை
ஆரம்பிப்பாங்க..."
பாரதி:-அம்மாடி அர்த்தம்முள்ள வாதங்களை
முன் வைங்கம்மா..",
சங்கவை:-கல்யாணம் ஆனதும் தனிக்குடித்தனம்
போயிட்டான் என் பையன்.
வருகிற மருமகள்களில் முக்கால்வாசிப்பேரு
இதைத்தான் செய்யிறாளூங்க..",
அங்கவை:-தனிக்குடித்தனம் போகிற
அளவுக்கு கொண்டுப்போறதே
மாமியார்கள்தான்..
கல்யாணம் ஆனப்புதுசுல
ஆஹா ஓஹோன்னு
மருமகளை புகழ்வாங்க.பிறகு போகபோக
குறைகளா சொல்லுவாங்க.",
சங்கவை;-நல்ல விஷயங்களை சொல்லினால்
அது குறைசொல்லுவதுப்போல
உங்களைப்போன்ற
மருமகள்கள் எடுத்துக்கிறாங்க..
அங்கவை:-வரதட்சணைகளை வாங்க
தூண்டுதலாக இருப்பதே
மாமியார்கள்தான்..
எத்தனையோ பெண்கள்
வரதட்சணைக் கொடுமையால்
தற்கொலை பண்ணிக்கிறாங்க
சங்கவை:-வரதட்சணையா வாங்கிற
நகைகளை
மாமியார்களா போட்டுக்கிறாங்க.
உங்களைப்போன்ற
மருமகள்கள்தானே
போட்டிக்கிறீங்க.உங்க வாழ்க்கைக்கு
ஒரு சேமிப்பு இருக்கனும்னுதானே
அதை வாங்குறோம்:",
பாரதி:வரதட்சனை வாங்குவது ஒரு
குற்றச்செயல்.பாவக்காரியம்.
வேறு ஏதேனும் காரணங்களை
சொல்லும்மா சங்கவையே."
சங்கவை:-"முதியோர் இல்லங்கள்
உருவாகக் புகுந்த வீட்டிற்கு
வரும்
மருமகள்கள்தான் காரணம்.".
அங்கவை:-"அப்படின்னா..?
நீங்களும் கல்யாணம் ஆகி
ஒருவீட்டுக்கு மருமகளா
வந்தவங்கதானே.
நீங்களும் அதற்குக் காரணம்தானே?".
பாரதி:-என்ன கொடுமை சார்...
பெண் சுதந்திரத்திற்கு
பாட்டெல்லாம் எழுதினேன்.
இப்ப நடுவரா பாடாப்படுறேன்னே..".
சங்கவை:-"மாமியாரும் நம்மைப்
பெற்ற அம்மாவைப்போல என்று
மருமகள்கள் எண்ணுவதில்லை".
அங்கவை:-"மருமகளை
பெற்றப்பெண்ணைப்போல
மாமியாரகள் எண்ணுவதில்லையே..".
சங்கவை:-மாமியாரே
தப்புபண்ணினால்கூட,.,,
வயசானவங்கதானேன்னு,
மருமகள்கள்
விட்டுகொடுப்பதில்லை."
அங்கவை:மருமகள்களே
தப்புபண்ணினால்கூட
சின்னஞ்சிருசுங்கதானேன்னு,
மாமியார்கள் மன்னிப்பதில்லை".
பாரதி:-பிரமாதம்....
அங்கவை:-ஒருநாள் எங்கவீட்டில
கரெண்ட்
லோவோல்ட்டேஜில் வந்தது.
ஏன் இப்படி லோவோல்ட்டேஜில்
கரெண்ட் வருதுன்னு மாமியாரைக்
கேட்டேன்.அதுக்கு அவுங்க
என்னசொன்னாங்க
தெரியுமா?
பாரதி:-என்ன சொன்னாங்க?".
அங்கவை:-வருகிற கரெண்ட்
நெய்வேலியில் இருந்து வருதா?
கல்ப்பாக்கத்தில் இருந்து வருதான்னு..
பிளக்பாயிண்ட்டில்
கையை வெச்சுப்பாரும்மா,,,,
என்று சொன்ன்னங்க..'
பாரதி:-உங்கள் வாதங்களுக்கான
நேரம்
முடிந்துவிட்டது..
என்ற பாரதி..
"இப்பவே கண்ணைக்கட்டுதே...",
என்று பெருமூச்சுவிட்டபடி தீர்ப்பைகூற
தொடங்கினார்.
பாரதி:-இவையாவும்
மாமியார் தப்பா?மருமகள் தப்பா?
என்று என்னால் கூறமுடியவில்லை.
ஆண் ஆதிக்கத்திலிருந்து
விடுபட பெண்களுக்காக பாட்டெழுதினேன்.
பெண்ணை பெண்ணே ஆதிக்கம்
செய்தால் என்னவென்று சொல்வது?
அடிப்பட்டால் 108ல் போகலாம்..
அந்த நூற்றியெட்டே அடிபட்டால்
எதிலேப்போவது?
நான் என்ற அகம்பாத்தையும்...
நீயா நானா என்ற மோதலையும்
கைவிட்டுவிட்டு.....
நம் குடும்பம் இனிமையாக
இருக்கவேண்டும்,
நம் பிள்ளைகள்
நல்ல சூழலில் வளரவேண்டும்...
என்று எண்ணுங்கள்.
முதியோர்கள் இல்லத்திற்கு
யார் காரணம் என்றுநான்
கூறவிரும்பவில்லை.
ஆனால்
ஒன்றுமட்டும் கூறுகிறேன்...
"பிறர்கின்னா முற்பகல் செய்யின்
தமக்கின்னா பிற்பகல் தாமேவரும்"....
என்றவர்....
"ஓகே...ரெடி ஜீட்...
சபையை கலைங்கம்மா....",
என்றுக் கூறிவிட்டு
"இனி மாமியார்கள் மருமகளுக்குள்
சண்டையே வரக்கூடாது.
அப்படி வாழும் பெண்கள்தான்
நான் கண்டப் புதுமைப்பெண்கள்..."
என்றபடி மெல்ல அவ்விடத்தைவிட்டு
எஸ்கேப் ஆகினார்...
(நம் மன்றத்து நண்பர்கள் இதை விவாதிக்க விரும்பினால்
விவாதிக்கலாம்.விவாதம் ஆரோகியமானதாகவும்
புண்படும்படி இல்லாமலும் இருக்கவும்)