PDA

View Full Version : லொள்ளுவாத்தியாரின் காப்பியங்கள் Upd : 09/05/2011 (சினிமா தயாரிப்பு)



lolluvathiyar
19-03-2011, 02:09 PM
லொள்ளுவாத்தியாரின் காப்பியங்கள்


மன்ற நன்பர்களுக்காக "லொள்ளுவாத்தியாரின் காப்பியங்கள்" புதிய என்ற தலைப்பில் புதிய திரி துவங்குகிறேன். இது லொள்ளுவாத்தியாராகிய நான் ஏகபட்ட சினிமா எடுக்க திட்டம் போட்டிருக்கேனுங்கோ. அந்த கதைகளின் திரைகதை வசனம் பாடல் கூட இங்கு இடம் பெரும்.

நடிகர்கள் யாரு?
வேற யாருமில்ல எல்லாமே நம்ம தமிழ்மன்ற உருப்பினர்கள் தான் நடிகர்கள். யார் யாருக்கு என்ன வேசம் வேனும்னு ஒரு கால்சீட் கொடுத்துட்டீங்கன்னா திரைகதை அதுக்கு ஏத்த மாதிரி எழுத வசதியா இருக்கும். இது அனைவருமே கலந்து கொண்டு கலகலப்பாக லொள்ளு செய்யும் திரி. எஞ்சாய்.

சரி இந்த திரிக்கு இப்படி ஒரு தலைப்பு வச்சது ஏன்?
காவியங்கள் என்றால் சொந்தமாக படைக்க படுவது ஆனால் காப்பியங்கள் என்றால் ஒரு படைப்பை அப்படியே காப்பி செஞ்சு கொஞ்சம் மாற்றி சொந்த படைப்பாக காட்டுவது. இதை நான் சொல்லல நம்ம சீனியர் உருப்பினர் ஆதவா தான் சொன்னாரு. கமல்ஹாசனின் காப்பியங்கள் என்ற திரியில் நடந்த காரசார விவாதங்களின் விளைவு தான் இப்படி ஒரு தலைப்பில் திரி ஆரம்பிச்சுட்டேன்.

சரி மேட்டருக்கு வர்ரேன். நான் காப்பி எங்கிருந்தும் காப்பி அடிச்சு இங்க போட மாட்டேன். எல்லாமே நான் சொந்தமா டைப் அடிச்சு தான் இத்திரியில் பதிக்க போகிறேன். ஆனால் சினிமா கதைகள் மட்டும் பழசு பட் மன்றத்துக்கு ஏத்த மாதிரி லொள்ளுதனமா புதுசா மாத்தி அமைச்சு காப்பியங்களாக தயாரிச்சிருவோம்.

சரி சரி முதல் படம் எடுக்க ஆரம்பிக்கலாமா.
படத்தின் பெயர் : சக்ரம் (ஆங்கிலத்தில் வீல் என்று வச்சா நல்லா இருக்குமுல்ல)

கதைசுருக்கும் : தாமரை http://tamilmantram.com/vb/customavatars/avatar1096_2.gif என்ற விஞ்ஞானி வித்தியாசமான சக்ரம் கண்டு பிடிக்கிறார் அதை ஆட்டோவில் வைத்து எடுத்து சொல்லும் போது சர்வதேச விஞ்ஞான பொருட்கள் கடத்தல் மன்னன் ஆதவா http://tamilmantram.com/vb/customavatars/avatar2100_3.gif அந்த சக்கரத்தை துப்பாக்கி முனையில் கடத்தி சென்று விடுகிறார். ஆதவா ஆப்கானிஸ்தானில் கோமாலியா என்ற கிராமத்தில் சளிகோட்டை என்ற கோட்டையில் சக்ரத்தை பதுக்கி வைத்து விடுகிறார்.
அதை மீட்டு ஆதவாவின் கும்பலை கைது செய்ய சர்சரன் http://tamilmantram.com/vb/customavatars/avatar1067_4.gif + ஆதன் http://tamilmantram.com/vb/customavatars/avatar3825_24.gif என்ற போலீஸ் படை சளிகோட்டைக்கு விரைகிறதாம். அங்கு நடப்பவைகள் தான் கதை. மூன்று கதாநாயகிகள் கொன்ட பிரமான்ட திரைபடம்.

விரிவான கதை பிறகு பாப்போம். இப்போதைக்கு படத்துக்கு ஏத்த டைட்டில் சாங் மட்டும் பதித்து விடுகிறேன்.

சக்ரம் சக்ரம்
சக்ரம் சக்ரம்
நான் காப்பி அடிச்சவன் பிட்டு கொன்டுசென்றவன்
பாடங்கள் படிக்காதவன் சுருட்டிகொள்பவன்
என் பிட்டுகளே பரிட்சையில் செல்லும்

சக்ரம் சக்ரம்
சக்ரம் சக்ரம்

பிட்டு செல்லட்டும் என் ரிசல்ட் வெல்லட்டும்
பிட்டு செல்லட்டும் என் ரிசல்ட் வெல்லட்டும்

நிற்க, என்ன பசங்களா இது வெறும் டிரைலர் தான். இன்னும் மெயின் பிச்சரை பாக்கல. அத எங்க பாக்கறது எல்லாரும் வந்து கலந்துக்கோங்க. பாடல் சன்டைகாட்சி எல்லாத்தையும் அமர்களமா எழுதி இந்த சக்ரம் படத்தை பக்கா ஹிட்டாக்கி 1000 நாள் ஓட்டிரலாம்.

ஆதி
19-03-2011, 02:43 PM
:D :D :D :D


//தாமரை என்ற விஞ்ஞானி வித்தியாசமான சக்ரம் கண்டு பிடிக்கிறார் அதை ஆட்டோவில் வைத்து எடுத்து சொல்லும் போது சர்வதேச விஞ்ஞான பொருட்கள் கடத்தல் மன்னன் ஆதவா அந்த சக்கரத்தை துப்பாக்கி முனையில் கடத்தி சென்று விடுகிறார். //

தூள் திங்கிங், கலக்குங்க/கலக்குவோம் வாதியார் ஐயா...

ஆதவா
19-03-2011, 02:43 PM
உருப்பினர் ஆதவா தான் சொன்னாரு

இதைப் படிச்சா, ”உருப்பிடாதவன் ஆதவா” என்று அர்த்தம் வருகிறது..... வாத்தீ!!!! :sauer028:


(ஆங்கிலத்தில் வீல் என்று வச்சா நல்லா இருக்குமுல்ல)

வரிவிலக்கு கிடைக்காதுங்க வாத்தியரே!


அதென்னங்க “சர்வதேச விஞ்ஞானப்பொருள் கடத்தல் மன்னன்? நாங்க அதை மட்டும்தான் கடத்துவோமா? வேற கடத்தமாட்டோமா???


மூன்று கதாநாயகிகள் கொன்ட பிரமான்ட திரைபடம்.

அந்த மூன்று பேரில் எனக்கு ஜோடி யாருங்க?? சொல்லவேயில்ல?? (தமன்னாவோட கால்ஷீட் இல்லாட்டி நான் நடிக்கமாட்டேன்.. ஆமாம்!)
(லொள்ளுவாத்தியார் : தமன்னாவோட கால்ஷீட் இருக்கு, ஆனா உனக்கு ஜோடியில்ல)

Nivas.T
19-03-2011, 02:45 PM
அந்த சக்கரத்தை [COLOR="Red"]துப்பாக்கி முனையில் கடத்தி சென்று விடுகிறார்.

:eek::eek::eek:
அவ்வளவு சின்ன சக்கரமா???????:aetsch013::aetsch013:

நமது பங்களிப்பு விரைவில் - இது நம்ப டிரைலர் - டிரைலர் மன்னன் மதி அவர்களை இந்தத் திரி பக்கம் வருமாறு அன்ன்போடுக் கேட்டுக்கொள்கிறேன் :D:D:D

ஆதி
19-03-2011, 02:51 PM
//அந்த மூன்று பேரில் எனக்கு ஜோடி யாருங்க?? சொல்லவேயில்ல?? (தமன்னாவோட கால்ஷீட் இல்லாட்டி நான் நடிக்கமாட்டேன்.. ஆமாம்!)
(லொள்ளுவாத்தியார் : தமன்னாவோட கால்ஷீட் இருக்கு, ஆனா உனக்கு ஜோடியில்ல)
//

கண்டிப்பிப்பா கால்ஷீட் வாங்கிடலாம், கவலைப்படாதீங்க

முரளிராஜா
19-03-2011, 02:56 PM
இதைப் படிச்சா, ”உருப்பிடாதவன் ஆதவா” என்று அர்த்தம் வருகிறது..... வாத்தீ!!!! :sauer028:
[/COLOR]

இது சரின்னு சொல்றிங்களா இல்ல தப்புனு சொல்றிங்களா?:D:D

ஆளுங்க
19-03-2011, 03:03 PM
ரீமிக்ஸ் பாட்டு வேண்டாமா?

இப்ப வந்த ஒண்ணையே வச்சுருவோம்..

நான் நடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
படம் பாரு- வீடு போய் சேர மாட்ட
:lachen001:

ஆதி
19-03-2011, 03:05 PM
நான் நடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
படம் பாரு- வீடு போய் சேர மாட்ட

ஹாஹ்ஹா,

படத்துக்கு பாடலாசிரியர் கிடைச்சுட்டாரு..

முரளிராஜா
19-03-2011, 03:06 PM
ரீமிக்ஸ் பாட்டு வேண்டாமா?

இப்ப வந்த ஒண்ணையே வச்சுருவோம்..

நான் நடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
படம் பாரு- வீடு போய் சேர மாட்ட
:lachen001:
இந்த பாட்டு ஆதவாவ மனசுல நினைத்து எழுதினது இல்லையே?:lachen001::lachen001:

lolluvathiyar
19-03-2011, 03:08 PM
இதைப் படிச்சா, ”உருப்பிடாதவன் ஆதவா” என்று அர்த்தம் வருகிறது..... வாத்தீ!!!!
ஆகா ஆதவா எப்பவுமே கரெக்டா தான் சொல்லுவாரு போல இருக்கு.


அதென்னங்க “சர்வதேச விஞ்ஞானப்பொருள் கடத்தல் மன்னன்? நாங்க அதை மட்டும்தான் கடத்துவோமா? வேற கடத்தமாட்டோமா???

ஓ புளியங்கொட்டை, பொதினா சட்னி, பெருங்காயம், ரேசன் அரிசி இதையும் கடத்துவதா அடுத்த பாகத்தில் விரிவா எழுதிறேன் போதுமா.



அந்த மூன்று பேரில் எனக்கு ஜோடி யாருங்க?? சொல்லவேயில்ல??
கொல்லங்குடி கருப்பாயி அவர்களின் கால்சீட்டுக்காக வெயிட்டிங்.

(தமன்னாவோட கால்ஷீட் இல்லாட்டி நான் நடிக்கமாட்டேன்.. ஆமாம்!)
ஆள பாரு, தமன்னா ஆதனுக்கு தான் ஜோடியா நடிக்கறாளாக்கும் (அவள் சக்ரம் ஸ்பெசலிஸ்ட்)

அது யாரப்பா அலுங்கா ரீமிக்ஸ் எல்லாம் எழுதி பட்டைய கிளப்பறீங்க. சரி இன்த படத்துல அலகுன்னா தான் கோமாலியா நாட்டின் மொழிபெயர்பாளர். ஓக்கேவா.

என் ஜோடி மஞ்சகுருவி என்று பாடலை சூப்பரா சக்ரம் கதைக்கு ஏத்த மாதிரி உல்டா செஞ்சு கொடுங்க.

ஆளுங்க
19-03-2011, 04:25 PM
இந்த பாட்டு ஆதவாவ மனசுல நினைத்து எழுதினது இல்லையே?:lachen001::lachen001:

ஏங்க என்ன வீணா வம்புல மாட்டி விடுறீங்க?? :traurig001:


அது யாரப்பா அலுங்கா
நாந்தேன் :mini023:

ரீமிக்ஸ் எல்லாம் எழுதி பட்டைய கிளப்பறீங்க

நன்றி..

ஆளுங்க
19-03-2011, 04:37 PM
என் ஜோடி கொள்ளக் குடி..
சாங் போடு மெல்ல தொடங்கி
ஆட்டம் போடடி ஹோ ஹோ..
பாட்டு பாடடி ஹோ ஹோ..
:lachen001:

Nivas.T
19-03-2011, 04:43 PM
:medium-smiley-080::sport009:இயக்குனர்ங்கர சின்னப் பொறுப்ப நான் எடுத்துக்கிறேன்:062802sleep_prv::smilie_bett:

ஸ்டார்ட் ரெடி கேமரா :062802photo_prv:

ஆக்சன் :icon_clap:

கட்:sport009:

பேக்கப் :082502now_prv:

எப்புடி???????????????? :icon_dance:

Nivas.T
19-03-2011, 04:48 PM
ஆங்கிலத்தில் வீல் என்று வச்சா நல்லா இருக்குமுல்ல


திகில் படம் போல:sprachlos020::sprachlos020:

யாரு வீல்.....ன்னு கத்தி அலற்றாங்க :eek::eek:

இது தமிழா? இல்ல ஆங்கிலமா?:icon_rollout::icon_rollout:

ஒரே கொழப்பமா இருக்கே :confused::confused::confused:

:D:D:D

தாமரை
19-03-2011, 06:07 PM
அடடா, விட்டா என்பாத்திரத்தை டைட்டிலுக்கு முன்னாலேயே முடிச்சிருவீங்க போல இருக்கே.. வாத்தியாரே நாந்தான் உங்க காப்பியங்களைப் பற்றி உயர்வாப் பேசினவன். எனக்கு வெளிநாட்டுப் படபிடிப்பு, டூயட் ஸாங்கு, தத்துவப் பாடல் மூணும் இருக்கும். சண்டை அதிகம் எனக்கு வேண்டாம். கிளைமாக்ஸ் சண்டை மட்டும் போதும்.


அப்புறம் இன்னொரு கொசுறு விஷயம்.. நம்ம தமிழ் சினிமாவில் ஹீரோ இண்ட்ரடக்ஷனுக்கு பாட்டு + ஃபைட்டு வைக்கிறாங்களே இந்த சம்பிரதாயத்தை ஆரம்பிச்சு வச்சது யாரு தெரியுமா?

ஜேம்ஸ்பாண்ட் 007 தான். இன்னும் ஜேம்ஸ் பாண்ட் படங்களில அதே மாதிரிதான். முதல்ல சம்பந்தமில்லாம ஒரு ஃபைட்டு.. அது முடிஞ்சவுடன் டைட்டில் ஸாங்,,

சிவா.ஜி
20-03-2011, 06:08 AM
நானு........??????

வாத்தியாரே.....கெளப்புங்க......இந்த ஹீரோன்னு ஒரு சின்ன ரோல் இருக்கே அத மட்டும் எனக்கு குடுத்துடுப்க்க.....சன் பிக்ஸ்சர்ஸ...விநியோகத்துக்கு நான் ஏற்பாடு பண்ணிடறேன்....அப்புறமென்ன....சூப்பர் டூப்பர் ஹிட்டுதான்.....

ஓவியன்
20-03-2011, 06:14 AM
ஆஹா கிளபிட்டீங்களா வாத்தியாரே....!!! :sprachlos020:

திரியில் யானும் ஐக்கியமே..!! :cool:

அன்புரசிகன்
20-03-2011, 11:20 PM
கால்ஷீட் என்கிறாங்களே.. அப்படியென்றால் காலப்பிடிச்சு வாங்குற சீட் ஆ???
ஆதவாவுக்காக கண்டவன் காலில எல்லாம் விழ தயாராகீட்டீங்களே லொ.வா.. :D :D :D

ஓவியா
21-03-2011, 12:56 AM
அஹஹஹஹ் அஹஹ்ஹாஹ, அனைவரின் பதிவுகளும் அமர்களம்.

ப்லீஸ் ரொம்ப கெஞ்சி கேட்கிறேன், அந்த வில்லி வேடத்தில் மட்டும் என்னை போட்டுடாதீங்க.....:D:D கண்மனியக்காவா வில்லியா போடுங்க.. கதை சூப்பரா போகும்.

என்னை போலிஸா போடுங்க, அன்புவ டீசியா போடுங்க (அன்புக்கு ஒரு மேசைய போட்டு :D:D உக்காந்த இடத்திலே சூட்டிடீங் எடுக்கலாம்) அப்பதான் முடிவில் கண்மணியக்காவ தூக்கிப் போட்டு நான் ஒரு சுலட்டு சுலட்டலாம், நேராதான் அந்தம்மாவ நான் சமாளிக்க முடியவில்லை, உங்க கதையிலாவது இது நடகட்டுமே. ;)


இது என் குடும்ப படம் போல இருக்கு! தாமரை அண்ணன், சரண் தம்பி, ஆதவா தம்பி, ஆதி தம்பி... சுத்தம் அப்ப தமன்னா எனக்கு அண்ணியா? மச்சினியா?

அன்புரசிகன்
21-03-2011, 02:32 AM
டீ சீ என்றால்??? :confused::confused:

sarcharan
21-03-2011, 04:26 AM
மன்ற நன்பர்களுக்காக

கமல்ஹாசனின் காப்பியங்கள் என்ற திரியில் நடந்த காரசார விவாதங்களின் விளைவு தான் இப்படி ஒரு தலைப்பில் திரி ஆரம்பிச்சுட்டேன்.


ஆதவரே, உங்க பதிவு கமல் வரைக்கும் எட்டுச்சோ இல்லையோ மன்றத ஒரு கலக்கு கலக்கி இருக்கு...



சரி மேட்டருக்கு வர்ரேன். நான் காப்பி எங்கிருந்தும் காப்பி அடிச்சு இங்க போட மாட்டேன். எல்லாமே நான் சொந்தமா டைப் அடிச்சு தான் இத்திரியில் பதிக்க போகிறேன்.


கமல் காப்பி அடிக்குறாருன்னு சொல்லிட்டு இப்போ கமல் படத்த நீங்க காப்பி அடிக்கிறீங்களே... ஆதவா இதப்பத்தி ஒரு திரி எழுதுங்க.



ஆனால் சினிமா கதைகள் மட்டும் பழசு பட் மன்றத்துக்கு ஏத்த மாதிரி லொள்ளுதனமா புதுசா மாத்தி அமைச்சு காப்பியங்களாக தயாரிச்சிருவோம்.

சரி சரி முதல் படம் எடுக்க ஆரம்பிக்கலாமா.
படத்தின் பெயர் : சக்ரம் (ஆங்கிலத்தில் வீல் என்று வச்சா நல்லா இருக்குமுல்ல)

கதைசுருக்கும் : தாமரை என்ற விஞ்ஞானி

வேறென்ன சொல்ல.. வம்ப விலைக்கு வாங்கும் வயசு..

விஞ்ஞானிகளுக்கு என்ன வயசுன்னு தாமரயாருடைய எந்திரன் பட விமர்சனத்த படிச்சு தெரிஞ்சுக்குங்க..

நம்ம "தலை"க்கும் ஏதாவது யு .எஸ் ப்ரெசிடென்ட், இந்தியன் ப்ரெசிடென்ட் ரோல் ஒன்னு குடுங்க. ஓவியா அக்காவுக்கு ஒரு சொர்ணாக்கா ரோல் குடுங்க...

ஜெகதீசன் ஐயாவ தாமரை அண்ணாவோட நாசா நண்பர் ஆகுங்க.. பாருங்க நான் எவ்வளவு டிப்சு தந்திருக்கேன்...


கைது செய்ய சர்சரன் + ஆதன்


வேட்டையாடு விளையாடு, குருதிப்புனல் மாதிரியா.. ஹையா ஜாலி




விரிவான கதை பிறகு பாப்போம். இப்போதைக்கு படத்துக்கு ஏத்த டைட்டில் சாங் மட்டும் பதித்து விடுகிறேன்.

எனக்கும் ஒரு கன் பேரல் சாங் வையுங்க...




சக்ரம் சக்ரம்
சக்ரம் சக்ரம்


ஹாய் யார் இந்த படத்தோட ஹீரோன்னு எனக்கு தெரிஞ்சுபோச்சு...

நான் தான் ஹீரோ.. ஐ ஆம் 007.




எனக்கு வெளிநாட்டுப் படபிடிப்பு, டூயட் ஸாங்கு, தத்துவப் பாடல் மூணும் இருக்கும். சண்டை அதிகம் எனக்கு வேண்டாம். கிளைமாக்ஸ் சண்டை மட்டும் போதும்.


த்ரீ ரோசெஸ் பட லைலா மாதிரி கண்டிஷன் போட ஆரம்பிச்சுட்டாருய்யா


ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வரும் மிஸ்டர் க்யு நீங்க தான். உங்களுக்கு ஃபைட் எல்லாம் கிடையாது.




ஜேம்ஸ்பாண்ட் 007 தான். இன்னும் ஜேம்ஸ் பாண்ட் படங்களில அதே மாதிரிதான். முதல்ல சம்பந்தமில்லாம ஒரு ஃபைட்டு.. அது முடிஞ்சவுடன் டைட்டில் ஸாங்,,

எனக்கும் ஒரு டைட்டில் சாங் வேணும். போக்கிரி படத்துல வர்ற மாதிரி, நானும் ஆதனும் ஆடபோறோம்...

aren
21-03-2011, 05:58 AM
கதை நல்லா சூடு பிடிக்குதே. இன்னும் கதையை சிறப்பா எழுதுங்கப்பா.

அந்தக் கள்ளக்கூட்டத்தின் தலைவன் யாரப்பா? ஆதவாவி பாஸ் யார்ன்னு கேட்டேன். நம்ம "தலை" மணியா அவர்களுக்கு கொடுக்கலாமே. அவர் கால்ஷீட் கிடைக்கும்னு நினைக்கிறேன்.

ஆதவா
21-03-2011, 06:32 AM
இது சரின்னு சொல்றிங்களா இல்ல தப்புனு சொல்றிங்களா?:D:D

தெரியலயேப்பாஆஆஆஆஆ :frown:


இந்த பாட்டு ஆதவாவ மனசுல நினைத்து எழுதினது இல்லையே?:lachen001::lachen001:

:sauer028:




ஓ புளியங்கொட்டை, பொதினா சட்னி, பெருங்காயம், ரேசன் அரிசி இதையும் கடத்துவதா அடுத்த பாகத்தில் விரிவா எழுதிறேன் போதுமா.

கொல்லங்குடி கருப்பாயி அவர்களின் கால்சீட்டுக்காக வெயிட்டிங்.

ஆள பாரு, தமன்னா ஆதனுக்கு தான் ஜோடியா நடிக்கறாளாக்கும் (அவள் சக்ரம் ஸ்பெசலிஸ்ட்)
.
இல்லாட்டி இப்படி வெச்சுக்குவோம்... இதே படத்தை இந்தியிலயும் பண்ணுங்க... ராவணன்ல விக்ரம் ஐஸ்வ்ர்யா ஜோடி மாதிரி வில்லணாவும் கதாநாயகனாகவும் தமன்னாகூட ஜோடி போட்டுடலாம்!!! (இந்த டீலுக்கு ஒத்துக்கிட்டாத்தான் என்னோட கால்ஷீட் கிடைக்கும்!!! அவ்வ்ங்!!)



என் ஜோடி கொள்ளக் குடி..
சாங் போடு மெல்ல தொடங்கி
ஆட்டம் போடடி ஹோ ஹோ..
பாட்டு பாடடி ஹோ ஹோ..
:lachen001:

வேண்டவே வேண்டாம்... ஆடியன்ஸ் சிகரெட் அடிக்க போகமாட்டாங்க... சரக்கடிக்கவே தொடங்கிடுவாங்க




இது என் குடும்ப படம் போல இருக்கு! தாமரை அண்ணன், சரண் தம்பி, ஆதவா தம்பி, ஆதி தம்பி... சுத்தம் அப்ப தமன்னா எனக்கு அண்ணியா? மச்சினியா?


நான் உங்களுக்கு தம்பிதானே... அப்படின்னா நாத்தனாரு!!:icon_b:


டீ சீ என்றால்??? :confused::confused:

டெபுடி கமிஷனராம்... உங்களுக்கு சட்டை தெச்சே டிபார்ட்மெண்ட் அழிஞ்சு போய்டும்னு அக்கா சொல்றாங்க.... இல்லக்கா???



அந்தக் கள்ளக்கூட்டத்தின் தலைவன் யாரப்பா? ஆதவாவி பாஸ் யார்ன்னு கேட்டேன். நம்ம "தலை" மணியா அவர்களுக்கு கொடுக்கலாமே. அவர் கால்ஷீட் கிடைக்கும்னு நினைக்கிறேன்.

கொள்ளக்கூட்டத்தலைவரா?? அதுசரிங்கண்ணா.... பார்க்கற எல்லாரும் வயிறு வலிக்க போறதுக்கா?

அப்பறம் ஆக்*ஷன் படம் காமெடியாயிடும்!!!

ஓவியன்
21-03-2011, 06:48 AM
தெரியலயேப்பாஆஆஆஆஆ


இதை நடிகர் சிவகுமார் பாணியில் வாசித்துப் பார்த்து, என்னையும் அறியாமல் சிரித்து விட்டேன்..!! :D:D:D

-----------------------------------------------------------------------------------------------------------------------

ஆதவா,

அப்படியே லொள்ளுவாத்தியார் இந்த சினிமாவுக்காகா எங்கே, எங்கே இருந்தெல்லாம் காப்பி அடிக்கிறார் என்பதையும் கண்டு பிடியுங்களேன்..!! :cool:

ஓவியன்
21-03-2011, 06:50 AM
லொ.வா.. :D :D :D

அன்புரசிகன் எதோ ஒரு மோசமான வார்த்தையால் திட்டுகிறார், இதனை மன்ற பொறுப்பாளர்கள் கவனிக்கவும். :wuerg019:

முரளிராஜா
21-03-2011, 06:55 AM
உங்களுக்கு ஏன் அந்த பாட்டு வரி பிடிக்கவில்லை என்று எனக்கு
தெரியும் ஆதவா. நீங்க எதிர்பார்த்த பாட்டு இதானே
என் ஜோடி தமன்னா குருவி
சாஞ்சாடு இந்த ஆதவாவ தழுவி
ஆட்டம் போடடி ஹோ ஹோ..
பாட்டு பாடடி ஹோ ஹோ..:D:D

அன்புரசிகன்
21-03-2011, 07:19 AM
அன்புரசிகன் எதோ ஒரு மோசமான வார்த்தையால் திட்டுகிறார், இதனை மன்ற பொறுப்பாளர்கள் கவனிக்கவும். :wuerg019:

சும்மா இரப்பு. ஏற்கனவே சிரிப்பு போலீசென்று ஓவியாக்கா சொன்ன கடுப்பில இருக்கினம்.:lachen001:

அன்புரசிகன்
21-03-2011, 07:25 AM
அப்பறம் ஆக்*ஷன் படம் காமெடியாயிடும்!!!

அதுதானே. ஆதவா இருக்கும் போது இன்னொரு காமடியனா.? கூடவே கூடாது.:D

ஆதவா
21-03-2011, 08:35 AM
இதை நடிகர் சிவகுமார் பாணியில் வாசித்துப் பார்த்து, என்னையும் அறியாமல் சிரித்து விட்டேன்..!! :D:D:D

-----------------------------------------------------------------------------------------------------------------------

ஆதவா,

அப்படியே லொள்ளுவாத்தியார் இந்த சினிமாவுக்காகா எங்கே, எங்கே இருந்தெல்லாம் காப்பி அடிக்கிறார் என்பதையும் கண்டு பிடியுங்களேன்..!! :cool:

நிச்சயமா..... அதுவும் நானும் படத்தில இருக்கிறதால “சுத்தமான” கதை வேணும்னு டார்ச்சர் பண்ணுவேன்!!


அன்புரசிகன் எதோ ஒரு மோசமான வார்த்தையால் திட்டுகிறார், இதனை மன்ற பொறுப்பாளர்கள் கவனிக்கவும். :wuerg019:

:lachen001::lachen001:


உங்களுக்கு ஏன் அந்த பாட்டு வரி பிடிக்கவில்லை என்று எனக்கு
தெரியும் ஆதவா. நீங்க எதிர்பார்த்த பாட்டு இதானே
என் ஜோடி தமன்னா குருவி
சாஞ்சாடு இந்த ஆதவாவ தழுவி
ஆட்டம் போடடி ஹோ ஹோ..
பாட்டு பாடடி ஹோ ஹோ..:D:D

இது சூப்பர்.... படத்தில அஞ்சு பாட்டும் உங்களுக்குத்தான்.... :icon_b::icon_b:


சும்மா இரப்பு. ஏற்கனவே சிரிப்பு போலீசென்று ஓவியாக்கா சொன்ன கடுப்பில இருக்கினம்.:lachen001:

:lachen001::lachen001::lachen001::D:D

Nivas.T
21-03-2011, 09:26 AM
அதுதானே. ஆதவா இருக்கும் போது இன்னொரு காமடியனா.? கூடவே கூடாது.:D

ஐ எனக்கு சந்தோசமா இருக்கு

:D:D:D:D

lolluvathiyar
21-03-2011, 09:53 AM
ஆகா நான் சின்ன கோடு தான் போட்டேன் ஒரே நாள்ல்ல வந்து பாத்தா இங்க தார் ரோடே போட்டு அதுல புல்டவுசரு ஓட்டி கிட்டு இருக்காங்க.

கால்ஷீட் என்கிறாங்களே.. அப்படியென்றால் காலப்பிடிச்சு வாங்குற சீட் ஆ???
இல்ல கால வாரி விட்டு வாங்கற சீட்டு.

இந்த ஹீரோன்னு ஒரு சின்ன ரோல் இருக்கே அத மட்டும் எனக்கு குடுத்துடுப்க்க
ஆமா நம்ம கதையில ஹீரோ என்ற பெயரில் ஒரு சின்ன ரோலு இருக்கு ஆனா அதுக்கு நீங்க நடிக்க முடியாது ஏன்னா அது சைக்கிள். வேனும்னா அதை ஓட்டி பழகும் ஒரு 70 வயசு முதியவர் ரோல் வச்சுக்கலாம்.


இயக்குனர்ங்கர சின்னப் பொறுப்ப நான் எடுத்துக்கிறேன்
பேக்கப் :
எப்புடி????????????????
பாருங்கய்யா இயக்குனர் பொருப்ப நிவாஸ்கிட்ட தான் கொடுத்தேன் ஆனால் அவர் பேக்கப் செஞ்சுட்டதால அந்த பொருப்ப பொருப்பான வேற யார் கிட்டயாச்சும் கொடுத்துரலாம்.

அடடா, விட்டா என்பாத்திரத்தை டைட்டிலுக்கு முன்னாலேயே முடிச்சிருவீங்க போல இருக்கே..
என்னது முடிச்சிருவீங்களா, உங்க பாத்திரத்தை டிரெலரோட முடிச்சாச்சே கவனிக்கலியா? சரி சரி கதையின் இடையில் உங்களுக்கு ரோல் கொடுத்து உங்களுக்கு 24 வயசுல மூனு லேடி அஸிஸ்டன்டும் கொடுத்திரலாம்.


திரியில் யானும் ஐக்கியமே
ஓவியனுக்கு பொருத்தமான இளிச்சவான் ரோல் எதுக்கு யோசிச்சுகிட்டு இருக்கேன். விறைவில் சொல்லி விடுகிறேன்.


அந்தக் கள்ளக்கூட்டத்தின் தலைவன் யாரப்பா? ஆதவாவி பாஸ் யார்ன்னு கேட்டேன். நம்ம "தலை" மணியா அவர்களுக்கு கொடுக்கலாமே.
கொடுத்திரலாமே.


என் ஜோடி தமன்னா குருவி
சாஞ்சாடு இந்த ஆதவாவ தழுவி
சின்ன பசங்கள இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி ரனகளம் செஞ்சுடுவீங்க போல இருக்கு.


கண்மனியக்காவா வில்லியா போடுங்க.. கதை சூப்பரா போகும்.
நான் மன்றத்துக்கு வந்து ரொம்ப நாள் ஆச்சு கன்மனி பதிப்புகளை படிச்சு அதுக்கு தகுந்த மாதிரி வில்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லி போஸ்ட் கொடுத்திடறேன்.


என்னை போலிஸா போடுங்க, அன்புவ டீசியா போடுங்க
ஓக்கே டன். பட் டிஸ்மிஸ் செய்ய பட்ட முன்னால் போலீஸ் அதிகாரி (ப்ளேஷ் பேக் கதைகளும் உண்டு). அன்புரசிகனுக்கு டீ பன் வாங்கு கதாபாத்திரம் வர உங்களுக்கு எவ்வளவு ஆசைபாருங்க.

சுத்தம் அப்ப தமன்னா எனக்கு அண்ணியா? மச்சினியா?
பாட்டியா இருக்கலாம் (அப்ப தமன்னா யாருக்கு ஜோடி என்று உங்கள் யூகத்துக்கு விட்டு விடுகிறேன்)

சரி கதைக்கு போவோம்

முதல் சீன் டைட்டில் சாங் : அதை நிவாஸ் அவர்கள் பிறகு ரீலீஸ் பன்னுவாரு.
இரன்டாவது சீன் : விஞ்ஞானி தாமரை அன்னாவை அடித்து துவைத்து ஆதவா கோஸ்டி சக்ரத்தை கடத்தும் சீனை பொருமையாக மிக சிறந்த முறையில் எழுத வேன்டும் என்பதால் அதையும் பிறகு எழுதுவோம் (எழுதி கொடுப்பவர்களுக்கு ஆதவாவிடமிருந்து தக்க வெகுமதி கிடைக்கும் என்று நம்பக தகுந்த வட்டாரங்களிலிரு ந்து செய்தி கசிந்திருகிறது)

மூன்றாவது சீன்: ஸ்டார்ட் டேக் ஓக்கே
இடம் : கொங்கு மன்டல போலீஸ் ஸ்டேசன்
ஸ்டேசனே ஒரே பரபரப்பாக இருந்தது. குறுக்கும் நெடுக்கும் போலீஸ்காரர்கள் நடந்து போய் கிட்டு இருந்தாங்க. ஸ்டேசன் நடுவே கான்பரன்ஸ் அரை அங்கு போலீஸ் முக்கிய அதிகாரிகள் வட்ட மேசையில் அவசர ஆலோசனை செஞ்சு கிட்டு இருந்தாங்க. அனைவருக்கும் டீ போன்டா பரிமாரி கொன்டு இருந்தார் கான்ஸ்டபில் அன்புரசிகன்.

போலீஸ் பதிவாளர் (மட்டும்) ஆரென் : "இன்று நம்ம மாநிலத்தில் விரும்ப தகாத சம்பவம் ஒன்று நடந்திருக்கு. தாமரை என்ற 70 வயது விஞ்ஞானி சக்ரபுத்திரன் என்ற எதையோ கண்டு பிடிச்சிருக்காரு. அது என்ன என்பது மர்மமாக இருக்கிறது. அந்த சக்ரபுத்திரத்தை நீலாம்ப்பூர் பைபாஸ் சாலையில் மாபியா பாதுகாப்பில் கொன்டு வரும் போது அதை ஆதவா என்ற சர்வதேச கடத்தல் காரன் ஆட்டோவை மறித்து கடத்தி விட்டாராம்"

ஏசி நிவாஸ் (ஏசி என்றால் அசிஸ்டன்ட் காண்ஸ்பட்பில் என்று மட்டும் பொருள் கொள்ளவும்) தனது மீசையை வருடி கொன்டே.

நிவாஸ் : இது நம்ம நாட்டுக்கே மிகபெரிய அச்சுருத்தல். இந்த கடத்தல் சம்பவத்தில் கேசுவாலிட்டீஸ் ஏதாச்சும் நடந்திருக்கா"

இன்ஸ்பெக்டர் ஆதன் : "எதுக்கு நாம எல்லாரும் விஞ்ஞானி தாமரையை மாலையோட போய் பாக்கலாமா"

ஆரென் : "அவ்வளவு மோசமா எதுவும் நடக்கல, ஆதவா தாமரையை புரட்டி எடுத்துட்டதால தாமரை அவர்கள் இப்ப ஐசீயூல இருக்காராம். கோமா தெளிஞ்ச பிறகு போய் அவரை பார்த்தா தான் நமக்கு புல் டிடெயில்ஸ் கிடைக்கும்"

இன்ஸ்பெக்டர் ஆதன் : "சரி இந்த மேட்டரை இன்வஸ்டிகேட் செய்ய நாம யாரை நியமிக்கலாம். இப்ப அது தான் முக்கிய மேட்டரே"

ரிடையரான முன்னால் ஏட்டு ஓவியன் பேச தொடங்கினார்.

ஓவியன் : "இவ்வளவு பெரிய மேட்டர டீல் பன்னனும்னா நம்ம லொள்ளுவாத்தி 007 தான் சரினு தோனுது"

ஆரென் : "அவர போய் இ ந்த சின்ன டப்பாங்குத்து மேட்டருக்கெல்லா கூப்படி கூடாது ஆதவா எல்லாம் சும்மா வலுக்கு வாலு கடத்தல்காரன் அதனால வேற யாரையாச்சும்... ஓ யெஸ் நம்ம போலீஸ் துரையில் வீர பென்மனி ஓவியாவை இதுக்கு நியமிச்சா என்ன"

இன்ஸ்பெக்டர் ஆதன் : "ஓவியா அவுங்க மலேசியாவுல முக்கிய டெரரிஸ்ட வேவு பாக்கற வேலையில் இருக்காங்களாமே"

ஆரென் : "அந்த வேலைக்கு சிவாஜியை போட்டு ஓவியாவை இங்க அழைச்சு இதை இன்வஸ்டிகேட் செய்ய சொல்லலாம்"

ஓவியன் : "ஓவியா திறமையானவங்க தான் ஆனால் அவுங்க மசால் போன்டாவுக்கு அடிக்ட் ஆச்சே போன முரை ஒரு பிக்பாகெட் காரனை பிடிச்சு கூட்டீட்டு வரும் போது வழியில அவன் மசால் போன்டா வாங்கி கொடுக்க அம்மனி காஞ்ச மாடு கம்பங்கொல்லையில பூந்துமாதிரி 20 போன்ட முழுங்கறதுகுள்ள அவன் எஸ்கேப் ஆயிட்டானாம்"

இன்ஸ்பெக்டர் ஆதன் : "ஆம் அதனால அவுங்கள டிஸ்மிஸ் செஞ்சாங்களாம். சோ யாரை நியமிக்கலாம்" என்று இழுக்கும் போதே தீடிரென போலீஸ் ஸ்டேசன் பரபரப்பானது. டீ போன்டாவுடன் அன்பு ரசிகன் அவசரமாக உள்ளே ஓடி வந்து "சார் நம்ம ஸ்டேசனுக்கு எம் எல் ஏ வந்திருக்காரு" என்று சொல்ல அனைவருமே பதற்றமாகினர்.
யார் அந்த எம் எல் ஏ?
யார் இந்த பொருப்பை ஏற்க போறாங்க?

தொடரும்

Nivas.T
21-03-2011, 10:16 AM
முதல் சீன் டைட்டில் சாங் : அதை நிவாஸ் அவர்கள் பிறகு ரீலீஸ் பன்னுவாரு.

ரீலீஸ் பண்ணிடலாம் ஆனா அது எங்க
அரஸ்ட் ஆகுச்சு அது தெரியலையே :icon_rollout::icon_rollout:



இரன்டாவது சீன் : விஞ்ஞானி தாமரை அன்னாவை அடித்து துவைத்து ஆதவா கோஸ்டி சக்ரத்தை கடத்தும் சீனை பொருமையாக மிக சிறந்த முறையில் எழுத வேன்டும் என்பதால் அதையும் பிறகு எழுதுவோம் (எழுதி கொடுப்பவர்களுக்கு ஆதவாவிடமிருந்து தக்க வெகுமதி கிடைக்கும் என்று நம்பக தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்தி கசிந்திருகிறது)

:D:D



ஏசி நிவாஸ் (ஏசி என்றால் அசிஸ்டன்ட் காண்ஸ்பட்பில் என்று மட்டும் பொருள் கொள்ளவும்) தனது மீசையை வருடி கொன்டே.

நிவாஸ் : இது நம்ம நாட்டுக்கே மிகபெரிய அச்சுருத்தல். இந்த கடத்தல் சம்பவத்தில் கேசுவாலிட்டீஸ் ஏதாச்சும் நடந்திருக்கா"


:traurig001::traurig001::traurig001:



இன்ஸ்பெக்டர் ஆதன் : "எதுக்கு நாம எல்லாரும் விஞ்ஞானி தாமரையை மாலையோட போய் பாக்கலாமா"

:D:D:D:D



ஓவியன் : "இவ்வளவு பெரிய மேட்டர டீல் பன்னனும்னா நம்ம லொள்ளுவாத்தி 007 தான் சரினு தோனுது"

:eek::eek:



ஓவியன் : "ஓவியா திறமையானவங்க தான் ஆனால் அவுங்க மசால் போன்டாவுக்கு அடிக்ட் ஆச்சே போன முரை ஒரு பிக்பாகெட் காரனை பிடிச்சு கூட்டீட்டு வரும் போது வழியில அவன் மசால் போன்டா வாங்கி கொடுக்க அம்மனி காஞ்ச மாடு கம்பங்கொல்லையில பூந்துமாதிரி 20 போன்ட முழுங்கறதுகுள்ள அவன் எஸ்கேப் ஆயிட்டானாம்"

:lachen001::lachen001::lachen001:



இன்ஸ்பெக்டர் ஆதன் : "ஆம் அதனால அவுங்கள டிஸ்மிஸ் செஞ்சாங்களாம். சோ யாரை நியமிக்கலாம்" என்று இழுக்கும் போதே தீடிரென போலீஸ் ஸ்டேசன் பரபரப்பானது. டீ போன்டாவுடன் அன்பு ரசிகன் அவசரமாக உள்ளே ஓடி வந்து "சார் நம்ம ஸ்டேசனுக்கு எம் எல் ஏ வந்திருக்காரு" என்று சொல்ல அனைவருமே பதற்றமாகினர்.
யார் அந்த எம் எல் ஏ?
யார் இந்த பொருப்பை ஏற்க போறாங்க?
தொடரும்



சோ யாரா நியமிச்சா என்ன?

நாம யார நியமிக்க போறோம் ? :rolleyes::rolleyes:

Nivas.T
21-03-2011, 10:27 AM
டைரக்டர்: சார் கடத்துன சக்ரத்த வில்லன் ஆதவா கள்ளச்சந்தைல விக்கிரமாதிரி ஒரு சீன், அதுக்கு நச்சுன்னு ஒரு டயலாக் சொல்லுங்க சார்

வசனகர்த்தா: இதோ இருக்கு சார்

" ஆ.... சக்கரம்....சக்கரம்...சக்கரம்...சக்.....கரம்...

ஒர்ருவா...ஒர்ருவா.....ஒர்ருவா......

வட...., டீ...., சம்சா....., சக்கர முறுக்கே........ "


டைரக்டர்: இதுக்குதான் ரயில்வே ஸ்டேஷன்ல
டீ, காபி, விக்கிறவனெல்லாம் வசனகர்த்தாவா போட்டக்கூடாதுன்னு சொன்ன எங்க கேக்குறாங்க

தாமரை
21-03-2011, 11:21 AM
ஹையா நமக்கு டபுள் ரோல் கிடைச்சிருச்சி...

விஞ்ஞானி தாமரை அன்னாவை அடித்து துவைத்து :sprachlos020::sprachlos020::sprachlos020:

இதுக்குப் பழிக்குப் பழி வாங்கிடணும்..

ஆமாம் லொள்ளு வாத்தியாரே, கண்மணி யக்கா கிட்ட கிறுக்கு பதில்களில் மோதியது மறந்து போச்சா?

கூப்பிடு தூரம் : http://www.tamilmantram.com/vb/showpost.php?p=368771&postcount=1360

எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல : http://www.tamilmantram.com/vb/showpost.php?p=377237&postcount=1372

ஆதவா
21-03-2011, 12:03 PM
டைரக்டர்: சார் கடத்துன சக்ரத்த வில்லன் ஆதவா கள்ளச்சந்தைல விக்கிரமாதிரி ஒரு சீன், அதுக்கு நச்சுன்னு ஒரு டயலாக் சொல்லுங்க சார்

வசனகர்த்தா: இதோ இருக்கு சார்

" ஆ.... சக்கரம்....சக்கரம்...சக்கரம்...சக்.....கரம்...

ஒர்ருவா...ஒர்ருவா.....ஒர்ருவா......

வட...., டீ...., சம்சா....., சக்கர முறுக்கே........ "


டைரக்டர்: இதுக்குதான் ரயில்வே ஸ்டேஷன்ல
டீ, காபி, விக்கிறவனெல்லாம் வசனகர்த்தாவா போட்டக்கூடாதுன்னு சொன்ன எங்க கேக்குறாங்க

அந்த வசனகர்த்தா நீங்க தானே??

sarcharan
21-03-2011, 12:09 PM
அப்ப எனக்கு 007 ஜேம்ஸ் பாண்டு ரோல் இல்லையா?

Ravee
21-03-2011, 12:28 PM
ஏனுங்க லொள்ளு வாத்தியார் இந்த மதுரைகாரருக்கு என்ன வேஷம் கட்டிவிட போறீங்க ...... :)

Nivas.T
21-03-2011, 12:45 PM
அந்த வசனகர்த்தா நீங்க தானே??

ஆதவா

அது நம்ப பங்காளி "தக்ஸ்" தான்

வேர யாரால முடியும்? இப்டி யோசிக்க?

Nivas.T
21-03-2011, 12:45 PM
அந்த வசனகர்த்தா நீங்க தானே??

ஆதவா

அது நம்ப பங்காளி "தக்ஸ்" தான்

வேர யாரால முடியும்? இப்டி யோசிக்க?
:D:D:D:D:D

த.ஜார்ஜ்
21-03-2011, 01:53 PM
மே மாசம் முழுசும் என் கால்ஷீட்டும் காலியாதான் இருக்கு. கடத்தல் மன்னன் ஆதவாவின் இருப்பிடத்தை [கணினி, சாட்டிலைட் உதவியுடன்] கண்டுபிடித்துக் சொல்ல என்று கண்ணாடி அணிந்த ஒரு கிறுக்கன் தேவைப்படக் கூடுமே?

Nivas.T
21-03-2011, 02:27 PM
மே மாசம் முழுசும் என் கால்ஷீட்டும் காலியாதான் இருக்கு. கடத்தல் மன்னன் ஆதவாவின் இருப்பிடத்தை [கணினி, சாட்டிலைட் உதவியுடன்] கண்டுபிடித்துக் சொல்ல என்று கண்ணாடி அணிந்த ஒரு கிறுக்கன் தேவைப்படக் கூடுமே?

:eek::eek:

lolluvathiyar
21-03-2011, 04:02 PM
ஆமாம் லொள்ளு வாத்தியாரே, கண்மணி யக்கா கிட்ட கிறுக்கு பதில்களில் மோதியது மறந்து போச்சா?

ஆகா இப்பதான் நியாபகம் வந்திருச்சு (வயசாயிருச்சல்ல அதான் நியாபக மறதி ஓவர்). சோப்பு நுரை வச்சு ஆம்லெட் போட்ட அந்த கன்மனிக்கு சந்தேகமே இல்லை வில்லி ரோல் தான் பக்காவா பொருந்தும்.

அப்ப எனக்கு 007 ஜேம்ஸ் பாண்டு ரோல் இல்லையா?
இருக்கு ரொம்ப ஹெவி டேலன்டான 007 ரோல் உங்களுக்கு கொடுத்திருவோம்.

ஏனுங்க லொள்ளு வாத்தியார் இந்த மதுரைகாரருக்கு என்ன வேஷம் கட்டிவிட போறீங்க
கதையில டிம்பிள் கபாடியா ஒரு அழகு தேவதை வருவா அவளுக்கு அன்னன் ரோல்


மே மாசம் முழுசும் என் கால்ஷீட்டும் காலியாதான் இருக்கு.
ஆகா தானா வந்து ஆப்பு வாங்கறாங்கப்பா. உங்களுக்கு ரோல் இருக்கு அது உங்க பேர்லயே கதாபாத்திரமும் வரும். ஏன்னா கதை நடக்கும் இடம் ஆப்கானிஸ்தான்.


ஆதவாவின் இருப்பிடத்தை [கணினி, சாட்டிலைட் உதவியுடன்] கண்டுபிடித்துக் சொல்ல என்று கண்ணாடி அணிந்த ஒரு கிறுக்கன் தேவைப்படக் கூடுமே?
அவர கண்டு பிடிக்க அவ்வளவு கஸ்டபடவேன்டியது இல்லை. ஆனா யார் அ ந்த கன்னாடி அனிந்த மர்ம நபர் சொல்லுங்க அவருக்கு அதிபயங்கர கனினி அறிவு விரிவா எழுதி விடுகிறேன்.

ஷீ-நிசி
21-03-2011, 04:36 PM
கதை கொஞ்ச நாள் போயிட்டுருக்கும் போது சடால்னு யாரையாச்சும் சாகடிச்சிட்டு இனி இவருக்குபதிலாக இவர் வருவார்னு போடுவாங்களே... அத மாதிரி யாரையாச்சும் கொன்னுட்டு ஒரு ரோல் கொடுங்க வாத்தி :lachen001: :lachen001:

ஷீ-நிசி
21-03-2011, 04:39 PM
Originally Posted by lolluvathiyar
ஓவியன் : "ஓவியா திறமையானவங்க தான் ஆனால் அவுங்க மசால் போன்டாவுக்கு அடிக்ட் ஆச்சே போன முரை ஒரு பிக்பாகெட் காரனை பிடிச்சு கூட்டீட்டு வரும் போது வழியில அவன் மசால் போன்டா வாங்கி கொடுக்க அம்மனி காஞ்ச மாடு கம்பங்கொல்லையில பூந்துமாதிரி 20 போன்ட முழுங்கறதுகுள்ள அவன் எஸ்கேப் ஆயிட்டானாம்"


:lachen001: :icon_rollout: :lachen001::icon_rollout: :lachen001: :icon_b:

அன்புரசிகன்
21-03-2011, 11:35 PM
கதை கொஞ்ச நாள் போயிட்டுருக்கும் போது சடால்னு யாரையாச்சும் சாகடிச்சிட்டு இனி இவருக்குபதிலாக இவர் வருவார்னு போடுவாங்களே... அத மாதிரி யாரையாச்சும் கொன்னுட்டு ஒரு ரோல் கொடுங்க வாத்தி :lachen001: :lachen001:
இதென்ன கோலங்கள் தொடரோ???:lachen001:

nandabalan
22-03-2011, 02:17 AM
வாத்தியார் வெகு காலம் கழித்து இங்கு வந்தால் இங்கேயுமா அதுவும் இப்படியா? ஏன் இந்த கொலை வெறி?:lachen001:

ஓவியன்
22-03-2011, 05:08 AM
ரிடையரான முன்னால் ஏட்டு ஓவியன் பேச தொடங்கினார்.

ஆகா இப்படி என்னை பழிவாங்கியதுக்கே ஒரு தனித்திரி தொடங்கி லொள்ளு வாத்தியாரை உண்டு இல்லைனு பண்ணலாம்..!! :eek::eek::eek:

ஓவியன்
22-03-2011, 05:10 AM
அத மாதிரி யாரையாச்சும் கொன்னுட்டு ஒரு ரோல் கொடுங்க வாத்தி :lachen001: :lachen001:

என்னே ஒரு வில்லத்தனம்... :eek::eek::eek:

அன்புரசிகன்
22-03-2011, 05:15 AM
ஓவியன் தான் ஓய்வுபெற்றுவிட்டாரில்லே... அவர கொலசெஞ்சிடலாம் நிஷி... எரிக்கிறதா புதைக்கிறதா என்று இப்பவே கேட்டுவையுங்க.. :D :D :D

lolluvathiyar
22-03-2011, 10:50 AM
ஆகா இரன்டாம் பாகம் ரீலீஸ் ஆனவுடன் ஆளாலுக்கு வம்பு செஞ்சா கூட பரவாயில்ல ஷீ நிசி ஒரு ஸ்டெப் எக்ஸ்ட்ரீமுக்கு போய் யாரையாச்சும் போட்டெரிஞ்சு தனக்கு சீட் கேட்டிருக்கார். எலெக்சன் டைம்ல நம்ம ஆளுகளுக்கு எப்படி எல்லாம் திங்கிங் வருது பாருங்க. சரி அதையும் பரிசீலிக்கிறேன் ஷீ_நிசி
(யாரை கொல்லலாம்?).

ஓவியன் தான் ஓய்வுபெற்றுவிட்டாரில்லே... அவர கொலசெஞ்சிடலாம் நிஷி
டிப்ஸுக்கு மிக்க நன்றி. ஆனால் ஓவியனை எங்க வச்சு கொல்லனும் இனி மேல் தான் டிராப்ட் ப்ளான் போடனும். இந்த பாகத்துல கொல்ல முடியது.

எரிக்கிறதா புதைக்கிறதா என்று இப்பவே கேட்டுவையுங்க
ஆனாலும் இது கொஞ்சம் டூடூடூடூடூடூடூடூ மச். (காபி டீ வாங்கி கொடுக்கும் வேலை போட்டதுக்கு நீங்க ஓவியனை பழி வாங்கீட்டீங்க)

சரி நன்பர்களே இனி நாம அடுத்த சீன் போவோமா. முந்தையை சீனின் இறுதியில் இப்படி முடிஞ்சது.

தீடிரென போலீஸ் ஸ்டேசன் பரபரப்பானது. டீ போன்டாவுடன் அன்பு ரசிகன் அவசரமாக உள்ளே ஓடி வந்து "சார் நம்ம ஸ்டேசனுக்கு எம் எல் ஏ வந்திருக்காரு" என்று சொல்ல அனைவருமே பதற்றமாகினர்.
யார் அந்த எம் எல் ஏ?

இனி தொடர்ச்சி
மூன்றாவது சீன் (பி):
வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை மஞ்சள் துண்டு சகிதமாய் கூட 2 அல்லகையுடன் அந்த எம் எல் ஏ போலீஸ் ஸ்டேசனில் திற ந்த வீட்டில் ஏதோ நுழைவது போல நுழைந்தார். வந்தவுடன் அதனது அரசியல் பழக்க தோச கும்பிடு போட்டார். ஓவியன் அவருக்கு சேர் போட உட்கார்ந்தார் அந்த 65 வயசு எம் எல் ஏ

எம். எல். ஏ : "வனக்கம் நான் தான் சக்கரகோன எம்.எல்.ஏ தல மனியா. ஆமா என்ன ஏதோ தொலைஞ்சு போச்சு என்னுடைய அல்லகை மதுரைகார ரவீ ராவரான் அப்படி என்னப்பா தொலைஞ்சு போச்சு"

நிவாஸ் : "ஐயா அது வந்து சக்ரபுத்ரா என்ற சக்ரம் தொலைஞ்சு போச்சாம்."

எம். எல். ஏ தலமனியா : "பிஸ்கோத்து சமாசாரம் ஒரு சக்ரம் தொலைஞ்சதுக்கா இந்த அலட்டு அலட்டிகறீங்க. நான் ஏதோ மினிஸ்டரோட நாய் குட்டியோட கேர்ள் பிரன்டு தொலைஞ்சு போனதுக்கு தான் இப்படி மிரன்டு இருக்கீங்கனு நினைச்சேன்"

இன்ஸ்பெக்டர் ஆதன் : "சார் அது சாதர்ன சக்ரம் இல்ல. சக்ரபுத்ரா என்ற அழைக்கபடும் ஏவாகனையாம். பயங்கர ஆபத்தான ஆயுதமா"

எம். எல். ஏ தலமனியா : "என்ன ஏவுகனை கேள்விபட்டிருக்கே இது என்னய்யா ஏவாகனையா புதுசா இருக்கு கொஞ்சம் விளங்கர மாதிரி சொல்லுங்கப்பா"

நிவாஸ் : "சார் அத பத்தி எங்களுக்கே முழுசா தெரியாது. இதோ வீடியோ கான்பரசிங்கல அடிபட்டு ஐசியூவுல இருக்கும் தாமரையோட நாம பேசுவோம் அவர் விளக்குவாரு". சொன்னவுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஸ்பத்திரிக்கு தொடர்பு கொன்டார்கள். விடியோவில் தோன்றது ஒரு பென் டாக்டர்.

டாக்டர் : "வணக்கம் காவல்துரை நன்பர்களே நான் தான் டாக்டர் கீதா உங்களுக்கு என்ன வேண்டும்"

ஆரன் : "டாக்டர் கீதா அங்க விஞ்ஞானி தாமரை அவர்கள் நிலமை இப்ப எப்படி இருக்கு"

டாக்டர் கீதா : "ம்ஹூம் தாமரை உடல் நிலை பற்றி என்னத்தை சொல்ல
நொருங்கி போன கன்னாடியின் காதல் போல
நாவிடம் பவிடம் தரியாமல் சிதைந்தது கிடக்கு
மூன்றுகால் முயலாய் மூச்சுவிட சிரமபடும்
தாமரைக்கு நாங்கள் குழாய் மூலம் காற்றுவிட்டு
மூக்குதிறவுகோலாக்கி ஏதோவொரு தூண்டலாய்
இறுதி கடிதம் போல சிகிச்சை அளிக்கிறோம்"

ஆரன் : "ஐயோ டாக்டர் கீதா மேடம் நீங்க இப்படி கவிதையில சொன்னா எங்களுக்கு ஒன்னுமே புரியாது இது நேசனல் செக்யூரிட்டி மேட்டர் அவர்கிட்ட நாங்க சில நொடிகள் பேசனுமே"

டாக்டர் கீதா :
"ஓ மரனத்தில் வாயினில் நாடு
தோல்வியின் ரகசியம் அறிய
சிலதுளிகள்பேச அனுமதிக்கிறேன்
ஆனால் எச்சரிக்கை செய்கிறேன்
கொலைகளத்தின் ஓரத்தில் தாமரை
அதிகம் பேசாதீங்க"

என்று டாக்டர் கீதம் கவிதை மூலமே மாசில்லா மன்றவலம் பதில் சொல்லி நல்ல வேலை தாமரையை விடியோ கான்பரன்சில் காட்டினார். சிரம் கால் முகம் அனைத்தும் துனியால் மம்மி போல சுற்றபட்டு கிடந்தார்.

இன்ஸ்பெக்டர் ஆதன் : "மிஸ்டர் ஆதன், ஐம் இன்ஸ்பெக்டர் ஆதன், கடத்த பட்ட அந்த சக்ரபுத்ரா பத்தி கொஞ்சம் சொல்லுங்க"

முக்கி முனகி பேச அனுமதித்த சிறு ஓட்டை வழியாக நூடிஸ் தாமரை பேசினார்
தாமரை : "அது ஒரு ஏவாகனை"

இன்ஸ்பெக்டர் ஆதன் : "என்ன ஏவாகனையா மிசைல் மாதிரியா"

தாமரை : " நோ ஏவுகனை பத்த வச்சா பற ந்து போய் எதிரி நாட்டை அழிக்கும். என்னுடை சக்ரபுத்ரா ஒரு சக்ராயுதம் அதவாது உருட்டிவிடனும், எதிரி நாட்டை நோக்கி சைக்கிள் டயர் மாதிரி உருட்டி விட்டா அதவா போய் எதிரி இலக்கை தாக்கி அழிக்கும்"

இன்ஸ்பெக்டர் ஆதன் : "இது சக்ரம் தானே அவ்வளவு ஆபத்தானதா"

தாமரை : "சுயர், ராஜஸ்தானிலிருந்து உருட்டி விட்டா பாக்கிஸ்தான் சிந்து மாகனத்தை தாக்க முடியும் அமிரிஸ்டரிலிருந்து உருட்டி விட்டா லாகூரை தாக்கலாம் இதை சாட்டிலைட் மூலம் கண்டு பிடிக்க மிடியாது. இது தீவிரவாதிக கையில் சிக்குச்சுனா சர்வதேச பேரிழப்பு ஏற்படும் இதை நீங்க உடனடியா மீட்டு நம்ம நாட்டுக்கு கொன்டு வரனும்"

இன்ஸ்பெக்டர் ஆதன் : " மிக்க நன்றி தாமரை, நீங்க ரெஸ்ட் எடுங்க நாங்க மாலை உங்கள வந்து பாக்கறோம்"

எம். எல். ஏ தலமனியா : "ஒரு நிமிசம் தம்பி தாமரை இப்ப நீ அந்த சக்ரபுத்திரனை நூத்து கனக்குல தயாரிச்சு நம்ம ஆர்மிக்கு கொடுக்க நான் உனக்கு கான்ட்ராக்ட் வாங்கி தறேன்"

தாமரை : "சார் அது ரிசர்ச் லெவலில் தான் இருக்கு இன்னும் முழுசா வேலை செய்யாது"

எம். எல். ஏ தலமனியா : "அட அது வேலை செஞ்சா என்ன செய்யாட்டி என்ன, நான் கான்ட்ராக்ட் வாங்கி தர்ரேன். டபுள் மடங்க விலை வச்சுக்கோ, கான்ட்ராக்ட் தொகையில 20 சதம் எனக்கு கமிசன் வெட்டிரு" என்று பேச ஏசி நிவாஸ் இப்போதைக்கு விடியோ கனெக்சனை வெட்டினார்.

நிவாஸ் : "சார் தாமரை சொல்றத பாத்தா நம்ம எதிரி ஆதவா இதை ஆப்கானிஸ்தானிலிருந்து ஒழிச்சு வச்சு ஒரு யூசும் இல்லையே"

ஓவியன் : "ஆதவன் என்னிக்கு தான் யூசா யோசிச்சிருக்காரு. இருந்தாலும் அத அங்கிருந்து கடல்ல உருட்டி விட்டா குஜராத்த தாகக் முடியுமே.

எம். எல். ஏ தலமனியா : "என்ன குஜராத்த தாக்குமா? ஐயோ பக்கத்துலயே தாராபூர் அனுமின் நிலையம் இருக்கே"

ஓவியன் : "சார் தாராபூர் அனுமின் நிலையம் மகாராஸ்டிராவுல இருக்கு"

எம். எல். ஏ தலமனியா : "அட எங்கயோ இருக்கட்டும் அத நேத்துதான் என் பேர்ல எழுதி வச்சேன் அது மேல அந்த சக்ரம் முட்டாம பாத்துக்கோங்கப்பா"

ஆரன் : "என்ன சார் சொல்லறீங்க தாராபூர் அட்டாமிக் ப்ளான்ட் அது அனுமின் நிலையம் கார் வொர்சாப் அல்ல. அது கவர்மென்டோட நிலையம். அத நீங்க எப்படி எழுதி வக்க முடியும்"

எம். எல். ஏ தலமனியா : "அதெல்லாம் கேபினட் மீட்டிங்ல அப்ரூவல் வாங்கி ஒரே மனி நேரத்துல ஏலத்துக்கு விட்டு நான் வாங்கீட்டேன். கல்பாக்கத்தையும் வாங்க முயற்சி செஞ்சேன் கிடைக்கல"

ஆரன் வாசலில் கிடந்த அத்தனை செருப்புகளை எடுத்து தலையால் அடிக்க நினைச்சார். ஆனா ஸ்டேசன் ஜீப் டிரைவர் ரவீ கடவுளை அடிச்சுட்டதா நினைச்சு கோவிச்சுக்குவார் என்பதால் தலையில் கை வைத்து உட்கார்ந்து யோசிக்கலானார்.

எம். எல். ஏ தலமனியா : "சரி சரி அது போனா போகுது, அத திருடினது யாருனு கண்டு பிடிச்சீங்களா"

இன்ஸ்பெக்டர் ஆதன் : "ஆதவா தான் கடத்தி இருக்கனும்னு நாங்க சஸ்பக்ட் பன்னறோம்"

எம். எல். ஏ தலமனியா : "என்ன ஆதவா அவன் எனக்கு தோஸ்தாச்சே இந்த கோயமுத்தூருக்கு பக்கத்துல இருக்கானே அவன தான சொல்லறீங்க"

ஓவியன் : "அதே ஆதவா தான் ஒரு பொன்னு பின்னால கூட தீவரமா சுத்திகிட்டு இருந்தாரு"

எம். எல். ஏ தலமனியா : "நாங்க சின்ன வயசுல பார்ட்னரா இருந்து அக்கபக்கத்துல புளியங்காய் திருடினோமே, நான் வேனும்னா அவன்கிட்ட பேசி திருப்பி கொடுக்க சொல்லட்டுமா" என்று சொல்ல ஆரன் மனசுகுள்ள அப்பிருந்தே இதே தொழிலா என்று நினைச்சார்.

இன்ஸ்பெக்டர் ஆதன் : "சார் நீங்க நினைக்கற மாதிரி ஆதவா இப்ப சாதர்ன கிரிமினல் அல்ல மொல்லமாரி கேப்மாரி லொல்லமாரி முடிச்சவுக்கி ஆள்முழுங்கி இப்படி பல பட்டங்களுக்கு பொருத்தமா சர்வதேச தீவிரவாதி ஆகீட்டாரு"

எம். எல். ஏ தலமனியா : "சரி அவன சீக்கிரம் பிடிச்சு நாலு மொத்து மொத்துங்க உங்களுக்கு நான் எல்லா பவரும் தர்ரேன்"

இன்ஸ்பெக்டர் ஆதன் : "அங்கதான் ஒரு சிக்கலே இருக்கு சார் இப்ப ஆதவா ஒழிஞ்சிருக்கறது ஆப்கானிஸ்தான்ல அமெரிக்காவுக்கு தெரியாம அந்த நாட்டுகுள்ள போகவே முடியாதே"

எம். எல். ஏ தலமனியா : "அதெல்லாம் சப்ப மேட்டரப்பா, நான் பாத்துகறேன் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஒரு போன் போடு நான் பேசறேன்"

இன்ஸ்பெக்டர் ஆதன் : " சார் இப்ப அமெரிக்க அதிபரா இருக்கறது த.ஜார்ஜ்"

எம். எல். ஏ தலமனியா : "அட அந்த தம்பியா அவன் எனக்கு தூரத்து சொந்தம், போன போடு நான் பேசறேன்"

இன்ஸ்பெக்டர் ஆதன் : "சார் நாங்க அமெரிக்க ஜனாதிபதி பத்தி பேசிகிட்டு இருக்கோம்"

எம். எல். ஏ தலமனியா : "அட என்னப்பா, அங்க அவுங்க ரிபப்ளி கட்சிகூட வர்ர செனட் எலெக்சன்ல நாங்க கூட்டனி அமைச்சாச்சு. எங்களுக்கு டெக்சாஸ்ல 63 சீட் ஒதுக்கி கொடுத்திருக்காங்க"

நொந்து போனாங்க போலீஸ்காரங்க என்று நான் சொல்லவே வேன்டியதில்லை. இனி அடுத்த பாகத்தில் பார்போம்
தொடரும்

என்ன பாய்ஸ் என்னால முடிஞ்ச அளவுக்கு நகைசுவையா எழுத பாக்கறேன். ரொம்ப கடி போட்டுச்சுனா சொல்லுங்க ஸ்டைலை மாத்தறேன் அப்படி இல்லீனா அவுட் சோர்சிங் செஞ்சு பதிக்க வக்கறேன். ஆனா ஆப்பு மட்டும் நிக்காம போகனும். ஓக்கேவா.

கீதம்
22-03-2011, 11:39 AM
ம். என்கிட்ட கால்ஷீட் வாங்காமலேயே எனக்கொரு பாத்திரம் (அதான்பா கேரக்டர் ) தயார் பண்ணிட்டீங்க! ஜமாய்ங்க. அந்தக் கவிதை சூப்பர்.:icon_b:

எங்க ஊரு பாட்டுக்காரனில் ராமராஜன் பாட்டுப் பாடியே மாட்டை அடக்குவதுபோல் நோய்களை (நோயாளிகளை?) கவிதை சொல்லியே
வி(மி)ரட்டுவேனாக்கும்.:)

நாஞ்சில் த.க.ஜெய்
22-03-2011, 11:46 AM
என்ன வாத்தியாரே என்னை போன்ற புது முகங்களுக்கு வாய்ப்பில்லையா ?

தாமரை
22-03-2011, 11:48 AM
ம். என்கிட்ட கால்ஷீட் வாங்காமலேயே எனக்கொரு பாத்திரம் (அதான்பா கேரக்டர் ) தயார் பண்ணிட்டீங்க! ஜமாய்ங்க. அந்தக் கவிதை சூப்பர்.:icon_b:

எங்க ஊரு பாட்டுக்காரனில் ராமராஜன் பாட்டுப் பாடியே மாட்டை அடக்குவதுபோல் நோய்களை (நோயாளிகளை?) கவிதை சொல்லியே
வி(மி)ரட்டுவேனாக்கும்.:)

உங்க கவிதையைக் கேட்டுகிட்டு என்னால் மட்டும்தான் அந்த நிலையிலும் உயிரோட இருக்க முடியும் என்று வாத்தியாருக்குத் தெரிஞ்சிருக்கு பாருங்க. அந்த நுணுக்கத்தைப் பாருங்க..:lachen001::lachen001::lachen001:

கீதம்
22-03-2011, 11:50 AM
உங்க கவிதையைக் கேட்டுகிட்டு என்னால் மட்டும்தான் அந்த நிலையிலும் உயிரோட இருக்க முடியும் என்று வாத்தியாருக்குத் தெரிஞ்சிருக்கு பாருங்க. அந்த நுணுக்கத்தைப் பாருங்க..:lachen001::lachen001::lachen001:

எங்க? அதுக்கப்புறம் உங்களை பட்டறை பக்கமே பார்க்கமுடியலையே... :icon_p:

ஆதவா
22-03-2011, 12:01 PM
செம கலக்கல் வாத்தியாரே... ஏவாகணை, கீதம் கவிதை, எம்.எல்.ஏ, லொள்ளூ (சிலது மட்டும் எடிட் பண்ணிட்டேன்), என்று அதகளம் பண்ணீட்டீங்க.. இப்ப நடக்கிற தமிழ்மன்றம், தமிழ்நாடு அரசியல் எல்லாம் கலந்து கட்டி ஜமாய்ச்சிட்டீங்க.. இப்படியே தொடரவும்!!

ஆனா எப்பவுமே அதிகமா பேசறவரை, குறைச்சு பேசவெச்சுட்டீங்க... பாவம், உடல்முழுக்க கட்டு போட்டுவிட்டு வாய்க்கும் கட்டு போட்டுட்டீங்க!!!! நிறைய பேர் உஷ்ஷ்ஷ்ன்னு பெருமூச்சு விடற சத்தம் என் காதுல கேட்குது!

தாமரை
22-03-2011, 12:02 PM
எங்க? அதுக்கப்புறம் உங்களை பட்டறை பக்கமே பார்க்கமுடியலையே... :icon_p:

பெண்டிங் இருக்கிற விஷயங்களை எல்லாம் முடிச்சிட்டு வர்ரேன்.. தாமரை பதில்கள், தினம் ஒரு திருமந்திரம் இரண்டும் முடிச்சிட்டு வர்ரேன்.

முதலடியிலேயே சொற்குற்றம் இருக்கறதால எப்படி ஆரம்பிக்கிறது என்று யோசிச்சுகிட்டு இருக்கேனாக்கும்.

இதுதான் முதலடின்னு நீங்க நினைச்சு அழாதீங்க,,

sarcharan
22-03-2011, 12:28 PM
:):)என்னோட என்ட்ரி எப்போ? :):)

Nivas.T
22-03-2011, 12:37 PM
:):)என்னோட என்ட்ரி எப்போ? :):)

இடைவேளை விட்டபிறகு வரும் விளம்பரத்தில் :D:D:D

முரளிராஜா
22-03-2011, 12:41 PM
இடைவேளை விட்டபிறகு வரும் விளம்பரத்தில் :D:D:D
அய்யோ பாவம் நம்ம சாரா:D

ஷீ-நிசி
22-03-2011, 02:14 PM
என்னே ஒரு வில்லத்தனம்... :eek::eek::eek:

ஓகே! ரோல் ரெடி :aetsch013:

ஷீ-நிசி
22-03-2011, 02:15 PM
ஓவியன் தான் ஓய்வுபெற்றுவிட்டாரில்லே... அவர கொலசெஞ்சிடலாம் நிஷி... எரிக்கிறதா புதைக்கிறதா என்று இப்பவே கேட்டுவையுங்க.. :D :D :D

அன்பு வேனும்னா ஓவிய ஆவியாக்கிடலாம்!! செத்தாலும் கொடுப்போம்ல ரோலு!! :icon_b:

ஷீ-நிசி
22-03-2011, 02:17 PM
என்ன பாய்ஸ் என்னால முடிஞ்ச அளவுக்கு நகைசுவையா எழுத பாக்கறேன். ரொம்ப கடி போட்டுச்சுனா சொல்லுங்க ஸ்டைலை மாத்தறேன் அப்படி இல்லீனா அவுட் சோர்சிங் செஞ்சு பதிக்க வக்கறேன். ஆனா ஆப்பு மட்டும் நிக்காம போகனும். ஓக்கேவா.


இப்பதானே வாத்தி ஃபர்ஸ்ட் கியர் போட்டு ஸ்டார்ட் செஞ்சிருக்கீங்க.. போக போக பிக் அப் ஆகி அது பாட்டுக்கு போயிட்டே இருக்கும்.. கவலையே படாம நீங்க பாட்டுக்கு போயிட்டேயிருங்க... :rolleyes:

த.ஜார்ஜ்
22-03-2011, 03:57 PM
வெய்ட்டான ரோல்தான் குடுத்திருக்கீக.
அமெரிக்காவுக்கே அதிபரா கொண்டுபோய் உட்கார வைக்கிறதுன்னா லேசுப்பட்ட காரியமா.
இனி உலக நாட்டு தீவிரவாததைஎல்லாம் நான் ஒழிக்க போர் தொடுக்கணும். எத்தனையோ நாட்டு அதிபர்களைஎல்லாம் மாற்றி அமைக்கணும். அப்படியே எல்லா தீவிரவாதியும் எனக்கே ஆப்பு அடிக்கணும்.
அப்படியே ஆதவாவை கண்டுபிடிக்க, நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு முன்னாள் கடமை தவறாத அதிகாரியை நான் சொல்லித்தான் சம்மதிக்க வைக்க வேண்டும். அதானே.. கலக்குங்க.

ஆதன் பேசுவதனாலோ, அல்லது எம்.எல் ஏ வந்ததனாலோ.. எழுத்துபிழையும் வருகிறது. கவனிங்க.

கீதம்
22-03-2011, 08:46 PM
பெண்டிங் இருக்கிற விஷயங்களை எல்லாம் முடிச்சிட்டு வர்ரேன்.. தாமரை பதில்கள், தினம் ஒரு திருமந்திரம் இரண்டும் முடிச்சிட்டு வர்ரேன்.

முதலடியிலேயே சொற்குற்றம் இருக்கறதால எப்படி ஆரம்பிக்கிறது என்று யோசிச்சுகிட்டு இருக்கேனாக்கும்.

இதுதான் முதலடின்னு நீங்க நினைச்சு அழாதீங்க,,

அடிக்கடி அடியிருக்கும்,
அடிக்கடி கடியுமிருக்கும்,
அறிந்துதானே அறிவித்தேன்,
தானே வந்து தலைகொடுத்தேன்!:icon_b:

mania
23-03-2011, 01:50 AM
:D:D:D:D செம கலக்கல்......தொடருங்கள் வாத்தியாரே...... உங்களை தனியா கவனிச்சிக்கறேன்.....:rolleyes: ஆனால் எப்படியாவது இந்த சிங்க்ப்பூர் காரரை நல்லா மாட்டிவிடுங்க...
அன்புடன்
எம். எல். ஏ. மணியா ....:rolleyes::D:D

அன்புரசிகன்
23-03-2011, 02:15 AM
எம். எல். ஏ. மணியா ....:rolleyes::D:D

மேவி இழுத்த தலை. கழுத்தில் துண்டு 20 பவுண் தங்கச்சங்கிலி. கையில் நவநாகரீக அலைபேசி நவரத்னக்கற்கள் பதித்த தங்க மோதிரம் -2 விரல்களில்இ பக்கத்தில் ஒரு சில தொண்டர்கள் எப்போதும்... ஒரு தண்மையாக்கும் கறுப்புக்கண்ணாடி.....

அப்படியே சிவாஜி படத்தில வாற சுமன் மாதிரி இருப்பீங்க.... :D :D :D

நெசமாலுமே உங்களுக்கு சுமன் சொந்தமா??? :rolleyes:

mania
23-03-2011, 02:40 AM
மேவி இழுத்த தலை. கழுத்தில் துண்டு 20 பவுண் தங்கச்சங்கிலி. கையில் நவநாகரீக அலைபேசி நவரத்னக்கற்கள் பதித்த தங்க மோதிரம் -2 விரல்களில்இ பக்கத்தில் ஒரு சில தொண்டர்கள் எப்போதும்... ஒரு தண்மையாக்கும் கறுப்புக்கண்ணாடி.....

அப்படியே சிவாஜி படத்தில வாற சுமன் மாதிரி இருப்பீங்க.... :D :D :D

நெசமாலுமே உங்களுக்கு சுமன் சொந்தமா??? :rolleyes:

மொத்தத்தில் நான் உன்னை சந்தித்தபோது நீ அணிந்திருந்த ஆபரணங்கள் :rolleyes::rolleyes:எல்லாம் நான் அணிந்திருந்தால்.....?????!!!!!!!. அது யாரு சுமன்....?????நீ சும்னே இரு...:D:D:D
அன்புடன்
வெறும் மணியா.....:D

அன்புரசிகன்
23-03-2011, 02:50 AM
மொத்தத்தில் நான் உன்னை சந்தித்தபோது நீ அணிந்திருந்த ஆபரணங்கள் :rolleyes::rolleyes:எல்லாம் நான் அணிந்திருந்தால்.....?????!!!!!!!. அது யாரு சுமன்....?????நீ சும்னே இரு...:D:D:D
அன்புடன்
வெறும் மணியா.....:D
உங்க வாயில 10kg சீனி அள்ளிப்போடனும். நீங்க சொல்றதெல்லாம் என்கிட்ட இருந்தால்.... :icon_rollout:

mania
23-03-2011, 03:00 AM
உங்க வாயில 10kg சீனி அள்ளிப்போடனும். நீங்க சொல்றதெல்லாம் என்கிட்ட இருந்தால்.... :icon_rollout:
:D:D:D மன்மதா நீ இங்கு வா......:D:D:D
அன்புடன்
மணியா:D

ஆதவா
23-03-2011, 04:48 AM
ஆனால் எப்படியாவது இந்த சிங்க்ப்பூர் காரரை நல்லா மாட்டிவிடுங்க...
அன்புடன்
எம். எல். ஏ. மணியா ....:rolleyes::D:D

ஒரு எம்.எல்.ஏ மாதிரியே பேசறீங்களே!!! :D:D

தாமரை
23-03-2011, 04:56 AM
:D:D:D:D செம கலக்கல்......தொடருங்கள் வாத்தியாரே...... உங்களை தனியா கவனிச்சிக்கறேன்.....:rolleyes: ஆனால் எப்படியாவது இந்த சிங்க்ப்பூர் காரரை நல்லா மாட்டிவிடுங்க...
அன்புடன்
எம். எல். ஏ. மணியா ....:rolleyes::D:D

ஆரென் கார் மேல மணியாவுக்கு எப்பவுமே ஒரு கண்ணுதான்.

தனியா கவனிச்சுக்கிறேன் என்றால்..

தனியா மாட்டும் போது பாத்துக்கறேன் என்பதா?

தனியாக்கி (அதாவது சுத்தி இருக்கறவங்களை நாரத கலகம் செய்து துரத்தி) விட்டுட்டு அப்புறம் பார்த்துக்கறேன் என்பதா?

இல்லை ஒண்டிக்கு ஒண்டி பார்க்கலாமா என விடும் உதாரா?

நிஜக் குழப்பத்துடன்

மாதரை... இல்ல இல்ல ரைதமா.. இல்ல இல்ல தாமரை :D:D:D

lolluvathiyar
23-03-2011, 03:37 PM
நல்லபடியா தான் போய் கிட்டு இருக்கு. இன்று மன்றத்தில் கடவுள் உன்மையா கட்டுகதையா என்ற திரியில் நேரம் செலவலித்துவிட்டேன். அதன் பிறகு அங்கத்த ஆசாமிகளை ஏன் விட்டு வைக்கனும்னு தோன்றியது விரைவில் அங்கத்த கருத்து கந்தசாமிகளையும் இழுத்து விடுவேன். இனி அடுத்த சீன்

நன்காவது சீன்
இடம் : ஹாஸ்பிட்டல் (தாமரையை துவைச்சு படுக்க வச்சிருக்கும் இடம்)

அந்த ஹாஸ்பிட்டலின் ஐசியூ அரையில் உடல் முழுக்க கட்டுகளா போர்த்தபட்டு எகிப்து மம்மி போல காட்சியளிக்கும் தாமரை கட்டிலில் படுத்திருக்க சுற்றியும் நாற்காலிகள் போடபட்டு காவல்துரையினர் சூல்ந்திருக்க உரையாடல் தொடர்கிறது.

இன்ஸ்பெக்டர் ஆதன் : "மிஸ்டர் தாமரை, இப்ப உங்க உடல் நிலை எப்படி இருக்குங்க" என்று கேள்விக்கு கினற்றிலிருந்து வந்த ஓசைபோல தாமரையிடமிருந்து பதில் வந்தது.

தாமரை : "கொஞ்சம் பரவாயில்ல, ஆனால் இந்த டாக்டர் கீதா கவிதை சொல்லாம இருந்தாதான் நான் சீக்கிரம் குணமாவேன். இவுங்க கவிதை எடுத்து விட்டு என் நிலமை மோசமாகி கொன்டே போகுது"

இதே கேட்ட ஆரென் சடேல் என எழுந்தார். அருகில் இருந்த டாக்டர் கீதா அவர்கள் அருகில் சென்றார். கோப கனல் கொண்ட பார்வையை வீசினார். யாருமே எதிர்பாராத விதமாக தொப்பகடீர் என்று காலில் விழுந்தார்.

டாக்டர் கீதா : "சார் ஏன் என் காலில் விழறீங்க" என்று பதற்றமாக கேட்க.

ஆரென் : "அம்மா தாயே, உன்னை தெய்வமா நினைக்கு கெஞ்சி கேட்கறேன். இந்த விஞ்ஞானி தாமரை ரொம்ப முக்கியமான ஆளு இப்படி கவிதை சொல்லி ஏற்கனமே பஞ்சரா இருக்கும் அவர் உடலை சுக்கு நாரா வெட்டி விடாதீங்க"

டாக்டர் கீதா : "ஐயோ என்ன கொடுமை இது, நான் கவிதை சொல்லி தான் இவர் உடல் நிலமையை சரி செய்ய போறேன். இப்ப கூட பாருங்க நம்ம தாமரை சாருக்கு பிடிச்ச சூப்பர் மூன் கவிதை ஒன்னு சொல்லறேன்

சூப்பர் மூனே சூப்பர் மூனே
வானம் விட்டு வாடே கன்னே
வேகம் தனிந்து சிரிடே பென்னே
சுனாமி புயல் இல்லை கன்னே
வீன்பயம் வேண்டா பென்னே
இதை சொன்ன தாமரை அன்னே
நீதான் எங்கள் சூப்பர் மேனே

எப்படி இருக்கு அவருக்கு பிடிச்ச சப்ஜட்க தானே கவிதை சொன்னேன்" என்று டாக்டர் கீதா சொல்லி முடிபப்தற்குள் அ ந்த அரையில் ஆள் உயரத்தில் ஒருவருமே இல்லாததை கண்டு கீதா திகைத்தார். தேடி கீழே பார்த்தார். காவல்துரையை சேர் ந்த அத்தனை பேருமே கீதா காலில் விழுந்து கிடந்தார்கள். எந்திரிக்க முடியாத ஒரே காரனத்தால் தான் இன்னும் தாமரை விழவில்லை.

ஓவியன் : "அயோ தாயே ப்ளீஸ் வேன்டாம் இதை மன்றத்தில் சொல்லுங்க நல்லா பின்னூட்டம் போடுவோம். ஆனா இப்படி ஆஸ்பத்திரியில் சொன்னா நாங்களும் சேர்ர்து அட்மிட் ஆக வேன்டியதுதான்"

டாக்டர் கீதா : "என்ன கொடுமை இது கவிதை மென்மையா அல்லது கொடுமையானு சீனியர் ரங்கராஜன் சார் வந்து டிபேட் ஆரம்பிப்பாரு அப்புறம் தொடர்ந்து ஸ்பெசலிஸ்ட் ஆத்மா ஆளுங்க எல்லாரும் வந்து டிபேட் நடத்தி முடிச்சு தீர்ப்பு சொல்லட்டும் நான் கவிதையை நிறுத்திடறேன்"

இன்ஸ்பெக்டர் ஆதன் : "அந்த விவாதம் அப்புறம் நடத்திகலாம் டாக்டர் இப்ப நாங்க நேசனல் செக்யூரிட்ட மேட்டரா தாமரை சார் கிட்ட விசாரிக்கனும் நாங்க போனதுக்கு அப்புறம் வந்து நீங்க கன்டின்யூ பன்னுங்க. அது நீங்களாச்சு தாமரையாச்சு"

நிவாஷ் : "யேஸ், எங்களுக்கு தேவையான தகவல்களை எல்லாம் நாங்க தாமரைகிட்ட இருந்த கறந்தவுடனே அவர் எப்படி ஆனாலும் எங்களுக்கு கவலை இல்லை" என்று நாகூசாமல் பேச தாமரை முறைக்க கீதாவும் முறைத்து விட்டு அகன்றார்.

ஓவியன் : "தாமரை சார், நீங்க உருவாக்கின சக்ரபுத்ரா அதான் அந்த ஏவாகனை உருட்டி விட்டா போய் எதிரி நாட்டை தாக்குமே. அது என்ன நார்மல் சைக்கிள் சக்கரம் போலவே இல்ல"

தாமரை : "அது ஒரு கம்யூட்டர் பிரோகிராம்ட் சக்ரம் உள்ள இதுக்கு தனியா சிப் இருக்கு. பைர் அன்ட் பர்காட் டைப் ஏவாகனை. டார்கெட்ட செட் பன்னீட்டம்னா அதுபாட்டுக்கு குழந்தைகள் உருட்டி விட்ட டயர் மாதிரி போய்கிட்டே இருக்கும்"

ஆரென் : "எதிரி ஆதவா அதை பயன்படுத்தி நாச வேலை செய்ய முடியுமா"

தாமரை : "இப்போதைக்கு கஷ்டம், அந்த பிரோகிராமை செட் செய்ய அவருக்கு அறிவு பத்தாது. அவரும் ஏதாச்சு கனினி ஸ்பெசலிஸ்ட் தேடிகிட்டு இருப்பாரு. அந்த ஸ்பெசலிஸ்ட் யாருனு கண்டுபிடிச்சு அவரையும் நீங்க முடிச்சிரனும்."

நிவாஷ் : "ஆப்கானிஸ்தான் போய் அதை அழிக்க முடியமா"

தாமரை : "அதுக்குள்ள இருக்கற ப்ரோகிராமை அழிச்சா போதும் அது வெறும் சைக்கிள் சக்கரம் தான். அதுக்கு நீங்க நல்ல திறமையான ப்ரோகிராமரை கூட்டீட்டு போகனும்"

இன்ஸ்பெக்டர் ஆதன் : "ஓக்கே எங்க டிபார்மென்ட்ல (மன்றத்துல) நிறைய திறமையான கம்யூட்டர் பிஸ்தா பென்மனிகள் இருக்காங்க. ஹெல்ப் பன்னுவாங்க (கால்சீட் ப்ளீஸ்). பட் எங்களுக்கு ஒரு டவுட்டு ஆதவா உங்கள தனியா தாக்கி சக்ரபுத்ராவ திருட முடியாது. நிச்சயம் இங்க அவருக்கு சில லோக்கல் ஆளுக சப்போர்ட் செஞ்சிருப்பாங்க. அவுங்கள முதல்ல பிடிச்சு நாங்க லாடம் கட்டனும். அவுங்கள யாராச்சும் அடையாளம் தெரிஞ்சா சொல்லுங்க"

தாமரை : "ம் ஒரு ஏழெட்டு பேர் இருப்பாங்க. எல்லாரும் நிக் நேம் வச்சு அழைச்சுகிட்டாங்க. அதுமட்டுமல்ல ஆதவா சில மர்ம ஆசாமிகிட்ட போன்ல பேசினாரு பேருகூட எனக்கு வலியில உடனே நினைவுக்கு வர மாட்டீங்குது"

நிவாஷ் : "நினைவில் உள்ள பேரை சொல்லுங்க ப்ளீஸ், புடிச்சு லாடம் கட்டனும் பந்தாடனும் எனக்கு வெறியா இருக்கு"

தாமரை : "ம், அக்னி, டி.ஜெய், ஜெகதீசன், அப்புறம் ஒரு பெரிய ரானா மாபியா கோஸ்டியே பேக்கிரவுன்டி இயங்கி இருக்கும் போல இருக்கு"

ஆரென் : " வாட் ரானா கோஸ்டியா அவுங்க ராஜ்ஜியம் இங்கயும் வந்திருக்ச்சா அவுங்கள பத்தி பயோடேட்டா தனிதனியா வச்சிருக்கேன். அவுங்கள புடிச்சு நங்கு நங்குனு நடு மன்டையில ஆப்படிக்க எப்ப சான்ஸ் வரும்னு காத்திருந்தேன். இதோ வந்திருச்சு."

இன்ஸ்பெக்டர் ஆதன் : "ஓக்கே மிஸ்டர் தாமரை நீங்க இப்ப ரெஸ்ட் எடுங்க உங்கள பிறகு பார்கிறோம். இன்னும் நிறைய பேர மாட்ட வக்கனுமுல்ல நிதானமா யோசிச்சு வையுங்க. குட் பை"

தற்காலிகமாக போலீஸ் படை அங்கிருந்து கிளப்பியது. அவர்கள் ஐசியூ அரையை விட்டு எக்சிட் டாக்டர் கீதா என்டர்.

தொடரும்

(நன்பர்களே இன்னும் பல கதாபாத்திரங்கள் இருக்கு இது சின்ன விசயமல்ல மிலிட்டரி கமான்டர் இப்படி பல கதாபாத்திரம் இருக்கு யாரும் விடுபடமாட்டீங்க.)

Nivas.T
23-03-2011, 04:11 PM
:D:D:D:D

கத அருமையா போகுதுங்கோ

நகத்துங்கோ..
நடத்துங்கோ...
தள்ளுங்கோ.....
உருட்டுங்கோ.....
உலருங்கோ...
உருமுங்கோ..........

மொத்தத்துல கலக்குங்கோ

(அன்புரசிகன் அப்படீன்னு ஒருத்தர் இருக்காரு
மதின்னு இன்னொருத்தர்
அப்புறம்.... பிரேம், டெல்லாஸ்...

அப்பாடி நம்பலால முடிஞ்சது) :D:D:D

sarcharan
24-03-2011, 03:20 AM
நிவாஷ் : "நினைவில் உள்ள பேரை சொல்லுங்க ப்ளீஸ், புடிச்சு லாடம் கட்டனும் பந்தாடனும் எனக்கு வெறியா இருக்கு"


அப்ப நல்ல வெட்னரி டாக்டர பாருங்க...



தாமரை : "ம், அக்னி, டி.ஜெய், ஜெகதீசன், அப்புறம் ஒரு பெரிய ரானா மாபியா கோஸ்டியே பேக்கிரவுன்டி இயங்கி இருக்கும் போல இருக்கு"


ரானா மாபியா கோஸ்டி---->:sauer028: :frown:
டான் சூரா....
கான் ரா ரா...
பான் சா ரா...
டூன் மு ரா...




ஆரென் : " வாட் ரானா கோஸ்டியா அவுங்க ராஜ்ஜியம் இங்கயும் வந்திருக்ச்சா அவுங்கள பத்தி பயோடேட்டா தனிதனியா வச்சிருக்கேன். அவுங்கள புடிச்சு நங்கு நங்குனு நடு மன்டையில ஆப்படிக்க எப்ப சான்ஸ் வரும்னு காத்திருந்தேன். இதோ வந்திருச்சு."


மு ரா, சூ ரா, ரா ரா கமான் பாய்ஸ்!

சீக்கிரம் வாங்க, வந்து இவர கொஞசம் கவனீங்க..

நமக்கு எதிரா அறைகூவல் விட்ட யாரையுமே நாம சும்மா விட்டதில்லைன்னு இவங்களுக்கு புரிய வைப்போம்.!!




(நன்பர்களே இன்னும் பல கதாபாத்திரங்கள் இருக்கு

எல்லாம் சரி, நம்ம மதிக்கு என்ன ரோல்?

செல்வா
24-03-2011, 04:24 AM
சூப்பர் கலக்கல்.... காமெடித் தொடராய் திரியும் திரைக்கதை.

கலக்குறீங்க... மக்களே...

வாத்தியாரே அப்படியே.... எனக்கும் ஒரு ரோல் போட்டுடுங்க.

தாமரை
24-03-2011, 04:25 AM
சூப்பர் கலக்கல்.... காமெடித் தொடராய் திரியும் திரைக்கதை.

கலக்குறீங்க... மக்களே...

வாத்தியாரே அப்படியே.... எனக்கும் ஒரு ரோல் போட்டுடுங்க.

ஏற்கனவே நீங்க ரோல் மாதிரி உருளையாத்தானே இருக்கீங்க.. :lachen001::lachen001::lachen001:

அன்புரசிகன்
24-03-2011, 04:39 AM
வாத்தியாரே அப்படியே.... எனக்கும் ஒரு ரோல் போட்டுடுங்க.

இதுக்கு ஏன் வாத்தியார கஷ்டப்படுத்துறீங்க.. இந்தாங்க. எல்லாமே உங்களுக்குத்தான். அப்படியே சாப்பிடுங்க...

http://www.alwaysthetwain.com/blogs/wp-content/uploads/2009/06/spring-rolls.jpg

ஆதவா
24-03-2011, 04:47 AM
நேத்திக்கி நைட்டு படிச்சுட்டு சிரிசிரின்னு சிரிச்சுட்டு இருந்தேன். (எதிர்த்தவீட்டு ஃபிகரு முறைச்சுட்டே போச்சு!! வெளிய நின்னு ப்டிச்சுட்டு இருந்தேன்) :D:D

செம கலக்கலுங்க.... அதிலும் கீதம் அக்காவின் கவிதையைப் படிச்சா இப்பவும் சிரிப்பா வருது. முக்கியமா பல எழுத்துப் பிழைகளும் ரசிக்கிறமாதிரி இருக்குங்க..

ரெண்டே ரெண்டு பேரோட எழுத்துப் பிழைதான் ரசிக்கிறமாதிரி இருக்கும்.. ஒண்ணு உங்களோடது, இன்னொண்ணு பென்ஸூ!!


ஏற்கனவே நீங்க ரோல் மாதிரி உருளையாத்தானே இருக்கீங்க.. :lachen001::lachen001::lachen001:

நீங்களும் அன்பும் கலாய்ச்சதுல அண்ணன் எஸ்கேப்பு!!! :eek:
இருந்தாலும் அன்பு இந்த படத்தைக் கொடுத்திருக்கக் கூடாது!!!! :D

தாமரை
24-03-2011, 04:47 AM
இதுக்கு ஏன் வாத்தியார கஷ்டப்படுத்துறீங்க.. இந்தாங்க. எல்லாமே உங்களுக்குத்தான். அப்படியே சாப்பிடுங்க...

http://www.alwaysthetwain.com/blogs/wp-content/uploads/2009/06/spring-rolls.jpg

அவங்கவங்க கவலை அவங்கவங்களிக்கு..

ஆதவா வந்து 35 mm ஃபிலிம் ரோல் குடுப்பார் பாருங்க...:icon_b:

அன்புரசிகன்
24-03-2011, 05:21 AM
இருந்தாலும் அன்பு இந்த படத்தைக் கொடுத்திருக்கக் கூடாது!!!! :D
ஏன்... இதால ஹவாலா பிரச்சனை ஏதாச்சும் வந்திடுமா??? :D

அவங்கவங்க கவலை அவங்கவங்களிக்கு..

ஆதவா வந்து 35 mm ஃபிலிம் ரோல் குடுப்பார் பாருங்க...:icon_b:
ஏதோ என்னால முடிஞ்சது.... அப்புறமா அவுக்கிறது யாரு என்று கேட்க்கப்படாது. :D

அன்புரசிகன்
24-03-2011, 05:25 AM
ரெண்டே ரெண்டு பேரோட எழுத்துப் பிழைதான் ரசிக்கிறமாதிரி இருக்கும்.. ஒண்ணு உங்களோடது, இன்னொண்ணு பென்ஸூ!!

எலுத்துப்பிலை இல்லாம எழுதினாத்தான் சந்தேகப்படனும்.

செல்வா
24-03-2011, 07:38 AM
ஏற்கனவே நீங்க ரோல் மாதிரி உருளையாத்தானே இருக்கீங்க.. :lachen001::lachen001::lachen001:
எனக்கொரு ரோல் குடுக்கச் சொன்னா நீங்க
என்னையே ரோலாக்குறீங்களே...

என்னா வில்லத்தனம்... :sauer028:

தாமரை
24-03-2011, 08:07 AM
எனக்கொரு ரோல் குடுக்கச் சொன்னா நீங்க
என்னையே ரோலாக்குறீங்களே...

என்னா வில்லத்தனம்... :sauer028:

நானா ஆக்கினேன்?

உங்களுக்கு (சாப்பாடு)ஆக்கினவங்க தானே ஆக்கினாங்க!!!

lolluvathiyar
28-03-2011, 08:25 AM
கொஞ்ச நாள் கேப் விட்டதுக்கு மன்னிக்கவும். இன்று அடுத்த சீன் தொடர்கிறது,

ஐந்தாம் சீண்:

"ஹெலோ அமிரிக்க அதிபர் த ஜார்ஜுங்களா"

ஜார்ஜ் : "யேஸ் நீங்க யார் பேசறது"

"நான் தமிழ் நாட்டு எம் எல் ஏ தல மனியா பேசறேன்"

ஜார்ஜ் : "ஓ சொல்லுங்க நல்லா இருக்கீங்களா பாத்து ரொம்ப நாள் ஆச்சு"

எம். எல். ஏ தலமனியா : " நான் நல்லா இருக்கேன் தம்பி, உங்க சம்சாரம் பேனானிக்கா லெவன்ஸ்கி நல்லா இருக்காங்களா"

ஜார்ஜ் : "யோய் பேனானிக்கா லெவன்ஸ்கி சம்சாரம் இல்லயா, அவுங்க என் அசிஸ்டன்ட். குடும்பத்துல குழப்பம் ஏற்படுத்திருவீங்க போல இருக்கு"

எம். எல். ஏ தலமனியா : "ஓ அசிஸ்டன்டா என்னய்யா ஜனாதிபதி நீ இன்னுமா சம்சாரம் ஆகாம இருக்காங்க"

ஜார்ஜ் : "யோய் இதை எல்லாம் போன்ல பேசாதய்யா, இது டிப்ளமட்டிக் போனு, என்னிக்காச்சும் விக்கிலீக்ஸ் காரங்க எடுத்து பப்ளிஸ் பன்னீட்டா மான மரியாதை எல்லாம் போயிரும்"

எம். எல். ஏ தலமனியா : "அட அதுக்கெல்லாமா பயபடறீங்க. எங்கள மாதிரி அது எல்லாம் இல்லாம ஜம்னு இருக்கனும்"

ஜார்ஜ் : "சரி சரி மேட்டர் என்னன்னு சொல்லுங்க"

எம். எல். ஏ தலமனியா : "அது ஒன்னுமில்ல தம்பி எங்க நாட்டு விஞ்ஞானி தாமரை கண்டுபிடிச்ச சக்ரபுத்ரா நு ஒரு ஆயுதம் அதை ஆதவா ஒருத்தர் கடத்தீட்டு இப்ப ஆப்கானிஸ்தான்ல பதுங்கி இருக்காரு"

ஜார்ஜ் : "சரி அதுக்கு என்னவாம்"

எம். எல். ஏ தலமனியா : "ஆப்கானிஸ்தான்ல உங்க படை தானே இருக்கு உங்க கன்ட்ரோல்ல தானே இருக்கு அவனை புடிச்சு தர ஹெல்ப் பன்னறீங்களா."

ஜார்ஜ் : "ஆதவா நால அமெரிக்காவுக்கு ஏதாச்சும் இடைஞ்சல் வந்தா தான் நாங்க புடிச்சு வச்சுக்குவோம்"

எம். எல். ஏ தலமனியா : "அட என்னப்பா இது புடிச்சு கொடுத்தா உங்களுக்கு 10ஜி அலைவரையில பங்கு ஒதுக்கி கொடுக்கிறோம்"

ஜார்ஜ் : "திருந்தவே மாட்டீங்கப்பா, சரி எதுக்கும் நான் தலீபன்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தீட்டு முடிவெடுக்கிறோம்"

எம். எல். ஏ தலமனியா : "என்னது தலீபன்கிட்டயா பேசறீங்க. அவுங்க தீவிரவாதிகளாச்சே, அவுங்கள் அடக்க தானே ஆப்கானிஸ்தான் போனீங்க"

ஜார்ஜ் : "அடக்க போகல எங்களுக்கு சாதகமா சரி கட்ட போனோம். யோவ் இது இன்டர்னேசனள் பாலிட்டிக்ஸ் இது உங்களுக்கு புரியாது. சரி நான் என் ரானுவத்தோட கல ந்தாலொசித்து உங்கள கான்டாக்ட் பன்னறேன்"

இடம் : வெள்ளை மாளிகையில் ரானுவம் ஆலோசனை அறை. அங்கு அதிபர் த ஜார்ஜ் அமர்ந்திருந்தார். அவரை சுத்தியும் ரானுவ தளபதிகள். மேப் ஸ்லட் சக்ரபுத்தரா போட்டோக்கள் ஆதவா படம் எல்லாம் பரவி இருக்கு.

ஜார்ஜ் : "இத பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க"

விமான படை தளபதி : "இத பத்தி நமக்கு பயமில்ல அந்த சக்ரபுத்ரா நமக்கு எ ந்த ஆபத்தும் ஏற்படுத்தாதே"

கப்பல் படை தளபதி : " இருந்தாலும் நாம இதை கைபற்றி இதுல என்ன டெக்னாலஜி இருக்குனு கண்டுபிடிக்கனும்"

பாதுகாப்பு ஆலோசகர் : "சார் இத வச்சு நாம சும்மா இருக்க கூடாது. இந்த ஆயுதத்த வச்சு நமக்கு அச்சுறுத்தல் இருக்குனு ஸ்டேட்மென்ட் விடனும்"

தரைபடை தளபதி : "அப்புறம் இந்தியா மேல பொருளாதர தடை போடனுமா"

பாதுகாப்பு ஆலோசகர் : "பேருக்கு போட்டுகலாம், ஆனால் இந்த ஆயுதத்தை கடத்தியது நமக்கு ஆகாத நாடுகள் நம்மை அழிக்க பயன்படுத்த போறாங்கனு நாம ஐநா வுல சொல்லி ஈரான் லெபனா சிரியா மேல போர் எடுத்து இந்த நாடுகளை கைபற்றி விடலாம்"

ஜார்ஜ் : "வெர்ரி குட் சரி இந்திய போலீஸ் சும்மா இருக்குமுனு நினைக்கறீங்க. அதை மீட்க யாராச்சும் அனுப்புவாங்களே"

சி ஐ ஏ அதிகாரி : "யெஸ் சார், போலீஸ் போகாது ஆனால் ரானுத்திலிருந்து சர்சரன் என்ற கமான்டோவை அனுப்ப போறதா தகவல் கிடைச்சிருக்கு. சர்சரனுக்கு கூட செல்வானு இன்னொரு கமான்டரும் கிளம்பறதா சொல்லிகறாங்க"

ஜார்ஜ் : "ஓக்கே குட், நாம தான் முதல்ல ஆதவா புடிக்கனும். புடிக்க முடியாட்டியும் பரவாயில்ல இந்த இந்திய கமான்டர்கள ஆப்கானிஸ்தானுகுள்ள நுழைய விடாம பாத்துகனும்"

பாதுகாப்பு ஆலோசகர் : "சார் அதையும் மீரி அவுங்க ஆப்கானிஸ்தானுகுள்ள நுழைஞ்சா என்ன பன்னறது"

சி ஐ ஏ அதிகாரி : "போட்டு எறிஞ்சர வேண்டியதுதான். இதுக்குனே நம்ம டிபார்மென்ட்ல ஷீ-நிசி நு ஒரு ஸ்பெசலிஸ்ட் இருககரு, எப்ப யார போட்டு எறியதுனு ஆசையோட காத்திருக்காரு. இதோ நீங்களே பாருங்க

யாரையாச்சும் கொன்னுட்டு ஒரு ரோல் கொடுங்க வாத்தி

ஜார்ஜ் : "குட் அப்ப ஷீ-நிசிய இப்பவே ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பிருங்க"

தொடரும்

ஆதவா
28-03-2011, 09:44 AM
கலக்கல் வாத்தியாரே... எப்படியோ அமெரிக்காவுக்குப் போய்ட்டீங்க...

ஆமா ஏன் இன்னும் ஹீரோயினை அறிமுகப்படுத்தவேயில்ல??

ஐந்தாம் சீண்:

டைட்டிலுக்கு போல்டும் அண்டர்லைனும் கொடுத்த ஒரே ஆள் நீங்கதான் :lachen001::lachen001:

Nivas.T
28-03-2011, 10:25 AM
முனிசிபால்டி பால்டிக்ஸ் இருந்து இப்போ இண்டர்நேஸ்னல் பால்டிக்ஸ்

கலகுறீங்க ஐயா

த.ஜார்ஜ்
28-03-2011, 10:59 AM
கைப்புள்ள அரிவாளோட கிளம்பிட்டாருப்பா. இனி எத்தனை தல உருளப்போகுதோ..?

sarcharan
29-03-2011, 12:21 PM
சி ஐ ஏ அதிகாரி : "போட்டு எறிஞ்சர வேண்டியதுதான். இதுக்குனே நம்ம டிபார்மென்ட்ல ஷீ-நிசி நு ஒரு ஸ்பெசலிஸ்ட் இருககரு, எப்ப யார போட்டு எறியதுனு ஆசையோட காத்திருக்காரு. இதோ நீங்களே பாருங்க


ஜார்ஜ் : "குட் அப்ப ஷீ-நிசிய இப்பவே ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பிருங்க"

தொடரும்

கேப்டன் பிரபாகரன் படம் மாதிரி இருக்கு.. ஒரு வேளை ஷீ- நிசி ஆப்கானிஸ்தானுக்கு போன பின்னர் ஒரு க்ளைமாக்ஸில் ரம்யா கிருஷ்ணன் டான்ஸ் இருக்குமா?

lolluvathiyar
31-03-2011, 08:17 AM
கிரிக்கெட் பரபரபரப்பு இனி தேர்தல் பரபரப்புக்கு இடையில் இந்த கதை பரபரப்பு ஏற்படுத்த முடியது. ஆனாலும் நான் கடமையை தொடர்கிறேன். இதோ அடுத்த பாகம்.
இத்தனை நேரமாகியும் இன்னும் கதா நாயகனை அறிமுக படுத்தாமல் இருப்பது நல்லதல்ல. அதனால் இந்த பாகத்தில் கதா நாயகன் சர்சரனை http://tamilmantram.com/vb/customavatars/avatar1067_4.gif அறிமுக படுத்திகிறேன்.
கதா நாயகனை நாம் எப்பவுமே சும்மா அறிமுக படுத்த கூடாது. சூப்பர் சீன் மூலம் எப்பவுமே மறக்க முடியாத சீன் மூலம் அறிமுகபடுத்தனும். கதா நாயகன் ஆரம்ப குரலே சிம்ம கர்ஜனை போல பஞ்ச டயலாக்கில் தானே இருக்கனும். இதோ

சீண்: 6

அது ஒரு அழகிய ஆள் அரவமற்ற வனபகுதி. அமைதியான காடு அதில் ஒரு அழகிய வீடு. காமிரா கொஞ்சம் கொஞ்சமாக வீட்டுக்குள் செல்கிறது. வீட்டின் வறவேற்பரையிலேயே நாம் ஆவலுடன் கான காத்திருக்கும் நபர் நாற்காலியில் அமர்ந்திருகிறார். கையில் ஒரு வார பத்திரிக்கையை புரட்டி கொன்டு இருக்கிறார். அதுவும் அந்த ஒரே பக்கத்தை வைத்த கன் வாங்காமல் பார்த்து கொன்டு இருக்கிறார். அப்படி அதில் என்ன தான் இருக்கு நாமும் காமிராவும் பத்திரியின் பக்கம் திருப்பி ஜூம் செஞ்சு பாப்போமா.

http://www.tamilmantram.com/vb/photogal/images/2574/large/1_Kumudam_24112010.jpg

வாவ் என்ன அழகு எத்தனை அழகு ஓ இதனால் தான் அந்த நமரின் கன் இமைகள் ஆடாமல் அசையாமல் அங்கயே நிலைத்து விட்டனவோ. தம்மன்னா போட்டோவை பார்த்து கொன்டே இருந்தவர். பார்த்து கொன்டே இருந்தவர். பார்த்து கொன்டே இருந்தவர்.
தீடிரென அந்த அட்டையில் இருக்கும் தமன்னா அட்டையை விட்டு வெளியே வந்தார் ஆச்சர்யம் தானே. அந்த சோபாவை சுற்றியும் நட்சத்திரங்கள் பறக்குது. சின்ன உருவமாய் இருந்த தம்மன்னா இப்ப பெரிய உருவமானாள். நம்ம ஹீரோவை நெருங்கி இளம் புன்னகை ஒன்றை வீசினாள். அழகே அவளிடம் பிச்சை எடுக்க வேன்டும் அந்த சிரிப்பினில். நம்ம ஹீரோ கிறங்கினார். சொக்கினார். அதை விட ஆச்சர்யம் நம்ம ஹீரோவின் அருகினிலேயே அவள் அமர்ந்துவிட ஹீரோ இவ்வுழகில் இல்லை. இப்படி ஒரு தங்க தாரகை அருகில் அமர்ந்தா சும்மா இருக்க முடியுமா இதோ நம்ம ஹீரோ டூயட் பாட தொடங்கினார்.

கன்னே தொட்டுக்கவா கட்டிக்கவா
கட்டிகிட்டு ஒட்டிக்கவா
தொட்டுகிட்டா பத்திக்குமே
பத்திகிட்டா பட்டுமே
அஞ்சுகமே நெஞ்சு என விட்டு விட்டு துடிக்குது
கட்டழகு உன என்னி கன்னு முழி பிதுங்குது
கொத்தி விட வேன்டுமென கொக்கு ஒன்னு துடிக்குது
தப்பிவிட வேன்டுமென கெண்டை மீனு துடிக்குது
குளிக்கற மீனுக்கு குளிர் ஏனோ அடிக்குது
பசி தாங்குமா இளமை இனி
பரிமாற வா இளமாங்கினி

வனிதாவனி ஹ வனமோகினி வந்தாடு
கனியோ கனி உன் ருசியோ தனி கொன்டாடு

உன் கன்களோ திக்கி திக்கி பேசுதடி
என் நெஞ்சினிலே தக்க தினி தாளமடி
உன் கன்களோ திக்கி திக்கி பேசுதடி
என் நெஞ்சினிலே தக்க தினி தாளமடி
வந்து ஆடடி

பளார்!

ஒருவித அமைதி

பொளேர்!

"ஐயோயம்மா" நமது ஹீரோவின் முதல் பஞ்ச் டையலாக்.


இப்ப நம்ம ஹீரோ கன்களிலும் வேறு வித நட்டதிரங்கள் சுழன்றது. காதுகளில் இசைக்கு மாறாக கொய்ங் என்ற நாதம் கேட்டது. நேரம் ஆக ஆக கன்னம் இரன்டும் வலித்தது உனர தொடங்கினார். என்ன என்ன நம்ம ஹீரோவை இப்படி இரன்டு கன்னத்திலும் அரைந்தது யார்? வில்லனாகா இருக்குமோ. நிதானத்துக்கு வந்த ஹீரோ கன்விழித்து அடி வந்த திசையை நோக்கினார். நாமும் யார் என்று பார்போம். அங்கு பத்தரகாளி மாதிரி கோபகனைகளை வீசிய படி நின்று கொன்டு இருந்தார் சர்சரனின் மனைவி.

"ஏண்டி என இப்படி அடிக்கற" என்று அடுத்த டையலாக்கை நடுங்கிய துடையுடன் தொடங்கினார்.

"காரங்கார்த்தாலா வேற பொழப்ப பாக்காம எதுக்கு அந்த தம்மன்னா படத்தை அப்படி வாய திறந்து பாத்துகிட்டு இருக்கீங்க"

"தமன்னா படத்த ரசிக்கறது ஒரு தப்பா"

"ம் குத்துகல்லோட்ட நான் இங்க இருக்கா அத பாத்து கட்டிக்கவா ஒட்டிகவா வனிவாதவனி வனமோகினி வந்தாடுனு பாட்டு என்ன வேன்டி இருக்கு"

"அடி கொடுமைகாரி இசைங்கறது மனசுக்கு நல்லதுனு ஒரு பாட்டு பாடினே அது ஒரு தப்பா"

"ய மனிய பாருங்க எட்டு இன்னும் பல்லு கூட விளக்கல அதுக்குள்ள அட்டை பாத்து இ ந்த ஜொள்ளு விட்டு பாட்டு வேற பாட்டாம். ஒழுங்கா போய் பல்லு விளக்கீட்டு குளிச்சுட்டு வாங்க சோத்த போடறேன் கொட்டிகிட்டு அப்புறம் உன் கன்களோ திக்கி திக்கி பேசுதடி என் நெஞ்சினிலே தக்க தினி தாளமடி நு பாடுங்க யார் வேன்டாங்கறா"

என்று சொல்லி விட்டு கோபம் தனியாமல் சமையல் அரையை நோக்கி சென்று விட்டார் சர்சரன் மனைவி. அடி வாங்கிய கன்னத்தை தேச்சு விட்டபடியே
"எவன்டி உன்ன பெத்தா அவன் கையில சிக்கினா செத்தான்" என்று முனுமுனுக்க

"என்ன அங்க சத்தம்" என்று கடூர குரல் சமையல் ரூமிலிருந்து வர

"ஐயோ ஒன்னுமில்ல" என்று சொல்லிய படி பல்லுபொடியை எடுத்து வேகமாக வீட்டை விட்டு வெளியேறுகிறார். அருகில் இருக்கும் ஆற்றங்கரையை நோக்கி நடக்கிறார். அவருடை 8 வயது மகளும் துண்டோடு ஓடி வந்து அவருடன் சேர்ந்து கொள்கிறாள். சர்சரனுக்கோ வலியின் கொடுமை அவர் பெத்தெடுத்த மகளுக்கோ சந்தோசத்தில் சிரிப்பை அடக்கி கொன்டே

"என்னப்பா காலையிலயே அம்மாகிட்ட வாங்கி கட்டியாச்சா"

"ம்ஹூம் நான் எல்லாம் மிலிட்டரியில கமான்டரா இருக்கறவன் இந்த அடியெல்லாம் எனக்கு ரொட்டி சாப்பிடற மாதிரி" என்று சிங்க போல கர்ஜனை விட்டார் (இப்ப மனைவிக்கு காது கேக்காத தூரத்தில் இருப்பதால்)

அந்த நேரத்தில்
டக்க டக்க டக்க டக்க டக்க டக்க டக்க டக்க டக்க டக்க என்று ஒரு விசித்திர சத்தம் இருவரையும் திடுக்கிட செய்தது. திசையை நோக்கி வானில் கன்களை ஓட்டினார். தூரத்திலிருந்து ஒரு ஹெலிகாப்டர் வந்து கொன்டு இருந்தது. அந்த ஹெலிகாப்டர் அவர்கள் வீட்டை நெருங்கியது. நேராக போகாமல் அது தாழ்வாக பறந்து அவர்க் வீட்டுக்கு அருகிலேயே தரையிறங்கியது. சத்தம் கேட்டு அவர் மனைவியும் வெளியே வர. சர்சரனும் மகளை அங்கேயே நிற்க சொல்லி ஹெலிகாப்டரை நெருங்க ஹெலிகாப்டரில் இருக்கும் மூவரையும் பார்த்து அவர் கனக்ள் ஆச்சரியத்தில் இமை தூக்கின.

ஏன்?

ஹெலிகாப்டரில் இருந்த மூவருமே முகத்தை ஹெல்மெட் போட்டிருந்தார்கள். பைலட்டை தவிர பின்னால் இருப்பவர்கள் முதலில் ஹெலிகாப்டரிலிருந்து இறங்கி சர்சரனை நோக்கி நடந்து வந்தார்கள். இருவரின் கையிலும் ஏகே 47 துப்பாக்கி இருந்தது குறிப்பிட தக்கது.

தொடரும்

பிகு : என்ன மன்ற தோழர்களே நம்ம ஹீரோவை அறிமுகபடுத்தின சீன் உங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்குமே. தொடர்ந்து பங்களியுங்க இதை விட சூப்பர் வீர தீர சீன்களை எல்லாம் நம்ம ஹீரோ(கள்) காட்டி உங்களுக்கு விருந்தளிப்பார்(கள்).

தாமரை
31-03-2011, 08:26 AM
ஆனாலும் நீங்க ரொம்ப அலும்புதான் வாத்யாரே..

சர்சரண் வீட்டில ஸ்பை காமிரா வச்சிருக்கீங்க போல...:lachen001::lachen001::lachen001:

sarcharan
31-03-2011, 08:57 AM
அர்னால்டு ஸ்க்வார்ஸ்ஸிநெக்கர் மாதிரி என்ன அறிமுகம் பண்ணுவீங்கன்னு பாத்தா, என்ன இப்படி வீட்டுல எலி வெளியில புலி பட ஜனகராஜ் மாதிரி ஆக்கிட்டீங்களே...

சரி சரி வீடு ஓ. கே. வேலையிலாவது நான் தங்கப்பதக்கம் சிவாஜி, வேட்டையாடு விளையாடு கமல், ரோஜர் மூர், ஷான் கானரி, பியர்ஸ் ப்ரொஸ்னன் மாதிரியா?

Nivas.T
31-03-2011, 09:08 AM
என்னதான் இருந்தாலும் உண்மைய சொல்ல ஒரு அளவு வேணாம்....

பப்ளிக்ன்னு கூட பாக்காம சர்ச்சரண் பத்தி புட்டு புட்டு வைக்கிறது

இது சரணின் உண்மைக் கதை

Nivas.T
31-03-2011, 09:12 AM
அர்னால்டு ஸ்க்வார்ஸ்ஸிநெக்கர் மாதிரி என்ன அறிமுகம் பண்ணுவீங்கன்னு பாத்தா, என்ன இப்படி வீட்டுல எலி வெளியில புலி பட ஜனகராஜ் மாதிரி ஆக்கிட்டீங்களே...

சரி சரி வீடு ஓ. கே. வேலையிலாவது நான் தங்கப்பதக்கம் சிவாஜி, வேட்டையாடு விளையாடு கமல், ரோஜர் மூர், ஷான் கானரி, பியர்ஸ் ப்ரொஸ்னன் மாதிரியா?

ஏன் இவங்கள அசிங்கப் படுத்தணும்ன்னு ரொம்ப்ப நாள் ஆசையா??:sauer028::sauer028:

ஆதவா
31-03-2011, 10:50 AM
வாவ் என்ன அழகு எத்தனை அழகு ஓ இதனால் தான் அந்த நமரின் கன் இமைகள் ஆடாமல் அசையாமல் அங்கயே நிலைத்து விட்டனவோ. தம்மன்னா போட்டோவை பார்த்து கொன்டே இருந்தவர். பார்த்து கொன்டே இருந்தவர். பார்த்து கொன்டே இருந்தவர்.

கதாநாயகனுக்குக் கண்ணு தெரியாதா?? :lachen001::lachen001:

பாவனாவைப் பார்த்து தமன்னான்னு நினைச்சு ஆட்டம் போட்டா வீட்ல அடிக்காம என்ன அரவணைக்கவா செய்வாங்க??? :lachen001::lachen001:
நல்ல ஹீரோவைப் போடுவீங்கன்னு பார்த்தா இப்படி நொள்ள ஹீரோவைப் போட்டு படத்தை ஓடவிடாம பண்ணிடுவீங்க போலிருக்கே?? :eek::D

ஆதவா
31-03-2011, 10:53 AM
ஆனாலும் நீங்க ரொம்ப அலும்புதான் வாத்யாரே..

சர்சரண் வீட்டில ஸ்பை காமிரா வச்சிருக்கீங்க போல...:lachen001::lachen001::lachen001:

ஒரு மிஷம் நென்ச்சி பாத்தேன்.!!! ஹி ஹி ஹி ஹி :lachen001::D:D

sarcharan
31-03-2011, 12:40 PM
கதாநாயகனுக்குக் கண்ணு தெரியாதா?? :lachen001::lachen001:

பாவனாவைப் பார்த்து தமன்னான்னு நினைச்சு ஆட்டம் போட்டா வீட்ல அடிக்காம என்ன அரவணைக்கவா செய்வாங்க??? :lachen001::lachen001:
நல்ல ஹீரோவைப் போடுவீங்கன்னு பார்த்தா இப்படி நொள்ள ஹீரோவைப் போட்டு படத்தை ஓடவிடாம பண்ணிடுவீங்க போலிருக்கே?? :eek::D

:sauer028: :traurig001:

நாங்கள்ளாம் எதிரிகளை கண்ண மூடிக்கிட்டே கச்சிதமா சுடுவோம். டிங்கூல்....

sarcharan
29-04-2011, 02:33 PM
அடுத்த பாகம் எப்போ வரும்?

Ravee
30-04-2011, 05:53 AM
ஆஹா ஏதோ இங்கே இலக்கிய வாதம் போயிட்டு இருக்குன்னு இந்த பக்கமே நான் வரலை.... இங்கே இத்தனை கலாட்டாவா .... ஆமாம் டிம்பிள் கபாடியாவின் அண்ணன் ரோல் எனக்கா ..... உங்களுக்கு ரொம்ப கற்பனை வறட்சி ஆகி போச்சு ..... ஆளுக்கு ஏத்த வேலை கொடுங்க வாத்தியாரே ... இல்லைன்னா போஸ்டர் ஓட்டுற வேலை மட்டும் நான் பார்த்துக்குறேன் ...... படம் ஒடலைனாலும் போஸ்டரையாவது எடைக்கு போட்டு காசை கரெக்ட் பண்ணலாம் ........ :lachen001: :lachen001: :lachen001:

Ravee
02-05-2011, 06:02 AM
அட வாத்தியாருக்கு ஒரு கை கொடுப்பது என்று முடிவு செய்து விட்டேன் இனிமேல யாரும் வருத்தப்பட்டாலும் புண்ணியம் இல்லை . இப்பவே போஸ்டருக்கு படங்கள் தயார் செய்ய ஆரம்பிச்சாச்சு .... சாம்பிளாக கொஞ்சம்

https://lh6.googleusercontent.com/_ija4A80-p4I/Tb5EHNRnqHI/AAAAAAAAAgQ/yspzpR38-M0/s512/Sci%20Thamarai.JPG


விஞ்ஞானி தாமரை .... இந்த அதிமேதாவி சயின்டிஸ்ட் எல்லாம் பார்க்கிறதுக்கு கொஞ்சம் :eek: :sauer028: :sprachlos020: ................... சுமாராதான் இருப்பாங்க .............................. ஆனா இவர பார்த்தா அப்படி இல்லை :aetsch013: .................. :)


https://lh3.googleusercontent.com/_ija4A80-p4I/Tb5EHAukBBI/AAAAAAAAAgM/3CHFZh9ist0/s512/MLA%20Thalai%20Mania%20a.JPG



அடுத்தது நம்ப எம்.எல். எ தலை மணியா . கொஞ்சம் இவரை அப்படி இப்படி டச் பண்ணினா அப்படியே சுருள் கிராப்பும் கிருதாவும சும்மா ஜம்முன்னு வந்துட்டார் ... :p



https://lh4.googleusercontent.com/_ija4A80-p4I/Tb5EGhwTWDI/AAAAAAAAAgE/igmONGjouas/s512/Aathi%20%20SP.JPG



அடுத்து நம்ப சிரிப்பு போலிஸ் ஆதி .......... காக்கி உடைக்குள்ள ஒரு ................................. காமெடியன்.


கலக்குங்க பாஸ் ........... :icon_b:



https://lh3.googleusercontent.com/_ija4A80-p4I/Tb5EHATgs2I/AAAAAAAAAgI/7LJi_9WPnrw/s512/Athava%20Sukirtha%20Raja.JPG


கடைசியா நம்ப வில்லன் ஆதவா சுகிர்த ராஜா .......... கொஞ்சம் பின்லாடன் கெட்டப் போடலாம்ன்னு பார்த்தா .................... பாதியிலேயே ரொம்ப வில்லத்தனமா தெரிஞ்சார் ............... அதான் அப்படியே விட்டேன்

Nivas.T
02-05-2011, 06:07 AM
:lachen001::lachen001::lachen001::lachen001:

sarcharan
02-05-2011, 08:07 AM
என்ன ரவி சார்,
தாமரையாரையும், தலையையும் இப்படி தாக்கீட்டீங்க..

தலையோட இந்த போஸ பாத்தா அமரன் படத்துல வர்ற ராதாரவி மாதிரி இருக்காரு..

சரி! சரி! என்னோட படத்த வரையறதா இருந்தா நல்ல ஹாலிவுட் ஹீரோயசம் பிரதிபலிக்கிற மாதிரி வரையுங்க.:smilie_abcfra:

ஏன்னா, உங்க எல்லோருக்குமே தெரியும் நான் பிறவியிலேயே ஒரு அழகன் என்று! :D:D

அன்புரசிகன்
02-05-2011, 11:13 PM
ஏன்னா, உங்க எல்லோருக்குமே தெரியும் நான் பிறவியிலேயே ஒரு அழகன் என்று! :D:D
அழகன் உங்க பெயரா???:rolleyes:

Ravee
03-05-2011, 04:09 AM
என்ன ரவி சார்,
தாமரையாரையும், தலையையும் இப்படி தாக்கீட்டீங்க..

தலையோட இந்த போஸ பாத்தா அமரன் படத்துல வர்ற ராதாரவி மாதிரி இருக்காரு..

சரி! சரி! என்னோட படத்த வரையறதா இருந்தா நல்ல ஹாலிவுட் ஹீரோயசம் பிரதிபலிக்கிற மாதிரி வரையுங்க.:smilie_abcfra:

ஏன்னா, உங்க எல்லோருக்குமே தெரியும் நான் பிறவியிலேயே ஒரு அழகன் என்று! :D:D

அப்பா மம்முட்டி போல வரையலாமா சற்சரண் !!!

Ravee
03-05-2011, 04:12 AM
:lachen001::lachen001::lachen001::lachen001:


சும்மா சிரிக்க கூடாது .... சீரியஸா இன்னும் மத்தவங்களை பத்தி போட்டுக்கொடுக்கணும் ....ஓ.கே ..... :lachen001:

Ravee
03-05-2011, 04:14 AM
அழகன் உங்க பெயரா???:rolleyes:

அன்பு கொஞ்சம் எடுத்து விடுங்க ..... ஸ்கெச் போட்டுடுவோம் ....:cool:

அன்புரசிகன்
03-05-2011, 04:32 AM
அன்பு கொஞ்சம் எடுத்து விடுங்க ..... ஸ்கெச் போட்டுடுவோம் ....:cool:
எனக்கு பார்த்த உடனே ஸ்கொட்ச் என்று தான் விளங்கியது. :lachen001: அப்படியே ஷாக் ஆகீட்டேன். எனக்கும் அதுக்கும் தான் சம்பந்தமில்லையே. பிறகு ஏன் அதை பற்றி என்னிடம் கேட்குறார் என்று.

சூரியன்
03-05-2011, 05:26 AM
என்னய்யா நடக்குது இங்க..:confused:
ஒரு நாலு நாள் ஊரை சுத்தீட்டு வர்ரதுக்குள்ள என்னென்னமோ நடக்குது..:cool:

சூரியன்
03-05-2011, 05:47 AM
அட வாத்தியாருக்கு ஒரு கை கொடுப்பது என்று முடிவு செய்து விட்டேன் இனிமேல யாரும் வருத்தப்பட்டாலும் புண்ணியம் இல்லை . இப்பவே போஸ்டருக்கு படங்கள் தயார் செய்ய ஆரம்பிச்சாச்சு .... சாம்பிளாக கொஞ்சம்

https://lh6.googleusercontent.com/_ija4A80-p4I/Tb5EHNRnqHI/AAAAAAAAAgQ/yspzpR38-M0/s512/Sci%20Thamarai.JPG


விஞ்ஞானி தாமரை .... இந்த அதிமேதாவி சயின்டிஸ்ட் எல்லாம் பார்க்கிறதுக்கு கொஞ்சம் :eek: :sauer028: :sprachlos020: ................... சுமாராதான் இருப்பாங்க .............................. ஆனா இவர பார்த்தா அப்படி இல்லை :aetsch013: .................. :)


https://lh3.googleusercontent.com/_ija4A80-p4I/Tb5EHAukBBI/AAAAAAAAAgM/3CHFZh9ist0/s512/MLA%20Thalai%20Mania%20a.JPG



அடுத்தது நம்ப எம்.எல். எ தலை மணியா . கொஞ்சம் இவரை அப்படி இப்படி டச் பண்ணினா அப்படியே சுருள் கிராப்பும் கிருதாவும சும்மா ஜம்முன்னு வந்துட்டார் ... :p



https://lh4.googleusercontent.com/_ija4A80-p4I/Tb5EGhwTWDI/AAAAAAAAAgE/igmONGjouas/s512/Aathi%20%20SP.JPG



அடுத்து நம்ப சிரிப்பு போலிஸ் ஆதி .......... காக்கி உடைக்குள்ள ஒரு ................................. காமெடியன்.


கலக்குங்க பாஸ் ........... :icon_b:



https://lh3.googleusercontent.com/_ija4A80-p4I/Tb5EHATgs2I/AAAAAAAAAgI/7LJi_9WPnrw/s512/Athava%20Sukirtha%20Raja.JPG


கடைசியா நம்ப வில்லன் ஆதவா சுகிர்த ராஜா .......... கொஞ்சம் பின்லாடன் கெட்டப் போடலாம்ன்னு பார்த்தா .................... பாதியிலேயே ரொம்ப வில்லத்தனமா தெரிஞ்சார் ............... அதான் அப்படியே விட்டேன்


அண்ணா நீங்க இவங்க எல்லாரையிம் நேர்ல பார்த்ததுக்கு அப்பறமும் இப்படி வரைஞ்சிருக்கீங்க.
பாத்து ஜாக்கிரதையா இருங்க...


பயத்துடன் சூரியன்..:redface:

Nivas.T
03-05-2011, 07:44 AM
சும்மா சிரிக்க கூடாது .... சீரியஸா இன்னும் மத்தவங்களை பத்தி போட்டுக்கொடுக்கணும் ....ஓ.கே ..... :lachen001:

என்னா,,,,,,,,, கொலைவெறி ,,,,,,,,,?:icon_rollout::icon_rollout:

:D

Ravee
03-05-2011, 07:50 AM
அண்ணா நீங்க இவங்க எல்லாரையிம் நேர்ல பார்த்ததுக்கு அப்பறமும் இப்படி வரைஞ்சிருக்கீங்க.
பாத்து ஜாக்கிரதையா இருங்க...


பயத்துடன் சூரியன்..:redface:


சூரியபுத்திரர்கள் பயப்பட கூடாது சூரியன் ... இன்னும் வரப்போற கேரேக்டர்ஸ் பத்தி எல்லாம் உளவு சொல்லணும் ஓ.கே ....:waffen093::Christo_pancho:

Ravee
03-05-2011, 07:52 AM
என்னா,,,,,,,,, கொலைவெறி ,,,,,,,,,?:icon_rollout::icon_rollout:

:D

மன்ற வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா .... :lachen001: :lachen001: :lachen001:

Ravee
03-05-2011, 07:59 AM
எனக்கு பார்த்த உடனே ஸ்கொட்ச் என்று தான் விளங்கியது. :lachen001: அப்படியே ஷாக் ஆகீட்டேன். எனக்கும் அதுக்கும் தான் சம்பந்தமில்லையே. பிறகு ஏன் அதை பற்றி என்னிடம் கேட்குறார் என்று.

ஓவியமான ஒருத்தரிடம் இருந்து வேற மாதிரி தகவல் கிடைச்சது அன்பு ...... :food-smiley-015:

Ravee
03-05-2011, 08:24 AM
என்ன ரவி சார்,
தாமரையாரையும், தலையையும் இப்படி தாக்கீட்டீங்க..

தலையோட இந்த போஸ பாத்தா அமரன் படத்துல வர்ற ராதாரவி மாதிரி இருக்காரு..

சரி! சரி! என்னோட படத்த வரையறதா இருந்தா நல்ல ஹாலிவுட் ஹீரோயசம் பிரதிபலிக்கிற மாதிரி வரையுங்க.:smilie_abcfra:

ஏன்னா, உங்க எல்லோருக்குமே தெரியும் நான் பிறவியிலேயே ஒரு அழகன் என்று! :D:D


சரி சரி .... சற்சரண் உங்க ஆசை போல உங்களை அர்னால்ட் போலவே வரையுறேன் ( சட்டை எல்லாம் ஏன் போடலைன்னு வந்து சண்டை போடா கூடாது சொல்லிட்டேன் ) .... இன்னும் சிக்க வேண்டியது ஜார்ஜும் கீதம் அக்காவும் ..... இவங்களை சிக்க வைக்க எங்க கண்ணி வைக்கலாம் ....... :confused:

தாமரை
03-05-2011, 08:48 AM
சரி சரி .... சற்சரண் உங்க ஆசை போல உங்களை அர்னால்ட் போலவே வரையுறேன் ( சட்டை எல்லாம் ஏன் போடலைன்னு வந்து சண்டை போடா கூடாது சொல்லிட்டேன் ) .... இன்னும் சிக்க வேண்டியது ஜார்ஜும் கீதம் அக்காவும் ..... இவங்களை சிக்க வைக்க எங்க கண்ணி வைக்கலாம் ....... :confused:

நான் எதுவும் சொல்லலை!!! :D:D:D ஜார்ஜ் உங்களிடம் இருக்கார். கீதம் தானே கவலைப் படாதீங்க. கான்ஸ்டபிள் அன்புரசிகன், அசிஸ்டண்ட் கான்ஸ்டபிள் தநிவாஸ் (ஒரு வேளை தனியாவே வாசம் செய்வாரோ? )

எல்லாம் லிஸ்ட்ல இருக்காங்க

ஓவியன்
03-05-2011, 09:10 AM
ஓவியமான ஒருத்தரிடம் இருந்து வேற மாதிரி தகவல் கிடைச்சது அன்பு ...... :food-smiley-015:

அந்த ஓவியமானவர் இந்த ஓவியமானவர் இல்லை தானே....

விட்டா சிண்டு முடிஞ்சு காலியே பண்ணிடுவாங்க போலிருக்கு. :eek:

Nivas.T
03-05-2011, 09:21 AM
நான் எதுவும் சொல்லலை!!! :D:D:D ஜார்ஜ் உங்களிடம் இருக்கார். கீதம் தானே கவலைப் படாதீங்க. கான்ஸ்டபிள் அன்புரசிகன், அசிஸ்டண்ட் கான்ஸ்டபிள் தநிவாஸ் (ஒரு வேளை தனியாவே வாசம் செய்வாரோ? )

எல்லாம் லிஸ்ட்ல இருக்காங்க
:eek:
:sauer028:

என்ன ஒரு வில்லத்தனம்? :D

தாமரை
03-05-2011, 09:27 AM
:eek:
:sauer028:

என்ன ஒரு வில்லத்தனம்? :D

போலீஸ் ஸ்டேஷனில் நிவாஸ் .. டீ.. நிவாஸ்.. டீ.. அப்படின்னு டீ வாங்கியார சொல்லுவாங்களோ??:confused::confused::confused:

Nivas.T
03-05-2011, 09:37 AM
தநிவாஸ் (ஒரு வேளை தனியாவே வாசம் செய்வாரோ? )





டீ.. நிவாஸ்.. டீ.. அப்படின்னு

த விடம்
டீ விடம்
இப்டி எதாவது எழுதபோறிங்களா அண்ணா? :D:D:D:D

அன்புரசிகன்
03-05-2011, 11:03 AM
ஓவியமான ஒருத்தரிடம் இருந்து வேற மாதிரி தகவல் கிடைச்சது அன்பு ...... :food-smiley-015:

அத எந்த மனிசராவது நம்புவாங்களா???


நான் எதுவும் சொல்லலை!!! :D:D:D ஜார்ஜ் உங்களிடம் இருக்கார். கீதம் தானே கவலைப் படாதீங்க. கான்ஸ்டபிள் அன்புரசிகன், அசிஸ்டண்ட் கான்ஸ்டபிள் தநிவாஸ் (ஒரு வேளை தனியாவே வாசம் செய்வாரோ? )

எல்லாம் லிஸ்ட்ல இருக்காங்க
இப்ப யாராச்சும் கேட்டாங்களா??? ஏனிந்த வில்லத்தனம்???

அக்னி
03-05-2011, 12:37 PM
முதலிரண்டு சீனப் பார்த்துட்டு,
இன்று திரும்பி வந்து பார்த்தா...

எல்லாருமே மொட்டைக் கத்தி பட்டு ரத்த சரித்திரமா நிக்குறாங்களே...

வாத்தியாரே... தொடருங்க சீக்கிரமா...
மத்தவங்களையும் சின்னாபின்னமாக்கிடலாம்...

நம்ம தல யோட சகோதரி ஜானகியம்மாவுக்கு, சோ.கா. மாதிரி தல யை ஆட்டி வைக்கிற ரோல் ஒண்ணு கொடுத்துடுங்க...

ஜானகியம்மா... அடுத்த ஞாயிறு ஸ்பெஷலா ரோல் போட்டுடுங்களேன்...

Ravee
03-05-2011, 12:56 PM
என்ன இது வாத்தியாரை தவிர மத்த எல்லோரும் ப்ரெசென்ட் ஆகிடாங்க ..... ஒரு வேலை அல்கொய்தாவோட ஹிட் லிஸ்ட்ல வாத்தியார் பெயரையும் சேர்த்துடாங்களா .............. :eek:

Ravee
03-05-2011, 12:58 PM
நான் எதுவும் சொல்லலை!!! :D:D:D ஜார்ஜ் உங்களிடம் இருக்கார். கீதம் தானே கவலைப் படாதீங்க. கான்ஸ்டபிள் அன்புரசிகன், அசிஸ்டண்ட் கான்ஸ்டபிள் தநிவாஸ் (ஒரு வேளை தனியாவே வாசம் செய்வாரோ? )

எல்லாம் லிஸ்ட்ல இருக்காங்க

ஹிட் லிஸ்ட்லன்னு சொல்லுங்க அண்ணா ..... ஹா ஹா ஹா .... :lachen001: :lachen001: :lachen001:

lolluvathiyar
03-05-2011, 02:09 PM
இந்த திரியை ஆரம்பிச்ச நான் போரடித்ததால் இதை மறந்தே போயிட்டேன் ஆனால் இரன்டு நாளில் மக்கள் இதை கிளர ஆரம்பிச்சுட்டாங்க. அதுவும் ரவி போட்ட நக்கல் படத்தால் திரி எந்திரிச்சிருச்சு. நன்றி ரவி

ஒரு வேலை அல்கொய்தாவோட ஹிட் லிஸ்ட்ல வாத்தியார் பெயரையும் சேர்த்துடாங்களா
அடங்கொக்காமக்கா அதுக்குள்ள அல்கொய்தா லிஸ்டல சேர்த்து போட்டு தள்ளிருவாங்க போல இருக்கு.

கேப் விட்டத்துக்கு மன்னிச்சுருங்க. நாளை முதல் இத்திரியை மீண்டும் தொடர்கிறேன்.

Nivas.T
03-05-2011, 02:48 PM
அடங்கொக்காமக்கா அதுக்குள்ள அல்கொய்தா லிஸ்டல சேர்த்து போட்டு தள்ளிருவாங்க போல இருக்கு.


:eek:
அப்போ இன்னும் இல்லையா..? :mad::frown::icon_rollout:

:D:D:D:D:D

கீதம்
03-05-2011, 11:01 PM
சரி சரி .... சற்சரண் உங்க ஆசை போல உங்களை அர்னால்ட் போலவே வரையுறேன் ( சட்டை எல்லாம் ஏன் போடலைன்னு வந்து சண்டை போடா கூடாது சொல்லிட்டேன் ) .... இன்னும் சிக்க வேண்டியது ஜார்ஜும் கீதம் அக்காவும் ..... இவங்களை சிக்க வைக்க எங்க கண்ணி வைக்கலாம் ....... :confused:

(வடிவேலு பாணியில் படிக்கவும்) ரவீ... பேச்சு பேச்சோட இருக்கணும்... இப்படியெல்லாம் படம் வரஞ்சி பழிவாங்கப்படாது.

சும்மா சொன்னேன்.... கேரிகேச்சர் (அதை நீங்க ஓவியம்னு சொன்னாலும்....:)) பிரமாதமா இருக்கு. ம்ம்...தொடரட்டும் அட்டகாசம். :icon_b:

Ravee
04-05-2011, 05:58 AM
இந்த திரியை ஆரம்பிச்ச நான் போரடித்ததால் இதை மறந்தே போயிட்டேன் ஆனால் இரன்டு நாளில் மக்கள் இதை கிளர ஆரம்பிச்சுட்டாங்க. அதுவும் ரவி போட்ட நக்கல் படத்தால் திரி எந்திரிச்சிருச்சு. நன்றி ரவி

அடங்கொக்காமக்கா அதுக்குள்ள அல்கொய்தா லிஸ்டல சேர்த்து போட்டு தள்ளிருவாங்க போல இருக்கு.

கேப் விட்டத்துக்கு மன்னிச்சுருங்க. நாளை முதல் இத்திரியை மீண்டும் தொடர்கிறேன்.

வாங்க வாத்தியாரே வாங்க .... உங்க வரவுக்குதான் காத்து இருக்கிறோம் ..... :icon_b:




(வடிவேலு பாணியில் படிக்கவும்) ரவீ... பேச்சு பேச்சோட இருக்கணும்... இப்படியெல்லாம் படம் வரஞ்சி பழிவாங்கப்படாது.

சும்மா சொன்னேன்.... கேரிகேச்சர் (அதை நீங்க ஓவியம்னு சொன்னாலும்....:)) பிரமாதமா இருக்கு. ம்ம்...தொடரட்டும் அட்டகாசம். :icon_b:

கீதம் அக்கா உங்க விசயம்தான் ஒரே குழப்பமா இருக்கு இப்போ சற்சரண் ரெடியாகிட்டு இருக்கார் ..... இன்னும் ஒரு நாள் பொறுங்கள் ....

ஆதவா
04-05-2011, 07:38 AM
ரவீயண்ணே...

ஏங்க...... ஏன்??? என்னாச்சு உங்களுக்கு?? ஏன் இப்படி? என்னை மட்டும் மொட்ட பாஸ் ஆக்கிட்டீங்க..... உங்களை சும்மா விடறதில்ல.. :sauer028:

வில்லனுக்கு அடையாளமா பத்து பவுன்ல செயின் போடலை??? :aetsch013:

ஓவியன்
04-05-2011, 08:45 AM
வில்லனுக்கு அடையாளமா பத்து பவுன்ல செயின் போடலை??? :aetsch013:

பத்து பவுன் என்ன?, பத்து கிலோவே போடலாம் ஆனா ஒண்ணு சைக்கிள் செயினெல்லாம் பவுனில போட மாட்டாங்க ஆதவா... :D:D:D

Ravee
04-05-2011, 09:06 AM
பத்து பவுன் என்ன?, பத்து கிலோவே போடலாம் ஆனா ஒண்ணு சைக்கிள் செயினெல்லாம் பவுனில போட மாட்டாங்க ஆதவா... :D:D:D

இப்பத்தானே சக்கரத்தை லவுட்டிடு போய் இருக்கார் ஓவி .... இனிமேல செயின் , பெடல் சீட் , ஹென்ட்பார்ன்னு ... சைக்கிள் அசெம்பிள் செய்வார்ன்னு நினைக்கிறேன் ..... :mad: :mad: :mad:

Ravee
04-05-2011, 09:10 AM
ரவீயண்ணே...

ஏங்க...... ஏன்??? என்னாச்சு உங்களுக்கு?? ஏன் இப்படி? என்னை மட்டும் மொட்ட பாஸ் ஆக்கிட்டீங்க..... உங்களை சும்மா விடறதில்ல.. :sauer028: :aetsch013:


http://4.bp.blogspot.com/_mmBw3uzPnJI/SpZzUE5viqI/AAAAAAAAuRc/CT8iCbTfvAc/s400/bald_head_tattoos_16.jpg

ஆதவா உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்லுறேன் , உங்க தலையில இருக்கிற இந்த டாட்டூ வச்சுதான் உங்கள சற்சரண் கண்டுபிடிக்கப்போறார் .... கவனம் :D :D :D

சூரியன்
04-05-2011, 10:05 AM
அவர புடிச்சி குடுத்த என்ன தருவீங்க???? :)

ஓவியன்
04-05-2011, 11:47 AM
அட வாத்தியாருக்கு ஒரு கை கொடுப்பது என்று முடிவு செய்து விட்டேன் இனிமேல யாரும் வருத்தப்பட்டாலும் புண்ணியம் இல்லை . இப்பவே போஸ்டருக்கு படங்கள் தயார் செய்ய ஆரம்பிச்சாச்சு .... சாம்பிளாக கொஞ்சம்

https://lh6.googleusercontent.com/_ija4A80-p4I/Tb5EHNRnqHI/AAAAAAAAAgQ/yspzpR38-M0/s512/Sci%20Thamarai.JPG


விஞ்ஞானி தாமரை .... இந்த அதிமேதாவி சயின்டிஸ்ட் எல்லாம் பார்க்கிறதுக்கு கொஞ்சம் :eek: :sauer028: :sprachlos020: ................... சுமாராதான் இருப்பாங்க .............................. ஆனா இவர பார்த்தா அப்படி இல்லை :aetsch013: .................. :)


https://lh3.googleusercontent.com/_ija4A80-p4I/Tb5EHAukBBI/AAAAAAAAAgM/3CHFZh9ist0/s512/MLA%20Thalai%20Mania%20a.JPG



அடுத்தது நம்ப எம்.எல். எ தலை மணியா . கொஞ்சம் இவரை அப்படி இப்படி டச் பண்ணினா அப்படியே சுருள் கிராப்பும் கிருதாவும சும்மா ஜம்முன்னு வந்துட்டார் ... :p



https://lh4.googleusercontent.com/_ija4A80-p4I/Tb5EGhwTWDI/AAAAAAAAAgE/igmONGjouas/s512/Aathi%20%20SP.JPG



அடுத்து நம்ப சிரிப்பு போலிஸ் ஆதி .......... காக்கி உடைக்குள்ள ஒரு ................................. காமெடியன்.


கலக்குங்க பாஸ் ........... :icon_b:



https://lh3.googleusercontent.com/_ija4A80-p4I/Tb5EHATgs2I/AAAAAAAAAgI/7LJi_9WPnrw/s512/Athava%20Sukirtha%20Raja.JPG


கடைசியா நம்ப வில்லன் ஆதவா சுகிர்த ராஜா .......... கொஞ்சம் பின்லாடன் கெட்டப் போடலாம்ன்னு பார்த்தா .................... பாதியிலேயே ரொம்ப வில்லத்தனமா தெரிஞ்சார் ............... அதான் அப்படியே விட்டேன்

ரவி அண்ணாத்தே, எனக்கு ஒரு டவுட்டு.... :confused:

அதுதாங்க படங்களைக் வரைந்து அவங்க முறையே தாமரை அண்ணா, மணியா அண்ணா, ஆதி, ஆதவானு கூறிட்டு எல்லாப் படங்களின் அடியிலும் `ரவி`னு எழுதியிருக்கீங்களே...!!!! :eek:

என்னோட டவுட்டு இதுதான், நீங்க வரைந்த எல்லா படங்களும் உங்களோட படங்களாண்ணே...??? :cool:

sarcharan
04-05-2011, 01:08 PM
ரவி அண்ணாத்தே, எனக்கு ஒரு டவுட்டு.... :confused:

அதுதாங்க படங்களைக் வரைந்து அவங்க முறையே தாமரை அண்ணா, மணியா அண்ணா, ஆதி, ஆதவானு கூறிட்டு எல்லாப் படங்களின் அடியிலும் `ரவி`னு எழுதியிருக்கீங்களே...!!!! :eek:

என்னோட டவுட்டு இதுதான், நீங்க வரைந்த எல்லா படங்களும் உங்களோட படங்களாண்ணே...??? :cool:

நாவடக்கத்தோடு ஒரு நக்கல்...

lolluvathiyar
04-05-2011, 04:05 PM
நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த கதையின் அடுத்த பாகத்தை தொடர்கிறேன். ஆரம்பத்திலிருந்து படிச்சு வாங்க மக்களே. கடைசியா நிறுத்தியது சீன் 6 அதில் நமது கதாநாயகன் சர்சரன் தம்மன்னா போட்டோவை பார்த்து பல்லி போவது கூட தெரியாமல் வாயை திறந்து ஜொள் விட்டதால் அவர் மனைவியிடம் மரன அடி வாங்கியது யாரும் மறந்திருக்க மாட்டீங்க. அந்த பாகம் இப்படி முடிந்தது.


ஹெலிகாப்டரில் இருந்த மூவருமே முகத்தை ஹெல்மெட் போட்டிருந்தார்கள். பைலட்டை தவிர பின்னால் இருப்பவர்கள் முதலில் ஹெலிகாப்டரிலிருந்து இறங்கி சர்சரனை நோக்கி நடந்து வந்தார்கள். இருவரின் கையிலும் ஏகே 47 துப்பாக்கி இருந்தது குறிப்பிட தக்கது.
தொடரும்

இனி அடுத்த சீனை பார்போம்

சீண்: 7

ஹெலிகாப்டரிலிருந்து இறங்கி சர்சரனை நோக்கி வந்தவர்கள் சர்சரனுக்கு மிக பெரிய சல்யூட் அடித்தது நம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. சர்சரன் அவ்வளவு பெரிய ஆளா? வந்தவர்கள் யார்? வந்தவர்கள் முதலில் வ ந்தவரை கண்ட சர்சரனுக்கு அளவில்லாத சந்தோசம் கன்களில் ஆனந்த கன்னீர் ஜலமாய் கொட்டியது. ஓடி போய் வந்தவரை கட்டி பிடித்தார்.

சர்சரன் : "கமான்டர் செல்வா நல்லா இருக்கியா உன்ன பாத்து எவ்வளவு நாளாச்சு நம்ம யூனிட்ல எல்லா ஜென்ரல்களும் நல்லா இருக்காங்களா" என்று சந்தோசம் பொங்க உனர்ச்சி வசத்தோடு பேசினார்.

கமான்டர் செல்வாவை பற்றி சின்ன அறிமுகம். அவருக்கு கை கால் கழுத்து இடுப்பு வயிரு மீசை எல்லாமே இருக்கு இதுக்கு மேல அறிமுகம் செய்ய அங்க ஒன்னும் இல்லதான் இருந்தாலும் அவர் கமான்டோ டிரெஸ் போட்டிருந்ததால் அவர் என் எஸ் ஜி கமான்டாரகா இருக்க வேண்டும் என்று நாமாக யூகித்து கொள்ளலாம். கஸ்டபட்டு ஏகே 47 வேற தூக்கி வச்சிருக்காரல்ல. கமான்டர் செல்வாவாவும் சர்சரனை பாசத்தோடு கட்டி பிடித்து உனர்ச்சி பொங்க பேச ஆரம்பித்தார்.

கமான்டர் செல்வா : "லெப்ட் சர்சரன் உங்கள் பிரிஞ்சு எத்தனை நாளாச்சு"

சர்சரன் : "ராஸ்கல் லெப்ட்டினன்ட் சர்சரன் கரெக்டா சொல்லப்பா லெப்டு ரைட்டுனு உளரீட்டு"

செல்வா : "ஓ சாரி முன்னால் லெப்ட்டினன்ட் சர்சரன் உங்கள் பாத்து எத்தனை நாளாச்சு டிஸ்மிஸ் செஞ்சன்னைக்கு பாத்தது"

சர்சரன் : "சரி சரி பழசெல்லாம் கிளறாத, நீ நல்லா இருக்கதானே, வீட்ல நாய்குட்டி பூனைகுட்டி நல்லா இருக்கா, உங்க வீட்டுக்கு நாலு வீடு தள்ளி ஒரு 23 வயசு பிகரு இருக்கே அதுக்கு கல்யானம் ஆச்சா"

செல்வா : "கன்னத்த பாத்தா இப்பதான் பொன்டாட்டிகிட்ட அடி வாங்கின மாதிரி தெரியுது, அது பத்தல போல இருக்கு"

சர்சரன் : "யார பாத்து பொன்டாட்டி கிட்ட அடி வாங்கினவன் சொல்லற நான் முறைச்சா அவ நாலு மைலு ஓடிருவாளாக்கும்"

செல்வா : "சார் சும்மா சொல்லாதீங்க அப்புறம் எப்படி கன்னம் வீங்கி இருக்காம்" என்று வினவ
அந்த நேரத்தில் சர்சரனின் செல்ல மகள். "அப்பாவ அம்மா நல்லா இரன்டு அடி கொடுத்துட்டாங்க அங்கிள்" என்று சொல்ல சர்சரனுனுக்கு டென்சன் ஏறி மகளை மிரட்டி அனுப்ப "அப்பா எதுவானாலும் பல்லு விளக்கீட்டு பேசுங்கோ" என்று சொல்லி விட்டு ஓடிவிட்டாள். இருந்த கொஞ்சம் நஞ்சம் மானமும் சப்மரின் ஏறிவிட்டதே.

சர்சரன் : "என்ன பன்னறது செல்வா என் சம்சாரம் ஒரு ராட்சசி, தம்மன்னா போட்டோ பாத்ததுக்கே அடி பின்னீட்டா"

செல்வா : "விடுங்க பாஸ் இதெல்லா குடும்பத்துல சகஜம், நான் கூட பொன்டாட்டி பின்னாடி நிக்கறது தெரியாம பத்து விளையாடிய மானவிகளை பார்த்து குற்றால குறவஞ்சி பாட்டுதான் பாடினே அதுக்கே என்னை பந்தாடிட்டா"

சர்சரன் : "சரி சரி வ தாப்ல இருந்து யார் யார் பொன்டாட்டிகிட்ட அதிகம் அடிவாங்கினதை பேசவா வந்தீங்க வ ந்த மேட்டரெ சொல்லுங்க"

செல்வா : "அது வந்து ஒரு நேசனல் செக்யூரிட்டி பிராபளம், இவர் தமிழ் நாட்டு போலீஸ் இன்ஸ்பக்டர் ஆதன்" என்று ஆதனை அறிமுகபடுத்த

சர்சரன் : "புரிஞ்சது, அங்க தாமரை கண்டுபிடிச்ச சக்ரபுத்ராவை தீவிரவாதி ஆதவா கடத்தீட்டாரு அத மீட்க என் உதவியை நாடி வ ந்திருக்கீங்க சரிதானே"

இன்ஸ்பக்டர் ஆதன் : "யெஸ் லெப்டினன்ட், ஆதவா ஆப்கானிஸ்தானில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்திரூக்கு, சீக்கிரம் பாக்கிஸ்தானில் அப்போடாபாத்தில் கூட போய் பதுங்கலாம், அவரை பிடிக்க உங்க உதவி தேவை" இதை கேட்ட சர்சரன் மென்மையாக புன்னகை புரிந்தார்.

சர்சரன் : "லுக் என்னை கமான்டோ படையிலிருந்து டிஸ்மிஸ் செஞ்ச பிறகு என் மைன்ட் செட்டே மாறிடுச்சு இனி நான் மிலிட்டரி வேலைக்கு வர விருப்பமில்லை என் மனைவி குழந்தைகளோட அமைதியா வாழ ஆசைபடறேன் என்னை டிஸ்டர்ப் பன்னாதீங்க"

செல்வா : "எப்படி நயன்தாரா போட்டவ பாத்து மறுபடியும் அடி வாங்கவா, சும்மா பந்தா பன்னாம வந்துருங்க பாஸ்"

சர்சரன் : " நோ"

இதன் பிறகு ஆதனும் செல்வாவும் எவ்வளவோ செஞ்சி கேட்டும் சர்சரன் மசியவே இல்லை உறுதியாக மறுத்து விட்டார். ஏமாற்றத்துடன் இருவரும் திரும்பி ஹெலிகாப்டரில் பறக்க தொடங்கினார்கள். புறப்படும் போது சர்சரனை பல்லு விளக்க சொல்லி நினைவு படுத்தி விட்டு தான் செல்வா விடை பெற்றார் என்ற முக்கியமான தகவலை சொல்லியாக வேன்டும்.


ஹெலிகாப்டரில் இன்ஸ்பெக்டர் ஆதனுக்கு செல்வாவுக்கும் நடந்த உரையாடல்

இன்ஸ்பக்டர் ஆதன் : "சார், மிஸ்டர் சர்சரனை எதுக்கு மிலிட்டரியிலிருந்து டிஸ்மிஸ் செஞ்சாங்க"

செல்வா : "அது மிலிட்டரி கிலாசிபைட் (ரானுவ ரகசியம்) இதை உங்க கிட்ட சொல்ல கூடாது"

இன்ஸ்பக்டர் ஆதன் : "சார் நம்ம ஆபிரேசனுக்கு அவர் உதவியை நாடும் போது நானும் உடன் செயல்பட வேன்டும் இதை நான் தெரிஞ்சுக்க வேன்டமா"

செல்வா : "சரி சொல்லறேன் ஒரு மிலிட்டரி கோம்பிங் ஆப்பிரேசனில் அவர் குண்டு மாத்தி பயன்படுத்தியதால தீவிரவாதிக தப்பிச்சுட்டாங்க, அதனால அவரை டிஸ்மிஸ் செஞ்சுட்டாங்க"

இன்ஸ்பக்டர் ஆதன் : "அப்படி என்ன தான் மாத்தி போட்டாரு"

செல்வா : "சின்ன மிஸ்டேக் தான் துப்பாக்கிக்கும் போடும் தோட்டவை கிரனைய்ட்னு (வெடிகுண்டு) நினைச்சு எதிரிக மேல வீசீட்டாரு, கிரனைட் துப்பாக்குள்ள லோட் செஞ்சு சுட முயற்ச்சி செஞ்சு ஏக குழப்பமாகி விட்டது. சின்ன மிஸ்டேக் தான் ஆனாலும் அவர் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப திறமைசாலி நம்ம ஆபிரேசனுக்கு அவர் தான் கரெக்ட்டு"

இன்ஸ்பக்டர் ஆதன் : "ஆனா லெப்டினன்ட் சர்சரன் தான் இ ந்த ஆபிரேசனுக்கு தலைமை தாங்க ஒத்துக்கமாட்டிங்கறாரே வேற யாராச்சையும் தேர்வு செய்யலாமா?"

செல்வா : "இல்ல அவர் நிச்சயம் வருவாரு"

இன்ஸ்பக்டர் ஆதன் : "எப்படி அவ்வளவு உறுதியா சொல்லறீங்க செல்வா"

செல்வா : "எல்லா சினிமா படம் போல தான், ரேம்போ படத்துல புத்தமடத்துல இருக்கு ரேம்போ முதல்ல ஒத்துக்க மாட்டாரு அப்புறம் சன்டை போட போவாரு, ஏன் நம்ம தமிழ் படங்களில் கூட விஜயகாந்த் சாரு சில படங்களில் ஆரம்பத்துல ஒத்துக்கல அப்புறம் போவாரு, விக்ரம் படத்துல கூட கமல் ஆரம்பத்துல மறுப்பு செஞ்சு பிறகு அம்பிகா செத்ததும் ஒத்துகிட்டாரு"

இன்ஸ்பக்டர் ஆதன் : " அந்த கதையில எல்லாம் அப்படி ஒத்துக்க ஏதாச்சும் டர்னிங் பாயின்ட் நடக்குமே"

செல்வா : " நம்ம சீன்ல கூட அப்படி டர்னிங் பாயின்ட் நடக்கலாமில்லையா, அதனால ஒரு நாள் வெயிட் பன்னலாம்"

உரையாடல் சீன் முடிந்தது. இவர் உரையாடலுக்கு ஏற்ற மாதிரி ஒரு டர்னிங் பாயின்ட நடக்கலாம் என்ற மாதிரி கிரவுன்டில் சில சம்பவங்கள் தொடங்கி இருக்கிறது

லெப்டினன்ட் சர்சரன் வீட்டுக்கு வெகு தொலைவில் துப்பாக்கி வெடிகுண்டு ஆர்பிஜி போன்ற பேரழிவு சாதனங்களுடம் முகமூடி அனிந்த சில நபர்கள் இருள் வரும் வரை காத்திருந்தனர். இருட்ட தொடங்கியதும் அவர்கள் சர்சரன் வீட்டை நோக்கி நகர தொடங்கினார்கள்.
யார் இவர்கள்?
அடுத்த பாகத்தில் என்ன நடக்கும்? சர்சரன் பொழைப்பாரா?

தொடரும்

பிகு: பின்னூட்டங்களை பொருத்து யார் மன்டையை போடறதுனு முடிவு செஞ்சுக்கலாம்.

அக்னி
04-05-2011, 06:26 PM
லெப்ட். சர்ச்சரணோட மானம் சப்மரைன் ஏறினதப் பார்த்ததும்,
நம்ம பென்ஸ் அண்ணாச்சியோட விமானம் ஏறமுன் கப்பலேறிய மானம் ஏனோ நினைவுக்கு வந்தது.

அவரு இப்போ அடிக்கடி மன்றத்துக்கு வராவிட்டாலும் பரவாயில்லை.
இதிலயாச்சும் கடிச்சு வைக்கலாமே.

என்ன... நாஞ் சொல்றது சரிதானே...

வாத்தியாரே... :icon_b:

அப்புறம் இன்னுமொன்று வாத்தியாரே..,
யாரையாச்சும் போட்டுத் தள்ளினாலும் ஆவியாவோ அல்லது சந்திரமுகி பாம்பு மாதிரியோ அல்லது தப்பிச்சுத் திரும்ப வாற மாதிரியோ காரெக்டர் கொடுத்திடுங்க...

யாருமே விரைவில சாந்தியாகிடக்கூடாதல்லவா... அதுக்காகத்தான் சொல்றேன்...

Ravee
05-05-2011, 05:32 AM
என்ன... நாஞ் சொல்றது சரிதானே... வாத்தியாரே... :icon_b:

யாருமே விரைவில சாந்தியாகிடக்கூடாதல்லவா... அதுக்காகத்தான் சொல்றேன்...

ஆஹா எவ்வளவு நல்ல மனசு இவருக்கு .... வாத்தியாரே இந்த நல்ல மனசுக்கு ஒரு கேரெக்டர் கொடுங்க ப்ப்ப்ப்....... ப்ளிஸ்

Ravee
05-05-2011, 05:38 AM
ரவி அண்ணாத்தே, எனக்கு ஒரு டவுட்டு.... :confused:

அதுதாங்க படங்களைக் வரைந்து அவங்க முறையே தாமரை அண்ணா, மணியா அண்ணா, ஆதி, ஆதவானு கூறிட்டு எல்லாப் படங்களின் அடியிலும் `ரவி`னு எழுதியிருக்கீங்களே...!!!! :eek:

என்னோட டவுட்டு இதுதான், நீங்க வரைந்த எல்லா படங்களும் உங்களோட படங்களாண்ணே...??? :cool:

வாத்தியார் உங்களுக்கு ஒரு கேரெக்டர் கொடுக்காமலா போய்டுவார் ....... அப்ப ஒரு படம் போட்டு கையெழுத்தே போடாம பெரிசா உங்க பேர் மட்டும் போடுறேன் ..... ஓகே :D

ஓவியன்
05-05-2011, 06:01 AM
வாத்தியார் உங்களுக்கு ஒரு கேரெக்டர் கொடுக்காமலா போய்டுவார் ....... அப்ப ஒரு படம் போட்டு கையெழுத்தே போடாம பெரிசா உங்க பேர் மட்டும் போடுறேன் ..... ஓகே :D

நான் கேட்ட கேள்விக்கு இன்னமும் பதில் வரலையே :D, நீங்களும் நம்ம அரசியில் தலைவர்கள் மாதிரி கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் வேறு விடயங்களைக் கூறிச் சமாளிக்கப் பழகிட்டீங்க போல... :wuerg019: :D

sarcharan
05-05-2011, 07:07 AM
அது என்ன "லெப்ட்" சர்சரண்? ஒரு கடற்படை தளபதி, ஏர் சீஃப் மார்ஷல் போஸ்ட் எல்லாம் இல்லையா? :confused:

துப்பாக்கில கிரானைட் குண்டு.. :eek:

எல்லாம் சரி அது என்ன பல்லு விளக்காம ஜொள்ளு விடுறது...
அதை பத்தி விளக்கமா விளக்குங்க...

அக்னி
05-05-2011, 07:46 AM
ரவீ சார்...

ஓவியனுக்கும் எனக்கும் வாத்தியார் காரெக்டர் குடுத்துட்டாரு...

ஆமா... நீங்க ஓ கே தானே... :confused:

ஓவியன்
05-05-2011, 07:51 AM
ரவீ சார்...

ஓவியனுக்கும் எனக்கும் வாத்தியார் காரெக்டர் குடுத்துட்டாரு...

ஆமா... நீங்க ஓ கே தானே... :confused:

ஹா, ஹ் ஹா..!!

ரவீ அண்ணாவுக்கு கஜனி கேரக்டர் கொடுத்திருக்கலாமோ...??? :lachen001:

அக்னி
05-05-2011, 08:04 AM
கஜினி க்கு மறதி... ஆனா இவருக்குத் தெரியலயே...

அப்ப, 'விளக்கம் கெட்ட' காரெக்டர் ஒன்று கொடுக்கலாமே...

lolluvathiyar
05-05-2011, 01:55 PM
யாரையாச்சும் போட்டுத் தள்ளினாலும் ஆவியாவோ அல்லது சந்திரமுகி பாம்பு மாதிரியோ அல்லது தப்பிச்சுத் திரும்ப வாற மாதிரியோ காரெக்டர் கொடுத்திடுங்க...
ஆகா புது யோசனை சொல்லி இருக்கீங்க நன்றி அக்னி


அது என்ன "லெப்ட்" சர்சரண்? ஒரு கடற்படை தளபதி, ஏர் சீஃப் மார்ஷல் போஸ்ட் எல்லாம் இல்லையா?
எடுத்தவுடனே எல்லாத்தை கொடுத்தற முடியுமா கொஞ்சம் கொஞ்சம்தானே ப்ரோமசன் கொடுக்கனும் (அப்புறம் கவுக்கனும்)
சீப் (Cheap) மார்சல் போஸ்ட் வேனும்னா சீக்கிரமே கன்சிடர் பன்னறேன்.


எல்லாம் சரி அது என்ன பல்லு விளக்காம ஜொள்ளு விடுறது... அதை பத்தி விளக்கமா விளக்குங்க...
அடுத்த பாகத்துக்கு நீங்களே எடுத்து கொடுத்துட்டீங்க. நன்றி.


ரவீ சார்...
ஓவியனுக்கும் எனக்கும் வாத்தியார் காரெக்டர் குடுத்துட்டாரு...
ஆமா... நீங்க ஓ கே தானே... :

ரவிக்கு எங்கோ ஒரு கேரக்டர் கொடுத்த மாதிரி நினைவு அப்படி இல்லீனா நோ பிராபளம் ஒரு போலி சாமியார் ரோல் கதையில் இருக்கு அது ரவிக்கு பொருத்தமா இருக்குமானு பொதுமக்கள் கருத்து அரிய ஆவல்.

பின்னூட்டம் போட்ட அனைவருக்குமே நன்றி

மச்சான்
05-05-2011, 10:50 PM
வாத்தியாரே.....! அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் என லோகத்தை சுத்தி சுத்தி வந்து கதை சொல்றதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்....! சென்னை மெரினா பீச்சில் நடந்த கதையை எப்போ சொல்லப்போறீங்க....?:):aetsch013::D

ஆதவா
06-05-2011, 04:34 AM
வாத்தியாரே.....! அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் என லோகத்தை சுத்தி சுத்தி வந்து கதை சொல்றதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்....! சென்னை மெரினா பீச்சில் நடந்த கதையை எப்போ சொல்லப்போறீங்க....?:):aetsch013::D

எதுங்க.??... அங்க ஓடற நொண்டிக்குதிரை மேல நீங்க சவாரி செஞ்சு குப்புற விழுந்து மூஞ்சில மண்ணு ஒட்டலைன்னு சொன்ன கதையா? :lachen001::lachen001:

தாமரை
06-05-2011, 04:45 AM
ரவி அண்ணாத்தே, எனக்கு ஒரு டவுட்டு.... :confused:

அதுதாங்க படங்களைக் வரைந்து அவங்க முறையே தாமரை அண்ணா, மணியா அண்ணா, ஆதி, ஆதவானு கூறிட்டு எல்லாப் படங்களின் அடியிலும் `ரவி`னு எழுதியிருக்கீங்களே...!!!! :eek:

என்னோட டவுட்டு இதுதான், நீங்க வரைந்த எல்லா படங்களும் உங்களோட படங்களாண்ணே...??? :cool:

எந்த இடத்தில் அவர் பேரை எழுதி இருக்கார் என்று நல்லா கவனிங்க ஓவீஸ்..


எனக்கு வலது கை இரவி. அதனால என் வலது கையில் அவர் பேரை எழுதி இருப்பார். ஆதியின் இதயத்தில் இரவி இருக்காராம். அதான் நெஞ்சில் எழுதி இருக்கார்.

தலைக்கு சாப்பாட்டு ஏற்பாடு முழுக்க முழுக்க இரவிதான். அதான் வயிற்றில் எழுதி இருக்கார்.

ஆதாவாவோட அக்குளில் இரவி சிக்கிகிட்டு இருக்கார் என்பதை சிம்பாலிக்கா காட்டி இருக்கார்.

இதையெல்லாம் புரிஞ்சிக்க இரசனை வேணும் மக்கா!!!

தாமரை
06-05-2011, 04:51 AM
வாத்தியாருக்கும் சி.ஐ.ஏ வுக்கும் லிங்க் இருக்கு போல. ,...

Ravee
06-05-2011, 05:55 AM
எந்த இடத்தில் அவர் பேரை எழுதி இருக்கார் என்று நல்லா கவனிங்க ஓவீஸ்..


எனக்கு வலது கை இரவி. அதனால என் வலது கையில் அவர் பேரை எழுதி இருப்பார். ஆதியின் இதயத்தில் இரவி இருக்காராம். அதான் நெஞ்சில் எழுதி இருக்கார்.

தலைக்கு சாப்பாட்டு ஏற்பாடு முழுக்க முழுக்க இரவிதான். அதான் வயிற்றில் எழுதி இருக்கார்.

ஆதாவாவோட அக்குளில் இரவி சிக்கிகிட்டு இருக்கார் என்பதை சிம்பாலிக்கா காட்டி இருக்கார்.

இதையெல்லாம் புரிஞ்சிக்க இரசனை வேணும் மக்கா!!!

இது இது இதுதான் தாமரை அண்ணா .... பாவம் பசங்க பொறாமையில பேசுறாங்க அண்ணா .... விடுங்க ... வாத்தியார் கதையில கவ்ன்டமணி செந்தில் இவங்க ரெண்டு பேரும்தான் .... யாரு கவுண்டர் யார் செந்தில்-ங்கிறது மட்டும் வாத்தியார் சாய்ஸ் ... :p

Ravee
06-05-2011, 05:59 AM
ரவிக்கு எங்கோ ஒரு கேரக்டர் கொடுத்த மாதிரி நினைவு அப்படி இல்லீனா நோ பிராபளம் ஒரு போலி சாமியார் ரோல் கதையில் இருக்கு அது ரவிக்கு பொருத்தமா இருக்குமானு பொதுமக்கள் கருத்து அரிய ஆவல்.



சண்டை இல்லாமல் ஒன்லி ரொமான்ஸ் .... :p உங்க நல்ல மனசுக்கு .... :D ரொம்ப நன்றி வாத்தியாரே

ஓவியன்
06-05-2011, 08:05 AM
எந்த இடத்தில் அவர் பேரை எழுதி இருக்கார் என்று நல்லா கவனிங்க ஓவீஸ்..


எனக்கு வலது கை இரவி. அதனால என் வலது கையில் அவர் பேரை எழுதி இருப்பார்!!!


https://lh6.googleusercontent.com/_ija4A80-p4I/Tb5EHNRnqHI/AAAAAAAAAgQ/yspzpR38-M0/s512/Sci%20Thamarai.JPG

அது வலது கையா இல்லையானு ஒருதடவை செக் பண்ணிப் பாருங்கண்ணா.... :D:D:D:icon_rollout:

உங்க வலது கை அதுதாண்ணா, சரி.. :cool::rolleyes:

தாமரை
06-05-2011, 08:09 AM
https://lh6.googleusercontent.com/_ija4A80-p4I/Tb5EHNRnqHI/AAAAAAAAAgQ/yspzpR38-M0/s512/Sci%20Thamarai.JPG

அது வலது கையா இல்லையானு ஒருதடவை செக் பண்ணிப் பாருங்கண்ணா.... :D:D:D:icon_rollout:

இது கண்ணாடியில் என்னை நான் பார்த்துக்கும் போது அந்த பிம்பத்தைப் பார்த்து அவர் வரைந்தது இது.

எனக்குப் போஸ் கொடுக்கறதெல்லாம் ரொம்ப கூச்சமான ஒண்ணு.

ஓவியன்
06-05-2011, 08:14 AM
இது கண்ணாடியில் என்னை நான் பார்த்துக்கும் போது அந்த பிம்பத்தைப் பார்த்து அவர் வரைந்தது இது.

இப்படித்தான் சொல்லுவீங்கனு எனக்குத் தெரியுமே, ஆனா ஒண்ணு கண்ணாடியில் உங்களை நீங்களே பார்த்தால் இடம் வலமாகத் தெரியாது. (உ+ம் - மூக்குக் கண்ணாடி. :lachen001:). தளவாடியில் வேண்டுமானால் இடம் வலமாகத் தெரியும் :rolleyes:. ஆனால் நீங்கள் தளவாடினு கூறாத காரணத்தால் நீங்கள் கூறிய காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாதுங்கண்ணா... :)

தாமரை
06-05-2011, 08:17 AM
இப்படித்தான் சொல்லுவீங்கனு எனக்குத் தெரியுமே, ஆனா ஒண்ணு கண்ணாடியில் உங்களை நீங்களே பார்த்தால் இடம் வலமாகத் தெரியாது. (உ+ம் - மூக்குக் கண்ணாடி. :lachen001:). தளவாடியில் வேண்டுமானால் இடம் வலமாகத் தெரியும் :rolleyes:. ஆனால் நீங்கள் தளவாடினு கூறாத காரணத்தால் நீங்கள் கூறிய காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாதுங்கண்ணா... :)

மூக்கு கண்ணாடியில் நீங்க உங்க பிம்பம் பார்ப்பீங்கன்னு இப்ப நீங்க சொல்லித்தான் எனக்குத் தெரியுது..

Ravee
06-05-2011, 08:19 AM
மூக்கு கண்ணாடியில் நீங்க உங்க பிம்பம் பார்ப்பீங்கன்னு இப்ப நீங்க சொல்லித்தான் எனக்குத் தெரியுது..

:lachen001: :lachen001: :lachen001:

ஓவியன்
06-05-2011, 08:20 AM
மூக்கு கண்ணாடியில் நீங்க உங்க பிம்பம் பார்ப்பீங்கன்னு இப்ப நீங்க சொல்லித்தான் எனக்குத் தெரியுது..

நான் பிம்பத்தைப் பார்த்தால் என்று கூறவேயில்லையே, உங்களைப் பார்த்தால்னு தானே கூறினேன், அதாவது உங்க போட்டோவை மூக்குக் கண்ணாடியால பார்க்கலாம்... :D

கண்ணாடினா அது பாதரசம் பூசாதது, கண்ணாடியில் ஒரு போதும் விம்பம் தெரியாது. :D

Ravee
06-05-2011, 08:29 AM
அய்யா ஓவியரே , அண்ணாவை வலம் இடமாக காட்டும் ஊடகத்தை பார்த்தது வரைந்த படம்தான் இது .... உம்மை மேலும் கீழுமாக தலைகீழாக காட்டும் ஊடகத்தை பார்த்து வரைந்து தருகிறேன் சரியா ??? :icon_rollout:

தாமரை
06-05-2011, 08:32 AM
நான் பிம்பத்தைப் பார்த்தால் என்று கூறவேயில்லையே, உங்களைப் பார்த்தால்னு தானே கூறினேன், அதாவது உங்க போட்டோவை மூக்குக் கண்ணாடியால பார்க்கலாம்... :D

கண்ணாடினா அது பாதரசம் பூசாதது, கண்ணாடியில் ஒரு போதும் விம்பம் தெரியாது. :D

கண்ணாடி என்பதில் கண்ணில் போட்டுக் கொள்ளும் ஆடியல்ல... ஓவியன்..

கேள்வி இரவி எதைப் பார்த்து வரைந்தார் என்பதுதான். இரவி பிம்பத்தைப் பார்த்து வரைந்ததாகத்தான் சொல்லி இருக்கேன். எதுக்கும் உங்க மூக்குக் கண்ணாடியை துடைத்துப் போட்டு படித்துப் பார்க்கவும்.

அப்புறம் ரசம் பூசாததுதான் கண்ணாடி என்றால் இரசம் போன கண்ணாடி என்று எதைச் சொல்றது ஓவீஸ்?

sarcharan
06-05-2011, 08:58 AM
அது வலது கையா இல்லையானு ஒருதடவை செக் பண்ணிப் பாருங்கண்ணா.... :D:D:D:icon_rollout:

:cool::rolleyes:


அவர் வலது கை பழக்கம் உள்ளவர். அதனால் தான் வலது கையால் எழுதியுள்ளார்.

sarcharan
06-05-2011, 09:06 AM
கண்ணாடி என்பதில் கண்ணில் போட்டுக் கொள்ளும் ஆடியல்ல... ஓவியன்..


அப்புறம் ரசம் பூசாததுதான் கண்ணாடி என்றால் இரசம் போன கண்ணாடி என்று எதைச் சொல்றது ஓவீஸ்?



அதாவது உங்க போட்டோவை மூக்குக் கண்ணாடியால பார்க்கலாம்... :D

கண்ணாடினா அது பாதரசம் பூசாதது, கண்ணாடியில் ஒரு போதும் விம்பம் தெரியாது. :D


ரா ரா,

இவுங்க சொல்லுற ரசத்துக்கும் ஜானகி அம்மா வைக்கும் ரசத்துக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?:confused:

அட!! என்னோட மூக்கு கண்ணாடிக்கு என்ன ஆச்சு? எங்கே போச்சு?

ஹீ ஹீ சர்சரண் துப்பு துலக்க ஆரம்பிச்சுட்டார்...
(பல்லும் விளக்கி விட்டார்...)



சபாஷ் சரவணா!!! என்னே உனது மதி...

ஓவியன்
06-05-2011, 09:13 AM
கண்ணாடி என்பதில் கண்ணில் போட்டுக் கொள்ளும் ஆடியல்ல... ஓவியன்..

அப்புறம் ரசம் பூசாததுதான் கண்ணாடி என்றால் இரசம் போன கண்ணாடி என்று எதைச் சொல்றது ஓவீஸ்?

கண்ணில் போடுவதுதான் கண்ணாடினு நான் எங்கேயும் கூறவேயில்லை, ஒளியினை ஊடுருவ விடுவது கண்ணாடி (Glass), அதற்கு பாதரசம் பூசினால் ஒரு தளமாக தோழிற்பட்டு பிம்பத்தைக் காட்டும் அதனால் அது தளவாடி (Mirror).

பேச்சுவழக்கில் தளவாடியை நாம் கண்ணாடி எனக் கூறினாலும் கண்ணாடி வேறு, தளவாடி வேறு என்பதுதான் உண்மை.

அக்னி
06-05-2011, 09:49 AM
எனக்கொரு சந்தேகம்... :confused:

கண்ணாடி, தளவாடி எல்லாம் பெண்பாலோ... :confused: :confused:

கண்ணாடா, தளவாடா என்று ஏன் இல்லை... :confused: :confused: :confused:

sarcharan
06-05-2011, 10:02 AM
மலையாளத்தில் கண்ணடா என்று அழைப்பர்.

Ravee
06-05-2011, 11:21 AM
https://lh3.googleusercontent.com/_ija4A80-p4I/TcPVnxNEVuI/AAAAAAAAAgs/DiqnsPDPcto/s512/Chakkaram.JPG

படத்தோட முதல் போஸ்டர் வெளியிட்டு இருக்கோம் . புஜ பல பராக்கிரம சற்சரண்தான் இந்த போஸ்டரில் பிரதானம் . அவரின் புதுமையான ஆயுதங்களை பற்றி இங்கே கண்டிப்பா சொல்லி ஆகணும் . எந்த வெடி குண்டுகளையும் தாங்கும் கடப்பா இரும்புச்சட்டி , சீர் அடிக்காமல் இருக்க அம்மா கட்டிய தாயத்து ... லவ் பண்ண பொண்ணு அண்ணான்னு சொல்லி கட்டிய ரட்சை, அந்த சல்லடை கரண்டி மிசின் கன் (தொக்கு) கக்கும் குண்டுகளை சல்லடை போட்டு பிடிக்கும் , ஆசிட் தக்காளியும் முட்டைகளும் கவண் வைத்து அடித்தால் அந்த ஏரியாவே நாசம்தான். அப்புறம் நெஞ்சுக்கு பக்கத்தில் தொங்க விட்டு இருக்கும் வெங்காயம் .... கசக்கி புழிந்தால் நூறு கண்ணீர் புகை குண்டுக்கு சமம் .... அப்புறம் தோல்விகாணும் போது எல்லாம் எனெர்ஜி கொடுக்கும் சூப்பர் ஸ்டார் பனியன் ..... எந்த ஒரு ராக்கேட்யையும் தாங்கும் கேடயமாய் இட்டிலி தட்டு ... சமயத்தில் செய்திகளை அனுப்ப டிஷ் ஆண்டேன்னாவாகவும் பயன்படும் .... இப்படியே அவர் பெருமைகள் இன்னும் வரும் ..... :D :D :D

Nivas.T
06-05-2011, 11:42 AM
:lachen001::lachen001::lachen001::lachen001:

அக்னி
06-05-2011, 12:04 PM
பேசாம இதையே அவரோட அவதாரா வச்சுக்கலாம்...

அப்பிடியே இத்யாதி இத்யாதி போட்ட மீன்பாடி வண்டி ஒன்றையும் அவருக்காகக் கீறி வருறீங்களாமே...
நம்ம நிவாஸ் சொன்னாரு... :cool:

ஆதவா
06-05-2011, 12:12 PM
நல்ல ஓவியம்!!! சர்சரனை நேரில் பார்த்தது மாதிரி இருந்தது!! :aetsch013:

பல்லு.. பயங்கரம்!! :eek::lachen001:

Ravee
06-05-2011, 12:17 PM
https://lh3.googleusercontent.com/_ija4A80-p4I/TcPVnxNEVuI/AAAAAAAAAgs/DiqnsPDPcto/s512/Chakkaram.JPG


நல்ல ஓவியம்!!! சர்சரனை நேரில் பார்த்தது மாதிரி இருந்தது!! :aetsch013:

பல்லு.. பயங்கரம்!! :eek::lachen001:

ஆஹா சொல்ல மறந்த கதையில் பாயிண்ட்டை கரெக்டா புடிச்சுடீங்களே ஆதவா ... :icon_b: இருந்தாலும் கருட பார்வை அய்யா உமது ..... :sprachlos020: ............ :lachen001:

Nivas.T
06-05-2011, 12:20 PM
பேசாம இதையே அவரோட அவதாரா வச்சுக்கலாம்...

அப்பிடியே இத்யாதி இத்யாதி போட்ட மீன்பாடி வண்டி ஒன்றையும் அவருக்காகக் கீறி வருறீங்களாமே...
நம்ம நிவாஸ் சொன்னாரு... :cool:
:icon_rollout::icon_rollout::icon_rollout:
அக்னினு பேருவச்சா
இப்டிய பத்த வைக்கிறது :eek:

ஏன் இந்த ரத்தவெறி..............:sprachlos020:

வேற யாரும் சிக்கலையா?????:D:D:D:D:D

Nivas.T
06-05-2011, 12:29 PM
https://lh3.googleusercontent.com/_ija4A80-p4I/TcPVnxNEVuI/AAAAAAAAAgs/DiqnsPDPcto/s512/Chakkaram.JPG


எனக்கென்னமோ நம்பிக்கையில்ல :sport009:

ரவி அண்ணா, சர்ச்சரண் கிட்ட லஞ்சம் வாங்கிட்டாருன்னு நெனைக்கிறேன்:sport-smiley-018:

அதான் இப்டி இவ்வளவு அழகா வரஞ்சிருக்காறு:medium-smiley-088:

இதுல ஏதோ உள்குத்து இருக்கு :082502now_prv::icon_clap::shutup::D:D:D:D

Ravee
06-05-2011, 12:39 PM
எனக்கென்னமோ நம்பிக்கையில்ல :sport009:

ரவி அண்ணா, சர்ச்சரண் கிட்ட லஞ்சம் வாங்கிட்டாருன்னு நெனைக்கிறேன்:sport-smiley-018:

அதான் இப்டி இவ்வளவு அழகா வரஞ்சிருக்காறு:medium-smiley-088:

இதுல ஏதோ உள்குத்து இருக்கு :082502now_prv::icon_clap::shutup::D:D:D:D


அப்போ ரேட்டு பேசிடுவோமா நிவாஸ் !!! ................ :lachen001: :lachen001:

Nivas.T
06-05-2011, 12:48 PM
அப்போ ரேட்டு பேசிடுவோமா நிவாஸ் !!! ................ :lachen001: :lachen001:
:eek::eek::eek:
எவ்வளவு ரேட்டு பேசினாலும் நீங்க என்ன ஏமாத்திடுவீங்கன்னு எனக்கு தெரியும். அதனால நான் இந்த டீலிங்கு வரல.:D:D:D:D

sarcharan
06-05-2011, 02:06 PM
படத்தோட முதல் போஸ்டர் வெளியிட்டு இருக்கோம் .


ஆரம்பத்துலையே ஆரம்பிச்சுட்டீங்களா :cool:





புஜ பல பராக்கிரம சற்சரண்தான் இந்த போஸ்டரில் பிரதானம் .

என்ன வெச்சு ஏதும் காமெடி கீமெடி பண்ணலியே...



அவரின் புதுமையான ஆயுதங்களை பற்றி இங்கே கண்டிப்பா சொல்லி ஆகணும் . எந்த வெடி குண்டுகளையும் தாங்கும் கடப்பா இரும்புச்சட்டி , சீர் அடிக்காமல் இருக்க அம்மா கட்டிய தாயத்து ...


போய் வா மகனே.. போய் வா, தோளில் ஆயுதங்கள் சுமந்து போய் வா...போய் வா...:icon_ush::eek:




லவ் பண்ண பொண்ணு அண்ணான்னு சொல்லி கட்டிய ரட்சை,


உச்சகட்ட அவமானம்.. :sauer028:



அந்த சல்லடை கரண்டி மிசின் கன் (தொக்கு) கக்கும் குண்டுகளை சல்லடை போட்டு பிடிக்கும் , ஆசிட் தக்காளியும் முட்டைகளும் கவண் வைத்து அடித்தால் அந்த ஏரியாவே நாசம்தான்.


சண்டைக்கு போறனா இல்லை தெருவில குண்டடிக்க போறனா?

ஆயுதமெல்லாம் அமர்க்களமா இருக்கு..

பை தி பை இந்த ஆயுதங்கள் எல்லாம் எந்த ஆயுத கிடங்கில் கிடைக்கும்...

இந்த ஜேமுசு பாண்டுக்கு ஸ்பெஷல் ஆயுதம் தந்த "மிஸ்டர் க்யூ" வாத்தியாருக்கும், ரவி அண்ணாவுக்கும் ஒரு ஜெய்



அப்புறம் நெஞ்சுக்கு பக்கத்தில் தொங்க விட்டு இருக்கும் வெங்காயம் ....


நான் எதிரி நாட்டுக்கு போய் அங்க என்ன பஜ்ஜி கடையா வைக்கபோறேன்?

பஸ் ஸ்டாண்டுல பேனா விக்கிறவன் மாதிரி ஆக்கீட்டீங்களே...




கசக்கி புழிந்தால் நூறு கண்ணீர் புகை குண்டுக்கு சமம் ....



வெங்காயம் விக்கிற விலையில வெங்காய வெடியா?



அப்புறம் தோல்விகாணும் போது எல்லாம் எனெர்ஜி கொடுக்கும் சூப்பர் ஸ்டார் பனியன் .....


எல்லாம் சரி...
என்னை பனியன் போட்ட சனியன்னு எதிரி சொன்ன என்ன செய்ய?

போட்டிருக்குற கால் சட்டைய பத்தி ஒண்ணுமே சொல்லலையே... அதாவது ரேமொண்ட்ஸ் டவுசரா?




எந்த ஒரு ராக்கேட்யையும் தாங்கும் கேடயமாய் இட்டிலி தட்டு ... சமயத்தில் செய்திகளை அனுப்ப டிஷ் ஆண்டேன்னாவாகவும் பயன்படும் ....


பேக் கிரவுண்டு மியூசிக் பஞ்சு டயலாக், அனல் பறக்கும் சண்டைகள் எல்லாம் இல்லையா?
நடந்து வந்தா தீப்பொறி பறக்குமா? பூமி அதிருமா?




இப்படியே அவர் பெருமைகள் இன்னும் வரும் ..... :D :D :D

மொத்ததுல, ஒரே வாக்கியத்தில் சொன்னா... என்ன கொடுமை சரவணன்?



பேசாம இதையே அவரோட அவதாரா வச்சுக்கலாம்...


என்னோட படம் வரைவது அவ்வளவு கஷ்டம்ன்னா என்னோட அவதார பாத்து வரைந்து இருக்கலாமே.. :frown:

எனக்கும் கமலுக்கும் பல ஒற்றுமைகள்! :) இருவருமே அழகர்கள்...:icon_b:



அப்பிடியே இத்யாதி இத்யாதி போட்ட மீன்பாடி வண்டி ஒன்றையும் அவருக்காகக் கீறி வருறீங்களாமே...
நம்ம நிவாஸ் சொன்னாரு... :cool:


ஆஸ்டன் மார்டின், பி எம் டபிள்யூ, பென்ஸ், ஆடி மாதிரி கார்ல போக வேண்டிய நான் மீன் பாடி வண்டில போவதா? :confused: நெவெர்....

கவுரவம் சிவாஜி மாதிரி சொல்றேன் நெவெர்... நெவெர்...


:lachen001::lachen001::lachen001::lachen001:

:sauer028::sauer028::sauer028::sauer028:

த.ஜார்ஜ்
06-05-2011, 02:38 PM
ரவி பிரமாதம்
திரைப்படத்துக்கு நல்லாத்தான் விளம்பரம் பண்றீங்க.[சூரிய டி.வி.மாதிரி]
படத்தைவிட விளம்பரம் நல்லா ஓடுது.

lolluvathiyar
06-05-2011, 02:41 PM
சினிமா கதை எழுதறே என்ற பெயரில் நான் கோடு தானே போட்டேன் ஆனால் இங்க மக்கள் ரோடு போட்டு விமான ரன்வே ஆக்கிபுட்டாங்க. சபாஷ் கன்னாடி தளவாடி ஆராய்ச்சி போய் இறுதிய சர்சரனுக்கு பக்கா படம் கொடுத்த ஆர்டிஸ்ட் ரவிக்கு நன்றி. இந்த படத்தையும் ரவி கொடுத்த விளக்கத்தையும் வச்சு அடுத்த ஆக்சன் சீன் கற்பனை வந்துரும். ஆனால் இந்த சீனில் ஆக்சன் மேட்டர்களுக்கு கொஞ்சம் இடைவெளி விடுகிறேன். ஏன்?

சினிமாவுல வெறும் ஆக்சன் மட்டும் இருந்தா நல்லாவா இருக்கு ரொமான்ஸ் இருக்க வேன்டாமா? அதுவும் நம்ம ஜீரோ ஓ சாரி ஹீரோவான கமான்டர் சர்சரனுக்கு ஒரு டூயட் ரொமான்ஸ் சீன் அமைக்கலீனா கதையில் சுவாரஸ்யம் இருக்காதே.

சர்சரனுக்கு மட்டும் ரொமான்ஸ் சீன் எங்களுக்கு இல்லையானு யாரும் கோவிச்சுக்க வேன்டாம், ஏன்னா அவர் மட்டும் தான் இப்போதைக்கு மனைவியிடம் கன்னம் வீங்க அடி வாங்கி இருக்காரே அதனால மூட் அவுட்டான அவருக்கு ரொமான்ஸ் சீன் அமைச்சு கழிம்பு தேச்சு விடலாமே (புன்ன ஆற விட்டு தான் அப்புறமா அடிக்கனும்). சரி நாம சீனுக்கு போவோமா.


சீண் 8:
இடம் : சர்சரனின் வீடு.

பொன்டாட்டிக்கு புருசன் மேல சந்தேகம் வர கூடாது வந்துட்டா அது அவ்வளவு ஈசியா போகாது. இது ஒரு தத்துவம். அதே சமயத்தில் கடவுள் பென்களுக்கு எத்தனையோ நல்ல குணங்களை கொடுத்து போனஸாக சந்தேகபுத்தியை சேர்த்து கொடுத்து விட்டாரு. இது அடுத்த தத்துவம். இவ்விரு தத்துவங்களும் போதும் தினம் தினம் குடும்பத்தில் தீபாவளி வெடிக்க. ஆனால் சந்தேகம் என்பது மனைவின் ஏகபோக சொத்து அதுவும் அவள் கொன்டாடும் ஒரு உரிமை என்பதை புரிஞ்ச புருசனுக அதுக்கு சல்யூசனும் தேடும் யுக்தியையும் கண்டு புடிச்சிருவாங்க. இப்படி சார்பான மூளையும் பொசசிவ் குணத்தையும் மனைவிகளுக்கு கொடுத்த இரைவன் அதன் மறுபக்கமான ஒரு வீக்னஸையும் மனைவிகளுக்கு வழங்கி இருக்காரு. அது என்ன முட்டாள்தனம் என்று கேக்கறீங்களா? முகஸ்தூதிக்கு மயங்குதல். இது பொதுவாக பென்களின் சின்ன வீக் பாயின்ட் அதை புருசன் கடைபிடிச்சா ஸ்ட்ராங்கான வீக் பாயின்ட். புருசன் புகழ் ந்தா போதும் எந்த மனைவியும் டோட்டல் ப்ளாட். அந்த புகழ்ச்சிக்கு தானே அவர்கள் எந்த நேரமும் காத்திருகிறார்கள் / எதிர்பார்க்கிறார்கள் / ஏங்குகிறார்கள் என்ற விசயத்தை சரியா கண்டு பிடிச்சு பயன்படுத்தும் புருசன் தான் சமாளிக்க முடியும்.

சரி தம்மன்னா படத்தை பாத்து ஜொள் விட்டதோடு நிக்காம கன்னே கட்டிக்கவா ஒட்டிகிட்டு தொட்டுக்கவா கட்டழகு மேனி என்று பாட்டு வேற பாடி மனைவியிடம் கையும் களவுமாக பிடிபட்ட சர்சரனுக்கு அவளை சமாளிக்க மேலே சொன்ன தத்துவமெல்லாம் மூலையில் ஓடியது (அடி வாங்கினாதானே தத்துவமெல்லாம் வரும்)

மறக்காமல் பல்லு விளக்கி விட்டு மகளை அழைத்து கொன்டு வீட்டுக்கு போனார். தொப்புனு விழுந்த இட்லி சொல்லியது துனைவின் கோபம் இன்னும் உச்சத்தில் தான் இருக்கிறது என்று. மூச்சில்லாமல் சாப்பிட்டு விட்டு சொல்லாமல் கொள்ளாமல் எஸ்கேப் ஆனார். (பின்ன சம்சாரத்துக்கு முன்னாடி தீவிரமாக யோசிச்சா அதுக்கு ஒரு காரனம் கண்டு பிடிச்சு நைய புடைஞ்சுருவாளே)

வீட்டை விட்டு ரொம்ப தூரம் போய் நீண்ட யோசனை செஞ்சு விட்டு பக்கத்து டவுனுக்கு போய் மாம்பழம், வஞ்சர மீன், நாட்டு கோழி , பர்பி, வெங்காயம், மொலகாய் எல்லாம் வாங்கி விட்டு மறக்காமல் மனைவிக்கு கொடுப்பதற்கென்றே இந்தியாவில் கண்டுபிடிக்க பட்ட அல்வா பாக்கெட்டும் வாங்கி முல்லை பூ 2 சரமும் மரிக்கொழுந்து 2 வாங்கி வீடு திரும்பினார்.

வீட்டில்
குழந்தையை சாப்பிட வைத்து விட்டு சுத்தம் செய்யும் வேலை துவைக்கும் வேலை எல்லாம் மகளுக்கு கொஞ்சம் கற்று கொடுத்தவாரே முடிச்சு விட்டு மகளையும் தூங்க வைத்தார் சர்சரன் மனைவி. குட்டி நனறாக உறங்கியவுடன் சமையல் கட்டுக்கு போனால் மதியம் என்ன சமைக்கலாம் என்று ப்ளான் போட்டு கிட்டு இருந்தார். புருசன் பாவம் காலையில நல்லா அடிச்சு போட்டோம் மனுசன் நொந்து போயிருப்பாரு பாவம் அவரை சமாதன படுத்தனுமே. ஒரு விசயத்தில் புத்திசாலி மனைவியான சர்சரன் தர்மத்னி மிக தெளிவாக இருப்பார்.
எந்த விசயம்?
ஹஸ்பன்டை சமாதனபடுத்தனும்னா சுயமா யோசிச்சு ருசியா சமைச்சு போட்டா போதும். அதுவே ஹஸ்பன்டை பழி வாங்கனுன்மாலோ அல்லது கடுப்பேத்தனும்னாலோ ஜானகி அக்காவின் சமையல் குறிப்பு புத்தகத்தை படிச்சு சமைச்சாலே போதும். (அவுங்களை மட்டும் எதுக்கு விட்டு வக்கனும்)

வாசலில் சத்தம் கேட்டது எட்டி பார்த்தார் உள்ளே சர்சரன் நுழைந்தார். அவர் முகத்தில் ஒரு உற்சாகம் வாலிபம் கண்டு வியந்தாள். உள்ளே நுழைந்த சர்சரன் கோழியை உயற்த்தி மனையாளிடம் கொடுத்தார்.


கன்னே உறிச்சுக்கவா வெட்டிக்கவா
வெட்டிகிட்டு சுட்டுக்கவா
சுட்டுகிட்டா பொசுங்குமே
பொசுங்கிட்டா சுவைக்குமே

அஞ்சுகமே கோழி வாசம் என் மூக்கு வழி ஓடுது
கட்டழகு உன என்னி கன்னா முழி வீங்குது
சப்பாத்தி வேண்டுமென வயிற்று வேற துடிக்குது
குர்மா சுவை கூட்ட கெண்டை மீனு கிடைச்சது
வருவல் சுவை என்னி நாக்கு ஏனோ துடிக்குது
பசி தாங்குமா இளமை இனி
பரிமாற வா இளமாங்கினி

பிரியானி ஹ தயிர்பச்சிடி வந்துபோடு
கனியோ கனி உன் ருசியோ தனி கொன்டாடு

உன் கையிலே சுட்டு சுட்டு போடுடி
என் நாக்கிலே விக்கி விக்கி ஊறுதடி
உன் கன்களோ திக்கி திக்கி பேசுதடி
என் நெஞ்சினிலே தக்க தினி தாளமடி
சமைச்சு போடடி

என்று கஸ்டபட்டு ஒரு வழியாக பாடி முடித்து விட்டார். சர்சரன் பாட்டை வாயில் கொசுபோக ரசிச்சு கேட்டார் அவர் மனைவி "வாவ் சூப்பர் சாங் உங்களுக்குள்ள இவ்வளவு கவி திறமையா" என்று வினவ போதுமே சர்சரனுக்கு கவிதையில பதில் கொடுத்தார்.

"உன்னை நினைச்சா கவிதை கவிதையா கொட்டுது
உன் பிரியானி சமையலை நினைச்சா நாக்கு முட்டுது"

"என்ன ஆச்சு ஐயா இன்னிக்கு ஒரே ரொமான்ஸ் மூட்ல இருக்காப்ல தெரியுது. புதுசா இளமை திரும்பிருச்சோ"

"கன்னே உன் பிரியானியை சாப்பிட்டா நான் என்றும் மார்கண்டேயன்"

"இப்ப என் மேல காதலா இல்ல கோழி பிரியானி மீன் குழம்பு மேல காதலா"

"காதல் மனைவி செஞ்சு கொடுத்தா கத்திரிக்காய் குழம்பும் கூட மீன் குழம்பாரும், சுன்டைக்காய் வருவல் சில்லி சிக்கனாயிரும்"

"போதும் போதும் போய் ஒழுங்கா வர்னனைகளை மனப்பாடம் செஞ்சுட்டு வந்து அப்புறமா ரொமான்ஸ் பன்னுங்க" என்று சிரித்தவாரை சர்சரனை துரத்தி விட்டு சமையல் வேலையில் கவனம் செலுத்தினாள்

சர்சரன் வேகமாக பெட்ரூமுக்கு போய் அங்க ஒரு காதல் கதை புத்தகத்தை எடுத்து காதலியை வர்னிக்க நல்ல வசனத்தை ஒன்றை தேர்வு செஞ்சு அதை கஸ்டபட்டு மனப்பாடம் செஞ்சாரு. பிறகு சத்தமில்லாம சமையகட்டுக்கு போனார். போய் மனைவி பின்னால நின்னாரு தீடீர்னு வசனம் மறந்து போச்சு சரி சமாளிச்சுகலாம்னு தில்லு

"டார்லிங்"

"நோ இங்கிலீசு காதல் ஒன்லி தமிழ் காதல் போய் ஒழுங்கா இன்னொருக்கா படிச்சுட்டு வாங்க"

"அன்பே" _"ஓ"
"ஆருயிரே" _"ஓகோ"
"கன்னே காவியமே" _"பரவாயில்லயே"
"இலக்கனமே" _"ம் கீப் இட் அப்"
"இலக்க்கியமே"_"அவ்வளவுதானா"
"களங்கரை விளக்கே"_"எல்லாம் ரொம்ப பழசு கொஞ்சம் லேட்டஸ்டா கொஞ்சுங்கோ"
"லைட் ஹவுஸே"_"சுத்தம்"

"நீ கன்கள் என்றால் நான் மானிட்டர்
நீ உடல் என்றால் அதில் நான் உயிர்
நீ கிரைன்டர் என்றா நான் மிக்ஸி
உனக்காக நான் என்ன வாங்கி வந்திருக்கேனு பார்"

அச்சர்யத்தில் சர்சரன் மனைவி திரும்பி பார்த்தார். கையில் முல்லை சரத்துடனும் அல்வாவுடனும் நின்றிருந்த கனவனை கண்டு சொக்கினாள். சிக்கன் குர்மாவுக்காக நறுக்கிய வெங்காயத்தின் வினையால் கன்களில் கன்னீர்

"என்ன ஆச்சு இன்னிக்கு உங்களுக்கு எல்லாமே புதுசா இருக்கு"

"இன்னிக்கு என்ன நாள்னு உனக்கு தெரியுமா என் கன்னே"

"தெரியலினே அதையும் தாங்களே சொல்லி விடுங்கள் நாதா"

"இன்னிக்குதான் நானும் நீயும் முதல் முதலாக சந்தித்த நாள் என் மனியே" (அண்டபுழுகு ஆகாச புழுகு கேள்வி பட்டிருங்கீங்களா)

இதை கேட்ட சர்சரன் மனைவிக்கு ஆச்சர்யம் தன் கனவன் தன் மீது இப்படி பாசம் வைத்து சந்திச்ச நாள் எல்லாம் நினைவில் வைத்திருகிறாரே. தனக்கு கூட இப்படி ஒரு நாள் நினைவில்லையே. அவ்வளவு ஆழமான காதலா. கலங்கினால் மயங்கினாள் மறந்தாள் முழுவதும் சரனடைந்தாள்.

சர்சரன் தனது மனைவில் அருகில் போய் காதில் கிசுகிசுத்தார் "அன்பே இன்னிக்கு உனக்கு ஒரு சர்பரைஸ் கிப்ட் கொடுக்க போறேன்டா செல்லம்"

ஆகா பூ அல்வா ரொமான்ஸ் கவிதை இதுக்கு மேலயும் சர்பரைஸ் கிப்ட் இன்னொன்று இருக்கா அவ்வளுவுதான் சர்சரன் மனைவி டோட்டல் ப்ளாட். கன்கள் குளமாக 'என்னங்க சர்பரைஸ் கிப்ட்"

"அத இப்ப சொல்ல மாட்டேன் கிழியே அது சஸ்பன்ஸ், இன்று மாலை தான் தருவேன்" என்று கொஞ்சலோடு மனைவியை கட்டி அனைத்தார்.

"ஐ அம்மா கோழி பிரியானி வாசம் அடிக்குது" என்று அவர்கள் மகளின் கத்தி கொன்டே சமையல் கட்டுக்குள் வர தம்பதியினர் இருவரும் தங்களின் சூப்பர் காதல் சீனை தார்காலிகமாக நிறுத்தி வைத்து விட்டு சமையல் வேலையில் கவனம் செலுத்த தொடங்கினார்கள்.


என்ன சர்பரைஸ் கிப்டாக இருக்கும் என்று அதையே நினைத்து சர்சரனின் மனைவி மாலை வரை காத்திருந்தார் என்று நான் சொல்லியா உங்களுக்கு தெரிய வேன்டும். அந்த அதிரடி மாலையும் நெருங்கியது.


தொடரும்

sarcharan
06-05-2011, 03:20 PM
சூப்பர்..அடுத்த வெடிய எப்ப வெடிக்க போறீங்க?

sarcharan
06-05-2011, 03:23 PM
நானும் கமல் மாதிரின்னு சொன்னேன்; ஒரு புள்ளி வெச்சேன், நீங்க கோலம் போட்டுடீங்க...:redface::p;)

ஜெமுசுபாண்ட கண்டதும் பல இளம் கன்னிகையர் காதல் வலை விரிப்பர்களாமே.:p:p:p... அப்படியேதும் சீன்ஸ் உண்டா?:p:p:p

Ravee
07-05-2011, 02:42 PM
https://lh5.googleusercontent.com/_ija4A80-p4I/TcVVQqHp4MI/AAAAAAAAAg4/xHlQTN5ph2Q/medical%20shop.jpg



நோயாளி : ஏனுங்க சளி புடிக்கிறது பெரிய வியாதியா .....

மருந்து கடைக்காரர் : அப்படியெல்லாம் இல்லையே ......

நோயாளி : அப்புறம் எதுக்கு கீதம் டாக்டரம்மா ஒரு பக்கத்துக்கு மருந்து எழுதி கொடுத்து இருக்காங்க ....

மருந்து கடைக்காரர் : எங்க கொடுங்க பார்ப்போம் .......

தாவி வருவதில் இரண்டு
செக்கு -க்கு இடையில் வந்த ஒன்று
பாம்பு புத்துக்குள் வந்த சத்தத்தில் இரண்டு

இது கொண்ட குடுகை ஒன்று ................... :sprachlos020:

ஐயோ இந்த அம்மாவோட பேஜாரப்போச்சுப்பா.... :smilie_abcfra:

என்ன சொல்ல வராங்க ............... :fragend005: :confused: :fragend005:

மன்றத்தில யாராவது என்ன மருந்துன்னு சொல்லுங்களேன் ...

இல்லைன்னா ..... காலையில மொத போனியே மொக்க போனியா போய்டும் சாமி ...... :traurig001: :traurig001: :traurig001:

அக்னி
07-05-2011, 08:05 PM
கீதம்+அக்காவின் முடியைக் குட்டையாகக் காட்டிய
ரவீக்கு எனது கண்டனத்தைப் பதிவு செய்கின்றேன்...
சாயம் பூசி முடியைக் கறுப்பாக எப்போதுமே வைத்திருக்கும் கீதம்+அக்காவின் முடியைப் பழுப்பாகக் காட்டிய
ரவீக்கு எனது இன்னுமொரு கண்டனத்தைப் பதிவு செய்கின்றேன்.
நோட் பாட்டையும் பேனாவையும் கோர்த்துப் போட்டிருக்கும் கீதம்+அக்காவின் கழுத்தில், ஸ்டெதஸ்கோப்பை மாட்டி வைத்த
ரவீக்கு எனது இன்னுமொரு இன்னுமொரு கண்டனத்தைப் பதிவு செய்கின்றேன்.

இதுக்கு மேல கண்டனங்களைச் சொல்ல, மற்றவர்களையும் அழைக்கின்றேன்.

Ravee
08-05-2011, 12:32 AM
https://lh5.googleusercontent.com/_ija4A80-p4I/TcVVQqHp4MI/AAAAAAAAAg4/xHlQTN5ph2Q/medical%20shop.jpg


கீதம்+அக்காவின் முடியைக் குட்டையாகக் காட்டிய
ரவீக்கு எனது கண்டனத்தைப் பதிவு செய்கின்றேன்...
சாயம் பூசி முடியைக் கறுப்பாக எப்போதுமே வைத்திருக்கும் கீதம்+அக்காவின் முடியைப் பழுப்பாகக் காட்டிய
ரவீக்கு எனது இன்னுமொரு கண்டனத்தைப் பதிவு செய்கின்றேன்.
நோட் பாட்டையும் பேனாவையும் கோர்த்துப் போட்டிருக்கும் கீதம்+அக்காவின் கழுத்தில், ஸ்டெதஸ்கோப்பை மாட்டி வைத்த
ரவீக்கு எனது இன்னுமொரு இன்னுமொரு கண்டனத்தைப் பதிவு செய்கின்றேன்.

இதுக்கு மேல கண்டனங்களைச் சொல்ல, மற்றவர்களையும் அழைக்கின்றேன்.


:lachen001: :lachen001: :lachen001: கேள்விக்கு பதிலை சொல்லுங்கையா .... அதை விட்டு இப்படி போட்டு கொடுக்க கூடாது ....... :D

Ravee
08-05-2011, 12:53 AM
ஜெமுசுபாண்ட கண்டதும் பல இளம் கன்னிகையர் காதல் வலை விரிப்பர்களாமே.:p:p:p... அப்படியேதும் சீன்ஸ் உண்டா?:p:p:p

http://www.corbisimages.com/images/AAJG001072.jpg?size=67&uid=87dd4c92-bf82-451a-8a85-901864d27a5e&uniqID=ddeb1815-b14a-46b5-b53f-6690d5cd6d40

இப்பத்தான் பின்னிக்கிட்டு இருக்காங்க சற்சரண் .... இனி பெடல் எடுக்க வருவாங்க .... :lachen001:

கீதம்
08-05-2011, 02:30 AM
https://lh5.googleusercontent.com/_ija4A80-p4I/TcVVQqHp4MI/AAAAAAAAAg4/xHlQTN5ph2Q/medical%20shop.jpg



நோயாளி : ஏனுங்க சளி புடிக்கிறது பெரிய வியாதியா .....

மருந்து கடைக்காரர் : அப்படியெல்லாம் இல்லையே ......

நோயாளி : அப்புறம் எதுக்கு கீதம் டாக்டரம்மா ஒரு பக்கத்துக்கு மருந்து எழுதி கொடுத்து இருக்காங்க ....

மருந்து கடைக்காரர் : எங்க கொடுங்க பார்ப்போம் .......

தாவி வருவதில் இரண்டு
செக்கு -க்கு இடையில் வந்த ஒன்று
பாம்பு புத்துக்குள் வந்த சத்தத்தில் இரண்டு

இது கொண்ட குடுகை ஒன்று ................... :sprachlos020:

ஐயோ இந்த அம்மாவோட பேஜாரப்போச்சுப்பா.... :smilie_abcfra:

என்ன சொல்ல வராங்க ............... :fragend005: :confused: :fragend005:

மன்றத்தில யாராவது என்ன மருந்துன்னு சொல்லுங்களேன் ...

இல்லைன்னா ..... காலையில மொத போனியே மொக்க போனியா போய்டும் சாமி ...... :traurig001: :traurig001: :traurig001:

என் படத்தை என்னைவிடவும் அழகாய் வரைந்த ரவிக்கு என் பாராட்டுகள். மத்தவங்க படத்தைப் பார்த்து அரண்டுபோயிருந்தேனாக்கும்....

அப்புறம் என்ன கடைக்காரர் அவர்? இத்தனை நாளாய் எங்கள் மருத்துவமனைக்குப் பக்கத்தில் கடை வைத்திருக்கிறார், என் மருந்துசீட்டைப் பக்கென்று பற்றி விக்ஸ் இரண்டு எடுத்துத் தரவேண்டாமா? இப்படி விக்கித்து நிற்கிறாரே.... அவரை மாத்தணும் முதலில்!

Ravee
08-05-2011, 03:31 AM
என் படத்தை என்னைவிடவும் அழகாய் வரைந்த ரவிக்கு என் பாராட்டுகள். மத்தவங்க படத்தைப் பார்த்து அரண்டுபோயிருந்தேனாக்கும்....

ஒரே நேரத்தில எல்லாரையும் பகைச்சுக்க கூடாதுதானே அதான் என் கட்சிக்கு உங்களை வச்சு இருக்கேன் அக்கா .... :p

மருந்துசீட்டைப் பக்கென்று பற்றி விக்ஸ் இரண்டு எடுத்துத் தரவேண்டாமா? இப்படி விக்கித்து நிற்கிறாரே.... அவரை மாத்தணும் முதலில்!


ஆகா உங்க கடையில ஒண்ணு எழுதி கொடுத்தா ரெண்டா தருவீங்களா ..... நல்ல டாக்டர், நல்ல கடைக்காரர் ...... :lachen001:

கீதம்
08-05-2011, 09:49 AM
கீதம்+அக்காவின் முடியைக் குட்டையாகக் காட்டிய
ரவீக்கு எனது கண்டனத்தைப் பதிவு செய்கின்றேன்...
சாயம் பூசி முடியைக் கறுப்பாக எப்போதுமே வைத்திருக்கும் கீதம்+அக்காவின் முடியைப் பழுப்பாகக் காட்டிய
ரவீக்கு எனது இன்னுமொரு கண்டனத்தைப் பதிவு செய்கின்றேன்.
நோட் பாட்டையும் பேனாவையும் கோர்த்துப் போட்டிருக்கும் கீதம்+அக்காவின் கழுத்தில், ஸ்டெதஸ்கோப்பை மாட்டி வைத்த
ரவீக்கு எனது இன்னுமொரு இன்னுமொரு கண்டனத்தைப் பதிவு செய்கின்றேன்.

இதுக்கு மேல கண்டனங்களைச் சொல்ல, மற்றவர்களையும் அழைக்கின்றேன்.

கண்டனங்களை வரிசையாய்ப் பதிவு செய்து என் சார்பில் வரிந்துகட்டி வந்த அக்னிக்கு என் பாராட்டுகள்.

தலை'மை'யில் மட்டும் சிறு திருத்தம்.
அதில் கருமை உண்டு, கரு'மை' இல்லை.
இதில் உண்மை உண்டு, வெண்மை இல்லை.:icon_b:

சிவா.ஜி
08-05-2011, 04:15 PM
சூப்பரு....சூப்பரு...சூப்பரு.....வாத்தியாரே கலக்குறீங்க....ரவீ....அதுக்கு விஷுவல் எஃபெக்ட் கொடுக்குறாரு......ஆஹா.....பட்டையக் கெளப்புறீங்க......

வாத்தியாரே...பழைய....சரித்திரக் கதை பாக்கி இருக்கு....எப்ப முடிக்கப் போறீங்க?

தாமரை
09-05-2011, 05:32 AM
கண்ணில் போடுவதுதான் கண்ணாடினு நான் எங்கேயும் கூறவேயில்லை, ஒளியினை ஊடுருவ விடுவது கண்ணாடி (Glass), அதற்கு பாதரசம் பூசினால் ஒரு தளமாக தோழிற்பட்டு பிம்பத்தைக் காட்டும் அதனால் அது தளவாடி (Mirror).

பேச்சுவழக்கில் தளவாடியை நாம் கண்ணாடி எனக் கூறினாலும் கண்ணாடி வேறு, தளவாடி வேறு என்பதுதான் உண்மை.

தளவாடி என்பது நேற்று முளைத்த காளான் பெயர். கண்ணாடி பண்டைக் காலத்திலிருந்தே புழங்கப்பட்டப் பெயர். ஆண்டாள் நாச்சியார் மாலைச் சூடி அழகுபார்த்தது கண்ணாடியில்தான். தளவாடியில் அல்ல.

தொண்டரடிப் பொடியாவாரின் திருப்பள்ளி எழுச்சி...

வம்பவிழ்வானவர் வாயுறைவழங்க
மாநிதிகபிலையொண் கண்ணாடி முதலா
எம்பெருமான் படிமக்கலம் காண்டற்கு
ஏற்பனவாயின கொண்டுநன் முனிவர்
தும்புருநாரதர் புகுந்தன்ரிவரோ
தோன்றினனிரவியும் துலங்கொளிபரப்பி
அம்பரத்தலத்தினின்றகல்கின்ற திருள்போய்
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே.

தளவாடி என்ற பெயர் தட்டையான ஆடி என்று விரியும். அப்படியானால் அதை பிரதிபலிக்கும் கண்ணாடிக்கு எப்படி உபயோகப்படுத்துவது? அந்தப் பண்பை அது கொண்டிருக்கவில்லையே.

நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில் கூட

காறை பூணும் கண்ணாடி காணும்தன் கையில் வளைகுலுக்கும்

கூறை யுடுக்கும் அயர்க்கும்தங் கொவ்வைச் செவ்வாய் திருத்தும்

தேறித் தேறிநின்று ஆயிரம்பேர்த் தேவன் திறம்பி தற்றும்

மாறில் மாமணி வண்ணன் மேல்இவள் மாலுறு கின்றாளே.



கண்ணாடி நிலைக் கண்ணாடி, கைக்கண்ணாடி என இரு வகைப்படும்.

கண் - நாடிப் பார்க்கும் என்பதாலேயே கண்ணாடி ஆனதாகும். ஒரு தன்னுடிய கண்ணை கண்ணாடியில் காணலாம் அல்லவா?

இலக்கியங்களில் எங்கே தளவாடி உள்ளது என ஆதாரத்துடன் விளக்கவும்.

ஆதவா
09-05-2011, 05:46 AM
கண்டனங்களை வரிசையாய்ப் பதிவு செய்து என் சார்பில் வரிந்துகட்டி வந்த அக்னிக்கு என் பாராட்டுகள்.

தலை'மை'யில் மட்டும் சிறு திருத்தம்.
அதில் கருமை உண்டு, கரு'மை' இல்லை.
இதில் உண்மை உண்டு, வெண்மை இல்லை.:icon_b:

நம்பிட்டோம்!! :aetsch013:

தாமரை
09-05-2011, 05:47 AM
கீதம் அக்கா என்று சொல்லிட்டு, யவனிகா அக்கா படத்தை போட்டுப்புட்டீங்களே ரவீ!!!

sarcharan
09-05-2011, 09:01 AM
கீதம்+அக்காவின் முடியைக் குட்டையாகக் காட்டிய
ரவீக்கு எனது கண்டனத்தைப் பதிவு செய்கின்றேன்...
சாயம் பூசி முடியைக் கறுப்பாக எப்போதுமே வைத்திருக்கும் கீதம்+அக்காவின் முடியைப் பழுப்பாகக் காட்டிய
ரவீக்கு எனது இன்னுமொரு கண்டனத்தைப் பதிவு செய்கின்றேன்.
நோட் பாட்டையும் பேனாவையும் கோர்த்துப் போட்டிருக்கும் கீதம்+அக்காவின் கழுத்தில், ஸ்டெதஸ்கோப்பை மாட்டி வைத்த
ரவீக்கு எனது இன்னுமொரு இன்னுமொரு கண்டனத்தைப் பதிவு செய்கின்றேன்.

இதுக்கு மேல கண்டனங்களைச் சொல்ல, மற்றவர்களையும் அழைக்கின்றேன்.

கோட்டுல கீழ் பாக்கெட் இல்ல. :sprachlos020:

சோடாபுட்டி கண்ணாடியும், முகத்துல சுருக்கங்களும் வேற மிஸ்ஸிங்...:D:D:D

ஹை ஹீல்ஸ் எங்கே போச்சு? :cool:

கீதம்
09-05-2011, 09:49 AM
ஆகா உங்க கடையில ஒண்ணு எழுதி கொடுத்தா ரெண்டா தருவீங்களா ..... நல்ல டாக்டர், நல்ல கடைக்காரர் ...... :lachen001:

எங்கள் மருந்துக்கடையில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் (என் கவிதையைத் தொல்லையாய் எண்ணாமல் மீண்டும் மீண்டும் என்னிடமே வரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும்:D)


நம்பிட்டோம்!! :aetsch013:

நம்பித்தான் ஆகணும்.:)


கீதம் அக்கா என்று சொல்லிட்டு, யவனிகா அக்கா படத்தை போட்டுப்புட்டீங்களே ரவீ!!!

லொள்ளுவாத்தியாரின் காப்பியங்களுக்காக யவனிகாவிடம் கோட், ஸ்டெதஸ்கோப் ஆகியவற்றை நான் இரவல் வாங்கிய விவரத்தை இப்படியா தண்டோரா போட்டு அறிவிப்பது?:icon_ush:


கோட்டுல கீழ் பாக்கெட் இல்ல. :sprachlos020:

சோடாபுட்டி கண்ணாடியும், முகத்துல சுருக்கங்களும் வேற மிஸ்ஸிங்...:D:D:D

ஹை ஹீல்ஸ் எங்கே போச்சு? :cool:

இது உங்க பங்கா? இன்னும் வேறென்ன கேள்வி பாக்கி இருக்கு? கூன் விழலையா, குச்சி ஊன்றலையான்னு?

நடக்கட்டும், நடக்கட்டும்...:icon_b:

sarcharan
09-05-2011, 11:15 AM
இது உங்க பங்கா? இன்னும் வேறென்ன கேள்வி பாக்கி இருக்கு? கூன் விழலையா, குச்சி ஊன்றலையான்னு?

நடக்கட்டும், நடக்கட்டும்...:icon_b:


இது வேறயா? :lachen001::lachen001::lachen001:
அண்ணே... நோட் பண்ணுங்க அண்ணே..
:D:D
நீங்க அனேகமா கீதம் அக்காவின் படத்தை ஒரு ரிவைஸ் பண்ண வேண்டி இருக்கும் போல...:smilie_abcfra::aetsch013:

lolluvathiyar
09-05-2011, 03:21 PM
பின்னூட்டங்கள் போட்ட அனைவருக்கும் நன்றி
கன்னாடி தளவாடி ஆராய்ச்சி பலமாக நடந்திருக்கு, மருத்துவர் கீதத்தை படத்தை அழகாக போட்ட ரவிக்கு நன்றி. மேலும் சர்சரனின் முன்னால் காதலிகள் வலை பின்னும் காட்சியை போட்டோ பிடித்து போட்டதுக்கும் நன்றி.

வாத்தியாரே...பழைய....சரித்திரக் கதை பாக்கி இருக்கு....எப்ப முடிக்கப் போறீங்க?
ஓ அதையும் நினைவு படுத்தீட்டீங்க அதையும் நேரம் கிடைக்கும் போது எழுப்பி விட்டுருவோம்.

இன்றைய சீனை தொடர்வோம். இதிலும் ரொமான்ஸ் காட்சியே இருக்கும் மலரும் நினைவுகளும் இருக்கும்.போன சீனில் முடிந்த காட்சி

என்ன சர்பரைஸ் கிப்டாக இருக்கும் என்று அதையே நினைத்து சர்சரனின் மனைவி மாலை வரை காத்திருந்தார் என்று நான் சொல்லியா உங்களுக்கு தெரிய வேன்டும். அந்த அதிரடி மாலையும் நெருங்கியது.

சீண் : 9

அந்தி மயங்கும் மாலை நேரம் நெருங்கினாலே பட்சிகளுக்கு கொன்டாட்டம் அதன் ஓசை கேட்க அருகில் வாழும் மனிதர்களுக்குமே கொண்டாட்டம். அதுவும் காதல் மூடில் இருக்கும் லவ்வர்களுக்கும் மிக பெரிய குதாகலம். சர்பரைஸ் கிப்டுக்காக காத்திருக்கும் சர்சரன் மனைவிக்கு அது எல்லை இல்லாத ஒரு வசந்த காலமாகவே தோன்றியது. மனைவியை இம்பரஸ் செய்ய பொருமையே இல்லாமல் பொருத்து கொன்டு காத்திருந்தார் நமது காதல் இளவரசன் சர்சரன்

காலை எழுந்தவுடன் தூக்கம்
பின்பு கனிவு தரும் கடலை
மாலை முழுவதும் ரொமான்ஸ்
என்று வழக்க படுத்தி கொள்ளு ஜொள்ளா

என்று காவிய கவிஞர் லொள்ளுவாத்தியாரின் பாடல்களுக்கு இலக்கனமாக வாழ்த்து காட்டுவதில் சர்சரனுக்கு நிகர் சர்சரன் மட்டுமே. சரி இதோ மாலை வந்து விட்டது இனி ரொமான்ஸ் சீனுக்குள் போவாமா. போர்ட்டிகோவில் கையை பிசைந்து காத்திருக்கும் சர்சரனை நோக்கி அவர் மனைவி ஸ்லோமோசனில் ஓடி போனார் போனவுடன் ரொமாஸாக பெருமூச்சு வாங்கினார்.

"நாதா எங்கே அந்த சர்பரைஸ் கிப்ட், அதை கான ஒரு யுகமாய் தவியாய் கொண்டு இருக்கிறேன்" என்று ஆசை அடக்க முடியாமல் கேட்டு விட்டாள். சர்சரன் ரொமான்டிக்காக அவள் கன்களை பொத்தினார் பொத்தியவாரே அழைத்து சென்று வீட்டின் காரேஜை நெருங்கினார். அன்பு மனைவியின் கன்களுக்கு விடுதலை கொடுக்க அவள் கன்னில் பட்டது சட்டர் தான். நல்லவேலை தன் புருசன் சட்டரை கிப்டாக கொடுக்க மாட்டாங்க என்ற அறிவாவது அவருக்கு இருக்கு. சட்டருக்குள்ளே தான் சர்பரைஸ் கிப்ட் இருக்க வேன்டும். மனைவியை நிற்க வைத்து விட்டு ஓடி போய் சர்டரை திறந்து காட்டினார்.

உள்ளே பளபளனு சைனிங்காக கம்பீரமாக புது பொழிவுடன் நின்று கொன்டு இருந்தது அந்த

பழைய சைக்கிள்

மிஸஸ் சர்சரனுக்கோ ஒரே ஆச்சர்யம் 1975 மேக் சைக்கிள் அப்படி என்ன சர்பரைஸ் இருக்க முடியும். அதுவும் பழைய சைக்கிள் தொடைச்சு சீமன்னை பூசி மெறுகேற்றி வைத்திருந்தும் இன்னும் அதன் துரு மரையவில்லை. சரி இதில் ஏதோ பெரிய மர்மம் இருக்க வேன்டும்.

"உங்கள் ராஜ குமாரிக்காக நீங்கள் கொடுக்கும் தங்கரதம் இதுதானா"

"அன்பே, ஆருயிரே, மன்னே, மானிட்டரே, மரகதமே, மவுஸே, கிளியே, கீபோர்டே இது சாதர்ன சைக்கிள் அல்ல நம் காதல் வாழ்கையில் பின்னி பினைந்த வரலாற்று சின்னம்"

"என்ன சொல்லறீங்க நாம காதலிக்கும் போது 1992 அப்ப நீங்க மொப்பட் தானே வச்சிருந்தீங்க அதுல கூட நாம அர்சனா தியேட்டருக்கு போய் டெர்மினேட்டர் படம் பாத்தது எனக்கும் இன்னும் நினைவு இருக்குங்க"

"காதலிச்சது தானாடி 1992 ஆனால் நான் உன்னை 1988 லிருந்து சைட் அடிச்சு இந்த சைக்கிளில் தானே உன்னை பாலோ பன்னினேன். 4 வருசமா உன் பின்னாடி இந்த சைக்கிள் அலைஞ்சு அப்புறம்தானே உன் காதலை பெற முடிஞ்சுது"

"ஓ இப்ப நினைவுக்கு வருது இது உங்கப்பா சைக்கிளுதானே, நீங்க என்னை பாலோ பன்னினீங்களா நான் ஏதோ 4 வருசமாவா இந்த லூசு சைக்கிள் ஓட்டி பழகீட்டு இருக்குனு நினைச்சுட்டேனே, என்னை சுத்தின சைக்கிளை இன்னும் நினைவு பொருளா வச்சிருக்கீங்களே எனக்கு எவ்வளவு சந்தோசம் தெரியுமே"

"அடியே அதை விட இதுக்கு வரலாறு இருக்குடி, இந்த சைக்கிள்ல்ல உன்ன டபுல்ஸ் வச்சு ஓட்ட எத்தனை நாள் நான் ஆசைபட்டேனு தெரியுமா. நீ என்கிட்ட லிப்ட் கேப்பியானு ஏக்கத்தோட காத்திருப்பேன் ஆனா நீ என்ன மதிக்கவே மாட்ட"

"ஓ அவ்வளவு நடந்திருக்கா இன்னும் இருக்கா"

"இருக்கு கன்னே, எனக்கு வயசு 26 இருக்கும் போது வருசம் 16 படம் ரிலீஸ் ஆச்சு அப்ப இதே சைக்கிள்ல்ல உன்னை அழைச்சுட்டு போக ஆசைபட்டேன், இதயத்த திருடாதே வந்தப்பா இதே சைக்கிளில் கூட்டீட்டு போக ஆசைபட்டேன். ஆனால் தேவதை போன்ற பிகர் உன்கிட்ட கேக்கறது எனக்கு பயம் பேசறது பயம் பாக்கறது பயம் இப்படி எங்கும் பயம் எதிலும் பயம் அதனால விட்டுட்டேன் அந்த ஆசை என் மனசுகுள்ள இப்பவும் இருக்குடி செல்லம். அதே காதல் என் இதயத்தில் கொழுந்து விட்டு இருக்குடி செல்லம்"

"அதுக்கு ஏன் இவ்வளவு எமோசன் ஆகறீங்க"

"அந்த சின்ன வயசு ஆசை வயசு காதல் ஆசை ஏக்கம் எல்லாத்தையும் இப்ப செஞ்சு பாக்க ஆசை படறேன்டி செல்லம்"

"புரியல மச்சான் நீங்க என்ன சொல்ல வர்ரீங்கனு எனக்கு புரியல ஆனால் ஏதோ ஒரு பயம் வருது அதுவும் ஏனுனு தெரியல மச்சான்"

"இந்த சைக்கிளில் இன்னிக்கு உன்னை அமர்த்தி ஓட்டி பாக்கனும்னு ஆசை படுகிறேன் செல்லம்"

அந்த அன்பை கண்டு சர்சரனின் மனைவி ஆனந்த கன்னீர் வடித்தாள். காலையில் தமன்னா போட்டோ ஜொள்ளு மேட்டரையே மறந்து போனாள்.

'என் ஆசை கனவா, நீங்க ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்ல கூட்டிட்டு போனா கூட நான் வர தயாரா இருக்கேன், நீங்க ஆசைபட்ட மாதிரியே இந்த மலரும் நினைவு சைக்கிலில் வருகிறேன் புருசா ஆமா இது ஓடுமா?"

"அம்மா" என்று குரல் கேட்டது இருவரும் திரும்பினார்கள். அங்கே அவர்கள் மகள் வழக்கம் போல வந்து ரொமான்ஸை கெடுத்து நின்றாள்.

"வா மகளே உங்கப்பாவின் பாசத்துக்கு எல்லை ஏது, பாத்தியா என்னை சைக்கிளில் வச்சு கூட்டீட்டு போறாராம். நான் ஒரு ரவுன்டு போயிட்டு வந்துறேன்"

"அம்மா சொன்னா கேளு இந்த விச பரிட்சை எல்லாம் வேண்டாம்"

"ஏம்மா அப்படி சொல்லற"

"எனக்கு என்னவோ அப்பாவுக்கு ஒழுங்கா சைக்கிள் ஓட்ட தெரியாதுனு தோனுது"

இப்படி பெத்த மகள் சொன்னால் எந்த அப்பனுக்கு தான் கோபம் வராது. அப்படி என்ன சர்சரன் வெட்கம் மானம் ரோசம் சூடு சொரனை இல்லாதவர்னு நினைச்சீங்களா?

"யார பாத்து என்ன கேள்வி கேட்ட மகளே எனக்கு சைக்கிள் என்ன ஏரோபிளேன் கூட ஓட்ட தெரியும் குண்டு போட தெரியும். இதோ பாரு இது எலிகாப்டர் லைசன்ஸ், இது மிரேஜ் மிக் ஓட்டும் லைசன்ஸு இது லாரி ஓட்டும் லைசன்ஸு இது கார் ஓட்டும் லைசன்ஸு. பாத்தியா "

"அது எல்லாம் சரி சைக்கிள் ஓட்டறது லைசன்ஸு வச்சிருக்கீங்களா"

"ஏன் அப்பாவ பாத்து என்ன கேள்வி கேக்கற விட்டா நடவண்டி ஓட்டறதுக்கு கூட லைசன்ஸ் கேப்ப போல இருக்கு"

"அம்மா இது ரிஸ்க் வேண்டாம் அப்பா உன்ன உழுக்காட்டிருவாரு இது ஏதோ ப்ளான் பன்னி செய்யற மாதிரி இருக்கு. அப்பாவுக்கு ஒழுங்கா சைக்கிள் ஓட்ட தெரியாதுனு தாத்தா கூட சொல்லி இருக்காரு. உனக்கு சைக்கிள்ல போக ஆசை இருக்குனா சொல்லு நான் உங்க ரெண்டு பேரையும் கூட்டீட்டு போறேன்"

"என் கன்னே அன்பு மகளே அப்பா மேல நான் அசைக்க முடியாத நம்பிக்கை வச்சிருகேன்"

"என்னவோ பன்னுங்க உங்க தலைஎழுத்து, அப்பா நல்ல புக்க படிச்சா ஒழுங்கா ரொமான்ஸ் பன்ன கத்துக்குங்கப்பா இது எல்லாம் ஓல்ட் பேசன் ரொமான்ஸ்" என்று நக்கல் விட "முழைச்சு மூனு இலை விடல அதுகுள்ள" என்று சொல்லி சர்சரனை மகளை அடிக்க போவது போல ஜோல்டிங் காட்ட அவர் மகள் சிரித்து கொண்டே வீட்டின் முன்புறத்திற்க்கு ஓடி மறைந்தாள்

டிங்கர டிகர டிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
டரக் ட்ப்புரு டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ரொல ரொல ரொல
லிங் லிங்
டொங்

என்ன சத்தம் இதுனு பாக்கறீங்களா இது சர்சரன் சைக்கிளை காரேஜிலிருந்து தள்ளீட்டு வந்து நிறுத்திய சத்தம்

"என்னங்க தள்ளீட்டு வரும் போதே இந்த சத்தம் போடுது நான் உங்க லவ்வ நம்பறேங்க அதுக்காக இந்த ரிஸ்க் எல்லாம் வேண்டாம்னு நினைக்கறேன்"

"நீ சும்மா இரு, இது சென்டிமன்டல் பிரச்சனை இப்ப பாரு" என்று சொல்லி. சர்சரன் கன்களில் இருந்த வைராக்கியன் தங்கபதக்கம் சிவாஜியை மிஞ்சு விட்டது, அவர் காட்டிய காதல் கமலை தோற்கடித்தது அவர் முகத்தில் வடிந்த ஜொள் ஜெமினி கனேசனையும் வலுவிலக்க செய்து விட்டது.

சைக்கிளின் சீட்யின் மேல் இருக்கும் தூசியை தட்டினார் சீட் தனியாக கழுன்டு வ ந்து பறந்து போய் தூர விழுந்தது. சைக்கிளுக்கு ஸ்டேன்ட் போட முயற்ச்சி செய்ய ஸ்டக் ஆகி விட்டது காதல் மனைவியை சைக்கிளை பிடிக்க சொல்லி விட்டு போய் சீட்டை எடுத்து வந்து சொருகிவிட்டு சைக்கிளில் ஏறி அமர்ந்தார். மனைவியை ஏறி அமர சொல்ல அவர் சைக்கிள் காரியரில் கையை ஊன அது உடைந்து உள்ளே போய் விட்டது. விடுவாரா சர்சரன் முன்னால வந்து பாரில் அமர சொன்னாரு. இந்த சீனை இப்போதைக்கு இங்கு நிறுத்தி விட்டு நாம் வேறு சீனுக்கு போவோம்

தாய் தந்தையரின் ப்ரைவசியை மதித்து அவர்களை தனிமையாக விட்டு விட்டு ஓடி வந்த சமத்து குட்டியான சர்சரன் மகள் வீட்டின் முன்பகுதிக்கு வந்தாள். காற்று சிலுசிலுனு அடிக்க வீட்டை சுற்றி உள்ள மரங்களில் கீச் கீச் என்ற பட்சிகளின் சத்தங்களை கேட்டு ரசிக்க ஆரம்பித்தாள். இப்படி இயற்கையை ரசிப்பது என்றால் அவளுக்கு கொள்ளை பிரியம். நேரம் போவதே தெரியாது.

பறவைகளின் சத்தத்தில் தீடிரென எதோ மாற்றம் இருந்ததை உனர்ந்தாள் மரங்களிலிருந்து பறவைகள் பறந்து கலைந்ததை கவனித்தாள். இது ஆபத்துக்கான அறிகுறியாச்சே. ஆம் என்ன ஆபத்து என்பதையும் அப்பவே அறிந்து கொண்டாள்.

வீட்டின் காம்பௌன்ட் சுவற்றை தாண்டி சில மர்ம நபர்கள் குதித்தார்கள். எத்தனை பேர் என்று என்ன முடியல ஆனால் முகமூடி அனிந்திருந்தார்கள். பார்த்தால் தீவரவாதிகள் தோற்றம். சர்சரன் மகள் பயந்தாள். ஒவ்வொருத்தன் கைகளிலும் ஏகே 47. ஒரு கையில் ஆர்பிஜி இன்னொருவன் கையில் ராக்கெட் லாஞ்சர் கூட இருந்தது, கையெறிகுண்டுகளும் வைத்திருந்தார்கள். ஆபத்தை உனர்ந்த சர்சரன் மகள் வீட்டுகுள் "அப்பா" என்று கத்தி கொண்டே ஓடினாள். தீவரவாதிகளும் வீட்டை சுற்றி வளைத்தார்கள். துப்பாக்கியை நீட்டி சுட ஆயுத்தமானார்கள்.

தொடரும்.

(மக்களே சரியான நேரத்தில் ரொமான்ஸ் காட்சிகளுக்கு முற்று புள்ளி வைக்க பட்டு விட்டது. எப்படி இது சினிமா மாதிரியே போகுதா? எப்படியோ சர்சரனின் வயசை டிஸ்க்ளோஸ் செஞ்சாச்சு)

sarcharan
25-05-2011, 06:09 AM
இது எதோ அர்னோல்ட் படம் மாதிரி இருக்கு...
அடுத்த தொடர குடுங்க சார் ...

Ravee
25-05-2011, 08:43 AM
1988 என்றா ......... குஷி படத்துல முதல் சீன்ல காட்டுவாங்களே அந்த ரெண்டு கொலந்தைங்கதான் ........... சரசரன் அன்டு மிஸ்ஸஸ் சர்ச்சரனா ??? ........ :lachen001: :lachen001: :lachen001:

sarcharan
25-05-2011, 08:59 AM
இது என்ன புது கதை... கதையில என்னோட குழந்தை பருவம் எல்லாம் உண்டா?

அக்னி
25-05-2011, 09:04 AM
வாத்தியாரே... காத்திருக்கோம்...
லவ் சீனையும் நிப்பாட்டி, த்ரில் சீனையும் நிப்பாட்டி, சர்ச்சரணும் வப்பாட்டியும் ச்சே மனையாட்டியும் என்ன ஆனாங்க சொல்லாம நீட்டி வுட்டுட்டீங்களே...

sarcharan
25-05-2011, 09:21 AM
போற போக்கை பாத்தால் சர்ச்சரண பாம்பாட்டின்னு சொல்லுவீங்க போல...

அக்னி
25-05-2011, 09:23 AM
உங்களுக்கு இந்தப்படத்தில் பாம் ஆட்டி வேடம்னுதானே சொன்னாங்க... :cool:

sarcharan
25-05-2011, 09:34 AM
அப்படியா....

அப்ப இந்தாங்க என்னோட பங்கு ஒரு டப்பங்குத்து காதல் பாட்டு சொந்த செலவில் சூனியம்...

என்னோட பேரன் பாடுறது....

ஹவா ஹவான்னு முன்னாடி ஒரு பாட்டு வந்துச்சில்ல அந்த மெட்டுல தான் இந்த பாட்டு

பாட்டி பாட்டி என் பாட்டி
ஒன புருஷன் பாம்பாட்டி
ஆனா நீயோ சீமாட்டி
நீ சர்சரண் பொண்டாட்டி

ஆதவா
25-05-2011, 10:23 AM
உங்களுக்கு இந்தப்படத்தில் பாம் ஆட்டி வேடம்னுதானே சொன்னாங்க... :cool:

பாமை ரொம்ப ஆட்டினார்னா வெடிச்சுரும்!!
அதான் வேணாம்னுட்டார்

Ravee
25-05-2011, 12:32 PM
பாமை ரொம்ப ஆட்டினார்னா வெடிச்சுரும்!!
அதான் வேணாம்னுட்டார்

:eek: ..............:fragend005: ...............:sauer028: ............... :traurig001:

sarcharan
09-06-2011, 03:36 PM
அண்ணே அண்ணே,
இந்த கதை தலைப்புல என்னோட படத்த இப்படித்தானே போடுவீங்க...

ஒரு சின்ன ஜார்கனும் குடுங்க...

சர்சரண் பந்தாடும் சூரசம்ஹாரம்

http://www.tamilmantram.com/vb/picture.php?albumid=49&pictureid=441

இது எப்படி இருக்கு?

Ravee
10-06-2011, 09:29 AM
அண்ணே அண்ணே,
இந்த கதை தலைப்புல என்னோட படத்த இப்படித்தானே போடுவீங்க...

ஒரு சின்ன ஜார்கனும் குடுங்க...

சர்சரண் பந்தாடும் சூரசம்ஹாரம்

http://www.tamilmantram.com/vb/picture.php?albumid=49&pictureid=441

இது எப்படி இருக்கு?

சக்கரம் என்ன ஆச்சுன்னே தெரியலை அதுக்குள்ளே சம்ஹாரத்துக்கு போயிட்டார்.... எங்கப்பா அந்த டைரக்டர் .... :sauer028:

sarcharan
10-06-2011, 10:57 AM
அப்ப படத்தோட போஸ்டர இப்படி அச்சடிங்க...

சர்சரண் சுடும் "சக்கரம்"