PDA

View Full Version : பொன்மொழிகள் + தத்துவங்கள்



உமாமீனா
14-03-2011, 07:04 AM
•தெளிவான குறிக்கோளே, வெற்றியின் முதல் ஆரம்பம்.

•ஆயிரம் உபதேசங்களை விட ஓர் அனுபவம் பாடம் கற்பித்து விடும்.

•பயத்தை உன்னிடமே வைத்துக்கொள், உன் துணிவை மட்டும் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்.

•வாழ்க்கையில் சம்பாதிக்கக்கூடிய மிகப் பெரிய விசயம் பொறுமை.

•எதை நீ இழந்தாலும் மனம் தளர்ந்துவிடாதே, உனக்கு இன்னும் எதிர்காலம் இருக்கிறது.

•நேரத்தை வீணாக தள்ளிப்போடாதே...தாமதங்கள் அபாயகரமான முடிவைக் கொண்டுள்ளன.

•அன்புடன் கூர்மையான அறிவும் சேர்ந்துவிட்டால் சாதிக்க முடியாதது என எதுவுமில்லை.

•சோம்பலாய் இருப்பது, முட்டாள்கள் எடுத்துக்கொள்ளும் விடுமுறை.

•உனக்காக பொய் சொல்பவன், உனக்கு எதிராகவும் சொல்வான்.

•நல்ல யோசனையை தோன்றும்போது உடனே செய்து விடுங்கள், ஏனென்றால் காலம் உங்களுக்காக காத்திருக்காது.

•மனிதன் மிக உயரமான உச்சியை அடையலாம், ஆனால் அங்கேயே நீண்டநாள் தங்க முடியாது.

•அன்பு தன்னையே கொடுக்கிறது, வாங்கப்படுவதில்லை.

•கடுமையான வார்த்தைகளை கையாள்வது, எப்போதும் பலவீனத்தின் அடையாளம்.

•பலம் பொருந்திய உடலைவிட, சிந்திக்கக்கூடிய நல்ல மூளையே சிறந்தது.

•எல்லா கெட்ட நடிவடிக்கைகளுக்கும் முதல் வாசல் பணத்தாசை.

•தோல்வி என்ற படி இருந்தால், அங்கே நிச்சயம் வெற்றி என்ற மாடி இருக்கும்.

•பிறருடைய முதுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்.

•சொற்கள் வெறும் நீர்க் குமிழிகள், ஆனால் செயல்கள்தான் தங்கத்துளிகள்.

•அந்தஸ்தின் அடையாளம் வெறும் அடையாளம் மட்டுமே, அதுவே அந்தஸ்து அல்ல.

•வாய்ப்புகள் எப்போதும் மிக மென்மையாகத்தான் கதவைத் தட்டும், அதை சரியாக பயன்படுத்திக்கொள்வது நமது பொறுப்பாகும்.



நன்றி மாணவன்

ராஜா
21-07-2012, 02:08 PM
•உனக்காக பொய் சொல்பவன், உனக்கு எதிராகவும் சொல்வான்.

மிகச் சரி..!

vasikaran.g
29-07-2012, 07:51 AM
சரி சரி யா
சொல்லி
கனி கனி யா
எழுதி
அணி அணி யா
பாராட்டுகளை
நீங்க
தனி தனி யா
கொண்டுபோகிறிங்க..

வாழ்த்துக்கள் .

அனுராகவன்
04-08-2012, 11:11 PM
அத்தனையும் முத்தான வரிகள்..