PDA

View Full Version : "ரா"ணாக்களின் ராஜ்ஜியம்..18



ராஜாராம்
28-03-2011, 01:53 PM
(தனித் தனியே நடைபெறும் இரு சம்பவங்களை ,
ஒன்றாக இணைத்து தரப்பட்டது இந்தப் படைப்பு

1)பொதுதொலைப் பேசியில் ,
"ஊறுகாய் போடுவது எப்படி"
என்பதைப் பற்றி நம் ஜானகி அக்கா அவர்கள்,
தன் தோழியிடம் கூறிக்கொண்டுள்ளார்.

அகே,மற்றோரு பொதுதொலைப்பேசியில்

2)"நாய் வளர்ப்பது எப்படி",
என்று முரா ,
தன் நண்பனுக்கு கூறிக்கொண்டுள்ளார்.

தனித்தனியே,,,
இவர்கள் இருவரும் பேசுவதை ஒன்றாக இணைத்துள்ளேன்..)




முரா:-------------------நாய் வளர்க்கறது சாதாரணமான காரியம் இல்லை..
நாயை வாரம் ஒருமுறை...

ஜா.அக்கா--------------நல்லாக் கழுவி ஒருகூடைக்குள்ளே போட்டு வைக்கனும்.

முரா:-------------------பிறகு நாய்க்குட்டியின் உடலில் பேண் வாராமல் இருப்பதற்காக
அதன் உடலில்

ஜா.அக்கா-----------2டீஸ்ஃபூன் மிளகாய்பொடி,3டீஸ்ஃபூன் உப்பு இவற்றையெல்லாம்
சம அளவு கலந்து தடவனும்

முரா:-------------------நாய்குட்டிக்கு அஜீரணம் ஏற்படாமல் இருக்க அதன் வாயை
நல்லாப் பிளந்து, அதன் வாயினுள்

ஜா.அக்கா------------கொதிக்கிற எண்ணையை,கடுகு மிளகுடன் சேர்த்து
உள்ளே,கொதிக்க கொதிக்க ஊத்தனும்

முரா--------------------உங்கவீட்டு நாய்க்குட்டி வாலை ரொம்ப ஆட்டினால்..

ஜா.அக்கா-----------அதை துண்டு துண்டா வெட்டி...
கொதிக்கிற எண்ணைசட்டியில போடனும்....

முரா:-------------------சங்கிலிப் போட்டால் அதன் கழுத்தில் பட்டை விழும்.
அதை தடுக்க அதன் கழுத்துப்பகுதியை...

ஜா.அக்கா:----------அருவாமனையில் ,
குறுக்குவாட்டில் 2பாகமாகவும்,
நெடுக்குவாட்டில் 3பாகமாகவும் வெட்டி போடனும்

முரா:------------------நீங்க வளர்ப்பது ஜாதி நாய்குட்டியாக இருந்தால்

ஜா.அக்கா----------இப்படி ஊறுகாய் போட்டு சாப்பிட்டிங்கன்னா....
ரொம்ப ரொம்ப ஜோரா இருக்கும்

ஜானகி
28-03-2011, 02:38 PM
ஐய்யய்யோ......ராம, ராமா.....நான் சுத்த சைவம்.... இப்படிப் பண்ணிவிட்டீர்களே....... இனிமேல் ஊறுகாய் சாப்பிடும் போதெல்லாம் இந்த ஞாபகம் வருமே....... உங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்.....?

கொடுமையான தண்டனை பரிந்துரைப்பவர்களுக்கு ஐ பணம் 500 அனுப்பப்படும்.....

சித்தரின் ஆவி புகுந்துகொண்டு இப்படி காவு கேட்கிறதா....?மண்டைக்குள் குரல்கள் கேட்க ஆரம்பித்துவிட்டதா....?

அதற்குத்தான் இந்த மாதிரி கதையெல்லாம் எழுதக் கூடாது....

முரளிராஜா
28-03-2011, 02:51 PM
எனக்கு தெரிஞ்சி கொடுமையான தண்டனை ஒன்னுதான்
நீங்க அல்வா செய்து ராரா வுக்கு பார்சல் அனுப்பிடுங்க
ரொம்ப முக்கியமான விசயம் என்னன்னா அல்வா நீங்க செஞ்சதா இருக்கனும்

500 பணம் எனக்குத்தானே:lachen001::lachen001:

Nivas.T
28-03-2011, 02:59 PM
:lachen001::lachen001::lachen001:
அஹா அருமை ராரா,

இதமாதிரி வித்தியாசமான நகைச்சுவை சிந்தனை உங்களுக்கு மட்டும்தான்:aetsch013:

ஜானகியம்மா ரொம்ப கடுப்பாய்ட்டாங்க போல:D

நீங்க சொன்ன மாதிரி அவங்கள எனக்காக பழி வாங்கிடீங்க, ரொம்ப நன்றி ராரா:D:D
ஐய்ய்ய்ய்... எனக்கு சந்தோசமா இருக்கு....:D:D:D

அதுசரி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உங்க அவதார் ல ஒரு பாடிபில்டர் நின்னாரே அவரு யாரு????:confused::eek:

Nivas.T
28-03-2011, 03:02 PM
எனக்கு தெரிஞ்சி கொடுமையான தண்டனை ஒன்னுதான்
நீங்க அல்வா செய்து ராரா வுக்கு பார்சல் அனுப்பிடுங்க
ரொம்ப முக்கியமான விசயம் என்னன்னா அல்வா நீங்க செஞ்சதா இருக்கனும்

500 பணம் எனக்குத்தானே:lachen001::lachen001:

இல்ல இல்ல அந்த 500 எனக்குத்தான்:icon_b:

நீங்க த்க்ஸ் கு சொன்ன (வி)ரசத்த செஞ்சு அனுப்பிடுங்க:rolleyes:

ராரா வுக்கு இதவிட கொடுமையான தண்டன இந்த உலகத்துல எதுவும் இருக்க முடியாது :D:D:D:D

முகம்மது ஹுமாயூன்
28-03-2011, 03:09 PM
ஜானகி அக்கா நான் அப்பாவி.
எனக்கு தண்டனையா????:traurig001:

ஆளுங்க
28-03-2011, 03:11 PM
ராரா..........
கதை நல்லா இருக்கு....
ஆனா, ஜானகி அக்காவை இழுத்ததுக்கு உங்களையே கதைல சேர்த்து இருக்கலாம்!!!

ஜானகி அக்கா,
தண்டனை எப்படி கொடுக்கலாம்? :icon_hmm:

அவருக்காக நீங்க செஞ்ச அல்வா நல்லா இருந்துடுச்சுனா ?:icon_blush:
உங்களுக்குத் தான் நேரம் விரயம்!!

பேசாம இப்படி செய்ங்க...
அவருக்கு கூப்பிட்டு மைசூர் பாகு செஞ்சு குடுங்க.:food-smiley-002:.
முக்கிய குறிப்பு: யானையே மிதிச்சாலும் மைசூர் பாகு உடையவே கூடாது!!
:080402gudl_prv:

சரி.. சரி...
எப்படி தர போறீங்க? செக்கா கேஷா? :lachen001:



பி.கு:

எல்லாம் சரி.. ராரா....
அந்த மறுபாதி உரையாடலை பதியுங்க....
நாங்க ஊறுகாய் செய்யவும், நாய் வளர்க்கவும் ஒண்ணா கத்துக்குவோம்ல!!
:medium-smiley-002:

ஆளுங்க
28-03-2011, 03:13 PM
அதுசரி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உங்க அவதார் ல ஒரு பாடிபில்டர் நின்னாரே அவரு யாரு????:confused::eek:

ஆம்ம,
நானும் கேக்கனும்னு நினச்சேன்...
யாருங்க அவர்?

முரளிராஜா
28-03-2011, 03:17 PM
:lachen001::lachen001::lachen001:
அஹா அருமை ராரா,

இதமாதிரி வித்தியாசமான நகைச்சுவை சிந்தனை உங்களுக்கு மட்டும்தான்:aetsch013:

ஜானகியம்மா ரொம்ப கடுப்பாய்ட்டாங்க போல:D

நீங்க சொன்ன மாதிரி அவங்கள எனக்காக பழி வாங்கிடீங்க, ரொம்ப நன்றி ராரா:D:D
ஐய்ய்ய்ய்... எனக்கு சந்தோசமா இருக்கு....:D:D:D

அதுசரி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உங்க அவதார் ல ஒரு பாடிபில்டர் நின்னாரே அவரு யாரு????:confused::eek:

அது அந்த ராரா தான் நிவாஷ்
இது அப்பப்ப வந்து இப்படிதான் பயமுறுத்தும்
சிக்னேச்சர்ல என்ன எழுதிவச்சிருக்கு பாருங்க:D:D

ராஜாராம்
28-03-2011, 03:18 PM
நன்றி ஜானகி அக்கா(முகமது ஹுமாயூன் எனது நண்பர் நான் கூரவேண்டியதை அவரது லாக்கிங்கில் தந்துவிட்டார்)
பச்சப்புள்ளைக்கு தண்டனையா?
பாவம் அக்கா நான்..அப்பாவி நான்:D:D
ஆளுங்க அது என் புகைப்படம்தான்..பாவம் மன்றத்துமக்கள் அவர்களை பயமுறுத்தவேண்டாம்னு எடுத்துட்டேன்.

ஜானகி
28-03-2011, 03:23 PM
பச்சைக் கலர் போட்டுக்கொண்டால் பச்சப்புள்ளை ஆகிவிடமுடியுமா....?

என்ன தண்டனை கொடுப்பது என்று நான் தீர்மானித்துவிட்டேன்....இந்தப் பக்கத்துப் பதிவுகளில் வந்துள்ள எழுத்துப் பிழைகளைக் கண்டுபிடித்துச், சரியாக 100 முறை எழுதவேண்டும்

[அப்பாடா....இ-பணம் தப்பித்தது.....அதை எப்படி அனுப்பவேண்டும் என்றுகூட எனக்குத் தெரியாது....]

தாமரை
28-03-2011, 03:25 PM
ஐய்யய்யோ......ராம, ராமா.....நான் சுத்த சைவம்.... இப்படிப் பண்ணிவிட்டீர்களே....... இனிமேல் ஊறுகாய் சாப்பிடும் போதெல்லாம் இந்த ஞாபகம் வருமே....... உங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்.....?

கொடுமையான தண்டனை பரிந்துரைப்பவர்களுக்கு ஐ பணம் 500 அனுப்பப்படும்.....

சித்தரின் ஆவி புகுந்துகொண்டு இப்படி காவு கேட்கிறதா....?மண்டைக்குள் குரல்கள் கேட்க ஆரம்பித்துவிட்டதா....?

அதற்குத்தான் இந்த மாதிரி கதையெல்லாம் எழுதக் கூடாது....

பிள்ளைக் கறி கேட்டாராம் சிவன்.. நாமளும் ஒரு சிவந்தானே..

எனக்கு ராரா வைக் கரகரன்னு அறுத்து சூப்பரா ஒரு மிள்கு பிரட்டல் செய்து குடுங்களேன்..

Nivas.T
28-03-2011, 03:41 PM
நன்றி ஜானகி அக்கா(முகமது ஹுமாயூன் எனது நண்பர் நான் கூரவேண்டியதை அவரது லாக்கிங்கில் தந்துவிட்டார்)
பச்சப்புள்ளைக்கு தண்டனையா?
பாவம் அக்கா நான்..அப்பாவி நான்:D:D
ஆளுங்க அது என் புகைப்படம்தான்..பாவம் மன்றத்துமக்கள் அவர்களை பயமுறுத்தவேண்டாம்னு எடுத்துட்டேன்.

என்னக் கொடும சரவணன் அது :icon_rollout::icon_rollout::icon_rollout:

:D:D:D

Nivas.T
28-03-2011, 03:45 PM
//ரயில்லு நின்னா காட்பாடி...
உயிரு நின்னா டெட்பாடி...


:மன்றம்வருதல் பெரிதன்று வந்தப்பின் மன்றமக்களை
மொக்கை போட்டுக் கொல்வதே பெரிது...."//

ஏன் இந்த கொலைவெறி:eek::eek:

அன்புரசிகன்
28-03-2011, 10:34 PM
அந்த பதிவில வாற நாய் என்பதற்கு பதிலாக ராரா என்று போட்டு படியுங்க. இன்னும் சுவாரசியமாக இருக்கும். :D :D :D :lachen001:

உமாமீனா
29-03-2011, 03:13 AM
:lachen001::lachen001::lachen001::lachen001:நல்ல தமாசு போங்க

sarcharan
29-03-2011, 06:25 AM
பச்சைக் கலர் போட்டுக்கொண்டால் பச்சப்புள்ளை ஆகிவிடமுடியுமா....?

என்ன தண்டனை கொடுப்பது என்று நான் தீர்மானித்துவிட்டேன்....இந்தப் பக்கத்துப் பதிவுகளில் வந்துள்ள எழுத்துப் பிழைகளைக் கண்டுபிடித்துச், சரியாக 100 முறை எழுதவேண்டும்

[அப்பாடா....இ-பணம் தப்பித்தது.....அதை எப்படி அனுப்பவேண்டும் என்றுகூட எனக்குத் தெரியாது....]

பாத்துக்கா.. ரா ரா அதுக்கு ஒரு பதிவ போட்டுறப்போறாரு.... அப்புறம் அதுலயும் உங்கள வில்லி ஆக்கிருவாரு...


என்னக் கொடும சரவணன் அது :icon_rollout::icon_rollout::icon_rollout:

:D:D:D

ரா ராவின் சமீபத்திய எதிரி நம்ம ஜானகி அக்கா போல..:cool:
உண்மையிலயே என்ன கொடுமை சார் இது? :cool:

sarcharan
29-03-2011, 06:26 AM
ரா ராஸ் நாய் ரெஸிபியா இது...

lolluvathiyar
29-03-2011, 06:52 AM
நாய் வறுவல் இல்ல நாய் பிரியானி இல்ல இல்ல இது நாய் ஊறுகாய் செய்முறை மிக நன்றாக தான் இருந்தது. அறுபுதமான கற்பனை ரா ரா


ஐய்யய்யோ......ராம, ராமா.....நான் சுத்த சைவம்....
அப்படியா ராரா ஜானகி அக்காவுக்கு சைவ நாய் ஊறுகாய் ஸ்பெசலா போடுங்க.


கொடுமையான தண்டனை பரிந்துரைப்பவர்களுக்கு ஐ பணம் 500 அனுப்பப்படும்...
முதலில் அந்த நாய் ஊறுகாயை அவுங்களை சாப்பிட வைக்கனும். அப்படி இல்லாட்டி ஒரு பெரிய நாய கூட்டியாந்து நீங்க செஞ்ச எலுமிச்சை ஊறுகாயை அதன் வாயில் தினிச்சு வெறி ஏத்தி ராராக்கள் கதை எழுதும் அறுக்குள்ள விட்டு பூட்டிரனும்.

நான் இந்த ஜானகிஅக்காவ மறந்தே போயிட்டேன். ஓக்கே காப்பியங்கள் கதையில இவுங்களுக்கு ஒரு பக்க்க்க்க்க்க்க்க்க்க ரோல் போட்டுரலாம்.

sarcharan
29-03-2011, 07:50 AM
நாய் வறுவல் இல்ல நாய் பிரியானி இல்ல இல்ல இது நாய் ஊறுகாய் செய்முறை மிக நன்றாக தான் இருந்தது. அறுபுதமான கற்பனை ரா ரா


அப்படியா ராரா ஜானகி அக்காவுக்கு சைவ நாய் ஊறுகாய் ஸ்பெசலா போடுங்க.


முதலில் அந்த நாய் ஊறுகாயை அவுங்களை சாப்பிட வைக்கனும். அப்படி இல்லாட்டி ஒரு பெரிய நாய கூட்டியாந்து நீங்க செஞ்ச எலுமிச்சை ஊறுகாயை அதன் வாயில் தினிச்சு வெறி ஏத்தி ராராக்கள் கதை எழுதும் அறுக்குள்ள விட்டு பூட்டிரனும்.

நான் இந்த ஜானகிஅக்காவ மறந்தே போயிட்டேன். ஓக்கே காப்பியங்கள் கதையில இவுங்களுக்கு ஒரு பக்க்க்க்க்க்க்க்க்க்க ரோல் போட்டுரலாம்.


வாத்தியாரே, உங்களோட இன்றைய கோட்டா ஃபில்டு போல...

நாஞ்சில் த.க.ஜெய்
29-03-2011, 10:07 AM
புதிய முறையில் அசைவ ஊறுகாய் ...அருமை ...

sarcharan
29-03-2011, 02:00 PM
புதிய முறையில் அசைவ ஊறுகாய் ...அருமை ...

நாயூறுகாய்? :confused:

முரளிராஜா
29-03-2011, 02:05 PM
நாயூறுகாய்? :confused:
:D:D:D:D:D

ராஜாராம்
29-03-2011, 02:08 PM
சாரா,முரா,
நாய் ஊறுகாயை...பொடிமாஸ் லெவலுக்கு ஆக்கிட்டிங்களே...:cool: