முகம்மது ஹுமாயூன்
23-03-2011, 02:43 PM
டெல்லி: ராஜஸ்தானில் அமைக்கப்பட்டு வரும் தொழிற்சாலையில் புதிதாக 1,500 பேரை வேலைக்கு அமர்த்த இருப்பதாக ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்ஸ் இந்தியா(எச்எம்எஸ்ஐ)நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹோண்டா நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் விற்பனை இந்தியாவில் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதையடுத்து, உற்பத்தி திறனை அதிகரிக்கும் பணிகளில் ஹோண்டா தீவிர கவனம் செலுத்தி வருகிறது. ஹரியானா மாநிலம், மானேசரில் ஆண்டுக்கு 16 லட்சம் மோட்டார்சைக்கிள்கள் உற்பத்தி செய்யும் திறன் படைத்த ஹோண்டா தொழிற்சாலை உள்ளது .
தேவை அதிகரித்து வருவதையடுத்து, ராஜஸ்தானில் இரண்டாவது தொழிற்சாலையை ஹோண்டா அமைத்து வருகிறது . வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் உற்பத்தியை துவங்க உள்ள இந்த தொழிற்சாலையில், புதிதாக 1500 பேருக்கு வேலை கொடுக்க இருப்பதாக ஹோண்டா அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனத்தி்ன் தலைவர் கூறியதாவது:
"ராஜஸ்தான் மாநிலம், தபுகராவில் அமைக்கப்பட்டு வரும் இரண்டாவது தொழிற்சாலை வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் உற்பத்தி துவங்கும். இதற்காக, நிரந்தர மற்றும் தற்காலிகமாக பணியாற்றுவதற்காக 1500 பேரை நியமிக்க உள்ளோம்.
ரூ.600 கோடி முதலீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய தொழிற்சாலை, ஆண்டுக்கு 6 லட்சம் மோட்டார்சைக்கிள்கள் தயாரிக்கும் திறனை பெற்றிருக்கும். பின்னர் படிப்படியாக ஆண்டுக்கு 12 லட்சம் வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையாக இது மாற்றப்படும். இதுதவிர, மேலும் ஒரு புதிய தொழிற்சாலையை அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம்," என்று கூறினார்.
நன்றி ஒன் இந்தியா.
ஹோண்டா நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் விற்பனை இந்தியாவில் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதையடுத்து, உற்பத்தி திறனை அதிகரிக்கும் பணிகளில் ஹோண்டா தீவிர கவனம் செலுத்தி வருகிறது. ஹரியானா மாநிலம், மானேசரில் ஆண்டுக்கு 16 லட்சம் மோட்டார்சைக்கிள்கள் உற்பத்தி செய்யும் திறன் படைத்த ஹோண்டா தொழிற்சாலை உள்ளது .
தேவை அதிகரித்து வருவதையடுத்து, ராஜஸ்தானில் இரண்டாவது தொழிற்சாலையை ஹோண்டா அமைத்து வருகிறது . வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் உற்பத்தியை துவங்க உள்ள இந்த தொழிற்சாலையில், புதிதாக 1500 பேருக்கு வேலை கொடுக்க இருப்பதாக ஹோண்டா அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனத்தி்ன் தலைவர் கூறியதாவது:
"ராஜஸ்தான் மாநிலம், தபுகராவில் அமைக்கப்பட்டு வரும் இரண்டாவது தொழிற்சாலை வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் உற்பத்தி துவங்கும். இதற்காக, நிரந்தர மற்றும் தற்காலிகமாக பணியாற்றுவதற்காக 1500 பேரை நியமிக்க உள்ளோம்.
ரூ.600 கோடி முதலீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய தொழிற்சாலை, ஆண்டுக்கு 6 லட்சம் மோட்டார்சைக்கிள்கள் தயாரிக்கும் திறனை பெற்றிருக்கும். பின்னர் படிப்படியாக ஆண்டுக்கு 12 லட்சம் வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையாக இது மாற்றப்படும். இதுதவிர, மேலும் ஒரு புதிய தொழிற்சாலையை அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம்," என்று கூறினார்.
நன்றி ஒன் இந்தியா.